என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கல்லூரி மாணவர்"
- தேவகோட்டை அருகே கல்லூரி மாணவர் பீர் பாட்டிலால் அடித்து கொலை செய்யப்பட்டார்.
- இந்த கொலையில் சம்பந்தப்பட்ட மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தேவகோட்டை
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள கூத்தலூரைச் சேர்ந்தவர் விஸ்வநாதன். இவரது மகன் சுதந்திரன் (வயது 20). இவர் தனியார் கல்லூரியில் பி.எஸ்சி., படித்துவந்தார். சுதந்திரனும் கல்லல் விநாயகநகரைச் சேர்ந்த கணேசன் மகன் சூர்யபிரகாஷ் (20) என்பவரும் நண்பர்கள்.
இந்த நிலையில், நேற்று கல்லலில் உள்ள கோவில் திருவிழாவையொட்டி தேரோட்டம் நடைபெற்றது. இந்த திருவிழாவுக்கு சூர்யபிரகாஷ் அழைத்ததால், சுதந்திரன் கல்லல் சென்று திருவிழா தேரோட்டத்தில் கலந்துகொண்டார். பின்னர் அவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பி வந்துகொண்டிருந்தனர்.
அவர்கள் விநாயகபுரம் அருகே வந்தபோது மதுபோதையில் நின்றிருந்த மர்மநபர்கள் மோட்டார் சைக்கிளை வழிமறித்து தகராறு செய்தனர். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த மர்மநபர்கள் பீர்பாட்டிலால் சுதந்திரனையும், சூர்யபிர காசையும் கடுமையாக தாக்கினர்.
இதில் தலையில் பலத்த காயமடைந்த சுதந்திரன், சூர்யபிரகாஷ் ஆகிய இருவரும் மயங்கி விழுந்தனர். இதைத் தொடர்ந்து மர்ம நபர்கள் தப்பிச் சென்றுவிட்டனர்.
இதற்கிடையே, திருவிழாவுக்கு சென்று விட்டு அந்த வழியாக வந்த சிலர் 2 வாலிபர்கள் தலையில் பலத்த காயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த னர். இதுபற்றி கல்லல் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவர்களை மீட்டு காரைக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். அங்கு இருவருக்கும் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
சுதந்திரன் கவலைக்கிடமாக இருந்ததால் அவரை மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். சூர்யபிரகாசுக்கு காரைக்குடி அரசு ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கல்லூரி மாணவர் கொலை செய்யப்பட்டது குறித்து கல்லல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் கொலை நடந்த பகுதிக்கு இன்று சென்று அங்கு உள்ள கண்காணிப்பு காமிரா காட்சிகளை ஆய்வு செய்தார். அதில் பதிவாகி உள்ள மர்மநபர்களின் உருவங்களை வைத்து அவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி அவர்களை தேடி வருகிறார்.
- ராஜேஷ் கடலூர் அரசு கலைக் கல்லூரியில் பிஎஸ்சி படித்து வருகிறார்.
- பகுதி நேர வேலையாக சென்றவர் இதுவரைவீடு திரும்பவில்லை
கடலூர்:
பண்ருட்டி அருகே புதுப்பேட்டை பண்டரக்கோட்டை சிவாலயாகார்டன் முருகன் என்பவரது மகன்ராஜேஷ் (வயது19) இவர் கடலூர்அரசு கலைக் கல்லூரியில் பிஎஸ்சி படித்து வருகிறார். இவர் தனது வீட்டில் இருந்துபண்ருட்டி கொய்யாப்பழம் லோடு ஏற்றி விடுவதற்காக பகுதி நேர வேலையாக சென்றவர் இதுவரைவீடு திரும்பவில்லை பல இடங்களில்தேடிஎங்கும்கிடைக்காததால் புதுப்பேட்டைபோலீசில் புகார்கொடுத்தனர்.புதுப்பேட்டை போலீஸ்இன்ஸ்பெக்டர் நந்தகுமார் வழக்குபதிவு செய்துகாணாமல் போன கல்லூரி மாணவரை தேடி வருகிறார்.
