search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குமரி மாவட்டத்தில் 31 இடங்களில் காய்ச்சல் பரிசோதனை முகாம்
    X

    குமரி மாவட்டத்தில் 31 இடங்களில் காய்ச்சல் பரிசோதனை முகாம்

    • பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிப்பு
    • காய்ச்சல் பாதிப்பு உள்ளவர்கள் சுயமருந்து உட்கொள்ளக்கூடாது.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டம் முழு வதும் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. குழந்தை கள் முதல் பெரியவர்கள் வரை காய்ச்சலால் பாதிக் கப்பட்டு வருகிறார்கள். காய்ச்சல் பாதிப்பு அதி கரித்து வருவதையடுத்து பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கி கிடக்கிறார்கள்.

    ஒரு குடும்பத்தில் ஒருவ ருக்கு பாதிப்பு ஏற்பட்டால் மற்றவர்களுக்கும் காய்ச்சல் தொற்று ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. காய்ச்சல் மட்டுமின்றி சளி தொல்லை யாலும் பொதுமக்கள் அவதிப்பட்டு வருவதால் எச்சரிக்கையுடன் இருக்கு மாறு அறிவுறுத்தப்பட்டு வருகிறார்கள்.

    ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரி, தக்கலை அரசு ஆஸ்பத்திரிகளில் காய்ச்சல் பாதிப்பால் சிகிச்சைக்கு வருபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. காய்ச்சல் பர வலை தடுக்க ஏற்கனவே மாவட்டம் முழுவதும் சிறப்பு முகாம்கள் நடத்தப் பட்டு வருகிறது. மாவட்டத் தில் உள்ள 9 ஒன்றியங்களில் தலா 3 இடங்களிலும் நாகர்கோவில் மாநகரப் பகுதியில் 4 இடங்களிலும் மருத்துவ முகாம்கள் இன்று நடந்தது.

    நாகர்கோவில் மாநக ராட்சிக்குட்பட்ட குன்னு விளை, குளத்தூர், நீராளி குளம், ஏ.ஆர்.கேம்ப் பகுதி யில் உள்ள நகர்ப்புற நல் வாழ்வு மையத்தில் நடந்த மருத்துவ முகாமில் ஏராள மான பொதுமக்கள் கலந்து கொண்டனர். மருத்துவ முகாம் நடைபெற்ற பகுதி களில் யாருக்காவது காய்ச்சல் பாதிப்பு உள்ளதா என்பது குறித்து சோதனை நடத்தப்பட்டது.

    மேலும் காய்ச்சல் அறிகு றியுடன் வந்தவர்களுக்கு டாக்டர்கள் குழுவினர் சிகிச்சை அளித்தனர். காய்ச்சல் பாதிப்பு உள்ளவர்கள் சுயமருந்து உட்கொள்ளக்கூடாது. டாக்டரிடம் காண்பித்து மருந்து சாப்பிட வேண்டும் என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

    இது குறித்து அதிகாரிகள் கூறுகையில் குமரி மாவட்டத்தில் காய்ச்சல் பாதிப்பு வழக்கத்தை விட தற்போது சற்று அதிகரித்து உள்ளது.

    சளி மற்றும் காய்ச்சல் தொல்லையால் குழந்தை கள், பெரியவர்கள் பாதிக்கப்பட்டு வருகி றார்கள். மழை பெய்து வரும் நிலையில் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வரு கிறது. ஏற்கனவே சராசரி யாக தினமும் 35 பேர் பாதிக்கப்பட்டு வந்திருந்த நிலையில் தற்போது தினசரி பாதிப்பு 45 ஆக அதிக ரித்துள்ளது. எனவே பொதுமக்கள் எச்சரிக்கை யுடன் இருக்க வேண்டும்.

    குடிநீரை காய்ச்சி அருந்த வேண்டும். சுய மருந்து உட்கொள்ளக் கூடாது. காய்ச்சல் பாதிப்பு உள்ள வர்கள் உடனடியாக பக்கத் தில் உள்ள அரசு ஆஸ்பத்தி ரிகள் அல்லது தனியார் ஆஸ்பத்திரி களுக்கு சென்று சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும் என்றனர்.

    Next Story
    ×