search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தனியார் கல்லூரியில் மாவட்ட அளவிலான நுண்கலை திறன் போட்டிகள்
    X

    போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

    தனியார் கல்லூரியில் மாவட்ட அளவிலான நுண்கலை திறன் போட்டிகள்

    • போட்டிகளில் 5 மாவட்டங்களிலிருந்து 1300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
    • அரசு பள்ளிக்கான போட்டியில் சோழபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி கோப்பையை வென்றது.

    கும்பகோணம்:

    கும்பகோணம் அன்னை கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 75 வது சுதந்திர தின அமுத பெருவிழாவோடு IQAC, தமிழ், ஆங்கிலம், கணிதம், வணிகவியல் மற்றும் காட்சி தொடர்பியல் துறைகள் இணைந்து நடத்தும் மாவட்ட அளவில் பள்ளி மாணவர்களுக்கு இடையேயான நுண்க லைகள் திறன் போட்டிகள் நடைபெற்றன.

    இவ்விழா விற்கு அன்னை கல்வி குழும தலைவர் டாக்டர் அன்வர் கபீர் தலைமையேற்றார்.

    அன்னை கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் மாணிக்கவாசுகி முன்னிலை வகித்தார். அன்னை கல்வி குழும செயலர் ஹிமாயூன் கபீர் வாழ்த்துரை வழங்கினார்.

    துணை முதல்வர்கள் பேராசிரியர் இள ஞ்செழியன், பேராசிரியர் ராஜா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

    உள்தர உத்தரவாத மதிப்பீட்டு குழு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் லதா கல்லூரியின் அறிமுக உரையாற்றினார்.

    கும்பகோணம் அரசினர் கல்லூரி மேனாள் தமிழ்த்துறை தலைவரும், அன்னை கலை மற்றும் அறிவியல் கல்லூரி மேனாள் முதல்வர் மணி சிறப்புரையாற்றினார்.

    மேலும், திருவிடை மருதூர் உட்கோட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஜாபர் சித்திக் மற்றும் திருப்பனந்தாள் கயிலை தேசிக கயிலை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் புகழேந்தி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றியதோடு மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினர்.

    அன்னை கல்விக்குழும செயல் அலுவலர் முனைவர் ராஜ்குமார், நிர்வாக இயக்குநர் ரவி கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

    துணை முதல்வர்கள் பேராசிரியர் இளஞ்செழியன், பேராசி ரியர் ராஜா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

    போட்டிகளில் 5 மாவட்டங்களில் இருந்து 1300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    அரசு பள்ளி க்கான போட்டியில் சோழபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியும் மெட்ரிக்பள்ளிக்கான போட்டிகளில் கபிஸ்தலம் ஜாக் அண்ட் ஜில் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியும் கோப்பையை வென்றது.

    நிகழ்ச்சியின் முதலாவதாக முனைவர் லொயோலா பீரிஸ் வரவேற்றார்.

    இறுதியாக பேராசிரியர் சுபாஷினி நன்றி உரையாற்றினார். இதில், பேராசிரியர்கள், மாணவர்கள் பலர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

    Next Story
    ×