search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாமக்கல் உழவர் சந்தையில் 27 டன் காய்கறிகள் விற்பனை
    X

    நாமக்கல் உழவர் சந்தையில் காய்கள் வாங்க வந்த பொதுமக்கள்,

    நாமக்கல் உழவர் சந்தையில் 27 டன் காய்கறிகள் விற்பனை

    • ஆடி மாதம் ஞாயிற்றுக்கிழமையை யொட்டி இன்று அதிக அளவில் காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன.
    • உழவர் சந்தையில் 27 டன் காய்கறிகள் விற்பனை ஆனதாக உழவர் சந்தை நிர்வாக அலுவலர் தெரிவித்தார்.

    நாமக்கல்:

    நாமக்கல் உழ வர்சந்தைக்கு புதுச்சத்திரம், உடுப்பம், அகரம் மோகனூர் கங்காநாயக்கன்பட்டி, பரளி, ஆரியூர், பாலப்பட்டி, திண்டமங்கலம், பெரியா கவுண்டம்மாளையம், மின்னாள்பள்ளி, பொட்ட ணம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் வியா பாரிகள் காய்கறிகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். ஆடி மாதம் ஞாயிற்றுக்கிழமையை யொட்டி இன்று அதிக அளவில் காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. அதன் விவரம் வருமாறு-

    பீன்ஸ் கிலோ ரூ. 76, பீட்ரூட் ரூ.48 கேரட் ரூ.76, பாகற்காய் ரூ.46 புடலைங்காய் ரூ.20, முருங்கைகாய் ரூ.30 வெண்டை ரூ. 20, முள்ளங்கி ரூ. 16 , பீர்க்கிங்காய் ரூ. 28, சின்ன வெங்காயம் ரூ.18, பெரிய வெங்காயம் ரூ.27, கீரை கட்டு ரூ.10, சுரைக்காய் ரூ.10, கத்தரிக்காய் ரூ.40, தேங்காய் ரூ. 27, கொய்யாபழம் ரூ .35, , பச்சைமிளகாய் ரூ. 32 -க்கு விற்பனை செய்யப்பட்டன. காய்கறிகளை சுமார் 5000 பேர் வாங்கி சென்றனர். உழவர் சந்தையில் 27 டன் காய்கறிகள் விற்பனை ஆனதாக உழவர் சந்தை நிர்வாக அலுவலர் மல்லிகா தெரிவித்தார்.

    Next Story
    ×