search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கிணற்றில் வீசப்பட்ட வாலிபர் உடல் மீட்பு- மதுபோதையில் கொலை செய்ததை உளறியதால் சிக்கிய நண்பர்கள்
    X

    கிணற்றில் வீசப்பட்ட வாலிபர் உடல் மீட்பு- மதுபோதையில் கொலை செய்ததை உளறியதால் சிக்கிய நண்பர்கள்

    • நண்பர்களே மதுபோதையில் அடித்து கொன்றுவிட்டு உடலை கல்லை கட்டி கிணற்றில் வீசி இருப்பது தெரியவந்தது.
    • பிரபல ரவுடி ஸ்ரீதரின் உறவினர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம், பல்லவர் மேடு பகுதியை சேர்ந்தவர் கிரிதரன் (வயது30). இவர் மறைந்த பிரபல ரவுடி ஸ்ரீதர்தனபாலின் அக்காள் மகன் ஆவார்.

    இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் 13-ந்தேதி தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றவர் பின்னர் திரும்பி வரவில்லை. அவர் மாயமாகி இருந்தார்.

    இதுகுறித்து சிவகாஞ்சி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். ஆனால் மாயமான கிரிதரன் குறித்து எந்த தகவலும் கிடைக்காமல் இருந்தது.

    இதற்கிடையே அவரை நண்பர்களே மதுபோதையில் அடித்து கொன்றுவிட்டு உடலை கல்லை கட்டி கிணற்றில் வீசி இருப்பது தெரியவந்தது.

    இது தொடர்பாக கிரதரனின் நண்பர்களான பல்லவர்மேடு பகுதியை சேர்ந்த கார்த்திக், ஆகாஷ், ஹரிஷ், தாமோதரன் ஆகிய 4 பேரை கைது செய்தனர். அவர்கள் கொடுத்த தகவலின் படி புதுப்பாளையம் அருகே பாழடைந்த வீட்டுக்குப் பின்புறத்தில் உள்ள கிணற்றில் வீசப்பட்ட கிரிதரன் உடலை எலும்புக்கூடாக மீட்டனர். அவர் மாயமாகி 7 மாதத்துக்கு பின்னர் உடல் மீட்கப்பட்டு உள்ளது.

    கிரிதரன் மாயமான ஜனவரி மாதம் 13-ந்தேதி நண்பர்களான ஹரிஷ் உள்பட 4 பேருடன் மதுகுடித்து உள்ளார். அப்போது கிரிதரனுக்கும் அவரது நண்பர்களுக்கும் இடையே யார் பெரியவர்கள் என்று வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் கிரிதரனை நண்பர்களே அடித்து கொலை செய்து உள்ளனர். பின்னர் உடலில் கல்லை கட்டி அருகில் உள்ள கிணற்றில் வீசி சென்று உள்ளனர். மேலும் இதுபற்றி வெளியில் தெரியாமல் இருப்பதற்காக கிணற்றின் மேல் பகுதியில் மரக்கிளைகளையும் வெட்டிபோட்டு இருக்கிறார்கள்.

    இதனால் கிரிதரன் கொலையுண்டது வெளியில் தெரியாமல் இருந்தது. இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு கிரிதரனின் நண்பர்கள் மதுபோதையில் இருந்தபோது கிரிதரணை கொலை செய்து உடலை கிணற்றில் வீசி இருப்பதாக உளறி உள்ளனர்.

    இதன் பின்னரே கிரிதரன் கொலையுண்ட தகவல் போலீசுக்குதெரிந்தது. கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்றும் மேலும் விசாரணை நடந்து வருகிறது. பிரபல ரவுடி ஸ்ரீதரின் உறவினர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×