search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காதலி பேசாததால் விரக்தி;  கல்லூரி மாணவர் தற்கொலை
    X

    காதலி பேசாததால் விரக்தி; கல்லூரி மாணவர் தற்கொலை

    • 2 பேரும் ஒருவரை ஒருவர் தீவிரமாக காதலித்து வந்தனர்.
    • தனியார் கல்லூரியில் படித்து வந்தார்.

    கோவை:

    கோவை சூலூர் அருகே உள்ள காங்கயம் பாளையத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மகன் பிரதீப் (வயது 20). இவர் நீலாம்பூரில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார்.

    கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பிரதீப்புக்கு இளம்பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. 2 பேரும் ஒருவரை ஒருவர் தீவிரமாக காதலித்து வந்தனர்.

    இந்த நிலையில் சில நாட்களாக இவர்களுக்கு இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. இதனால் பிரதீப்புடன் அந்த இளம்பெண் பேசாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    அவர் சமாதானம் செய்தும் அந்த இளம்பெண் அவரிடம் பேசாமல் இருந்ததாக தெரிகிறது. இதன் காரணமாக அவர் மிகுந்த மனவேதனையுடன் இருந்து வந்தார்.சம்பவத்தன்று வீட்டில் இருந்த பிரதீப் வாழ்க்கையில் விரக்தி அடைந்து திடீரென தூக்கு போட்டு கொண்டார்.

    இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு பிரதீப்பை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    பின்னர் இது குறித்து சூலூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பிரதீப்பின் உடலை மீட்டு பிேரத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×