search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காய்கறிகள்"

    • கடந்த 2 நாட்களாக பீன்ஸ் வரத்து சற்று அதிகரித்து உள்ளதால் மீண்டும் அதன் விலை குறைய தொடங்கி இருக்கிறது.
    • கோயம்பேடு சந்தைக்கு 480 லாரிகளில் காய்கறிகள் விற்பனைக்கு வந்து குவிந்தன.

    போரூர்:

    சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா கேரளா, உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இருந்து காய்கறிகள் விற்பனைக்கு வருகிறது. இன்று கோயம்பேடு சந்தைக்கு 480 லாரிகளில் காய்கறிகள் விற்பனைக்கு வந்து குவிந்தன. இதனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை வரத்து குறைவால் ரூ.120 வரை விற்கப்பட்ட பீன்ஸ் விலை குறைந்து உள்ளது.

    கடந்த 2 நாட்களாக பீன்ஸ் வரத்து சற்று அதிகரித்து உள்ளதால் மீண்டும் அதன் விலை குறைய தொடங்கி இருக்கிறது. இன்று மொத்த விற்பனையில் ஒரு கிலோ பீன்ஸ் ரூ.50-க்கு விற்கப்பட்டது. இதேபோல் வரத்து அதிகரிப்பு காரணமாக முருங்கைக்காய் விலை கடும் வீழ்ச்சி அடைந்தது. மொத்த விற்பனை கடைகளில் ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ,15-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகள் விற்பனை சற்று மந்தமாகவே நடைபெற்று வருவதாக வியாபாரிகள் தெரிவித்து உள்ளனர். கோயம்பேடு மார்க்கெட்டில் இன்றைய காய்கறிகள் மொத்த விற்பனை விலை விபரம் (கிலோவில்) வருமாறு:- தக்காளி-ரூ.9, நாசிக் வெங்காயம்-ரூ.14, சின்ன வெங்காயம்-ரூ.50, உருளைக்கிழங்கு-ரூ.17, உஜாலா கத்தரிக்காய்-ரூ.40, வரி கத்தரிக்காய்-ரூ.30, அவரைக்காய்-ரூ.45, வெண்டைக்காய்-ரூ.20, ஊட்டி கேரட்-ரூ.30, பீன்ஸ்-ரூ.50, பீட்ரூட்-ரூ.20, முட்டைகோஸ்-ரூ.6, சவ்சவ்-ரூ.20, நூக்கல்-ரூ.20, முள்ளங்கி-ரூ.17, காலி பிளவர் ஒன்று-ரூ.25, முருங்கைக் காய்-ரூ.15, பீர்க்கங் காய்-ரூ.30,கோவக்காய்-ரூ.6, பன்னீர் பாகற்காய்-ரூ.30, புடலங்காய்-ரூ.15, கொத்தவரங்காய்-ரூ.20.

    • பொங்கல் பண்டிகை முன்னிட்டு பொது மக்கள் பானைகள், அடுப்பு, கரும்பு, மஞ்சள் கொத்து, அச்சு வெல்லம் உள்ளிட்ட பொங்கலுக்கு தேவையான பொருட்களையும் வாங்கி வருகின்றனர்.
    • பொங்கல் பண்டிகைக்கு வழக்கத்தை விட காய்கறிகளின் தேவை அதிக அளவில் இருக்கும். இதனால் அவற்றின் விலையும் உயர்ந்து காணப்படும்.

    தஞ்சாவூர்:

    வருகிற 15-ந் தேதி தைப்பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது. பின்னர் மாட்டுப்பொங்கல் , காணும் பொங்கல் உள்ளிட்ட அடுத்தடுத்து பண்டிகைகள் வருகின்றன.

    பொங்கல் பண்டிகை முன்னிட்டு பொது மக்கள் பொங்கல் பானைகள், அடுப்பு, கரும்பு, மஞ்சள் கொத்து, அச்சு வெல்லம் உள்ளிட்ட பொங்கலுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் வாங்கி வருகின்றனர்.

