search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காய்ச்சல்"

    • தமிழகத்தில் இந்த ஆண்டில் 6,818 பேர் டெங்கு காய்ச்சலுக்கு பாதிக்கப்பட்டனர்.
    • கடந்த 18 நாட்களில் மட்டும் 816 பேருக்கு டெங்கு காய்ச்சல் கண்டறியப்பட்டு உள்ளது.

    சென்னை:

    தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருவதால் டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏ.டி.எஸ்.-எஜிப்டை வகை கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகி வருகின்றன. தமிழகத்தில் இந்த ஆண்டில் 6,818 பேர் டெங்கு காய்ச்சலுக்கு பாதிக்கப்பட்டனர்.

    அதில் 10 பேர் உயிரிழந்ததாகவும் மக்கள் நல்வாழ்வுத் துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இது தொடர்பாக சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வ விநாயகம் கூறியதாவது:-

    மாநிலம் முழுவதும் கடந்த 18 நாட்களில் மட்டும் 816 பேருக்கு டெங்கு காய்ச்சல் கண்டறியப்பட்டு உள்ளது. தற்போது மருத்துவ மனைகளில் 583 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

    மற்றொரு புறம், தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கொசு ஒழிப்புப் பணிகளில் 27 ஆயிரம் பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்களுடன் உள்ளாட்சிக்கு ஒரு சுகாதார அலுவலரும், மாநகராட்சிகளில் தெருக்களின் அடிப்படையில் சுகாதார அலுவலர்களும் நியமிக்கப்பட்டு மருத்துவக் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    காய்ச்சல் பாதிப்பு மற்றும் கொசு பாதிப்பு இருந்தால் 94443 40496, 87544 48477 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். மருத்துவ ஆலோசனைகள் மற்றும் சந்தேகங்களுக்கு 104 என்ற எண்ணுக்கு அழைக்கலாம்.

    மாநிலம் முழுவதும் மருத்துவக் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தவும், குறிப்பாக வீடுகள் தோறும் கண்காணிப்பை முன்னெடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    எத்தகைய சூழலையும் எதிர்கொண்டு சிகிச்சை அளிக்கும் வகையில் மருத்துவ மனைகளில் டெங்கு வார்டுகளையும், படுக்கைகளையும் அமைத்து போதிய மருத்துவ வசதிகளை தயார் நிலையில் வைத்திருக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

    ரத்த வங்கிகளையும் தயார் நிலையில் வைத்திருக்கவும், அவசரகால சூழல்களைச் சமாளிக்கும் வகையில் விரைவு உதவிக் குழுக்கள் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • உணவு வழியாகவே பெருமளவு தொற்றை தடுத்துவிட முடியும்.
    • வெந்நீரில் இருந்து உங்கள் நாளை தொடங்குங்கள்.

    மழைக்காலம் தொடங்கிவிட்ட சூழலில், சளி-இருமல் தொல்லையும், காய்ச்சல் நோய் பாதிப்புகளும் வேகமாக பரவத் தொடங்கிவிட்டன. தொண்டையில் உண்டாகும் மாற்றத்தை கண்டு சளி பிடிப்பதை உணர்ந்துகொள்ள முடியும். அடிக்கடி மருந்து மாத்திரைகள் என்று பயன்படுத்துவதை விட காய்ச்சலின் ஆரம்பத்திலேயே, சில உணவு பழக்க வழக்கங்களை மாற்றுவதனால், சளி-காய்ச்சல் தொல்லையின் வீரியத்தை குறைத்துவிடலாம். இதற்கென பிரத்தியேகமான தயாரிப்புகள் எதுவும் தேவையில்லை. அதிக மெனக்கெடலும் தேவையில்லை. உணவு வழியாகவே பெருமளவு தொற்றை தடுத்துவிட முடியும். சாதாரண காய்ச்சல், சளி, தலைவலியாக இருந்தால் இந்த உணவு வகைகளை பின்பற்றினால் நிச்சயம் பலன் கிடைக்கும்.

    வெந்நீரில் இருந்து உங்கள் நாளை தொடங்குங்கள். தண்ணீரை கொதிக்க வைத்து இளஞ்சூடாக இருக்கும் போது சிட்டிகை சீரகத்தூள் சேர்த்து குடிக்க வேண்டும். அல்லது சீரகம் போட்ட நீரை கொதிக்க வைத்து குடிக்கவும். இதனால் தொண்டைக்கு இதமாக இருக்கும்.

    நாள் முழுக்க அரை மணி நேர இடைவெளியில் ஒரு டம்ளர் நீரை குடிப்பதன் மூலம் உடலில் நச்சு சிறுநீர் வழியாக வெளியேறிவிடும். அதோடு காய்ச்சலின் போது உடலில் நீர்ப்பற்றாக்குறை ஏற்படாமல் பார்த்து கொள்ள வேண்டும். இல்லையெனில் வைரஸ், பாக்டீரியா கிருமித்தொற்று வேகமாக பரவக்கூடும்.

