search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காப்பீடு"

    • எதிர்பாராத விபத்தால் வீடு சேதமடைய நேர்ந்தால் காப்பீட்டின் மூலம் தகுந்த இழப்பீடு கிடைக்கும்.
    • காப்பீடு செய்வதற்கு முன்பு கவனிக்க வேண்டியவை இதோ:

    நமது வாழ்நாளில் நாம் செய்யும் மிகப்பெரிய செலவு ஒரு வீட்டை வாங்குவது அல்லது கட்டுவது ஆகும். அவ்வாறு பல்வேறு கனவுகளுடன் கட்டி வாழ்ந்துகொண்டு இருக்கும் வீட்டை காப்பீடு செய்வது முக்கியமானது. நிலநடுக்கம், புயல், சூறாவளி, வெள்ளம் ஆகிய இயற்கை பேரழிவுகள், எதிர்பாராத விபத்துகள் போன்ற காரணங்களால் வீடு சேதமடைய நேர்ந்தால் காப்பீட்டின் மூலம் தகுந்த இழப்பீடு கிடைக்கும். அந்தத் தொகை வீட்டை சீர்படுத்துவதற்கும், இழப்பை ஈடு செய்வதற்கும் உதவும். காப்பீடு செய்வதற்கு முன்பு கவனிக்க வேண்டியவை இதோ:

    * நாம் தேர்ந்தெடுக்கும் காப்பீட்டைப் பற்றிய முழு விவரங்களையும், விதிமுறைகளையும் தெளிவாக தெரிந்துகொள்ள வேண்டும். அப்போதுதான், தேவைப்படும் நேரத்தில் காப்பீட்டின் முழுப் பயனையும் பெற முடியும்.

    * உங்கள் தேவையைப் புரிந்து கொண்ட பின்னர் சிறந்த காப்பீட்டை வாங்கும் முயற்சியைத் தொடங்க வேண்டும். காப்பீட்டு திட்டத்தில், உங்களுக்கு ஏற்றதாக இருக்கும் பாலிசிகளின் பட்டியலை உருவாக்க வேண்டும். காப்பீட்டின் சிறப்புகள், வரம்புகள், விலக்குகள் மற்றும் காப்பீட்டுத் தொகை ஆகியவற்றின் அடிப்படையில் பாலிசிகளை ஒப்பிட வேண்டும்.

    * தேர்ந்தெடுக்கும் காப்பீடு தனிப்பட்ட விபத்துக்கள் மற்றும் டி.வி., கணினி போன்ற மின்னணு சாதனங்களுக்கு எதிராக, விரிவான பாதுகாப்பை வழங்குகிறதா என்பதை கவனிக்க வேண்டும்.

    * காப்பீட்டாளர் நிதிச் சிக்கலை எதிர்கொண்டால், காப்பீட்டின் பயனை பெறுவதில் பாதிப்பு ஏற்படலாம். எனவே, காப்பீட்டாளரின் நிதிப் பின்னணியை உறுதி செய்வது அவசியம்.

    * காப்பீட்டு நிறுவனத்தின் இழப்பீடு வழங்கும் விகிதம், நிறுவனம் ஒரு ஆண்டில் எத்தனை இழப்பீடுகளை தந்திருக்கிறது என்பதை தெரிந்துகொள்ள வேண்டும்.

    • 5,063 ஹெக்டர் பரப்பளவில் வாழை மற்றும் 1,437 ஹெக்டர் பரப்பளவில் மரவள்ளி பயிர்கள் சாகுபடி
    • கடன் பெறும் விவசாயிகளுக்கு பிரீமியம் தொகையை அந்தந்த கடன் வழங்கும் வங்கிகள் மூலம் விருப்பத்தின் பேரில் பிடித்தம்

    நாகர்கோவில் :

    குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    குமரி மாவட்டத்தில் சுமார் 5,063 ஹெக்டர் பரப்பளவில் வாழை மற்றும் 1,437 ஹெக்டர் பரப்பளவில் மரவள்ளி பயிர்கள் சாகுபடி செய் யப்பட்டு வருகிறது. தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி செய்யும் போது ஏற்படும் இடர்பாடுகளான நடவு செய்ய இயலாமை, மழை பொய்த்தல், வெள்ளம், கடும் வறட்சி, தொடர் வறண்ட நிலவரம், நிலச்சரிவு, ஆலங்கட்டி மழை, புயல் மற்றும் வெள்ளப்பெருக்கு ஆகிய வற்றால் இழப்பு ஏற்படும் போது காப்பீடு செய்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கப்படுகிறது.

    பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் கடன் பெறும் மற்றும் கடன் பெறா விவசாயிகளுக்கு ஒரே வகையான காலக்கெடு வழங்கப்படுகிறது. குத்தகை விவசாயிகளும் இந்த திட் டத்தின் மூலம் காப்பீடு செய்து பயன்பெறலாம். வாழை விவசாயிகள் ஏக்கர் ஒன்றுக்கு ரூ.4 ஆயிரத்து 182 பிரீமியமாக செலுத்தி ரூ.83,650 இழப்பீடாகவும், மரவள்ளி விவசாயிகள் ஏக்கருக்கு பிரீமியமாக ரூ.1,420 செலுத்தி ரூ.28,400 இழப்பீடாகவும் பெறலாம்.

    கடன் பெறும் விவசாயிகளுக்கு பிரீமியம் தொகையை அந்தந்த கடன் வழங்கும் வங்கிகள் மூலம் விருப்பத்தின் பேரில் பிடித்தம் செய்து காப்பீடு நிறுவ னங்களுக்கு செலுத்த லாம். கடன் பெறா விவசாயிகள் தங்களது அருகில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், தேசிய மயமாக் கப்பட்ட வங்கிகள் மற்றும் பொது சேவை மையங்கள் மூலம் பிரீமியம் செலுத்தலாம்.

    இதற்கு நிலத்தீர்வை ரசீது மற்றும் அடங்கல், வங்கி புத்தக நகல், ஆதார் அட்டை, புகைப்படம் ஆகியவை தேவையான ஆவணங்கள் ஆகும். குமரி மாவட்டத்தில் வாழை மற்றும் மரவள்ளி சாகுபடி செய்துள்ள விவ சாயிகள் பிரதமரின் பயிர் காப்பீடு செய்ய இன்று (செவ்வாய்க்கிழமை) கடைசி நாளாகும். மேலும் இதுதொடர்பான விவரங் களுக்கு வட்டார தோட்டக் கலை உதவி இயக்குனர் அலுவலகங்களை அணுகி பயிர் காப்பீடு செய்து பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

    • 17 ஊராட்சிகளுக்கு பயிர் காப்பீட்டு தொகை கிடைக்கவில்லை.
    • திட்டை செல்லும் சாலை குண்டும் குழியுமாக பழுதடைந்து காணப்படுகிறது.

    சீர்காழி,:

    சீர்காழி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய குழு சாதாரண கூட்டம் நடைபெற்றது.ஒன்றிய க்குழு தலைவர் கமலஜோதிதேவேந்திரன் தலைமை வகித்தார்.

    வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இளங்கோவன் சரவணன் ஒன்றிய குழு துணை தலைவர் உஷாநந்தினி பிரபாகரன் முன்னிலை வகித்தார்.

    இளநிலை உதவியாளர் சரவணன் மன்ற தீர்மான ங்களை வாசித்தார்.

    கூட்டத்தில் நடந்த விவாதங்கள் வருமாறு: கவுன்சிலர் ரிமா பேசுகையில் சீர்காழி ஒன்றியத்தில் 37 ஊராட்சிகளில்17 ஊராட்சிகளுக்கு பயிர் காப்பீட்டுத் தொகை கிடைக்கவில்லை என்றார்.

    கவுன்சிலர் விஜயகுமார் பேசுகையில் திட்டை செல்லும் சாலை குண்டும் குழியுமாக பழுதடைந்து காணப்படுகிறது.

    இதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    கவுன்சிலர் தென்னரசு பேசுகையில் எடக்குடி வட பாதியில் நெல் கொள்முதல் நிலையம் திறக்க முயற்சி எடுத்த ஒன்றிய குழு தலைவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

    ஒன்றிய குழு தலைவர் கமல ஜோதி தேவேந்திரன் பேசுகையில் தமிழக முதல்-அமைச்சர் டெல்டா மாவட்டங்களில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்கள் குறித்து அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை அனுப்பி ஆய்வு செய்து உடனடியாக விவசாயிகளுக்கு நிவாரணத் தொகை அறிவித்துள்ளார் இதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்.