- போலீசில் பெற்றோர் பரபரப்பு புகார்
- முறையாக போலீசார் விசாரணை நடத்த வேண்டும் என சமூக ஆர்வலர்களும், ஊர் மக்களும், மாணவரின் பெற்றோரும் கோரிக்கை
கன்னியாகுமரி:
களியக்காவிளை அருகே உள்ள படந்தாலு மூடு பகுதியில் செயல்பட்டு வரும் கிரேஸ் நர்சிங் கல்லூரியில் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை ஆலம்பள்ளம் பகுதியை சேர்ந்த சுமித்திரன் (வயது 19) படித்து வந்தார்.
கல்லூரி விடுதியில் தங்கியிருந்த இவர் நேற்று மர்மமான முறையில் விடுதி யின் மேல் மாடியில் தூக்கில் பிணமாக தொங்கி னார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சக மாணவர்கள் கல்லூரி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
களியக்காவிளை போலீசார் விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதணைக்காக குழித்துறை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். கல்லூரி விடுதியில் மாணவர் தற்கொலை செய்த சம்ப வம் குமரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
மாணவரின் சாவு குறித்து பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் நேற்று மாலை கல்லூரிக்கு வந்தனர். அவர்களிடம் கல்லூரி நிர்வாகம் முறையாக எந்த பதிலும் சொல்லவில்லை என கூறப்படுகிறது. இதனால் மாணவரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் களியக்காவிளை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்த னர்.
அதில்,சுமித்திரன் சாவில் மர்மம் உள்ளது. இதுகுறித்து முழுமையாக விசாரணை நடத்த வேண்டும்.கல்லூரி நிர்வாகம் தரப்பில் மாண வனுக்கு ஏதும் அழுத்தம் கொடுக்கப்பட்டதா? அல்லது மாணவருக்கு அபராதம் எதுவும் விதிக்கப்பட்டதா? என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று பெற்றோர் குறிப்பிட்டு உள்ளனர்.
வேறு ஏதாவது மோதலில் தாக்கப்பட்டு சுமித்திரன் இறந்திருக்கலாமா? அதன் பின்னர் அவரை தூக்கில் தொங்க விட்டிருக்கலாமா? என்ற சந்தேகத்தின் அடிப்படையிலும் விசாரணை நடக்கிறது.
3-வது மாடியில் இருந்து சிறு நைலான் கயிறு மூலம் மாணவர் சுமித்ரன் குதித்து தற்கொலை செய்திருந்தால் கயிறு அறுபட்டு சுமித்திரன் கீழே விழ வாய்ப்பு உண்டு. ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. எனவே இறந்த அவரை, யாரோ தூக்கி வந்து கயிற்றில் தொங்க விட்டது போல் உள்ளதாக பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சந்தேகங்களை எழுப்பி உள்ளனர்.
மேலும் மாணவர் தங்கியிருந்த விடுதியில் இரவு 1 மணிக்கு மேல் கஞ்சா வியாபாரிகள் உள்ளே செல்வதாகவும் அந்த ஊர் பொது மக்கள் குற்றம் சாட்டி உள்ளனர். இது குறித்து கல்லூரி நிர்வாகத்திடம் புகார் கூறியும் அவர்கள் கண்டு கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து முறையாக போலீசார் விசாரணை நடத்த வேண்டும் என சமூக ஆர்வலர்களும், ஊர் மக்களும் மாணவரின் பெற்றோரும் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
- கடலில் குளித்த போது மாணவர் மாயமானார்.
- கடலோர காவல் படையினர் மாயமான மாணவரை தேடி வருகிறார்கள்.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே வேட்டங்குடி ஊராட்சியை சேர்ந்த ஒத்தாளவெளி கிராமத்தை சேர்ந்த கண்ணன் மகன் சந்தோஷ் (வயது18).
இவர் கொள்ளிடம் அருகே அரசூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் ஐ.டி.ஐ. ஏ.சி. மெக்கானிக்கல் பிரிவில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். நேற்று மாலை கூழையார் பகுதியில் உள்ள கடலில் தனது நண்பர்கள் 6 பேருடன் குளித்துக் கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக வேகமாக வந்த அலையால் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டு கடலில் மூழ்கி மாயமானார்.