    காலை உணவு

    காய்ச்சல் காலங்களில் பிரட் உணவை நிச்சயம் தவிர்க்க வேண்டும். அதற்கு மாற்றாக ஆவியில் வேக வைத்த இட்லி அல்லது இடியாப்பம் சேர்க்கலாம். தொட்டுக்கொள்ள சட்னி, சாம்பார் தவிர்க்க வேண்டும். அதற்கு மாற்றாக புதினா, கறிவேப்பிலை, கொத்தமல்லி, இஞ்சி சேர்த்த துவையல், தாளிப்பு தேவையெனில் நல்லெண்ணெய்யில் தாளித்து தொட்டு கொள்ளலாம். இதனால் வாய் கசப்பு நீங்கும். காரத்துக்கேற்ப புளி, வரமிளகாய் சேர்க்க வேண்டும்.

    வயிறார சாப்பிடக்கூடாது. வயதுக்கேற்ப இரண்டு முதல் நான்கு இட்லிகள் வரை சாப்பிட வேண்டும். அரை வயிறாக சாப்பிட வேண்டும். அப்போதுதான் வாந்தி, குமட்டல் இருக்காது. அதேபோன்று இளஞ்சூட்டில் சாப்பிட வேண்டும். சாப்பிட்டு முடித்ததும் பத்து நிமிடங்கள் கழித்து மீண்டும் இளஞ்சூட்டில் நீர் குடிக்க வேண்டும்.

    மதிய உணவு

    புழுங்கலரிசியை வெறும் வாணலியில் வறுத்து மிக்சியில் ரவை போன்று பொடியாக மாற்றவும். இரண்டு டம்ளர் நீருக்கு கால் டம்ளர் அரிசி ரவை சேர்த்து வேகவிடவும். நன்றாக வெந்ததும் அதில் சீரகப்பொடி, பெருங்காயம் சிட்டிகை, உப்பு சேர்த்து குடிக்கவேண்டும். தேவையெனில் தொட்டுகொள்ள புதினா சட்னி எடுத்துகொள்ளலாம். பிறகு ஒரு டம்ளர் வெதுவெதுப்பான சீரக நீரை குடிக்க வேண்டும். பூண்டு சேர்த்த மிளகு ரசத்தையும் இளஞ்சூட்டில் அருந்தலாம்.

    அரிசி சாதத்துடன் கூடிய மிளகு ரசம் என்பது நிச்சயம் நன்மையே என்றாலும் சளி, இருமல், காய்ச்சல் நேரத்தில் முதல் இரண்டு நாட்கள் இதை தவிர்க்க வேண்டும்.

    மாலை நேரத்தில்

    அரை வயிறு உணவு என்பதால் வயிற்றில் பசி உணர்வு அதிகமாகவே இருக்கும். மாலையில் இஞ்சி கஷாயம், சுக்கு கஷாயம் குடிக்கலாம். இஞ்சியை தோல் நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கி அதில் 5 உலர் திராட்சை, 2 ஏலக்காய், 3 மிளகு சேர்த்து மிக்சியில் அரைக்கவும். பாத்திரத்தில் ஒரு தேக்கரண்டி வெல்லம் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி வைக்கவும். பாகுக்கு முந்தைய பதம் வரும் போது அதில் அரைத்த விழுதை சேர்த்து கொதிக்க விடவும். பிறகு அதை இறக்கி வடிகட்டி குடிக்க வேண்டும். குழந்தைகளுக்கு கொடுக்கும் போது தேன் சேர்த்து கொடுக்க வேண்டும்.

    இரவு உணவு

    ஆவியில் வேகவைத்த உணவு அல்லது கஞ்சி போதுமானது. அதிக காய்ச்சல் இல்லையெனில் எண்ணெய் அதிகம் சேர்க்காத சப்பாத்தி சாப்பிடலாம். இரவு நேரத்தில் துவையல் சேர்க்க வேண்டாம். பால், காபி, தேநீர் போன்றவைகளையும் தவிர்க்க வேண்டும். இடையில் பசி எடுத்தாலும் இளஞ்சூடான சுக்கு மல்லி காபி அல்லது வெந்நீர் மட்டும் அருந்துங்கள். பகல் வேளையில் 4 அல்லது 5 உலர் திராட்சையுடன் மிளகு 3 சேர்த்து உமிழ்நீரோடு கலந்து மென்று சாறை விழுங்குங்கள். தொண்டை கரகரப்பு, இருமல் வேகமாக குறையும்.

    மேற்கண்ட இந்த உணவு பட்டியல் தான் ஒரு நாளுக்கான உணவாக இருக்க வேண்டும். இந்த உணவு உங்களின் சளி, அதனால் உண்டான இருமல், காய்ச்சலின் தீவிரத்தை வெகுவிரைவாக குறைத்துவிடும். பெரும்பாலும் காய்ச்சல் நேரத்தில் திட உணவுகள் அதிலும் கடினமான உணவுகளை தவிர்க்க வேண்டும். மென்மையான எளிதில் ஜீரணமாகக்கூடிய உணவை எடுத்துகொள்ள வேண்டும்.

    அதிகப்படியான சளி, காய்ச்சல் பிரச்சினை இருக்கும் போது நாள் முழுக்க இதை கடைப்பிடித்தால் அடுத்த நாள் தூங்கி எழும்போது உடல் சோர்வு நீங்கியிருப்பதை உணர்வீர்கள். ஏனெனில் இவை எல்லாமே உடலுக்கு எதிர்ப்பு சக்தி கொடுக்கக் கூடியவை. பெரும்பாலும் தொற்று தீவிரமாகாமல் தடுத்துவிடும் என்பதால் நிச்சயம் இது கைகொடுக்கும்.

