search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    52  டன் காய்கறிகள் விற்பனை
    X

    52 டன் காய்கறிகள் விற்பனை

    • உழவர் சந்தைகளில் வைகாசி விசாகத்தையொட்டி 52 டன் காய்கறிகள் விற்பனை நடந்தது.
    • இதனால் 5 உழவர் சந்தைகளில் நேற்று வரைதான 52.29 டன் காய்கறிகள் ரூ.14 லட்சத்து 87 ஆயிரத்துக்கு விற்பனை ஆனதாக உழவர் சந்தை நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு சம்பத் நகர், பெரியார் நகர், பெருந்துறை, கோபிசெட்டிபாளையம், சத்தியமங்கலம் 5 நிமிடங்களில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது.

    விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த காய்கறிகளை பல்வேறு பகுதிகளில் இருந்து நேரடியாக உழவர் சந்தைக்கு கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். வெளி மார்க்கெட்டுகளை விட உழவர் சந்தைகளில் காய்கறி விலை மலிவாக கிடைப்பதால் மக்கள் இங்கு காய்கறிகளை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். நேற்று வைகாசி விசாகத்தை ஒட்டி யும் பள்ளிகள் திறப்பை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள 5 உழவர் சந்தைகளிலும் வழக்கத்தைவிட விவசாயிகள் அதிகளவில் காய்கறிகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். காய்கறிகளை வாங்க அதிகாலை முதலே மக்கள் குவிந்தனர்.

    இதனால் 5 உழவர் சந்தைகளில் நேற்று வரைதான 52.29 டன் காய்கறிகள் ரூ.14 லட்சத்து 87 ஆயிரத்துக்கு விற்பனை ஆனதாக உழவர் சந்தை நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×