    முடிவில் மேலாளர் சுலோசனா நன்றி கூறினார்.

    • பிரீமியம் செலுத்திய அனைத்து விவசாயிகளுக்கும் பயிர் காப்பீடு வழங்க வேண்டும்.
    • பயிர் காப்பீடு தொடர்பாக மீண்டும் ஆய்வு செய்து இழப்பீடு வழங்க வேண்டும்.

    தஞ்சாவூா்:

    தஞ்சை மாவட்டத்தில் நெல்லின் ஈரப்பதம் குறித்து ஆய்வு செய்த மத்திய குழுவிடம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கப் பிரதிநிதி ஜீவக்குமார் தலைமையில் விவசாயிகள் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது :-

    டெல்டா மாவட்டங்களில் பருவம் தவறி பெய்த மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டன.

    எனவே நெல்லின் ஈரப்பதத்தை 22 சதவீதமாக கொள்முதல் செய்ய நிரந்தர உத்தரவை மத்திய அரசு பிறப்பிக்க வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் மழையால் நெல் சாய்ந்து பாதிக்கப்படுவதால் அதற்கு ஏற்ற புதிய ரகங்களை அறிமுகம் செய்ய வேண்டும்.

    பயிர் காப்பீட்டு பிரீமியம் செலுத்திய அனைத்து விவசாயிகளுக்கும் பயிர் காப்பீடு வழங்க வேண்டும். ஏற்கனவே சர்வே முடிந்த பிறகு தான் பருவம் தவறிய மழை பெய்தது.

    எனவே தற்போதைய நிலவரத்தையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். பயிர் காப்பீடு தொடர்பாக மீண்டும் ஆய்வு செய்து இழப்பீடு வழங்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • திருச்செந்தூர் வட்டாரத்தில் சுமார் 1700 ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது.
    • விவசாயிகள் பயிர்காப்பீடு பிரிமியமாக ஒரு ஏக்கர் நெல்பயிருக்கு ரூ.467 செலுத்த வேண்டும்.

    உடன்குடி:

    விவசாயிகளுக்கு திருச்செந்தூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் வெங்கட சுப்பிர மணியன் விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறி யிருப்பதாவது:-

    திருச்செந்தூர் வட்டா ரத்தில் தற்போது நவரை கோடை பருவத்தில் சுமார் 1700ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. புயல், வெள்ளம், வறட்சி உள்ளிட்ட இயற்கை சீற்றங்களிலிருந்து பயிர்களுக்கு பாதிப்பு ஏற்படும் பொழுதும், பூச்சி நோய் தாக்குதலினால் பயிருக்கு சேதம் ஏற்படும் போதும், பூச்சி நோய் நிவாரணம் அளிக்கும பொருட்டு பயிர் காப்பீடுத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 2022-23 ஆண்டுக்கான பிரதம மந்திரி பயிர் காப்பீடு த்திட்டம் தூத்துக்குடி மாவட்டத்தில் இப்போ டோக்கியோ நிறுவனத்தால் நடத்தப் படுகிறது.

    இத்திட்டத்தில் பயிர் கடன் பெறும் விவசாயிகள் மற்றும் கடன் பெறாத அனைத்து விவசாயிகளுக்கும் ஓரே பிரிமியத்தொகை மற்றும் காலக்கெடு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் பிரதம மந்திரியின் பயிர்காப்பீட்டுத்திட்டத்தில் விவசாயிகள் தாங்கள் பிரிமியம் கட்டும் காலத்திற்கு ஏற்றவாறு விதைக்க இயலாத சூழ்நிலை, விதைப்பு பொய்த்தல், மகசூல் இழப்பு ஆகிய நிலைகளில் பயிர் இழப்பீடு பெற்றிட வாய்ப்புகள் உள்ளன.