இது குறித்து தகவல் அறிந்த கடலோர காவல் படையினர், புதுப்பட்டினம் போலீசார் மற்றும் கூழையார் கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் அங்கு விரைந்து சென்று கடலில் மூழ்கி மாயமான மாணவரை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.கடலில் குளித்த போது மாணவர் மாயமானார்
- மோட்டார் சைக்கிள் விபத்தில் கல்லூரி மாணவர் பலியானார்.
- சிவலிங்ககணேஷ் காரியா பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
விருதுநகர்
அருப்புக்கோட்டை காமராஜர் நகரை சேர்ந்தவர் செல்லப்பாண்டியன். இவரது மகன் தனசேகர பாண்டியன் (வயது 20). அதே பகுதியை சேர்ந்தவர் சிவலிங்கணேஷ் (18). இவர்கள் 2 பேரும் அங்குள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகின்றனர்.
நேற்று காரியாபட்டியில் உள்ள நண்பர்களை சந்திப்பதற்காக மோட்டார் சைக்கிளில் 2 பேரும் புறப்பட்டு சென்றனர். தனசேகரபாண்டியன் மோட்டார் சைக்கிளை ஓட்டினார்.
மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கரியனேந்தல் பகுதியில் வந்தபோது முன்னால்சென்ற லாரியை முந்திசெல்ல முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது மோட்டார் சைக்கிள் சாலையின் நடுவே இருந்த தடுப்பில்மோதியது. இதில் 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர். படுகாயம் அடைந்த தனசேகர பாண்டி யன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். சிவலிங்ககணேஷ் காரியா பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மல்லாங்கிணறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்தார்.
- பசுமலையில் உள்ள கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
திருமங்கலம்
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கிழவனேரியை சேர்ந்தவர் பிச்சைமணி. இவர் மதுரையில் உள்ள ஜவுளிக்கடையில் வேலை பார்த்து வருகிறார்.
இவரது மகன் ராம்குமார் (வயது 19). இவர் பசுமலையில் உள்ள கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். நேற்று ராம்குமார் மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மகனை கண்டித்தனர். இதில் அவர்க ளுக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனால் கோபம் அடைந்த ராம்குமார் வீட்டை வெளியேறி அருகே உள்ள சித்தப்பா வீட்டிற்கு சென்றார். அங்கு தனி அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த திருமங்கலம் தாலுகா போலீசார் சம்பவ இடம் வந்து மாணவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பெற்றோர் கண்டித்ததால் கல்லூரி மாணவர் தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- மாணவர் மீது தாக்குதல் நடத்த அயர்ன் பாக்ஸ், கம்பு, பிவிசி குழாய்கள் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படுகிறது.
- தனியார் விடுதியில் மாணவர்கள் தங்கியிருந்த நிலையில், கல்லூரி முதல்வர் மற்றும் நிர்வாகத்திடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
ஆந்திரா மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் பீமாவரத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படிக்கும் 4 மாணவர்கள், விடுதி அறைக்குள் இருந்த மற்றொரு மாணவரை இரக்கமின்றி தாக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
அந்த வீடியோவில், மாணவர் ஒருவர் கெஞ்சுவதையும், மன்னிப்பு கேட்பதையும், மாணவரை தொடர்ந்து தாக்குவதையும் காட்டுகிறது. அந்த மாணவரின் சட்டை கிழித்து, சட்டையை கழற்றவும் வற்புறுத்துவது போன்று வீடியோவில் பதிவாகி உள்ளது.
பாதிக்கப்பட்ட மாணவர் மற்றும் குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் எஸ்ஆர்கேஆர் பொறியியல் கல்லூரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து வருகின்றனர்.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட மாணவர் அங்கித், உடல் முழுவதும் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது மார்பு மற்றும் கைகளில் பலத்த காயங்களும் உள்ளன.
