search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உடல் மீட்பு"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • விபத்து நடந்த இடத்தில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்தில் கண்டுபிடிப்பு.
    • உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு சென்னை கொண்டுவரப்பட உள்ளது.

    இமாச்சல பிரதேசத்தில் விபத்தில் சிக்கி மாயமான வெற்றி துரைசாமியின் உடல் மீட்கப்பட்டுள்ளது.

    8 நாட்களுக்கு பிறகு சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமியின் உடலை போலீசார் மீட்டுள்ளனர்.

    கடந்த 4ம் தேதி தன் நண்பர் மற்றும் ஓட்டுநருடன் இமாச்சல பிரதேசம் சென்ற சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமியின் கார் சட்லஜ் நதியில் விழுந்து விபத்தில் சிக்கியது.

    விபத்து நடந்த இடத்தில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்தில் வெற்றி துரைசாமியின் உடல் மீட்கப்பட்டுள்ளது.

    மீட்கப்பட்ட வெற்றி துரைசாமியின் உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு சென்னை கொண்டுவரப்பட உள்ளது.

    • நேற்று இரவு என்.ஜி.ஓ காலனி பகுதியில் உள்ள ஓடையில் அவரது மோட்டார் சைக்கிள் மீட்கப்பட்டது.
    • உடலை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக தீயணைப்பு துறையினர் அனுப்பி வைத்தனர்.

    நெல்லை:

    பாளை பெருமாள்புரம் என்.ஜி.ஓ. காலனி அருகே உள்ள திருமால்நகர் பகுதியை சேர்ந்தவர் சேர்மன். இவரது மகன் அருணாச்சலம் (வயது 19).

    இவர் கடந்த 17-ந்தேதி இரவு தனது சகோதரியை அழைத்து வருவதற்காக மோட்டார் சைக்கிளில் புதிய பஸ் நிலையம் நோக்கி சென்றுள்ளார்.

    அப்போது என்.ஜி.ஓ.காலனி பகுதியில் கனமழையில் சாலையில் சென்ற மழை வெள்ளத்தில் அவர் மோட்டார் சைக்கிளுடன் விழுந்து விட்டார்.

    இதனிடையே அருணாச்சலத்தை காணாததால் அவரது பெற்றோர் பெருமாள்புரம் போலீசில் புகார் செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    கடுமையான வெள்ளம் வந்து கொண்டிருந்த பகுதி வழியாக அவர் சென்றதால் அருணாச்சலம் மோட்டார் சைக்கிளுடன் வெள்ள நீரில் அடித்து செல்லப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தி அவரை தேடினர்.

    இந்நிலையில் நேற்று இரவு என்.ஜி.ஓ காலனி பகுதியில் உள்ள ஓடையில் அவரது மோட்டார் சைக்கிள் மீட்கப்பட்டது.

    இதனால் அதில் இருந்து சற்று தொலைவு வரை ஜே.சி.பி மூலமாக அருணாச்சலத்தை தீயணைப்புத் துறையினர் தேடிய நிலையில் இன்று காலை ஓடைக்குள் சிக்கி உயிரிழந்த நிலையில் அவர் பிணமாக மீட்கப்பட்டார்.

    அவரது உடலை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக தீயணைப்பு துறையினர் அனுப்பி வைத்தனர்.

    • தருமபுரி அருகே கிணற்றில் கிடந்த அடையாளம் தெரியாத ஆண் உடல் மீட்கப்பட்டது.
    • போலீசார் தீவிர விசாரணை

    தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள நாசன்கொட்டாய் பகுதியை சேர்ந்த சின்னப்பையன் என்பவர், தனது காணாமல் போன கன்றுக்குட்டியைப் தேடிச்சென்றுள்ளார். அப்போது அந்த பகுதியில் உள்ள கிணற்றில் ஆண் சடலம் ஒன்று மிதந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக அரூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதன் பேரில் அரூர் போலீசார் தீயணைப்பு மீட்பு குழுவினருக்கு தகவல் அளித்தனர்.