    நவரை/கோடை பருவ நெல் பயிருக்கு பிரிமியம் செலுத்தினால் பயிர் அறுவடை பரிசோதனை அடிப்படையில் விதிமுறை களுக்கு ஏற்ப இழப்பீடு பெற வழி உள்ளது. விவசாயிகள் பயிர்காப்பீடு பிரிமியமாக ஒரு ஏக்கர் நெல்பயிருக்கு ரூ.467மட்டும் செலுத்த வேண்டும்.

    இதுகடன் பெறும் மற்றும் கடன்பெறாத சிறு மற்றும் குறு விவசாயிகள் மற்றும் இதர விவசாயிகள் அனைவருக்கும் பொருந்தும். விவசாயிகள் பிரிமியக் கட்டணத்தை தொடர்புடைய தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள், தேசியமயமா க்கப்பட்ட வங்கி கள் மற்றும் பொது இ சேவை மையங்களிலும் செலுத்தலாம்.

    இதுகுறித்து விவசாயி களிடையே கிரா மங்களில் வேளாண்துறை விரிவாக்க அலுவலர்கள் மூலம் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் விபரங்களுக்கு தங்கள் பகுதி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள், தேசிய மயமாக்கப் பட்ட வங்கிகள் மற்றும் திருச்செந்தூர் வட்டார வேளாண்அலுவலர், துணை வேளாண்மை அலுவலர், உதவி வேளாண் அலுவலர்களை தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நாமக்கல் மாவட்டத்தில் 2023 -ம் ஆண்டு ரபி பருவத்தில் நிலக்கடலை பயிர் சாகுபடி செய்துள்ள விவசாயிகள், அந்த பயிருக்கு புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தில் பயிர் காப்பீடு செய்து பயனடையலாம்.
    • பிரிமிய தொகை ஏக்கர் ஒன்றுக்கு நிலக்கடலை பயிருக்கு 311.22 ரூபாய் ஆகும். கடைசி நாள் வருகிற 31-ம் தேதி ஆகும்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட வேளாண் இணை இயக்குனர் துரைசாமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது-

    நாமக்கல் மாவட்டத்தில் 2023 -ம் ஆண்டு ரபி பருவத்தில் நிலக்கடலை பயிர் சாகுபடி செய்துள்ள விவசாயிகள், அந்த பயிருக்கு புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தில் பயிர் காப்பீடு செய்து பயனடையலாம்.

    பிரிமிய தொகை ஏக்கர் ஒன்றுக்கு நிலக்கடலை பயிருக்கு 311.22 ரூபாய் ஆகும். கடைசி நாள் வருகிற 31-ம் தேதி ஆகும். கடன் பெறாத விவசாயிகள் பொது சேவை மையங்களில் முன்மொழிவு விண்ணப்பத்துடன் கிராம நிர்வாக அலுவலரின் அடங்கல் சான்று, நடைமுறையில் வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பகுதி நகல் , ஆதார் அட்டை நகல் மற்றும் செல்சிபோன் எண் ஆகியவற்றுடன் இணைத்து காப்பீடு பிரிமியம் செலுத்தி விருப்பத்தின் பேரில் பதிவு செய்து கொள்ளலாம்.

    கூடுதல் விவரங்களுக்கு விவசாயிகள் தங்களது வட்டார வேளாண்மை உதவி இயக்குனரை அணுகி தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அவர், அதில் கூறியுள்ளார்.

    • தொடர் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.
    • உயிர் காப்பீடு செய்வது போல் பயிர் காப்பீடு செய்வது முக்கியம் ஆகும்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பழைய பஸ் நிலையம் அருகில் தொடர் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க கோரி நாம் தமிழர் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் பேசும்போது ;-

    நாம் தமிழர் கட்சி என்பது மாற்றத்திற்கான கட்சி. குறைகளை கேட்டு வந்த கட்சி அல்ல தீர்க்க வந்த கட்சி. தமிழகத்தை தமிழர்கள் தான் ஆள வேண்டும் என்று எல்லோருடைய கனவாக உள்ளது. எல்லோரும் சிறப்பாக வாழ வேண்டும் என்பது தான் நாம் தமிழர் கட்சியின் எண்ணம்.

