search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிணற்றில் அடையாளம் தெரியாத ஆண் உடல் மீட்பு
    X

    கிணற்றில் அடையாளம் தெரியாத ஆண் உடல் மீட்பு

    • தருமபுரி அருகே கிணற்றில் கிடந்த அடையாளம் தெரியாத ஆண் உடல் மீட்கப்பட்டது.
    • போலீசார் தீவிர விசாரணை

    தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள நாசன்கொட்டாய் பகுதியை சேர்ந்த சின்னப்பையன் என்பவர், தனது காணாமல் போன கன்றுக்குட்டியைப் தேடிச்சென்றுள்ளார். அப்போது அந்த பகுதியில் உள்ள கிணற்றில் ஆண் சடலம் ஒன்று மிதந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக அரூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதன் பேரில் அரூர் போலீசார் தீயணைப்பு மீட்பு குழுவினருக்கு தகவல் அளித்தனர்.

    இதனையடுத்து தீயணைப்புறையினர் கிணற்றுக்குள் இருந்த உடலை மீட்டனர். இது குறித்து விசாரணை நடத்திய போலீசார் 5 நாட்களுக்கு முன்பே கிணற்றில் விழுந்து இறந்திருக்கலாம் என்று தெரிவித்தனர். சடலத்தை மீட்டு அரூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இறந்தவர் குறித்து, விசாரணை மேற்கொண்டு வரும் போலீசார் கொலையா தற்கொலையா விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×