    சூப் வகை

    சளி, இருமலின் போது சூடாக குடிக்கும் காபி, தேநீரை தவிர்க்க வேண்டும். அதற்கு மாற்றாக சுக்கு, மல்லி, காபி பொடி கலந்து காபி குடிக்கலாம். சிறுவர்களுக்கு சூப் கொடுக்க வேண்டும்.

    முருங்கைக்கீரை காம்புகளை வேகவைத்து மசித்து வடிகட்டி அதில் சீரகம், பூண்டு தட்டி சேர்த்து, மிளகுத்தூள், உப்பு சிட்டிகை சேர்த்து கொத்தமல்லித்தழை, புதினா இலைகளை சேர்த்து தாளித்து கொடுக்கவும். சிறு குழந்தைகளாக இருந்தால் கொத்தமல்லி, புதினாவின் சாறு சேர்த்து குடிக்கலாம். இந்த நேரத்தில் காய்கறிகள் சூப்பை தவிர்க்கலாம். அதற்கு பதிலாக சளியை முறிக்கும் முருங்கை, தூதுவளை போன்றவற்றை சூப்பாக்கி கொடுக்கலாம். இளஞ்சூடாக குடிக்க வேண்டும்.

    கூடுதல் கவனம்

    தினமும் 3 முதல் 4 லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வேண்டும். ஓய்வும் மிக அவசியம். காலையும், மாலையும் கல் உப்பு சேர்த்த வெதுவெதுப்பான நீரில் வாய் கொப்பளிக்க வேண்டும். தலையை உயரமாக தலையணையில் வைத்து படுக்க வேண்டும். அதிக தலைபாரம், சளி, காய்ச்சல் மூன்றும் இருக்கும் போது மூச்சுவிடுவதிலும் சிரமம் இருக்கும். படுக்கை அறையில் மண்சட்டியில் வெந்நீர் கொதிக்க வைத்து அதில் துளசி, புதினா, தூதுவளை, கற்பூரவல்லி என அருகில் கிடைக்கும் மூலிகைகளை கைப்பிடி சேர்த்து அதிக சூட்டில் அருகில் வைக்க வேண்டும். அதிலிருந்து வரும் சூடான ஆவியை மூக்கினுள் நன்றாக இழுக்க வேண்டும். தினமும் மூன்று முறையாவது இதை செய்ய வேண்டும்.

    படுக்கையிலேயே கிடக்காமல் அறைக்குள் நடக்க வேண்டும். தூங்கும் போதும் பாத்திரத்தில் வெந்நீர் வைத்து அதில் சில துளி யூகலிப்டஸ் தைலம் விட்டு, சுத்தமான துணியை நனைத்து பிழிந்து மூக்கின் மேல் பற்று போல் போட்டால் மூக்கடைப்பு இருக்காது. சளி அடர்த்தியாக இருந்தால் கரைந்து வெளியேறும். அதேநேரம் சுகாதாரம் பேணுவதும் அவசியம்.

    • பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிப்பு
    • காய்ச்சல் பாதிப்பு உள்ளவர்கள் சுயமருந்து உட்கொள்ளக்கூடாது.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டம் முழு வதும் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. குழந்தை கள் முதல் பெரியவர்கள் வரை காய்ச்சலால் பாதிக் கப்பட்டு வருகிறார்கள். காய்ச்சல் பாதிப்பு அதி கரித்து வருவதையடுத்து பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கி கிடக்கிறார்கள்.

    ஒரு குடும்பத்தில் ஒருவ ருக்கு பாதிப்பு ஏற்பட்டால் மற்றவர்களுக்கும் காய்ச்சல் தொற்று ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. காய்ச்சல் மட்டுமின்றி சளி தொல்லை யாலும் பொதுமக்கள் அவதிப்பட்டு வருவதால் எச்சரிக்கையுடன் இருக்கு மாறு அறிவுறுத்தப்பட்டு வருகிறார்கள்.

    ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரி, தக்கலை அரசு ஆஸ்பத்திரிகளில் காய்ச்சல் பாதிப்பால் சிகிச்சைக்கு வருபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. காய்ச்சல் பர வலை தடுக்க ஏற்கனவே மாவட்டம் முழுவதும் சிறப்பு முகாம்கள் நடத்தப் பட்டு வருகிறது. மாவட்டத் தில் உள்ள 9 ஒன்றியங்களில் தலா 3 இடங்களிலும் நாகர்கோவில் மாநகரப் பகுதியில் 4 இடங்களிலும் மருத்துவ முகாம்கள் இன்று நடந்தது.

    நாகர்கோவில் மாநக ராட்சிக்குட்பட்ட குன்னு விளை, குளத்தூர், நீராளி குளம், ஏ.ஆர்.கேம்ப் பகுதி யில் உள்ள நகர்ப்புற நல் வாழ்வு மையத்தில் நடந்த மருத்துவ முகாமில் ஏராள மான பொதுமக்கள் கலந்து கொண்டனர். மருத்துவ முகாம் நடைபெற்ற பகுதி களில் யாருக்காவது காய்ச்சல் பாதிப்பு உள்ளதா என்பது குறித்து சோதனை நடத்தப்பட்டது.