    இதனையடுத்து தீயணைப்புறையினர் கிணற்றுக்குள் இருந்த உடலை மீட்டனர். இது குறித்து விசாரணை நடத்திய போலீசார் 5 நாட்களுக்கு முன்பே கிணற்றில் விழுந்து இறந்திருக்கலாம் என்று தெரிவித்தனர். சடலத்தை மீட்டு அரூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இறந்தவர் குறித்து, விசாரணை மேற்கொண்டு வரும் போலீசார் கொலையா தற்கொலையா விசாரித்து வருகின்றனர்.

    • கடந்த 3 நாட்களுக்கு முன்பும் அவர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது.
    • போலீசார் விரைந்து வந்து பலராமனின் உடலை மீட்டு பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    திருத்தணி:

    திருத்தணி அருகே உள்ள விநாயகபுரம் கிராமத்தை சேர்ந்தவர் பலராமன்(வயது48). கூலித்தொழிலாளி. இவரது முதல் மனைவி ஏற்கனவே பிரிந்து சென்றுவிட்டார். இதைத்தொடர்ந்து பலராமன் பள்ளாங்குப்பம் பகுதியை சேர்ந்த ஆனந்தி என்பவரை 2-வதாக திருமணம் செய்து வாழ்ந்து வந்தார்.

    பலராமனுக்கு மது பழக்கம் உள்ளது. அடிக்கடி அவர் மதுகுடித்து வீட்டுக்கு வந்தார். இதனால் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது.

    கடந்த 3 நாட்களுக்கு முன்பும் அவர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது. இதனால் கோபம் அடைந்த ஆனந்தி கணவரை பிரிந்து தாய்வீட்டுக்கு சென்றுவிட்டார். இதனால் மனமுடைந்த பலராமன் அளவுக்கு அதிகமாக மதுகுடித்து வந்து வீட்டில் படுத்தார். பின்னர் அவர் வெளியே செல்லவில்லை.

    இந்நிலையில் பலராமன் வீடு பூட்டியே கிடந்ததால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது உடல் அழுகிய நிலையில் பலராமன் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். கூடுதல் மதுபோதையில் அவர் இறந்து இருப்பது தெரியவந்தது.

    இதுகுறித்து திருத்தணி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து பலராமனின் உடலை மீட்டு பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    • பார்த்திபன் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த கோனையூரை சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.
    • புகாரின் பேரில் போலீசார் சஞ்சய்யை தேடி வந்தனர்.

    மேல்மருவத்தூர்:

    செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் அடுத்த சோத்துப்பாக்கம் நடுத்தூரை சேர்ந்தவர் பார்த்திபன். இவரது மனைவி ரேகா. இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர் இவர்கள் மகன் சஞ்சய் (வயது 13). மகள் மித்ரா (9). குடும்பத்தகராறு காரணமாக பார்த்திபன், ரேகா இருவரும் 8 ஆண்டுகளுக்கு முன்பு விவாகரத்து செய்து கொண்டனர்.

    பார்த்திபன் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த கோனையூரை சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். சஞ்சய் தாய் ரேகாவுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 15-ந் தேதி பள்ளிக்கு சென்ற சஞ்சய் வீடு திரும்பவில்லை. மாயமானான்.

    இதுகுறித்து ரேகா மேல்மருவத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் சஞ்சய்யை தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று சஞ்சய்யின் உடல் வீட்டின் அருகே உள்ள கிணற்றில் கிடப்பதாக கிராம நிர்வாக அலுவலர் பெரியசாமி மேல்மருவத்தூர் போலீசில் தகவல் தெரிவித்தார்.

    போலீசார் விரைந்து வந்து சஞ்சய் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு ஆனுப்பி வைத்தனர். ரேகாவிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர். சஞ்சய் கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டானா? அல்லது தற்கொலை செய்து கொண்டானா? என்பது குறித்து மேல்மருவத்தூர் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    • சிறுவன் இறந்த தகவலை அறிந்த பெற்றோர், உறவினர்கள் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து மதியரசின் உடலை பார்த்து கதறி அழுதனர்.
    • சிறுவனின் உடலை பயன்பாட்டில் இல்லாத தண்ணீர் இல்லாமல் காலியாக உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் போட்டு விட்டேன்.