    இன்று நிவாரணம் கேட்டு விவசாயிகள் கையேந்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

    பாதிக்கப்பட்ட விவசாயி களுக்கு உரிய நிவாரணம் அரசு உடனடியாக வழங்க வேண்டும். உயிர் காப்பீடு செய்வது போல் பயிர் காப்பீடு செய்வது முக்கியம் ஆகும். விவசாயிகள் ரசாயன உரங்களை பயன்படுத்துவதை தவிர்த்து நம் முன்னோர்கள் செய்த இயற்கை விவசாயத்தை மேற்கொள்ள வேண்டும்.

    பாதிக்கப்பட்ட விவசாயி–களுக்கு உரிய நிவாரண வழங்கவில்லை என்றால் நாம் தமிழர் கட்சி சார்பில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என்றார்.

    இதில் நிர்வாகிகள் காளிதாசன், காளியம்மாள், காசிராமன், ஜவஹர், சுபாஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • பயிர் காப்பீடு செய்து பயனடையலாம் என நாமக்கல் மாவட்ட விவசாயிகளை வேளாண்மை இணை இயக்குநர் துரைசாமி தெரிவித்துள்ளார்.
    • விவசாயிகள் பிரீமியத் தொகையாக ஏக்கர் ஒன்றுக்கு நிலக்கடலை பயிருக்கு ரூ.311.22-யை கடைசி தேதியான 31.12.2022-க்குள் செலுத்த வேண்டும்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டத்தில், 2022-23-ம் ஆண்டு ரபி பருவத்தில் நிலக்கடலை பயிர் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்துள்ள நிலக்கடலை பயிர்க்கு புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரி பயிர்க் காப்பீடுத் திட்டத்தின் கீழ், பயிர் காப்பீடு செய்து பயனடையலாம் என நாமக்கல் மாவட்ட விவ சாயிகளை வேளாண்மை இணை இயக்குநர் துரைசாமி தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    விவசாயிகள் பிரீமியத் தொகையாக ஏக்கர் ஒன்றுக்கு நிலக்கடலை பயிருக்கு ரூ.311.22-யை

    கடைசி தேதியான 31.12.2022-க்குள் செலுத்த வேண்டும். புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரி பயிர் காப்பீடுத் திட்டத்தின் கீழ் தேசியமயமாக்கப்பட்ட மற்றும் இதர வங்கிகள் மற்றும் வேளாண்மை கூட்டு றவு கடன் சங்கங்க ளின் கடன் பெறும் விவ சாயிகள் தங்களின் சுய விருப்பத்தின் பேரில் உறுதி மொழி கடிதம் அளித்து பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம். கடன் பெறாத விவசாயிகள் பொது சேவை மையங்களில் முன்மொழிவு விண்ணப்பத்துடன் கிராம நிர்வாக அலுவலரின் அடங்கல் சான்று, நடைமுறையில் உள்ள வங்கி கணக்குப் புத்தகத்தின் முதல் பக்க நகல் (கணக்கு எண் மற்றும் ஐ.எப்.எஸ்.சி கோடு எண்ணுடன்) ஆதார் அட்டை நகல் மற்றும் கைபேசி எண் ஆகியவற்றுடன் இணைத்து காப்பீடு பிரீமியம் செலுத்தி விருப்பத்தின் பேரில் பதிவு செய்து கொள்ளலாம்.

    இது தொடர்பான மேலும் கூடுதல் விபரங்களுக்கு விவசாயிகள் தங்களது வட்டார வேளாண்மை உதவி இயக்குநரை அணுகி தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    • சம்பா மற்றும் தாளடி நெற்பயிர்களில் இலை கருகல் நோய் பாதிப்பு ஏற்படக்கூடும்.
    • 23 ஆயிரம் ஏக்கர் பரப்பிற்கு பயிர் காப்பீடு செய்யப்பட்டுள்ளது.

    பூதலூர்:

    பூதலூர் வேளாண்மை வட்டார பகுதிகளில் நடப்பு ஆண்டு சம்பா மற்றும் தாளடி நடவு பணிகள் முடிவடைந்துள்ளன. மேலும் . வானம் குளிரான பருவத்தில் இருந்த‌போதிலும் வயலில் களை எடுக்கும் பணிகளும், உரமிடும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

    கடந்த சில நாட்களாக பூதலூர் வேளாண்மை வட்டார பகுதிகளில் வானம் மப்பும் மந்தாரமும் ஆக பனி சூழ்ந்த நிலையில் காணப்படுகிறது.