    மேலும் காய்ச்சல் அறிகு றியுடன் வந்தவர்களுக்கு டாக்டர்கள் குழுவினர் சிகிச்சை அளித்தனர். காய்ச்சல் பாதிப்பு உள்ளவர்கள் சுயமருந்து உட்கொள்ளக்கூடாது. டாக்டரிடம் காண்பித்து மருந்து சாப்பிட வேண்டும் என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

    இது குறித்து அதிகாரிகள் கூறுகையில் குமரி மாவட்டத்தில் காய்ச்சல் பாதிப்பு வழக்கத்தை விட தற்போது சற்று அதிகரித்து உள்ளது.

    சளி மற்றும் காய்ச்சல் தொல்லையால் குழந்தை கள், பெரியவர்கள் பாதிக்கப்பட்டு வருகி றார்கள். மழை பெய்து வரும் நிலையில் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வரு கிறது. ஏற்கனவே சராசரி யாக தினமும் 35 பேர் பாதிக்கப்பட்டு வந்திருந்த நிலையில் தற்போது தினசரி பாதிப்பு 45 ஆக அதிக ரித்துள்ளது. எனவே பொதுமக்கள் எச்சரிக்கை யுடன் இருக்க வேண்டும்.

    குடிநீரை காய்ச்சி அருந்த வேண்டும். சுய மருந்து உட்கொள்ளக் கூடாது. காய்ச்சல் பாதிப்பு உள்ள வர்கள் உடனடியாக பக்கத் தில் உள்ள அரசு ஆஸ்பத்தி ரிகள் அல்லது தனியார் ஆஸ்பத்திரி களுக்கு சென்று சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும் என்றனர்.

    • குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாதிப்பு
    • காய்ச்சல் மற்றும் சளி தொல்லை ஏற்பட்ட நிலையில் தும்மலும் அதிக அளவில் இருந்து வருகிறது.

    நாகர்கோவில் :

    தமிழகம் முழுவதும் மழை பெய்து வரும் நிலையில் காய்ச்சல் பரவலை கட்டுப்படுத்த சுகாதாரத் துறை சார்பில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த முகாம் ஞாயிற்றுக்கிழமைகளில் மாநிலம் முழுவதும் ஆயிரம் இடங்களில் நடந்து வருகிறது.

    குமரி மாவட்டத்திலும் சுகாதார துறை சார்பில் காய்ச்சல் பரிசோதனை முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அகஸ்தீஸ்வரம், தோவாளை, கல்குளம் உள்பட 9 தாலுகாக்களில் தலா 3 இடங்களிலும், நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 4 இடங்களிலும் காய்ச்சல் பரிசோதனை முகாம் நடந்து வருகிறது. முகாமில் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு காய்ச்சல் அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    குமரி மாவட்டத்தை பொறுத்தமட்டில் தற்பொழுது வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. கடந்த 2 மாதமாக விட்டு விட்டு பெய்து வரும் மழையின் காரணமாக காய்ச்சல் பரவல் அதிகரித்து உள்ளது. ஒரு குடும்பத்தில் முதலில் ஒருவருக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டால் அந்த குடும்பத்தில் மற்ற அனைவரும் காய்ச்சலால் பாதிக்க கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது.

    மாவட்டம் முழுவதும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் காய்ச்சலால் அவதிப்பட்டு வருகிறார்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    காய்ச்சலுடன், சளி தொல்லையும் அதிகமாக இருந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர். காய்ச்சல் மற்றும் சளி தொல்லை ஏற்பட்ட நிலையில் தும்மலும் அதிக அளவில் இருந்து வருகிறது.

    கைக்குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை காய்ச்சல் பாதிப்பால் வீட்டிலேயே முடங்கி கிடக்கும் சூழல் ஏற்பட்டு உள்ளது. கடந்த வாரத்தில் மட்டும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர் எண்ணிக்கை வழக்கத்தை விட அதிகமாக உள்ளது.

    பள்ளி மாணவ-மாணவிகளும், காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதால் அவர்கள் பள்ளிக்கு செல்லாத நிலை இருந்து வருகிறது. ஏராளமான மாணவர்கள் ஒரு வாரத்திற்கும் மேலாக பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே உள்ளனர். காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் கால், கை வலி உட்பட உடல் முழுவதும் வலியால் அவதிப்பட்டு வருகின்றனர்.

    காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் சுய மருந்து எடுத்துக் கொள்ளாமல் பக்கத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளுக்கு அல்லது தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு சென்று டாக்டரை தொடர்பு கொண்டு சிகிச்சை பெற்றுக் கொள்ளுமாறு சுகாதாரத் துறை அதிகாரிகள் கேட்டுக்கொண்டு உள்ளனர்.

    நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் சிகிச்சை பெறுவதற்காக வந்து செல்கிறார்கள். சமீபகாலமாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற வருவோர் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. இதுபோல் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு ஆஸ்பத்திரிகளிலும் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற வருபவர் எண்ணிக்கை அதிகமாகவே உள்ளது.