    பொங்கலன்று பல்வேறு வகையான காய்கறிகளைக் கொண்டு சமைப்பது வழக்கம். இதனால் பொங்கல் பண்டிகைக்கு வழக்கத்தை விட காய்கறிகளின் தேவை அதிக அளவில் இருக்கும்.

    இதனால் அவற்றின் விலையும் உயர்ந்து காணப்படும். தஞ்சையில் கடந்த சில நாட்களாகவே காய்கறி விலை உச்சத்தை தொட்டு வருகிறது.

    தஞ்சை அரண்மனை வளாகத்தில் செயல்படும் காமராஜர் காய்கறி மார்க்கெட்டில் காய்கறி விலை அதிகரித்துள்ளது.

    இந்த மார்க்கெட்டிற்கு கரூர், தூத்துக்குடி, தேனி, பழனி, உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, நிலக்கோட்டை, நீலகிரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் காய்கறிகள் கொண்டு வரப்படும்.

    பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 2 நாட்கள் தான் உள்ளது. இதனால் பொங்கல் பண்டிகைக்காக புதுமணத் தம்பதியினருக்கும் மற்றும் திருமணமான பெண்களுக்கு பெற்றோர்கள், சகோதரர்கள் சீர்வரிசை கொடுப்பது வழக்கம்.

    இதில் கரும்பு, வாழைத்தார், பொங்கல் வைப்பதற்கு தேவையான பொருட்கள் மற்றும் காய்கறிகள் ஆகியவையும் அடங்கும்.

    இதனால் தற்போது காய்கறிகள் விற்பனை அதிக அளவில் நடைபெற்று வருகிறது. மேலும் தற்போது பனி காரணமாக காய்கறிகள் விளைச்சலும் குறைவாக உள்ளது. இதனால் விலை கடுமையாக உயர்ந்து காணப்படுகிறது.

    கிலோ ரூ.10-க்கு விற்பனை செய்யப்பட்ட தக்காளி இன்று கிலோ ரூ.30-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதே போல் முருங்கைக்காய் விலையும் கடுமையாக உயர்ந்து காணப்பட்டது.

    ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ.140-க்கு விற்பனை செய்யப்பட்டது.

    இதே போல் கத்தரிக்காய் கிலோ ரூ.100, வெண்டைக்காய் ரூ.80, மாங்காய் ரூ.120, அவரை ரூ.50, சின்ன வெங்காயம் ரூ.90 முதல் ரூ.110, பெரிய வெங்காயம் ரூ.30, பீட்ரூட் ரூ.50, மொச்சை ரூ.100, கருணைக்கிழங்கு ரூ.90, சவ்சவ் ரூ.25, கோவைக்காய் ரூ.90 -க்கு விற்பனை செய்யப்பட்டது.

    விளைச்சல் குறைவாக இருந்ததாலும் வரத்தை குறைவாக உள்ளதாலும் தேவை அதிகமாக இருப்பதாலும் காய்கறி விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • இன்று வெள்ளிக்கிழமை மார்கழி மாத சர்வ மஹாலய முழு அமாவாசை மற்றும் அனுமன் ஜெயந்தி ஆகும். அதனையொட்டி அனைத்து உழவர் சந்தைகளிலும் அதிகாலை முதலே பொது மக்கள் கூட்டம் அலை மோதியது.
    • இன்று ஒரே நாளில் ரூ.78,45,691 லட்சம் மதிப்பிலான காய்கறிகள், பழங்கள், பூக்கள் விற்பனை ஆனது.

    அன்னதானப்பட்டி:

    சேலம் மாநகரில் சூரமங்கலம், தாதகாப்பட்டி, அஸ்தம்பட்டி, அம்மாப்பேட்டை மற்றும் மாவட்டத்தில் ஆத்தூர், மேட்டூர், ஜலகண்டாபுரம் , எடப்பாடி, இளம்பிள்ளை, தம்மம்பட்டி, ஆட்டை யாம்பட்டி ஆகிய 11 இடங்களில் உழவர் சந்தைகள் உள்ளன. இந்த சந்தைகளில் வழக்கத்தை விட பண்டிகை, அமாவாசை, பவுர்ணமி நாட்களில் கூடுதலாக காய்கறிகள், பழங்கள், பூக்கள் விற்பனையாவது வழக்கம்.