    தருமபுரி:

    தருமபுரி அருகே காட்டம்பட்டி கிராமத்தை சேர்ந்த ஆதிமூலம். இவருக்கு திருமணமாகி சுதா என்ற மனைவியும், மதியரசு (வயது6) மற்றும் 3 வயதில் மற்றொரு மகனும் உள்ளனர். ஆதிமூலம் ஜே.சி.பி. ஆபரேட்டராக பணியாற்றி வருகிறார்.

    இந்த நிலையில் கடந்த 16-ந் தேதி வீட்டின் வெளியே விளையாடி கொண்டிருந்தான். அப்போது சிறுவன் மதியரசு திடீரென்று காணவில்லை.

    உடனே சிறுவனின் தந்தை ஆதிமூலம் தனது உறவினர்கள் வீடுகள் மற்றும் கிராமத்தில் பல்வேறு இங்களில் தேடி பார்த்தனர். எங்கு தேடியும் சிறுவன் கிடைக்காததால் கிருஷ்ணாபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அதே கிராமத்தைச் சேர்ந்த மாதேஸ் என்பவருடைய மகன் பிரகாஷ் (வயது19) என்பவரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவன் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்ததால், சந்தேகம் அடைந்த போலீசார் பிரகாஷிடம் தீவிர விசாரணை நடத்தியதில், சிறுவன் மதியரசை கொலை செய்து அருந்ததியர் காலனி பகுதியில் பயன்பாட்டிற்கு இல்லாத தண்ணீர் இன்றி காலியாக இருந்த மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் உடலை போட்டுள்ளதாக தகவல் தெரிவித்தான்.

    இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார் உடனே சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்புத் துறையினர் உதவியுடன் சிறுவனின் உடலை மீட்டு தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அதன்பின்னர் பிரகாஷை போலீசார் கைது செய்தனர்.

    சிறுவன் இறந்த தகவலை அறிந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து மதியரசின் உடலை பார்த்து கதறி அழுதனர்.

    பிடிபட்ட பிரகாஷிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார்.

    கடந்த 16-ந் தேதி மாலையில் வீட்டின் முன்பு விளையாடி கொண்டிருந்த சிறுவன் மதியரசுவை நான் தனியாக அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுக்க முயன்றேன்.

    இதுகுறித்து அந்த சிறுவன் தனது பெற்றோரிடம் சொல்லிவிடுவான் என்று பயத்தில், அந்த சிறுவனின் கழுத்தை நெரித்து கொலை செய்தேன்.

    அதன்பின்னர் யாருக்கும் தெரியாமல் சிறுவனின் உடலை பயன்பாட்டில் இல்லாத தண்ணீர் இல்லாமல் காலியாக உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் போட்டு விட்டேன்.

    மாயமான சிறுவனின் பெற்றோர் போலீசாரிடம் புகார் கூறியதால், போலீசார் சிறுவனை தேடி என்னிடம் விசாரித்தபோது முன்னுக்கு பின் முரணாக பதிலளித்ததால் நான் மாட்டி கொண்டேன் என்று போலீசாரிடம் பிரகாஷ் தெரிவித்தார்.

    இந்த சம்பவம் குறித்து பிரகாஷ் மீது போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடந்த 3 தினங்களுக்கு முன்பு காணாமல் போன சிறுவன் கொலை செய்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • சிறுவன் மதியரசு கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து ஆதிமூலம், அவரது மனைவி சுதா ஆகியோருக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர்.
    • உறவினர்களிடம் போலீசார் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

    தருமபுரி:

    மாயமான மதியரசு ஓரினச்சேர்க்கைக்காக கொலை செய்யப்பட்டு அதேபகுதியில் உள்ள கேட்பரான்றி கிடக்கும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் பிணமாக கிடந்த சம்பவம் தொடர்பாக காட்டம்பட்டியைச் சேர்ந்த பிரகாஷ் என்பவரை கிருஷ்ணாபுரம் போலீசார் கைது செய்தனர்.

    அதன்பின்னர் போலீசார் மதியரசின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    சிறுவன் மதியரசு கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து ஆதிமூலம், அவரது மனைவி சுதா ஆகியோருக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து மதியரசுவின் உடலை பார்த்து கதறி அழுதனர்.

    இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த மதியரசுவின் உறவினர்கள் மற்றும் அப்பகுதி கிராம மக்கள் கிருஷ்ணாபுரம் நிலையத்தில் திரண்டனர்.

