search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Missing Boy"

    • சிறுவன் இறந்த தகவலை அறிந்த பெற்றோர், உறவினர்கள் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து மதியரசின் உடலை பார்த்து கதறி அழுதனர்.
    • சிறுவனின் உடலை பயன்பாட்டில் இல்லாத தண்ணீர் இல்லாமல் காலியாக உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் போட்டு விட்டேன்.

    தருமபுரி:

    தருமபுரி அருகே காட்டம்பட்டி கிராமத்தை சேர்ந்த ஆதிமூலம். இவருக்கு திருமணமாகி சுதா என்ற மனைவியும், மதியரசு (வயது6) மற்றும் 3 வயதில் மற்றொரு மகனும் உள்ளனர். ஆதிமூலம் ஜே.சி.பி. ஆபரேட்டராக பணியாற்றி வருகிறார்.

    இந்த நிலையில் கடந்த 16-ந் தேதி வீட்டின் வெளியே விளையாடி கொண்டிருந்தான். அப்போது சிறுவன் மதியரசு திடீரென்று காணவில்லை.

    உடனே சிறுவனின் தந்தை ஆதிமூலம் தனது உறவினர்கள் வீடுகள் மற்றும் கிராமத்தில் பல்வேறு இங்களில் தேடி பார்த்தனர். எங்கு தேடியும் சிறுவன் கிடைக்காததால் கிருஷ்ணாபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அதே கிராமத்தைச் சேர்ந்த மாதேஸ் என்பவருடைய மகன் பிரகாஷ் (வயது19) என்பவரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவன் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்ததால், சந்தேகம் அடைந்த போலீசார் பிரகாஷிடம் தீவிர விசாரணை நடத்தியதில், சிறுவன் மதியரசை கொலை செய்து அருந்ததியர் காலனி பகுதியில் பயன்பாட்டிற்கு இல்லாத தண்ணீர் இன்றி காலியாக இருந்த மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் உடலை போட்டுள்ளதாக தகவல் தெரிவித்தான்.

    இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார் உடனே சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்புத் துறையினர் உதவியுடன் சிறுவனின் உடலை மீட்டு தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அதன்பின்னர் பிரகாஷை போலீசார் கைது செய்தனர்.

    சிறுவன் இறந்த தகவலை அறிந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து மதியரசின் உடலை பார்த்து கதறி அழுதனர்.

    பிடிபட்ட பிரகாஷிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார்.

    கடந்த 16-ந் தேதி மாலையில் வீட்டின் முன்பு விளையாடி கொண்டிருந்த சிறுவன் மதியரசுவை நான் தனியாக அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுக்க முயன்றேன்.

    இதுகுறித்து அந்த சிறுவன் தனது பெற்றோரிடம் சொல்லிவிடுவான் என்று பயத்தில், அந்த சிறுவனின் கழுத்தை நெரித்து கொலை செய்தேன்.

    அதன்பின்னர் யாருக்கும் தெரியாமல் சிறுவனின் உடலை பயன்பாட்டில் இல்லாத தண்ணீர் இல்லாமல் காலியாக உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் போட்டு விட்டேன்.

    மாயமான சிறுவனின் பெற்றோர் போலீசாரிடம் புகார் கூறியதால், போலீசார் சிறுவனை தேடி என்னிடம் விசாரித்தபோது முன்னுக்கு பின் முரணாக பதிலளித்ததால் நான் மாட்டி கொண்டேன் என்று போலீசாரிடம் பிரகாஷ் தெரிவித்தார்.

    இந்த சம்பவம் குறித்து பிரகாஷ் மீது போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடந்த 3 தினங்களுக்கு முன்பு காணாமல் போன சிறுவன் கொலை செய்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • சிறுவன் மதியரசு கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து ஆதிமூலம், அவரது மனைவி சுதா ஆகியோருக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர்.
    • உறவினர்களிடம் போலீசார் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

    தருமபுரி:

    மாயமான மதியரசு ஓரினச்சேர்க்கைக்காக கொலை செய்யப்பட்டு அதேபகுதியில் உள்ள கேட்பரான்றி கிடக்கும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் பிணமாக கிடந்த சம்பவம் தொடர்பாக காட்டம்பட்டியைச் சேர்ந்த பிரகாஷ் என்பவரை கிருஷ்ணாபுரம் போலீசார் கைது செய்தனர்.

    அதன்பின்னர் போலீசார் மதியரசின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    சிறுவன் மதியரசு கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து ஆதிமூலம், அவரது மனைவி சுதா ஆகியோருக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து மதியரசுவின் உடலை பார்த்து கதறி அழுதனர்.

    இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த மதியரசுவின் உறவினர்கள் மற்றும் அப்பகுதி கிராம மக்கள் கிருஷ்ணாபுரம் நிலையத்தில் திரண்டனர்.

    அப்போது அவர்கள் இந்த கொலை சம்பவத்தில் பிரகாஷ் மட்டுமல்லாமல் வேறு சில நபர்களும் கூட்டுசேர்ந்து செய்திருக்க வாய்ப்புள்ளது, அவர்களையும் கைது செய்ய வேண்டும் என்று கூறி முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    சிறிது நேரத்தில் அவர்கள் தருமபுரி-திருப்பத்தூர் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதன் காரணமாக அந்த வழியாக வாகனங்கள் செல்லாமல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    இதுகுறித்து தகவலறிந்த பாப்பிரெட்டிப்பட்டி எம்.எல்.ஏ. கோவிந்தசாமி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசுபாதம் மற்றும் டி.எஸ்.பி., போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சர்மிளாபானு, ரங்கசாமி, சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி ஆகியோர் அங்கு விரைந்து வந்து சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்களிடம் சமாதான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

    இந்த கொலையில் ஒருவர் மட்டுமே ஈடுபட்டதாக தெரிகிறது. தொடர்ந்து விசாரணை செய்து வருகிறோம் என்று போலீஸ் தரப்பில் கூறினர். இதனை ஏற்காத உறவினர்களிடம் போலீசார் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பதட்டமும், போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    ×