    அதன்படி, இன்று வெள்ளிக்கிழமை மார்கழி மாத சர்வ மஹாலய முழு அமாவாசை மற்றும் அனுமன் ஜெயந்தி ஆகும். அதனையொட்டி அனைத்து உழவர் சந்தைகளிலும் அதிகாலை முதலே பொது மக்கள் கூட்டம் அலை மோதியது. முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கவும், வீடுகளில் முன்னோர்கள், மற்றும் சாமிக்கு பூஜைகள் செய்து, படையலிட்டு சமைப்ப தற்காகவும் பொது மக்கள் தங்களுக்கு தேவையான காய்கறிகள், பழங்கள், பூக்கள் உள்ளிட்டவற்றை அதி களவில் வாங்கி சென்றனர்.

    பழங்கள், தேங்காய், வாழை இலை , கீரை வகைகள், பூசணிக்காய் , காய்கறிகள் உள்ளிட்டவை அதிகளவில் விற்பனை ஆனது . இதே போல் , பூக்கள் வியாபாரமும் வழக்கத்தை விட அதிகரித்து காணப்பட்டது.

    சேலம் மாவட்டத்தில் உள்ள

    11 உழவர் சந்தைகளிலும் இன்று

    984 விவசாயிகள், பல்வேறு 651 வகையான காய்கறிகள், பழங்கள் உள்ளிட்டவற்றை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். காய்கறிகள், பழங்களின் மொத்த வரத்து 245.805 மெட்ரிக் டன் ஆகும். அவற்றை 54,393 நுகர்வோர்கள் வாங்கிச் சென்றனர். இதன் மூலம் இன்று ஒரே நாளில் ரூ.78,45,691 லட்சம் மதிப்பிலான காய்கறிகள், பழங்கள், பூக்கள் விற்பனை ஆனது. இது வழக்கமான வியாபாரத்தை விட இருமடங்கு விற்பனை ஆகும் என வேளாண்மைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • நாமக்கல் கோட்டை சாலையில் செயல்படும் உழவர் சந்தையில் சுற்று வட்டார பகுதியில் விவசாயிகள் தங்களது தோட்டங்களில் விளை விக்கப்பட்ட காய்கறி மற்றும் பழங்களை விற்பனை செய்து வருகின்றனர்.
    • இதில் தக்காளி ஒரு கிலோ ரூ.20-க்கும், கத்தரிக்காய் ரூ.60-க்கும், பீட்ரூட் ரூ.56-க்கும், கேரட் ரூ.56-க்கும், பீன்ஸ் ரூ.32-க்கும், இஞ்சி ரூ.80-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

    நாமக்கல்:

    நாமக்கல் கோட்டை சாலையில் செயல்படும் உழவர் சந்தையில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த

    விவசாயிகள் தங்களது தோட்டங்களில் விளை விக்கப்பட்ட காய்கறி மற்றும் பழங்களை விற்பனை செய்து வருகின்றனர்.

    உழவர் சந்தைக்கு 163 விவசாயிகள், 19,145 கிலோ காய்கறிகள் 4,410 கிலோ பழங்கள் என மொத்தம் 23 ஆயிரத்து 555 கிலோ விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். அவை ரூ.8.11 லட்சத்திற்கு விற்பனையானது. இதில் தக்காளி ஒரு கிலோ ரூ.20-க்கும், கத்தரிக்காய் ரூ.60-க்கும், பீட்ரூட் ரூ.56-க்கும், கேரட் ரூ.56-க்கும், பீன்ஸ் ரூ.32-க்கும், இஞ்சி ரூ.80-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

    • 1500 கிலோ அரிசி மற்றும் 1000 கிலோ காய்கறிகள், இனிப்பு வகைகள் ஆகியவற்றை பக்தர்கள் தானமாக வழங்கினர்.
    • தயார் செய்யப்பட்ட சாதம் பெருவுடையார் திருமேனிகளில் சாத்தப்படுகிறது

    தஞ்சாவூர்:

    உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவில் உலக பாரம்பரிய சின்னமாக விளங்குவதோடு, தமிழர்களின் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்து வருகிறது.

    இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டும் அல்லாது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.

    பெரியகோவிலில் கருவறையில் உள்ள பெருவுடையார் மிகப்பெரிய லிங்கத் திருமேனியாகும்.

    6 அடி உயரமும், 54 அடி சுற்றளவும் கொண்ட பீடமும், அதன்மேல் 13 அடி உயரம், 23 அடி சுற்றளவும் உள்ள லிங்கம் எனத் தனித்தனி கருங்கற்களினால் செதுக்கப்பட்டு இணைக்கப்பட்டு உள்ளது.

    இத்தகைய சிறப்பு மிக்க பெருவுடையாருக்கு ஐப்பசி பவுர்ணமி தினத்தில் அன்னாபிஷேகம் நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி இன்று ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு பக்தர்கள் வழங்கிய அரிசியை சாதமாக தயார் செய்து, பெருவுடையார் திருமேனி முழுவதும் சாத்தப்பட்டு, காய்கறிகள், பழங்கள், இனிப்பு வகைகளால் அலங்காரம் செய்யப்படுகிறது.

    இந்த நிகழ்ச்சி இன்று மாலை நடைபெறுகிறது.

    இதற்காக பக்தர்கள் இன்று காலையிலிருந்து அரிசி, காய்கறிகளை தானமாக செய்து வருகின்றனர்.

    சுமார் 1500 கிலோ அரிசி, சுமார் 1000 கிலோ முள்ளங்கி, கேரட், கத்தரிக்காய் உள்ளிட்ட பல்வேறு வகையான காய்கறிகள், இனிப்பு வகைகள் ஆகியவற்றை பக்தர்கள் தானமாக வழங்கினர்.

    இதனைத் தொடர்ந்து அரிசியை சாதமாக தயார் செய்யும் பணி நடந்து வருகிறது.

    மேலும் காய்கறிகள் கொண்டு அலங்காரம் செய்யும் பணியும் நடைபெற உள்ளது.

    பணிகள் அனைத்தும் முடிந்த பிறகு

    இன்று மாலை 4.30 மணி அளவில் அன்னாபிஷேகம் நடைபெற உள்ளது.

    தயார் செய்யப்பட்ட சாதம் பெருவுடையார் திருமேனிகளில் சாத்தப்படுகிறது.

    காய்கறிகள் கொண்டு பெருவுடையாருக்கு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாரதனை காண்பிக்கப்படுகிறது.

    இந்த அன்னாபிஷேகம் மூலம் உலக மக்கள் நலன் பெற வேண்டியும், நீர்நிலைகள் நிரம்பவும், விவசாயம் செழிக்கவும் நடத்தப்படுகிறது.

    அன்னாபிஷேகம் முடிந்ததும் அலங்காரம் கலைக்கப்பட்டு பொதுமக்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.

    மேலும் நீர்நிலைகளில் உள்ள ஜீவராசிகள் உணவருந்தும் வகையில் அன்னம் ஆற்றில் கரைக்கப்படும்.

    இந்த அன்னாபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

    • அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு பரிசோதனை மற்றும் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
    • பிரசவ காலத்தில் மூச்சு பயிற்சியில் ஈடுபட்டால் உடலும், மனமும், குழந்தையும் ஆரோக்கியத்துடன் பிறக்க வழிவகை செய்யும்.