    அப்போது அவர்கள் இந்த கொலை சம்பவத்தில் பிரகாஷ் மட்டுமல்லாமல் வேறு சில நபர்களும் கூட்டுசேர்ந்து செய்திருக்க வாய்ப்புள்ளது, அவர்களையும் கைது செய்ய வேண்டும் என்று கூறி முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    சிறிது நேரத்தில் அவர்கள் தருமபுரி-திருப்பத்தூர் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதன் காரணமாக அந்த வழியாக வாகனங்கள் செல்லாமல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    இதுகுறித்து தகவலறிந்த பாப்பிரெட்டிப்பட்டி எம்.எல்.ஏ. கோவிந்தசாமி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசுபாதம் மற்றும் டி.எஸ்.பி., போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சர்மிளாபானு, ரங்கசாமி, சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி ஆகியோர் அங்கு விரைந்து வந்து சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்களிடம் சமாதான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

    இந்த கொலையில் ஒருவர் மட்டுமே ஈடுபட்டதாக தெரிகிறது. தொடர்ந்து விசாரணை செய்து வருகிறோம் என்று போலீஸ் தரப்பில் கூறினர். இதனை ஏற்காத உறவினர்களிடம் போலீசார் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பதட்டமும், போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    • காவிரி ஆற்றில் குளித்துக் கொண்டு இருந்த போது எதிர்பாராத விதமாக சதீஷ்குமார் மட்டும் காவிரி ஆற்றில் மூழ்கி விட்டதாக கூறப்படுகிறது.
    • இது குறித்து அவரது நண்பர்கள் உடனடியாக ஜேடர்பாளையம் போலீ சார்‌ மற்றும் நாமக்கல் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

    பரமத்திவேலூர்:

    பரமத்தி அருகே உள்ள வெள்ளாளபாளையத்தை சேர்ந்த டிரைவர் சதீஷ் குமார் (வயது 22) அவரது நண்பர்களான மனோஜ் (22), மணிகண்டன் (19), வெங்கடேஷ் (19), கண்ணன் (23) ஆகியோருடன் நேற்று முன்தினம் மதியம் ஜேடர்பாளையம் பரிசல் துறை பகுதி காவிரி ஆற்றுக்கு குளிப்பதற்காக சென்றுள்ளனர். காவிரி ஆற்றில் குளித்துக் கொண்டு இருந்த போது எதிர்பாராத விதமாக சதீஷ்குமார் மட்டும் காவிரி ஆற்றில் மூழ்கி விட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து அவரது நண்பர்கள் உடனடியாக ஜேடர்பாளையம் போலீ சார் மற்றும் நாமக்கல் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து அங்கு வந்த தீயணைப்பு துறையினர் மற்றும் மீனவர்கள் உதவி யுடன் காவிரி ஆற்றில் மூழ்கிய சதீஷ்குமாரை நேற்று மாலை வரை போலீசார் தேடிவந்தனர். இந்த நிலையில் நேற்று மீண்டும் இரண்டாவது நாளாக ஜேடர்பாளையம் போலீசார் மீனவர்கள் உதவியுடன் காவிரி ஆற்றில் தேடி வந்தனர்.

    தீவிர தேடுதலுக்கு பிறகு நேற்று மாலை ஜேடர்பாளையம் அருகே உள்ள அய்யம்பாளையம் காவிரி ஆற்றின் எதிர்கரை யான ஈரோடு மாவட்டம், காசிபாளையம் பகுதி காவிரி ஆற்றின் ஓரத்தில் சதீஷ்குமார் உடல் மீட்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து ஜேடர்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நண்பர்களே மதுபோதையில் அடித்து கொன்றுவிட்டு உடலை கல்லை கட்டி கிணற்றில் வீசி இருப்பது தெரியவந்தது.
    • பிரபல ரவுடி ஸ்ரீதரின் உறவினர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம், பல்லவர் மேடு பகுதியை சேர்ந்தவர் கிரிதரன் (வயது30). இவர் மறைந்த பிரபல ரவுடி ஸ்ரீதர்தனபாலின் அக்காள் மகன் ஆவார்.

    இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் 13-ந்தேதி தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றவர் பின்னர் திரும்பி வரவில்லை. அவர் மாயமாகி இருந்தார்.

    இதுகுறித்து சிவகாஞ்சி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். ஆனால் மாயமான கிரிதரன் குறித்து எந்த தகவலும் கிடைக்காமல் இருந்தது.

    இதற்கிடையே அவரை நண்பர்களே மதுபோதையில் அடித்து கொன்றுவிட்டு உடலை கல்லை கட்டி கிணற்றில் வீசி இருப்பது தெரியவந்தது.

    இது தொடர்பாக கிரதரனின் நண்பர்களான பல்லவர்மேடு பகுதியை சேர்ந்த கார்த்திக், ஆகாஷ், ஹரிஷ், தாமோதரன் ஆகிய 4 பேரை கைது செய்தனர். அவர்கள் கொடுத்த தகவலின் படி புதுப்பாளையம் அருகே பாழடைந்த வீட்டுக்குப் பின்புறத்தில் உள்ள கிணற்றில் வீசப்பட்ட கிரிதரன் உடலை எலும்புக்கூடாக மீட்டனர். அவர் மாயமாகி 7 மாதத்துக்கு பின்னர் உடல் மீட்கப்பட்டு உள்ளது.

    கிரிதரன் மாயமான ஜனவரி மாதம் 13-ந்தேதி நண்பர்களான ஹரிஷ் உள்பட 4 பேருடன் மதுகுடித்து உள்ளார். அப்போது கிரிதரனுக்கும் அவரது நண்பர்களுக்கும் இடையே யார் பெரியவர்கள் என்று வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் கிரிதரனை நண்பர்களே அடித்து கொலை செய்து உள்ளனர். பின்னர் உடலில் கல்லை கட்டி அருகில் உள்ள கிணற்றில் வீசி சென்று உள்ளனர். மேலும் இதுபற்றி வெளியில் தெரியாமல் இருப்பதற்காக கிணற்றின் மேல் பகுதியில் மரக்கிளைகளையும் வெட்டிபோட்டு இருக்கிறார்கள்.

    இதனால் கிரிதரன் கொலையுண்டது வெளியில் தெரியாமல் இருந்தது. இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு கிரிதரனின் நண்பர்கள் மதுபோதையில் இருந்தபோது கிரிதரணை கொலை செய்து உடலை கிணற்றில் வீசி இருப்பதாக உளறி உள்ளனர்.

    இதன் பின்னரே கிரிதரன் கொலையுண்ட தகவல் போலீசுக்குதெரிந்தது. கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்றும் மேலும் விசாரணை நடந்து வருகிறது. பிரபல ரவுடி ஸ்ரீதரின் உறவினர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • சுதாகர் தனது நண்பர்கள் 6 பேருடன் விழுப்புரம் மாவட்டம் வீடூர் அணைக்கு இன்ப சுற்றுலா சென்றார்.
    • பொதுமக்களின் உதவியுடன் விக்கிரவாண்டி போலீஸ் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.

    விழுப்புரம்:

    புதுவை மாநிலம் திருபுவனை புதுக்காலனியை சேர்ந்தவர் சுதாகர் (வயது 43). தனியார் நிறுவன ஊழியர். இவர் தனது நண்பர்கள் 6 பேருடன் விழுப்புரம் மாவட்டம் வீடூர் அணைக்கு இன்ப சுற்றுலா சென்றார். அங்கு வீடூர் அணையின் கரையில் அமர்ந்து அனைவரும் மது அருந்தினர். பின்னர் அணையின் கரையில் குளித்தனர். அப்போது எதிர்பாராத விதமாக சுதாகர் நீரில் மூழ்கினார். அவரது நண்பர்கள் அவரை நீரில் மூழ்கி நீச்சல் அடித்து தேடினர். இதில் சுதாகரை கண்டுபிடிக்க முடியவில்லை.