    இதனால் பயிரிடப்பட்டுள்ள சம்பா மற்றும் தாளடி நெற் பயிர்களில் இலை கருகல் நோய் பாதிப்பு ஏற்படக்கூடும் என்று விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

    இன்னும் சில விவசாயிகள் முன்கூட்டியே பூச்சிக்கொல்லி மருந்துகளை கை ஸ் பிரேயர் மூலம் தெளித்தும் வருகின்றனர்.

    பூதலூர் வேளாண்மை வட்டாரத்தில் நடப்பு ஆண்டு 25 ஆயிரத்து 205 ஏக்கர் பரப்பில் சம்பா மற்றும் தாளடி நெற் பயிர்கள் பயிர் செய்யப்பட்டுள்ளன.

    இவற்றில் 23 ஆயிரம் ஏக்கர் பரப்பிற்கு பயிர் காப்பீடு செய்யப்பட்டுள்ளதாகவும், பூதலூர் வேளாண்மை வட்டாரத்தில் 8353 விவசாயிகள் பயிர் காப்பீடு செய்துள்ளதாகவும் வேளாண்மை துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

    • ஓய்வூதியர்களின் முறையிட்டு மனுக்கள் மீது தீர்வு காணும் வகையில் ஓய்வூதிய குறைத்தீர்க்கும் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை தலைமையில், அரசு கூடுதல் செயலாளர், நிதித்துறை இயக்குநர் (ஓய்வூதிய இயக்குநரகம்) ஸ்ரீதர் முன்னிலையில் நடைபெற்றது.
    • 13315 ஓய்வூதிய புதிய மருத்துவ காப்பீடு திட்ட அடையாள அட்டை ஓய்வூதியர்களுக்கு வழங்குவதற்காக மாவட்ட கருவூல அலுவலகத்திற்கு வழங்கப்பட்டது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், பல்வேறு அரசு அலுவலகங்களில் தீர்வு செய்யப்படாமல், நிலுவையில் உள்ள ஓய்வூதியம் மற்றும் ஓய்வுக்கால பயன்கள் குறித்த ஓய்வூதியர்களின் முறையிட்டு மனுக்கள் மீது தீர்வு காணும் வகையில் ஓய்வூதிய குறைத்தீர்க்கும் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை தலைமையில், அரசு கூடுதல் செயலாளர், நிதித்துறை இயக்குநர் (ஓய்வூதிய இயக்குநரகம்) ஸ்ரீதர் முன்னிலையில் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் ஓய்வூதி யம், குடும்ப பாதுகாப்பு நிதி, புதிய மருத்துவ காப்பீடு திட்டம் உள்ளிட்ட பல்வேறு இனங்களில் பெறப்பட்ட 19 மனுக்கள் மீது உடனடி தீர்வு காண சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். ஓய்வூதியர் மருத்துவ காப்பீடு திட்டத்தின்படி 6 பயனாளிகளுக்கு ரூ.74,297 மதிப்பிலான திருப்பப்பட்ட காசோலைகளை வழங்கினர். மேலும் 13315 ஓய்வூதிய புதிய மருத்துவ காப்பீடு திட்ட அடையாள அட்டை ஓய்வூதியர்களுக்கு வழங்குவதற்காக மாவட்ட கருவூல அலுவலகத்திற்கு வழங்கப்பட்டது. பின்னர் 5 ஓய்வூதியர்களுக்கு மருத்துவ காப்பீடு அட்டைகள் வழங்கப்பட்டது.

    இக்கூட்டத்தில் மாவட்ட கருவூல அலுவலர் திரு.கார்த்திகேயன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சிவசுப்ரமணியன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கணக்கு) அபர்ணா தேவி ஆகியோர் உட்பட அரசு அலுவலர்கள், ஓய்வூதியர்கள் கலந்து கொண்டனர்.

    • மயிலாடுதுறை மாவட்டத்தில் மட்டும் ரூ.150 கோடி பயிர் காப்பீட்டு தொகை செலுத்தப்பட்டது.
    • ஒரு கரும்புக்கு ரூ.3.5 அறிவிக்கப்பட்டும் விவசாயிகளுக்கு ரூ.15 மட்டுமே கிடைத்தது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கலெக்டர் லலிதா தலைமை யில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்தில் கனமழையால் பாதித்த மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம், வேலை இன்றி தவிக்கும் விவசாய தொழிலாளர்களுக்கு ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும்.