    நாகப்பட்டினம்:

    நாகையில் உடலும் மனமும் ஆரோக்கியம் பெற ஒரே நேரத்தில் 50 க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு யோகா பயிற்சி;

    காய்கறி, கீரை, பழங்கள் உள்ளிட்ட ஊட்டச்சத்துள்ள உணவு பொருட்களும் வழங்கப்பட்டது

    நாகை மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் திருமருகல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு பரிசோதனை மற்றும் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

    முகாமில் ஒரே நேரத்தில் 50 க்கும் மேற்பட்ட கர்ப்பிணி தாய்மார்களுக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.

    பிரசவ காலத்தில் யோகா உள்ளிட்ட மூச்சு பயிற்சியில் ஈடுபட்டால் உடலும் மனமும் குழந்தையும் ஆரோக்கியத்துடன் பிறக்க வழிவகை செய்யும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

    தொடர்ந்து 52- கர்ப்பிணி தாய்மார்களுக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு திருமருகல் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் பழங்கள், காய்கறிகள், கீரை வகைகள் வழங்கப்பட்டது.

    • ஆடி மாதம் ஞாயிற்றுக்கிழமையை யொட்டி இன்று அதிக அளவில் காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன.
    • உழவர் சந்தையில் 27 டன் காய்கறிகள் விற்பனை ஆனதாக உழவர் சந்தை நிர்வாக அலுவலர் தெரிவித்தார்.

    நாமக்கல்:

    நாமக்கல் உழ வர்சந்தைக்கு புதுச்சத்திரம், உடுப்பம், அகரம் மோகனூர் கங்காநாயக்கன்பட்டி, பரளி, ஆரியூர், பாலப்பட்டி, திண்டமங்கலம், பெரியா கவுண்டம்மாளையம், மின்னாள்பள்ளி, பொட்ட ணம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் வியா பாரிகள் காய்கறிகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். ஆடி மாதம் ஞாயிற்றுக்கிழமையை யொட்டி இன்று அதிக அளவில் காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. அதன் விவரம் வருமாறு-

    பீன்ஸ் கிலோ ரூ. 76, பீட்ரூட் ரூ.48 கேரட் ரூ.76, பாகற்காய் ரூ.46 புடலைங்காய் ரூ.20, முருங்கைகாய் ரூ.30 வெண்டை ரூ. 20, முள்ளங்கி ரூ. 16 , பீர்க்கிங்காய் ரூ. 28, சின்ன வெங்காயம் ரூ.18, பெரிய வெங்காயம் ரூ.27, கீரை கட்டு ரூ.10, சுரைக்காய் ரூ.10, கத்தரிக்காய் ரூ.40, தேங்காய் ரூ. 27, கொய்யாபழம் ரூ .35, , பச்சைமிளகாய் ரூ. 32 -க்கு விற்பனை செய்யப்பட்டன. காய்கறிகளை சுமார் 5000 பேர் வாங்கி சென்றனர். உழவர் சந்தையில் 27 டன் காய்கறிகள் விற்பனை ஆனதாக உழவர் சந்தை நிர்வாக அலுவலர் மல்லிகா தெரிவித்தார்.

    • உழவர்சந்தையில், வேளாண்மை துணை இயக்குனர் காளிமுத்து திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
    • இந்திய உணவு தரம் மற்றும் பாதுகாப்பு முகமை சான்று வழங்க அறிவுறுத்தினார்.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் தாலுக்கா அலுவலகம் அருகேயுள்ள உழவர்சந்தையில், வேளாண்மை துணை இயக்குனர் காளிமுத்து திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அங்கு விற்கப்படும் காய்கறிகள், பழவகைகளின் தரம் குறித்து அவர் ஆய்வு செய்தார்.

    மேலும், உழவர்சந்தையில் விற்கப்படும் காய்கறிகளின் தரம் மற்றும் சுகாதாரத்தை மேம்படுத்த, முதற்கட்டமாக 25 விவசாய உற்பத்தியாளர்களுக்கு, உணவு பாதுகாப்பு துறையுடன் இணைந்து, இந்திய உணவு தரம் மற்றும் பாதுகாப்பு முகமை சான்று வழங்க அறிவுறுத்தினார்.