    இதுகுறித்து டாக்டர் ஒருவர் கூறுகையில், குமரி மாவட்டத்தில் பெய்த மழையின் போது, ஒரு சிலர் மழையில் நனைந்து ஜலதோஷம் பிடித்து அதன் தொடர்ச்சியாக காய்ச்சல் பாதிப்பு வருகிறது. பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். காய்ச்சலுடன் பல்வேறு இடங்களில் மெட்ராஸ் ஐ நோயும் பரவி வருகிறது.

    பொதுமக்கள் சுய மருந்து எடுத்துக் கொள்ளாமல் டாக்டரை அணுகி சிகிச்சை பெற வேண்டும். குமரி மாவட்டத்தை பொறுத்தமட்டில் ஏற்கனவே காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருபவர்கள் எண்ணிக் கையை விட தற்போது காய்ச்சலுக்கு சிகிச்சை வருபவர்கள் எண்ணிக்கை அதிக ரித்து உள்ளது. பொதுமக்கள் காய்ச்சிய தண்ணீரை பருக வேண்டும். காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்கள் முழுமையாக ஓய்வெடுக்க வேண்டும். காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஒரு சிலருக்கு வாந்தி ஏற்பட்டு வருகிறது. வாந்தி ஏற்படுவதால் சோர்வு ஏற்படும்.

    சோர்வை போக்கும் வகையில் அவர்களுக்கு தேவையான நீர் ஆதாரங்களை கொடுத்து குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் சோர்வு ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். சுய மருந்து எடுத்துக் கொள்வதை கட்டாயம் தவிர்க்க வேண்டும். ஆஸ்பத்தி ரியில் உள்ள டாக்டர்களை தொடர்பு கொண்டு சிகிச்சை பெற்றுக் கொள்வது நல்லது என்றார்.

    • குறிப்பாக குழந்தைகள் இந்த சுவாச பிரச்சினையால் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள்.
    • சிக்குன் குனியாவால் பாதிக்கப்படுபவர்களுக்கு 2 நாட்கள் காய்ச்சல் இருக்கும்.

    சென்னை:

    சென்னையில் தற்போது வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனால் ஏற்படும் காய்ச்சல் காரணமாக சென்னையில் உள்ள ஆஸ்பத்திரிகளில் நோயாளிகள் கூட்டம் அதிகமாக உள்ளது. அரசு ஆஸ்பத்திரிகள், தனியார் ஆஸ்பத்திரிகள் மற்றும் சிறிய அளவிலான கிளீனிக்குகளிலும் நோயாளிகள் கூட்டம் நிரம்பி வருகிறது.

    வைரஸ் தொற்று காரணமாக சுவாச பிரச்சினை ஏற்படுகிறது. குறிப்பாக குழந்தைகள் இந்த சுவாச பிரச்சினையால் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள். மேலும் டெங்கு காய்ச்சல் காரணமாகவும் பலர் ஆஸ்பத்திரிகளில் அனுமதிப்பட்டு வருகிறார்கள். டெங்கு காய்ச்சலுக்கும் குழந்தைகளே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில் சென்னையில் சிக்குன் குனியா காய்ச்சலும் பரவி வருகிறது. கடந்த 20 நாட்களாகவே சிக்குன் குனியாவால் பாதிக்கப்பட்டவர்கள் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்கள் மூட்டு வலியால் அவதிப்பட்டு வருகிறார்கள். காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பரிசோதனையில் டெங்கு இல்லை என்பது உறுதியானால் அது சிக்குன் குனியாவாகவும் இருக்கக்கூடும் என்று டாக்டர்கள் எச்சரிக்கிறார்கள்.

    சிக்குன் குனியாவால் பாதிக்கப்படுபவர்களுக்கு 2 நாட்கள் காய்ச்சல் இருக்கும். ஆனால் கடந்த 2007-ம் ஆண்டு சிக்குன் குனியா பரவியபோது ஏற்பட்டது போன்ற கடுமையான மூட்டுவலி தற்போது ஏற்படவில்லை. ஆனாலும் மூட்டுவலி 10 முதல் 14 நாட்கள் வரை நீடிக்கும்.

    இந்த பருவ காலத்தில் இதுபோன்று காய்ச்சல் பரவுவது வழக்கமானது தான். இந்த பருவத்தில் சுவாச பாதிப்பு அதிகமாக உள்ளது. குறிப்பாக சுவாச பிரச்சினையால் பாதிக்கப்பட்டு ஏராளமான குழந்தைகள் சிகிச்ச்சைக்கு வருகிறார்கள். இதில் பெரும்பாலான குழந்தைகள் ஒரு வயதுக்கு குறைவானவர்கள். அவர்களுக்கு மூச்சுக்குழாய் அழற்சியும் உள்ளது.

    செப்டம்பர் 2-வது வாரத்தில் இருந்து டெங்குவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அவர்களில் சிலர் உள் நோயாளியாக சேர்ந்து சிகிச்சை பெறுகிறார்கள். சிலர் வெளிநோயாளிகளாக வந்து சிகிச்சை பெறுகிறார்கள். அவர்களை கவனிப்பது தொடர்பாக பெற்றோர்களுக்கு அறிவுரை வழங்கப்படுகிறது.

