என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
2 சிறுவர்களுக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி
- கரூரில் 2 சிறுவர்கள் டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்
- குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவில், 24 மணி நேரமும் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்
கரூர்,
தமிழகத்தில், டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.இதன் காரணமாக கரூர் மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகள் மூலம், கொசு ஒழிப்பு பணிகள்மற்றும் மக்களிடம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. மாவட்ட சுகாதாரத்துறை சார்பில் டாக்டர்கள், செவிலியர், மருத்துவ பணியாளர் அடங்கிய சிறப்பு குழு அமைக்கப்பட்டு கண்காணிப்பு முடுக்கி விடப்பட்டுள்ளது. கரூர் அரசு கல்லுாரி மருத்துவமனையில், 50 படுக்கைகள் கொண்ட காய்ச்சல் வார்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் பள்ளப்பட்டியில் வசிக்கும், ஒரே குடும்பத்தை சேர்ந்த, 10, 8 வயதுள்ள இரு சிறுவர்கள் டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள், குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவில், 24 மணி நேரமும் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.இது குறித்து, கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை டீன் தாமோதரன் கூறுகையில்," பருவநிலை காரணமாக, குழந்தைகள் உள்பட பலர் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டு உள்ள னர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்களுக்கு டெங்கு காய்ச்சல் பரிசோதனை செய்யப்படுகிறது. இதுவரை, யாருக்கும் டெங்கு பாதிப்பு ஏற்படவில்லை,' என்றார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்