    மேலும் அவர் கூறுகையில், உழவர் சந்தையால் பயன்பெறும் நுகர்வோரின் எண்ணிக்கையை அதிகப்படுத்தவும், மாலை நேர உழவர் சந்தை மூலம் அவர்களுக்கு தேவையான இதர வேளாண் பொருட்களான சிறுதானியங்கள், பருப்பு வகைகள் மற்றும் இதர மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் அனைத்தையும் உழவர் உற்பத்தியாளர் நிறு வனங்கள் மூலம், விரைவில் செயல்படுத்தப்படவுள்ளது.

    எனவே, இந்த மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள உழ வர் உற்பத்தியாளர் நிறுவ னங்கள், இது சம்பந்தமாக ஓசூர் உழவர்சந்தை நிர்வாக அலுவலரை தொடர்பு கொள்ளலாம்என்றார்.

    இந்த ஆய்வின்போது, வேளாண்மை அலுவலர்கள், உதவி அலுவலர்கள் உள்பட பலர் உடன் இருந்தனர்.

    • சேலம் மத்திய சிறை கைதிகள் மூலம் காய்கறிகளை பயிரிட்டு நாள் ஒன்றுக்கு மூன்று முதல் 4 டன்கள் காய்கறிகள் உற்பத்தி செய்யப்பட்டு மத்திய சிறைக்கு அனுப்பப்படுகிறது.
    • விசாரணை மற்றும் தண்டனை கைதிகள் 800-க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர்.

    சேலம்:

    சேலம் மத்திய சிறையில் விசாரணை மற்றும் தண்டனை கைதிகள் 800-க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தற்செயலாக குற்றங்களில் ஈடுபட்டு தண்டனை பெற்ற கைதிகளை கண்டறிந்து நன்னடத்தையின் அடிப்படையில் சேலம் ஜாகிர் அம்மாபாளையம் பகுதியில் உள்ள திறந்தவெளி சிறை சாலையில் பணியமடுத்தப்படு கின்றனர். அதன் அடிப்படையில் திறந்த வெளி சிறைச்சாலையில் 10 நன்னடத்தை கைதிகள் உள்ளனர்.

    கடந்த 1965 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட திறந்தவெளி சிறைச்சாலை சுமார் 10 ஏக்கர் பரப்பளவு கொண்டது கரடு முரடாக இருந்த திறந்தவெளி சிறைச்சாலையை கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு சீரமைக்கப்பட்டு மத்திய சிறைக்கு தேவையான காய்கறிகள் இங்கு பயிரிடப்படுகின்றன.

    இந்த நிலையில் மத்திய சிறை கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமார் இன்று திறந்தவெளி சிறை சாலையில் ஆய்வு மேற்கொண்டார் . இதனை தொடர்ந்து அவர் கூறும் போது சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் உள்ள திறந்தவெளி சிறைச்சாலையில் உதவி ஆய்வாளர் திருமலை தெய்வம் தலைமையில்6 காவலர்கள் பாதுகாப்பு பணியில் உள்ளனர் . நன்னடத்தை கைதிகளைக் கொண்டு இயற்கையான முறையில் மண்புழு உரம் எருஉரம் உள்ளிட்ட உரங்களை கொண்டு கத்திரிக்காய் வெண்டைக்காய் முள்ளங்கி புடலங்காய் உள்ளிட்ட காய்கறிகளை பயிரிட்டு நாள் ஒன்றுக்கு மூன்று முதல் 4 டன்கள் காய்கறிகள் உற்பத்தி செய்யப்பட்டு மத்திய சிறைக்கு அனுப்பப்படுகிறது.

