search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகள் விழிப்புணர்வு முகாம்
    X

    டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகள் விழிப்புணர்வு முகாம்

    • ஒகளுர் கிராமத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகள் விழிப்புணர்வு முகாம்
    • இரண்டு தினங்க ளுக்கு மேல் காய்ச்சல் அடித்தால் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலைய த்திற்கு சென்று உடனடியாக சிகிச்சை பெற அறிவுரை

    அகரம்சீகூர்,

    பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் அகரம்சீகூர் அருகேயுள்ள ஒகளுர் கிரா மத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகள் குறித்து பொதுமக்கள் இடையே லப்பைக்குடிகாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.வேப்பூர் வட்டார மருத்து வ அலுவலர் மருத்துவர் சேசு தலைமையில் வட்டார சுகாதார மேற்பார்வை யாளர் தாசன் சுகாதார ஆய்வாளர் பார்த்தசாரதி மற்றும் டெங்கு ஒழிப்பு பணியாளர்கள் ஆகியோர்ஒகளுர் கிராமத்தில் வீதி வீதியாக சென்று பாத்தி ரங்கள். தண்ணீர் தொட்டி கள், டயர், உரல் ஆகியவற்றி ல் தேங்கி உள்ள தண்ணீரில் டெங்கு காய்ச்சல் வர கார ணமாக உள்ள லார்வாக்கள் மற்றும் ஏடிஎஸ் கொசுக்க ளை மருந்துகள் ஊற்றி அழி த்தனர்.மேலும் பொது மக்களி டையே தண்ணீர் தேங்கி நிற்கும் பாத்திரங்களை அவ்வப்போது சுத்தம் செய்யவும், டெங்கு கொசு க்கள் புழுக்கள் வளராமல் இருக்க சுற்றுப்புற பகுதி களை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டியது குறித்தும் விரிவாக எடுத்து கூறினார்கள்.மேலும் இரண்டு தினங்க ளுக்கு மேல் காய்ச்சல் அடித்தால் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலைய த்திற்கு சென்று உடனடியாக சிகிச்சை பெற கேட்டுக்கொ ண்டனர்.இதேபோல் அத்தியூர் ,கழனிவாசல் ,திருமாந்துறை ,உள்ளிட்ட கிராமங்களுக்கு சென்று பொது மக்களி டையே டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி னார்கள்.

    Next Story
    ×