அங்கித் மீது தாக்குதல் நடத்த அயன் பாக்ஸ், கம்பு, பிவிசி குழாய்கள் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படுகிறது. தாக்குதலுக்கான காரணம் குறித்து தெளிவாகத் தெரியவில்லை என்றும் கூறப்படுகிறது.
மேலும் தனியார் விடுதியில் மாணவர்கள் தங்கியிருந்த நிலையில், கல்லூரி முதல்வர் மற்றும் நிர்வாகத்திடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
- 2 பேரும் ஒருவரை ஒருவர் தீவிரமாக காதலித்து வந்தனர்.
- தனியார் கல்லூரியில் படித்து வந்தார்.
கோவை:
கோவை சூலூர் அருகே உள்ள காங்கயம் பாளையத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மகன் பிரதீப் (வயது 20). இவர் நீலாம்பூரில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பிரதீப்புக்கு இளம்பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. 2 பேரும் ஒருவரை ஒருவர் தீவிரமாக காதலித்து வந்தனர்.
இந்த நிலையில் சில நாட்களாக இவர்களுக்கு இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. இதனால் பிரதீப்புடன் அந்த இளம்பெண் பேசாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
அவர் சமாதானம் செய்தும் அந்த இளம்பெண் அவரிடம் பேசாமல் இருந்ததாக தெரிகிறது. இதன் காரணமாக அவர் மிகுந்த மனவேதனையுடன் இருந்து வந்தார்.சம்பவத்தன்று வீட்டில் இருந்த பிரதீப் வாழ்க்கையில் விரக்தி அடைந்து திடீரென தூக்கு போட்டு கொண்டார்.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு பிரதீப்பை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
பின்னர் இது குறித்து சூலூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பிரதீப்பின் உடலை மீட்டு பிேரத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கோவை மாவட்டம், பொள்ளாச்சி, உடுமலை ரோட்டை சேர்ந்த சையது இஸ்மாயில் மகன் ஆரியான்(வயது 20).
- திருப்பூரில் உள்ள தனது சகோதரி வீட்டுக்கு திரும்பி வந்தார்.
திருப்பூர் :
கோவை மாவட்டம், பொள்ளாச்சி, உடுமலை ரோட்டை சேர்ந்த சையது இஸ்மாயில் மகன் ஆரியான்(வயது 20). இவர் கோவை அவிநாசி ரோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம்., மூன்றாம் ஆண்டு படித்துவந்தார்.சில நாட்கள் முன்பு, கர்நாடக மாநிலம், உடுப்பிக்கு குடும்பத்தினருடன் சுற்றுலா சென்றார்.
இவர் மட்டும், திருப்பூரில் உள்ள தனது சகோதரி வீட்டுக்கு திரும்பி வந்தார்.நேற்று காலை நண்பர் ஒருவரின் பைக்கை வாங்கி கொண்டு, பல்லடத்தில் உள்ள சித்தி வீட்டுக்கு புறப்பட்டார். குமார் நகர் சிக்னல் அருகே சென்ற போது, பின்னால் வந்த 'ஈச்சர்' சரக்கு வேன், பைக் மீது மோதியது.கீழே விழுந்த ஆரியான் மீது வேனின் பின்சக்கரம் ஏறியது. ஹெல்மெட் அணிந்திருந்தும் அது உடைந்து, தலைநசுங்கி உயிரிழந்தார். சரக்கு வேன், 20 மீட்டர் தூரத்திற்கு பைக்கை இழுத்து சென்றது.
திருப்பூர் வடக்கு போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வேன் டிரைவரை பிடித்து விசாரித்துவருகின்றனர்.சம்பவத்தை தொடர்ந்து, குமார் நகர் சிக்னல் அருகே சாலையின் இருபுறமும் வேகத்தை கட்டுப் படுத்த போலீசார் இரும்புத்தடுப்புகளை வைத்துள்ளனர்.
- உல்லாசமாக இருக்க பீளமேட்டில் உள்ள நட்சத்திர ஓட்டலில் அழகான பெண்கள் இருப்பதாக கூறினார்.
