search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தஞ்சையில் இருந்து சென்னைக்கு அரசு பஸ்களில் வீரர், வீராங்கனைகள் பயணம்
    X

    வீரர், வீராங்கனைகளை மாவட்ட கலெக்டர் தீப்க ஜேக்கப் வழி அனுப்பி வைத்தார். 

    தஞ்சையில் இருந்து சென்னைக்கு அரசு பஸ்களில் வீரர், வீராங்கனைகள் பயணம்

    • மாவட்ட அளவிலான கைப்பந்து, கால்பந்து என பலவகையான போட்டிகள் அன்னை சத்யா மைதானத்தில் நடந்தது.
    • தஞ்சாவூர் மாவட்டத்திலிருந்து மொத்தம் 65 பேர் கலந்து கொள்ள உள்ளனர்.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் மாவட்ட அளவில் தடகளம், நீச்சல், கூடைப்பந்து, கபடி, சிலம்பம், இறகுபந்து, கால்பந்து, வளைகோல்பந்து, கையுந்துபந்து, மேசைப்பந்து ஆகிய போட்டிகள் இருபாலருக்கும் கடந்த ஜனவரி 31-ந் தேதி முதல் பிப்ரவரி 25-ந் தேதி வரை தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டு மைதானத்தில் நடந்து முடிந்தது. பள்ளி மாணவ, மாணவியர்கள், கல்லூரி மாணவ, மாணவி யர்கள், பொதுப்பிரிவி னர்கள், மாற்றுத்திற னாளிகள் மற்றும் அரசு ஊழியர்கள் என ஐந்து பிரிவுகளாக நடத்தப்பட்டது.

    மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா கடந்த 18-ந் தேதி தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம், கரிகாற்சோ ழன் கலையரங்க த்தில் நடைப்பெற்றது. இதில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு த்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பரிசு வழங்கினார்.

    இந்த நிலையில் தமிழகம் முழுவதும் மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் இன்று சென்னையில் தொடங்கியது. இந்த போட்டியானது அடுத்த மாதம் 25ஆம் தேதி வரை நடை பெறவுள்ளது. இப்போட்டிகளில் தஞ்சாவூர் மாவட்டத்தினை சேர்ந்த மாணவ- மாணவிகள், வீரர், வீராங்கனைகள் மொத்தம் 694 பேர் கலந்து கொள்கி ன்றனர். முதலாவதாக இன்று முதல் அடுத்த மாதம் 4-ம் தேதி வரை பள்ளி மாணவ, மாணவிகள் கபடி, வாலிபால் மற்றும் பள்ளி, கல்லூரியைச் சேர்ந்த மாணவ- மாணவிகளுக்கான சிலம்பம் விளையாட்டுப் போட்டிக ளிலும் தஞ்சாவூர் மாவட்டத்திலிருந்து மொத்தம் 65 பேர் கலந்து கொள்ள உள்ளனர்.

    இவர்கள் அனைவருக்கும் அன்னை சத்யா விளையாட்டரங்கில் இருந்து அரசு பஸ் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. போட்டியில் கலந்து கொள்ளும் வீரர், வீராங்க னைகள் நேற்று இரவு தஞ்சையில் இருந்து அரசு பஸ்களில் சென்னைக்கு அழைத்து செல்லப்பட்டனர். இவர்களுடன் உடற்கல்வி ஆசிரியர்கள், ஆசிரிய- ஆசிரியைகள், மாவட்ட பயிற்றுனர்கள் ஆகியோரும் சென்றனர்.

    சென்னை செல்லும் பஸ்களை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் கொடி அசைத்து வாழ்த்தி வழி அனுப்பி வைத்தார். மேலும் சீருடையும் வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு அலுவலர் டேவிட்டேனியல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×