    மேலும் நாளொன்றுக்கு 15 லிட்டர் பால் மத்திய சிறை அனுப்பப்படுகிறது . இதன் மூலம் மத்திய சிறையில் உள்ள கைதிகளுக்கு உணவு தயாரிப்பதற்கு கைதிகளைக் கொண்டே உற்பத்தி செய்யப்படுவதால் பொருட்செலவு மிச்சமாகிறது. இனிவரும் காலங்களில் மஞ்சள் பயிரிடப்பட்டு வெளி சந்தையில் விற்பனை செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

    • உழவர் சந்தைகளில் வைகாசி விசாகத்தையொட்டி 52 டன் காய்கறிகள் விற்பனை நடந்தது.
    • இதனால் 5 உழவர் சந்தைகளில் நேற்று வரைதான 52.29 டன் காய்கறிகள் ரூ.14 லட்சத்து 87 ஆயிரத்துக்கு விற்பனை ஆனதாக உழவர் சந்தை நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு சம்பத் நகர், பெரியார் நகர், பெருந்துறை, கோபிசெட்டிபாளையம், சத்தியமங்கலம் 5 நிமிடங்களில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது.

    விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த காய்கறிகளை பல்வேறு பகுதிகளில் இருந்து நேரடியாக உழவர் சந்தைக்கு கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். வெளி மார்க்கெட்டுகளை விட உழவர் சந்தைகளில் காய்கறி விலை மலிவாக கிடைப்பதால் மக்கள் இங்கு காய்கறிகளை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். நேற்று வைகாசி விசாகத்தை ஒட்டி யும் பள்ளிகள் திறப்பை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள 5 உழவர் சந்தைகளிலும் வழக்கத்தைவிட விவசாயிகள் அதிகளவில் காய்கறிகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். காய்கறிகளை வாங்க அதிகாலை முதலே மக்கள் குவிந்தனர்.

    இதனால் 5 உழவர் சந்தைகளில் நேற்று வரைதான 52.29 டன் காய்கறிகள் ரூ.14 லட்சத்து 87 ஆயிரத்துக்கு விற்பனை ஆனதாக உழவர் சந்தை நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    • கடந்த வாரங்களில் தமிழகம் முழுவதும் உள்ள, உழவர் சந்தைகளின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது.
    • தினமும் 47 லட்சம் ரூபாய் மதிப்பிலான, காய்கறி மற்றும் பழங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர் வடக்கு, தெற்கு, உடுமலை, பல்லடம், தாராபுரம், காங்கயம் பகுதியில், உழவர் சந்தைகள் இயங்கி வருகின்றன. இவற்றில், ஆயிரக்கணக்கான விவசாயிகள் உறுப்பினராக உள்ளனர்.

    தமிழக அளவில் திருப்பூர் தெற்கு உழவர் சந்தையில், தினமும் 100 டன் காய்கறிகள் வரை விற்பனைக்கு வருகிறது. தினமும் 370 முதல் 380 விவசாயிகள் காய்கறி விற்கின்றனர்.

    கடந்த வாரங்களில் தமிழகம் முழுவதும் உள்ள, உழவர் சந்தைகளின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது.திருப்பூர் மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையிலான காய்கறிகள் விற்கப்படுவதும், வாடிக்கையாளர் பயன்பெறுவதும் தெரிய வந்துள்ளது.

    கடந்த சில வாரங்கள் நடத்தப்பட்ட ஆய்வின்படி ஒரு நாளின் சராசரி வியாபாரம் கண்டறியப்பட்டுள்ளது.மாவட்டத்தில் உள்ள 6 உழவர் சந்தைகளில்தினமும் 165 டன் காய்கறி மற்றும் பழங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

    அதாவது தினமும் 47 லட்சம் ரூபாய் மதிப்பிலான, காய்கறி மற்றும் பழங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. உழவர் சந்தைகளுக்கு தினமும் 645 வியாபாரிகள் வந்து காய்கறி விற்கின்றனர்.