- ஆசை வார்த்தை கூறி என்னை ஏமாற்றி மோசடி செய்த நபரை கைது செய்து எனது பணத்தை மீட்டு தரவேண்டும்.
கோவை:
கோவை உடையாம்பாளையத்தை சேர்ந்தவர் 22 வயது கல்லூரி மாணவர். இவர் மாநகர சைபர் கிரைம் போலீசில் ஒரு புகார் அளித்தார்.
நான் கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வருகிறேன். எனக்கு நீண்ட நாட்களாக அழகான பெண்களுடன் உல்லாசமாக இருக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. நண்பர் ஒருவர் இணையதளத்தில் தேடினால் அழகான பெண்கள் கிடைப்பார்கள் என கூறினார்.
இதனையடுத்து நான் இணையதளத்துக்கு சென்று உல்லாசமாக இருக்க அழகான பெண்கள் எங்கு கிடைப்பார்கள் என்று தேடிப்பார்த்தேன்.
அப்போது அதில் சில அழகான பெண்களின் கவர்ச்சி படத்துடன் ரூ.20 ஆயிரம் பணம் கொடுத்தால் முழு இரவு அழகான இளம்பெண்ணுடன் நட்சத்திர ஓட்டலில் பாதுகாப்பாக ஜாலியாக இருக்கலாம் என கூறப்பட்டு இருந்தது. இதனையடுத்து அதில் உள்ள செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு பேசினேன். அதில் பேசிய நபர் அவருடயை பெயர் குமார் என அறிமுகம் செய்து கொண்டார்.
அவர் என்னிடம் உல்லாசமாக இருக்க பீளமேட்டில் உள்ள நட்சத்திர ஓட்டலில் அழகான பெண்கள் இருப்பதாக கூறினார். பின்னர் சில பெண்களின் ஆபாச புகைப்படங்களை எனக்கு அனுப்பினார். அதில் எனக்கு பிடித்த பெண்ணை தேர்வு செய்து அந்த பெண்ணுடன் ஜாலியாக இருக்க வேண்டும் என தெரிவித்தேன்.
இதனையடுத்து அவர் அந்த பெண் உங்களுக்கு வேண்டும் என்றால் முன்பணமாக உடனடியாக ரூ.2,500 அனுப்பும்படி கூறினார். ஜாலியாக இருக்க வேண்டும் என்ற ஆசையில் பணத்தை அனுப்பி வைத்தேன். பின்னர் பீளமேட்டில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் முகவரியை கூறினார். அங்கு உள்ள அறையில் தான் இளம்பெண் இருப்பதாக கூறினார்.
இதனையடுத்து நான் அங்கு சென்றேன். பின்னர் நான் அவரை தொடர்பு கொண்டு பெண் இருக்கும் அறை எண்ணை கொடுக்கும்படி கேட்டேன். அதற்கு அவர் அந்த பெண்ணின் பாதுகாப்பு, என்னுடைய பாதுகாப்பு, அறைக்கு பணம் கொடுக்க வேண்டும். அந்த பெண்ணுக்கு பணம் கொடுக்க வேண்டும்.
போலீசுக்கு பணம் கொடுக்க வேண்டும் என கூறி என்னிடம் இருந்து தொடர்ச்சியாக பணத்தை அனுப்ப சொன்னார். இவ்வாறாக அவர் என்னிடம் இருந்து ரூ.7 லட்சத்து 84 ஆயிரம் பணத்தை பெற்று என்னை ஏமாற்றி விட்டார். அதன் பின்னர் அவரது எண்ணுக்கு தொடர்பு கொண்டபோது அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. எனவே ஆசை வார்த்தை கூறி என்னை ஏமாற்றி மோசடி செய்த நபரை கைது செய்து எனது பணத்தை மீட்டு தரவேண்டும்.
இவ்வாறு அவர் அளித்த புகாரில் கூறியிருந்தார்.