    மேலும் தற்போது வைரஸ் காய்ச்சல் பாதிப்புகளே அதிகமாக உள்ளன. குழந்தைகளுக்கு காய்ச்சலுடன், சுவாச பாதிப்பு, உணவு சாப்பிடுவதில் சிரமம் ஆகியவையும் உள்ளன. மேலும் சிலருக்கு டைபாய்டு காய்ச்சல் பாதிப்பும் உள்ளது. இது போன்ற பருவகால காய்ச்சல் பாதிப்புகள் அக்டோபர், நவம்பர் மாதங்களில் உச்சத்தை அடைகின்றன.

    ஆனாலும் 3 நாட்களுக்கு மேல் காய்ச்சல் இருந்தால் மருத்துவரை அணுக வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    • புதுக்கோட்டையில் மேலும் 3 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது
    • காய்ச்சல் பாதிக்கப்பட்ட 137 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளது.

    புதுக்கோட்டை, 

    புதுக்கோட்டை மாவட்டத்தில் வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருவதால் அரசு சார்பில் சுகாதார முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் காய்ச்சல் பாதிப்பு கணிசமாக உயர்ந்த வண்ணம் உள்ளது. அரசு ஆஸ்பத்திரிகளில் டெங்கு காய்ச்சலுக்கு என்று தனியாக வார்டுகள் ஏற்படுத்தப்பட்டு தேவையான மருந்துகள் இருப்பில் வைக்கப்பட்டு உள்ளது. தினசரி பாதிப்பு சராசரியாக பதிவாகி வருகிறது.புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் காய்ச்சலுக்காக ஏற்கனவே உள்ள வார்டில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து வரப்படுகிறது. மாவட்டத்தில் டெங்கு மற்றும் மர்ம காய்ச்சலுக்கு சிகிச்சை அளிப்பதற்காக போதிய அளவு மருந்து, மாத்திரைகள் இருப்பில் உள்ளதாகவும் மருத்துவத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்த நிலையில் மேட்டுப்பட்டி பகுதியை சேர்ந்த 19 வயது வாலிபர், பூவரசக்குடியை சேர்ந்த 26 வயது பெண், கருவிடைசேரியை சேர்ந்த 24 வயது பெண் ஆகிய 3 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. மாவட்டத்தில் காய்ச்சல் காரணமாக 137 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதனை தொடர்ந்து புதுக்கோட்டையில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க அனைத்து நடவடிக்கையும் தீவிரமாக எடுத்து வருகிறது. குறிப்பாக பொதுமக்களுக்கு மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.இதுபற்றி டாக்டர்கள் கூறுகையில், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுவோரைக் குணப்படுத்த மருத்துவமனையில் போதுமான வசதிகளுடன் கூடிய சிறப்பு வார்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது. காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கும் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொடர் காய்ச்சலுக்காக வருவோரை உடனடியாகப் பரிசோதனை செய்யவும், உடல்நலம் மிகவும் பாதிக்கப்பட்டு இருந்தால் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது என்றனர்.

    புதுக்கோட்டையை மிரட்டும் டெங்குஒரே நாளில் காய்ச்சலுக்காக 44 பேர் அனுமதி

    புதுக்கோட்டை 

    டெங்கு காய்ச்சல் தமி ழகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. அதே வேளையில் டெங்கு காய்ச் சல் பரவாமல் தடுக்க அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

    இந்த நிலையில், புதுக்கோ ட்டை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவம னைகளில் காய்ச்சலால் அனுமதிக்கப்படு பவர்க ளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருவதால் பொதுமக்களிடயே அச்ச த்தையும் பீதியை ஏற்படுத்தி யுள்ளது.

    புதுக்கோட்டை மாவட்ட த்தில் கடந்த ஒரு வாரத்தில் 85 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்ய ப்பட்ட நிலையில் அந்த மாவட்டத்தில் மட்டும் 151 பேர் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் காய்ச்சல் கார ணமாக 46 பேர் மருத்து வமனையில் அனுமதிக்கப்ப ட்டுள்ளனர். அவர்களில் 4 பேருக்கு டெங்கு அறிகுறி இருப்பது தெரியவந்து ள்ளது.

    டெங்கு குறித்து விழிப்பு ணர்வை ஏற்படுத்த மாவட்ட நிர்வாக திட்டமிட்டுள்ளது.

    • மாவட்டந்தோறும் சுகாதாரத்துறை சார்பில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தபட்டு வருகிறது.
    • டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சைக்கு பிறகு 2 நாட்களுக்குள் வீடு திரும்பி வருகிறார்கள்.

    நாகர்கோவில்:

    தமிழகம் முழுவதும் காய்ச்சல் பரவலை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை அதிகாரிகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். மாவட்டந்தோறும் சுகாதாரத்துறை சார்பில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தபட்டு வருகிறது.