    கடந்த மாத நிலவரப்படி 14 ஆயிரத்து 566 பேர் தினமும் பயனடைந்து வந்துள்ளதாகவேளாண் வணிகத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    பெட்ரோல்-டீசல் விலையை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் ஸ்டிரைக்கில் ஈடுப்பள்ள நிலையில் கடலூர் உழவர்சந்தைக்கு அரசு பஸ்கள் மூலம் நேற்று முதல் காய்கறிகள் வந்தது.
    கடலூர்:

    பெட்ரோல்-டீசல் விலையை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டுவர வேண்டும், சுங்கச்சாவடிகளை அகற்றி விட்டு ஆண்டுக்கு ஒரு முறை சுங்க கட்டணம் வசூலிக்கவேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் கடந்த 20-ந் தேதி முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இன்று 6-வது நாளாக வேலை நிறுத்தப்போராட்டம் நீடிக்கிறது.

    கடலூர் மாவட்டத்திலும் சுமார் 7 ஆயிரம் லாரிகள் ஓடவில்லை. இதனால் வர்த்தகம் பெரும் அளவு பாதிக்கப்பட்டுள்ளது. தொழிற்சாலைகளில் உற்பத்தியான பொருட்கள் வெளிமாநிலங்களுக்கு கொண்ட செல்ல முடியவில்லை. இதனால் பல தொழிற்சாலைகள் உற்பத்தியை நிறுத்தி வைத்துள்ளன.

    கடலூர் மாவட்டத்துக்கு கர்நாடகா, மராட்டியம் உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து அரிசி, பருப்பு, வெங்காயம், காய்கறிகள், பழங்கள் லாரிகளில் கொண்டுவரப்படும். லாரிகள் ஓடாததால் வெளி மாநிலங்களில் இருந்துவரும் காய்கறிகள் வரத்து அடியோடு நின்றது.

    இதைத்தொடர்ந்து கடலூர் உழவர்சந்தைக்கு அரசு பஸ்களில் நேற்று முதல் காய்கறிகள் வந்திறங்கின. எம்.புதூர், எஸ்.புதூர், வடலூர் போன்ற பகுதிகளில் இருந்து அரசு பஸ்களில் காய்கறிகள், வாழைத்தார்கள், பழங்கள் கொண்டுவரப்பட்டன.

    விழுப்புரம் மாவட்டத்தில் சுமார் 10 ஆயிரத்து 500 லாரிகள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. இதன் காரணமாக வெளிமாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களுக்கு அனுப்பப்படும் சரக்குகள் தேக்கம் அடைந்துள்ளன.

    சென்னை கோயம்பேடு, ஒட்டன்சத்திரம், திண்டுக்கள் போன்ற பகுதிகளில் இருந்து விழுப்புரம் மாவட்டத்துக்கு லாரிகளில் காய்கறிகள் கொண்டுவரப்படும். லாரி ஸ்டிரைக் காரணமாக காய்கறிகள் எதுவும் வரவில்லை. இதனால் காய்கறிகளின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது.

    மரக்காணம் பகுதியில் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் உப்புகள் லாரிகள் மூலம் கேரளா, ஆந்திரா மாநிலங்களுக்கும் மற்றும் பல்வேறு மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்படும். லாரி ஸ்டிரைக் காரணமாக மரக்காணம் பகுதியில் உப்புகள் மலைபோல் குவிக்கப்பட்டுள்ளது. சுமார் 10 ஆயிரம் டன் உப்புகள் தேக்கி வைக்கப்பட்டுள்ளது.

    லாரிகள் ஓடாததால் உப்பளத்தில் வேலைபார்க்கும் தொழிலாளர்கள் பாதிப்படைந்துள்ளனர். வேலை நிறுத்தம் காரணமக விழுப்புரம் மாவட்டத்தில் லாரி டிரைவர்கள், சுமை தூக்கும் தொழிலாளர்களும் என 20 ஆயிரத்தும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    லாரி ஸ்டிரைக் தொடர்ந்து நீடிப்பதால் அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு அபாயம் ஏற்பட்டுள்ளது.
    ×