கல்லூரி மாணவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- 2 பேர் கைது செய்யப்பட்டனர்
- மோட்டார் சைக்கிள் பறிமுதல்
கன்னியாகுமரி:
குளச்சல் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) செந்தில்குமார் தலைமை யிலான போலீசார் குளச்சல் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அந்தப் பகுதியில் உள்ள பள்ளிக்கூடம் ஒன்றின் அருகில் சந்தேகப் படும்படியாக வாலிபர்கள் நின்று கொண்டிருந்தனர். அவர்களை போலீசார் பிடிக்க முயன்றனர். அப்போது 3 வாலிபர்கள் தப்பி ஓடிவிட்டனர். 2 பேர் மட்டும் சிக்கினர்.
பிடிபட்ட 2 பேரிடமும் விசாரணை நடத்தினர். அப்போது அவர்களை சோதனை செய்தபோது அவர்களிடம் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்த போது, வேர் கிளம்பி பகுதியைச் சேர்ந்த விஜி (வயது 22), சஜி (21) என்பது தெரியவந்தது. பின்னர் போலீசார் அவர்களை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட வர்களிடம் மேலும் விசா ரணை நடத்திய போது கஞ்சா பொட்டலங்களை கேரளாவில் இருந்து வாங்கி வந்து அதிக விலைக்கு பள்ளி கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு விற்பனை செய்தது தெரிய வந்தது. போலீசார் அவர்களிடமிருந்து 2 மோட்டார் சைக்கிள்களை யும் பறிமுதல் செய்தனர்.தப்பி ஓடிய நபர்கள் யார்? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டதில் தப்பி ஓடியவர்கள் குளச்சல் பகுதியைச் சேர்ந்த நிதிஷ் ராஜா, தக்கலையைச் சேர்ந்த ஜெனிஸ், திக்கணம் கோட்டைச் சேர்ந்த பாண்டியன் என்பது தெரிய வந்தது. அவர்கள் மீதும் மணவாளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களின் வங்கி கணக்குகளை முடக்கவும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
- தற்கொலை செய்து கொண்டதற்காக காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- கடந்த 3 நாட்களுக்கு முன்பு அவரது செல்போனுக்கு பெற்றோர் தொடர்பு கொண்டனர்.
கோவை,
திருச்சியை சேர்ந்தவர் பரம தயாளன். இவரது மகன் ஆகாஷ் (வயது 20). இவர் கோவை பீளமேட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.ஏ., ஆங்கிலம் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவர் முதலில் கல்லூரியில் உள்ள விடுதியில் தங்கி இருந்து கல்லூரிக்கு சென்று வந்தார். பின்னர் தனது பெற்றோரிடம்
கல்லூரி விடுதியில் தங்க விருப்பம் இல்லை. எனவே வெளியே அறை எடுத்து தரும்படி கேட்டார். இதனையடுத்து அவரது பெற்றோர் ஆகாசுக்கு கோல்டு வின்ஸ் இந்திரா நகரில் அறை எடுத்து கொடுத்தனர். அங்கு தங்கி இருந்து ஆகாஷ் கல்லூரிக்கு சென்று வந்தார்.
கடந்த 3 நாட்களுக்கு முன்பு அவரது செல்போனுக்கு பெற்றோர் தொடர்பு கொண்டனர். ஆனால் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. தொடர்ந்து அவர்கள் முயற்சி செய்தனர். ஆனால் போன் தொடர்ந்து சுவிட்ச்ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த பெற்றோர் அறை உரிமையாளரை தொடர்பு கொண்டு அறைக்கு சென்று பார்க்கும்படி கூறினர்.
உடனடியாக அறை உரிமையாளர் சென்று பார்த்த போது கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. மேலும் அறையில் இருந்து தூர்நாற்றம் வந்தது. இதனையடுத்து அறை உரிமையாளர் இது குறித்து பீளமேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.
அப்போது ஆகாஷ் அறையில் உள்ள மின் விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் பிணமாக தொங்கினார். அவர் தற்கொலை செய்து 3 நாட்கள் இருக்கும் என்பதால் உடல் அழுகிய நிலையில் காணப்பட்டது. பிணத்தை பீளமேடு போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கல்லூரி மாணவர் ஆகாஷ் தற்கொலை செய்து கொண்டதற்காக காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்