    குமரி மாவட்டத்திலும் கடந்த 1-ந்தேதி முதல் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது. நாகர்கோவில் மாநகர பகுதியில் தினமும் நான்கு இடங்களில் சுகாதாரத்துறை அதிகாரிகள் சிறப்பு முகாம் நடத்தி காய்ச்சல் பாதிப்பு உள்ளதா? என்பது குறித்து சோதனை நடத்தி வருகிறார்கள். இன்று காலையிலும் சிறப்பு மருத்துவமுகாம் நடைபெற்றது.

    முகாமில் டாக்டர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள் கலந்து கொண்டு முகாம் நடைபெற்ற பகுதியில் உள்ளவர்களுக்கு காய்ச்சல் பாதிப்பு உள்ளதா? என்பது குறித்து சோதனை மேற்கொண்டனர். மருத்துவ முகாமில் காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அகஸ்தீஸ்வரம், விளவங்கோடு, மேல்புறம், ராஜாக்கமங்கலம், முஞ்சிறை, கிள்ளியூர் உள்பட 9 ஒன்றியங்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 1-ந்தேதி முதல் இதுவரை 11,594 பேருக்கு காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதில் 33 பேருக்கு காய்ச்சல் அறிகுறி இருந்தது கண்டறியப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பும் உள்ளது. தற்பொழுது டெங்கு அறிகுறியுடன் ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் 2 பேரும், தக்கலை அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் 4 பேரும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சைக்கு பிறகு 2 நாட்களுக்குள் வீடு திரும்பி வருகிறார்கள்.

    • சிகிச்சை பலனின்றி பூபாலன் பரிதாபமாக உயிரிழந்தார்.
    • மர்ம காய்ச்சலுக்கு வாலிபர் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    திருத்தணி:

    தமிழகத்தில் பல்வேறு இடங்களில் டெங்கு காய்ச்சல் மற்றும் வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவுகிறது. இதை தடுக்க சுகாதாரத்துறை சார்பில் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதேபோல் திருத்தணி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திருத்தணி அரசு ஆஸ்பத்திரிக்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தினமும் 100-க்கும் மேற்பட்டவர்கள் வெளி நோயாளிகளாக சிகிச்சைக்கு வருகின்றனர். 10-க்கும் மேற்பட்டோர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு திருத்தனி அரசு ஆஸ்பத்திரியில் தனி வார்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு தன்ராஜ் கண்டிகை கிராமத்தை சேர்ந்த பாலாஜி என்கிற பூபாலன் என்பவருக்கு கடந்த சில நாட்களாக தொடர்ந்து காய்ச்சல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் பூபாலனுக்கு காய்ச்சல் அதிகமானதால் அவரது உறவினர்கள் திருத்தணி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்துள்ளனர். ஆனாலும் அவருக்கு காய்ச்சல் குணமாகவில்லை. இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி பூபாலன் பரிதாபமாக உயிரிழந்தார். மர்ம காய்ச்சலுக்கு வாலிபர் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • ஒகளுர் கிராமத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகள் விழிப்புணர்வு முகாம்
    • இரண்டு தினங்க ளுக்கு மேல் காய்ச்சல் அடித்தால் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலைய த்திற்கு சென்று உடனடியாக சிகிச்சை பெற அறிவுரை

    அகரம்சீகூர்,

    பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் அகரம்சீகூர் அருகேயுள்ள ஒகளுர் கிரா மத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகள் குறித்து பொதுமக்கள் இடையே லப்பைக்குடிகாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.வேப்பூர் வட்டார மருத்து வ அலுவலர் மருத்துவர் சேசு தலைமையில் வட்டார சுகாதார மேற்பார்வை யாளர் தாசன் சுகாதார ஆய்வாளர் பார்த்தசாரதி மற்றும் டெங்கு ஒழிப்பு பணியாளர்கள் ஆகியோர்ஒகளுர் கிராமத்தில் வீதி வீதியாக சென்று பாத்தி ரங்கள். தண்ணீர் தொட்டி கள், டயர், உரல் ஆகியவற்றி ல் தேங்கி உள்ள தண்ணீரில் டெங்கு காய்ச்சல் வர கார ணமாக உள்ள லார்வாக்கள் மற்றும் ஏடிஎஸ் கொசுக்க ளை மருந்துகள் ஊற்றி அழி த்தனர்.மேலும் பொது மக்களி டையே தண்ணீர் தேங்கி நிற்கும் பாத்திரங்களை அவ்வப்போது சுத்தம் செய்யவும், டெங்கு கொசு க்கள் புழுக்கள் வளராமல் இருக்க சுற்றுப்புற பகுதி களை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டியது குறித்தும் விரிவாக எடுத்து கூறினார்கள்.மேலும் இரண்டு தினங்க ளுக்கு மேல் காய்ச்சல் அடித்தால் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலைய த்திற்கு சென்று உடனடியாக சிகிச்சை பெற கேட்டுக்கொ ண்டனர்.இதேபோல் அத்தியூர் ,கழனிவாசல் ,திருமாந்துறை ,உள்ளிட்ட கிராமங்களுக்கு சென்று பொது மக்களி டையே டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி னார்கள்.

