என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விவசாயிகள் குறைதீர் கூட்டம்
    X

    விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் லலிதா தலைமையில் நடைபெற்றது.

    விவசாயிகள் குறைதீர் கூட்டம்

    • மயிலாடுதுறை மாவட்டத்தில் மட்டும் ரூ.150 கோடி பயிர் காப்பீட்டு தொகை செலுத்தப்பட்டது.
    • ஒரு கரும்புக்கு ரூ.3.5 அறிவிக்கப்பட்டும் விவசாயிகளுக்கு ரூ.15 மட்டுமே கிடைத்தது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கலெக்டர் லலிதா தலைமை யில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்தில் கனமழையால் பாதித்த மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம், வேலை இன்றி தவிக்கும் விவசாய தொழிலாளர்களுக்கு ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும்.

    கடந்த ஆண்டு மயிலாடுதுறை மாவட்டத் தில் மட்டும் ரூ.150 கோடி பயிர் காப்பீட்டு தொகை செலுத்தப்பட்டது.

    ஆனால் காப்பீட்டு நிறுவனம் இழப்பீட்டு தொகையாக ரூ.16 கோடி மட்டுமே வழங்கியுள்ளது.

    எனவே காப்பீட்டு வழங்கும் முறையை மாற்றி பாதிக் கப்பட்ட விவசாயிகள் அனைவருக்கும் இழப்பீட்டு தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பொங்கல் பரிசுக்கு தேவையான கரும்புகளை விவசாயிகளிடம் அரசே நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும்.

    கடந்த ஆண்டு ஒரு கரும்புக்கு ரூ.3.5 அறிவிக்கப்பட்டும் விவசாயிகளுக்கு ரூ.15 மட்டுமே கிடைத்தது.

    எனவே இடைத்தரகர் கள் இன்றி நேரடியாக அரசு விவசாயிகளிடம் இருந்து நேரடி கொள்முதல் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை கலெக்டரிடம் அளித்தனர்.

    இது குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் லலிதா கூறினார்.

    கூட்டத்தில் மாவட்ட வரு வாய் அலுவலர் முருகதாஸ், பொதுப்பணித்துறை காவிரி வடிநிலக் கோட்ட செயற் பொறியாளர் சண்முகம், வேளாண்மை இணை இயக்குனர் சேகர், ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் மஞ்சுளா, செம்பனார்கோயில் வேளாண்மை துணை இயக்குனர் தாமஸ், மயிலாடுதுறை அட்மா திட்ட தொழிற்நுட்ப மேலாளர் திருமுருகன், உள்பட அரசு அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×