    கடந்த ஆண்டு மயிலாடுதுறை மாவட்டத் தில் மட்டும் ரூ.150 கோடி பயிர் காப்பீட்டு தொகை செலுத்தப்பட்டது.

    ஆனால் காப்பீட்டு நிறுவனம் இழப்பீட்டு தொகையாக ரூ.16 கோடி மட்டுமே வழங்கியுள்ளது.

    எனவே காப்பீட்டு வழங்கும் முறையை மாற்றி பாதிக் கப்பட்ட விவசாயிகள் அனைவருக்கும் இழப்பீட்டு தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பொங்கல் பரிசுக்கு தேவையான கரும்புகளை விவசாயிகளிடம் அரசே நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும்.

    கடந்த ஆண்டு ஒரு கரும்புக்கு ரூ.3.5 அறிவிக்கப்பட்டும் விவசாயிகளுக்கு ரூ.15 மட்டுமே கிடைத்தது.

    எனவே இடைத்தரகர் கள் இன்றி நேரடியாக அரசு விவசாயிகளிடம் இருந்து நேரடி கொள்முதல் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை கலெக்டரிடம் அளித்தனர்.

    இது குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் லலிதா கூறினார்.

    கூட்டத்தில் மாவட்ட வரு வாய் அலுவலர் முருகதாஸ், பொதுப்பணித்துறை காவிரி வடிநிலக் கோட்ட செயற் பொறியாளர் சண்முகம், வேளாண்மை இணை இயக்குனர் சேகர், ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் மஞ்சுளா, செம்பனார்கோயில் வேளாண்மை துணை இயக்குனர் தாமஸ், மயிலாடுதுறை அட்மா திட்ட தொழிற்நுட்ப மேலாளர் திருமுருகன், உள்பட அரசு அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் கலந்துகொண்டனர்.

    • தேசிய காப்பீடு திட்டத்தின் கீழ் விவசாயிகள் கால்நடைகளை காப்பீடு செய்யலாம்.
    • இந்த தகவலை சிவகங்கை மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சிவகங்கை மாவட்ட வேளாண் குடிமக்களின் கால்நடை செல்வங்களை பாதுகாக்க 2022-23-ம் ஆண்டிற்கான தேசிய கால்நடை காப்பீடு திட்டத்தின் கீழ் தங்கள் கால்நடைகளை காப்பீடு செய்து பயன்பெறலாம்.

    1100 அலகுகள் குறியீடாக பெறப்பட்டுள்ள இந்த மாவட்டத்தில் விருப்பம் உள்ள கால்நடை வளர்க்கும் விவசாயிகள் கால்நடைகளை அரசு மானியத்துடன் கூடிய காப்பீடு செய்ய அருகிலுள்ள அரசு கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்து வரை அணுகி தங்கள் கால்நடைகளை காப்பீடு செய்து கொள்ளலாம்.

    அரசு மானியமாக வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்களுக்கு காப்பீடு சந்தாத்தொகையில் 70 சதவீதம் மானியமும் பொதுப் பிரிவினர்களுக்கு 50 சதவீதம் மானியமும் வழங்கப்படுகிறது.

    காப்பீடு செய்யப்படும் கால்நடைகளுக்கு காது வில்லைகள் பொருத்த ப்படும். காப்பீடு செய்யப்பட்ட கால்நடைகள் இறக்க நேரிட்டால், கால்நடை உதவி மருத்துவரால் காதுவில்லைக்குரிய இறந்த கால்நடையை பரிசோதனை செய்து அதற்கான பிரேத பரிசோதனை சான்றிதழுடன் காப்பீடு நிறுவனத்தில் இருந்து காப்பீடு தொகை பெற்றுக் கொள்ளலாம்.

    இந்த திட்டம் தொடர்பான தகவல்களை சிவகங்கை, காரைக்குடி கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குநர்களின் கைப்பேசி எண்கள்: 94450 32581, 94450 32556 ஆகியவற்றில் தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×