    • கரூரில் 2 சிறுவர்கள் டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்
    • குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவில், 24 மணி நேரமும் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்

    கரூர்,

    தமிழகத்தில், டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.இதன் காரணமாக கரூர் மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகள் மூலம், கொசு ஒழிப்பு பணிகள்மற்றும் மக்களிடம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. மாவட்ட சுகாதாரத்துறை சார்பில் டாக்டர்கள், செவிலியர், மருத்துவ பணியாளர் அடங்கிய சிறப்பு குழு அமைக்கப்பட்டு கண்காணிப்பு முடுக்கி விடப்பட்டுள்ளது. கரூர் அரசு கல்லுாரி மருத்துவமனையில், 50 படுக்கைகள் கொண்ட காய்ச்சல் வார்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் பள்ளப்பட்டியில் வசிக்கும், ஒரே குடும்பத்தை சேர்ந்த, 10, 8 வயதுள்ள இரு சிறுவர்கள் டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள், குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவில், 24 மணி நேரமும் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.இது குறித்து, கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை டீன் தாமோதரன் கூறுகையில்," பருவநிலை காரணமாக, குழந்தைகள் உள்பட பலர் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டு உள்ள னர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்களுக்கு டெங்கு காய்ச்சல் பரிசோதனை செய்யப்படுகிறது. இதுவரை, யாருக்கும் டெங்கு பாதிப்பு ஏற்படவில்லை,' என்றார்.

    • மக்களுக்கு உரிய முறையில் சிகிச்சை அளித்து விரைவில் குணப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினர்.
    • டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்கு தயார் நிலையில் உள்ளனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கை மேற்கொ ண்டு வருகின்றன. இருந்த போதிலும் தற்போது கடலூர் அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு தனி வார்டு அமைக்கப்பட்டு உள்ள நிலையில் 13 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரியில் 2 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த வாரம் டெங்கு காய்ச்சலால் 6 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மாவட்டத்தில் 15 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவது குறிப்பிட த்தக்கதாகும். இந்த நிலையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் சுகாதாரத்துறையினர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர்களின் பகுதிகளில் காய்ச்சல் தடுப்பு முகாம், வீடுகளுக்கு நேரில் சென்று வேறு யாரும் காய்ச்சலில் பாதிக்கப்பட்டு உள்ளனரா? புகை கொசு மருந்து அடித்தல் உள்ளிட்ட பல்வேறு முன்னெச்சரிக்கை பணிகளையும் மே ற்கொண்டு வருகின்றனர். இன்று காலை கடலூர் அரசு மருத்துவமனையில் செயல்பட்டு வரும் டெங்கு காய்ச்சல் தனி வார்டை கலெக்டர் அருண் தம்புராஜ் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு என்னெ ன்ன சிகிச்சை முறை அளிக்கப்படுகிறது? அவர்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடி க்கைகள் தனிவார்டில் கொசுவலை, சுகாதாரமாக உள்ளதா? உரிய நேரத்தில் மருத்துவர்கள் சிகிச்சை அளித்திருக்கிறார்களா? மருந்து, மாத்திரை சரியா ன முறையில் வழங்க ப்படுகிற தா? என்பதனை கேட்டு அறிந்து ஆய்வு செய்தார். மேலும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய முறையில் சிகிச்சை அளித்து விரைவில் குணப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினர். பின்னர் கலெக்டர் அருண் தம்புராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கடலூர் அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு தனிவார்டு அமைக்கப்பட்டு தற்போது 13 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடலூர் மாவட்டத்தில் சுகாதாரத் துறையினர் மற்றும் உள்ளாட்சி அமைப்பினர் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்கு தயார் நிலையில் உள்ளனர். மேலும் டெங்கு காய்ச்சல் தடுக்கும் களப்ப ணியாளர்கள் ஒவ்வொரு வீடாக நேரில் சென்று அரசு நிபந்தனைக்கு உட்பட்டு பராமரிக்கப்படுகிறதா? என்பதனை பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர். சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரியிலும் தனி வார்டு அமைக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆகை யால் பொதுமக்களுக்கு 5 நாட்களுக்கு தொடர்ந்து காய்ச்சல் இருந்தால் உடனடி யாக அரசு மற்றும் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு நேரில் சென்று டெங்கு காய்ச்சல் உள்ளதா? என்பத னை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இதன் மூலம் பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம். தற்போது மாவட்டத்தில் ஒரே பகுதியில் 3 ேபர்களுக்கு மேல் காய்ச்சல் இருந்தால் உடனடியாக அந்த பகுதியில் உள்ள அனைத்து மக்களிடமும் பரிசோதனை மேற்கொ ண்டதில் தற்போது கடலூர் அரசு மருத்துவமனையில் 56 பேர் சாதாரண காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உரிய முறையில் சிகிச்சை அளிக்க படுகின்றது. இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர்களில் அதிகரிப்புக்கு காரணம் என்னவென்றால் மாவட்டம் நிர்வாகம் சார்பில் சுகாதாரத்துறையினர் அதிகளவில் பரிசோதனை மேற்கொள்வதால், தற்போது 56 பேர் காய்ச்சலால் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடலூர் மாவட்டத்தில் 15 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார். அப்போது மருத்துவ பணிகள் இணை இயக்குனர் சாரா செலின்பால், மருத்து வமனை கண்காணிப்பாளர் அசோக் பாஸ்கர் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    ×