search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சீர்காழியில், நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
    X

    நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    சீர்காழியில், நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

    • தொடர் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.
    • உயிர் காப்பீடு செய்வது போல் பயிர் காப்பீடு செய்வது முக்கியம் ஆகும்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பழைய பஸ் நிலையம் அருகில் தொடர் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க கோரி நாம் தமிழர் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் பேசும்போது ;-

    நாம் தமிழர் கட்சி என்பது மாற்றத்திற்கான கட்சி. குறைகளை கேட்டு வந்த கட்சி அல்ல தீர்க்க வந்த கட்சி. தமிழகத்தை தமிழர்கள் தான் ஆள வேண்டும் என்று எல்லோருடைய கனவாக உள்ளது. எல்லோரும் சிறப்பாக வாழ வேண்டும் என்பது தான் நாம் தமிழர் கட்சியின் எண்ணம்.

    இன்று நிவாரணம் கேட்டு விவசாயிகள் கையேந்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

    பாதிக்கப்பட்ட விவசாயி களுக்கு உரிய நிவாரணம் அரசு உடனடியாக வழங்க வேண்டும். உயிர் காப்பீடு செய்வது போல் பயிர் காப்பீடு செய்வது முக்கியம் ஆகும். விவசாயிகள் ரசாயன உரங்களை பயன்படுத்துவதை தவிர்த்து நம் முன்னோர்கள் செய்த இயற்கை விவசாயத்தை மேற்கொள்ள வேண்டும்.

    பாதிக்கப்பட்ட விவசாயி–களுக்கு உரிய நிவாரண வழங்கவில்லை என்றால் நாம் தமிழர் கட்சி சார்பில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என்றார்.

    இதில் நிர்வாகிகள் காளிதாசன், காளியம்மாள், காசிராமன், ஜவஹர், சுபாஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×