    இதை யடுத்து அங்கிருந்த பொதுமக்களின் உதவியுடன் விக்கிரவாண்டி போலீஸ் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் விக்கிரவாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகமுருகன், சப்-இன்ஸ்பெக்டர்கள் காத்தமுத்து, பிரகாஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். தொடர்ந்து விக்கிரவாண்டி தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்பு நிலைய அலுவலர் சுந்தரேஷ்வரன் தலைமையிலான வீரர்கள் வீடூர் அணைக்கு வந்து இரவு 8 மணிவரை மீட்பு பணியில் ஈடுபட்டனர். அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

    இந்நிலையில் இன்று காலை 6 மணிக்கு வீடூர் அணைக்கு மீண்டும் சென்ற தீயணைப்பு வீரர்கள் நீரில் மூழ்கி சுதாகரை தேடும் பணியில் ஈடுபட்டனர். இதில் அவர் குளித்த இடத்தின் அருகிலேயே சேற்றில் சிக்கி மூச்சித் திணறி இறந்து கிடந்தார். உடலை மீட்ட தீயணைப்பு வீரர்கள் வீடூர் அணையின் கரையில் வைத்தனர். விக்கிரவாண்டி போலீசார் உடலை கைப்பற்றி பிரேத ப ரிசோதைனைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மேட்டுப்பாளையம் பஸ் நிலையத்தில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்து கிடந்தார்.
    • போலீசார் இறந்த ஆணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.

    கோவை,

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பஸ் நிலையத்தில் சிறுமுகை பகுதிக்கு பஸ்கள் புறப்பட்டு செல்லும் இடத்தில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்து கிடந்தார். இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் இது குறித்து சிக்கதாசம்பாளையம் கிராம நிர்வாக அதிகாரிக்கு தகவல் தெரிவித்தனர்.

    அவர் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் இது குறித்து மேட்டுப்பாளையம் போலீசில் புகார் அளித்தார்.

    புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து இறந்த ஆணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்த இறந்த ஆண் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதேபோல பெரியநாயக்கன்பாளையம் கோவை- மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள துணிக்கடை முன்பு 60 வயது மதிக்கதக்க முதியவர் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது.

    இதனையடுத்து பெரியநாயக்கன்பாளையம் போலீசார் உடனடியாக சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் முதியவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்த முதியவர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • தற்கொலை செய்து கொண்டதற்காக காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    • கடந்த 3 நாட்களுக்கு முன்பு அவரது செல்போனுக்கு பெற்றோர் தொடர்பு கொண்டனர்.

    கோவை,

    திருச்சியை சேர்ந்தவர் பரம தயாளன். இவரது மகன் ஆகாஷ் (வயது 20). இவர் கோவை பீளமேட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.ஏ., ஆங்கிலம் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவர் முதலில் கல்லூரியில் உள்ள விடுதியில் தங்கி இருந்து கல்லூரிக்கு சென்று வந்தார். பின்னர் தனது பெற்றோரிடம்

    கல்லூரி விடுதியில் தங்க விருப்பம் இல்லை. எனவே வெளியே அறை எடுத்து தரும்படி கேட்டார். இதனையடுத்து அவரது பெற்றோர் ஆகாசுக்கு கோல்டு வின்ஸ் இந்திரா நகரில் அறை எடுத்து கொடுத்தனர். அங்கு தங்கி இருந்து ஆகாஷ் கல்லூரிக்கு சென்று வந்தார்.

    கடந்த 3 நாட்களுக்கு முன்பு அவரது செல்போனுக்கு பெற்றோர் தொடர்பு கொண்டனர். ஆனால் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. தொடர்ந்து அவர்கள் முயற்சி செய்தனர். ஆனால் போன் தொடர்ந்து சுவிட்ச்ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த பெற்றோர் அறை உரிமையாளரை தொடர்பு கொண்டு அறைக்கு சென்று பார்க்கும்படி கூறினர்.

    உடனடியாக அறை உரிமையாளர் சென்று பார்த்த போது கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. மேலும் அறையில் இருந்து தூர்நாற்றம் வந்தது. இதனையடுத்து அறை உரிமையாளர் இது குறித்து பீளமேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.

    அப்போது ஆகாஷ் அறையில் உள்ள மின் விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் பிணமாக தொங்கினார். அவர் தற்கொலை செய்து 3 நாட்கள் இருக்கும் என்பதால் உடல் அழுகிய நிலையில் காணப்பட்டது. பிணத்தை பீளமேடு போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கல்லூரி மாணவர் ஆகாஷ் தற்கொலை செய்து கொண்டதற்காக காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.  

    ×