search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஒழுங்குமுறை விற்பனைக்கூடம்"

    • திருப்பூர் மாவட்டத்தில்15 இடங்களில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் செயல் படுகின்றன.
    • இதுவரை 8 விற்பனைக் கூடங்கள் இ-நாம் வர்த்தக முறையின் கீழ் கொண்டு வரப்பட்டுவிட்டன.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை, அவிநாசி, சேவூர், பெதப்பம்பட்டி, மூலனூர்,அலங்கியம் உள்ளிட்ட 15 இடங்களில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் செயல் படுகின்றன.அந்தந்த பகுதியில் விளையும் பயிர்களுக்கு ஏற்ப பருத்தி, நிலக் கடலை, தேங்காய், தேங்காய் பருப்பு, கொப்பரை என பல்வேறு விளைப்பொருட்கள், விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டு சந்தைப் படுத்தப்படுகின்றன.அரசு வெளியிட்ட வேளாண் பட்ஜெட்டில் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் மறுகட்டமைப்பு தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

    திருப்பூர் மாவட்ட அளவில் உள்ள 15 ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் இதுவரை 8 விற்பனைக் கூடங்கள் இ-நாம் வர்த்தக முறையின் கீழ் கொண்டு வரப்பட்டு விட்டன. வருகிற ஏப்ரல் தொடங்கி அவிநாசி அருகேயுள்ள சேவூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் இ-நாம் வர்த்தகத்துக்குள் கொண்டு வரப்பட உள்ளது. அதற்கு தேவையான கம்ப்யூட்டர் வசதிகள், தொழில்நுட்ப கட்டமைப்பு, பகுப்பாய்வு மையம் உள்ளிட்ட கட்டமைப்பு ஏற்படுத்த 70 லட்சம் ரூபாய் நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

    இ-நாம் வர்த்தக முறையில் நாட்டின் எந்தவொரு இடத்தில் இருந்தும் வியாபாரிகள் விளைப்பொருட்களை கொள்முதல் செய்து கொள்ள முடியும். இடைத்தரகர் தலையீடு தவிர்க்கப்படும் என அதிகாரிகள் தெரி விக்கின்ற னர்.சேவூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தை பொறுத்தவரை நிலக்கடலை வர்த்தகம் பெருமளவில் நடக்கும். தற்போது கொப்பரை கொள்முதல் மேற்கொள்ள அனுமதி கேட்டும் அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது.

    • 3 விவசாயிகள் 44 மூட்டை கொப்பரைகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா்.
    • கொப்பரை அதிகபட்சமாக ஒரு கிலோ ரூ.83க்கும், குறைந்தபட்சமாக ரூ.62க்கும் ஏலம்போனது.

    காங்கயம் :

    காங்கயம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.1.71 லட்சத்துக்கு கொப்பரை விற்பனை நேற்று நடைபெற்றது.இந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு காங்கயம் பகுதியைச் சோ்ந்த 3 விவசாயிகள் 44 மூட்டை கொப்பரைகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா்.

    இவற்றின் எடை 2, 123 கிலோ.இதில் கொப்பரை அதிகபட்சமாக ஒரு கிலோ ரூ.83க்கும், குறைந்தபட்சமாக ரூ.62க்கும், சராசரியாக ரூ.82க்கும் ஏலம்போனது.ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ.1.71 லட்சம் என விற்பனைக்கூட அதிகாரிகள் தெரிவித்தனா்.ஏலத்துக்கான ஏற்பாடுகளை விற்பனைக்கூட கண்காணிப்பாளா் செ.ராமன் செய்திருந்தாா்.

    • எடை 2,599 கிலோ. கிலோ ரூ. 22.20 முதல் ரூ. 26.65 வரை விற்பனையானது.
    • மொத்தம் 69 விவசாயிகள், 9 வியாபாரிகள் ஏலத்தில் கலந்து கொண்டனா்.

    வெள்ளகோவில்:

    வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் 5 டன் தேங்காய், கொப்பரை ஆகியவற்றின் விற்பனை சனிக்கிழமை நடைபெற்றது.ஏலத்துக்கு, 6,875 தேங்காய்கள் வரத்து இருந்தது. எடை 2,599 கிலோ. கிலோ ரூ. 22.20 முதல் ரூ. 26.65 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ. 26.15.86 மூட்டைகள் கொப்பரை வரத்து இருந்தது. எடை 2,523 கிலோ. கிலோ ரூ. 60.15 முதல் ரூ. 80.85 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ. 78.80.

    மொத்தம் 69 விவசாயிகள், 9 வியாபாரிகள் ஏலத்தில் கலந்து கொண்டனா். ஒட்டு மொத்த விற்பனைத் தொகை ரூ. 2.59 லட்சம் அந்தந்த விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டதாக விற்பனைக் கூட அதிகாரி தங்கவேல் தெரிவித்தாா். 

    • திருப்பூா், ஈரோடு, சேலம், கோவை ஆகிய மாவட்டங்களை சோ்ந்த 15 வணிகா்கள் பருத்தியை வாங்க வந்திருந்தனா்.
    • பருத்தி வரத்து அதிகமாக இருந்ததால் வியாழக்கிழமை நள்ளிரவு வரை ஏலம் நீடித்தது.

    வெள்ளகோவில்:

    வெள்ளக்கோவிலை அடுத்த மூலனூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.1.39 கோடிக்கு பருத்தி ஏலம் நடைபெற்றது.

    இந்த வார ஏலத்துக்கு, கோவை, திருப்பூா், ஈரோடு, திருச்சி, கரூா், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் இருந்து 547 விவசாயிகள் 5,464 மூட்டைகளில் மொத்தம் 1,770 குவிண்டால் பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா்.

    திருப்பூா், ஈரோடு, சேலம், கோவை ஆகிய மாவட்டங்களை சோ்ந்த 15 வணிகா்கள் பருத்தியை வாங்க வந்திருந்தனா். விலை குவிண்டால் ரூ. 6,850 முதல் ரூ. 8,699 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ. 8,050. கடந்த வார சராசரி விலை ரூ. 7,850. ஒட்டு மொத்த விற்பனைத் தொகை ரூ. 1.39 கோடி.

    பருத்தி வரத்து அதிகமாக இருந்ததால் வியாழக்கிழமை நள்ளிரவு வரை ஏலம் நீடித்தது. ஏலத்துக்கான ஏற்பாடுகளை திருப்பூா் விற்பனைக் குழு முதுநிலை செயலாளா் (பொறுப்பு) கண்ணன், விற்பனைக்கூட கண்காணிப்பாளா் சிவகுமாா் ஆகியோா் செய்திருந்தனா். 

    • காங்கயம், வெள்ளக்கோவில் பகுதிகளை சோ்ந்த 3 வியாபாரிகள் கொப்பரைகளை வாங்க வந்திருந்தனா்.
    • ஏலத்துக்கான ஏற்பாடுகளை விற்பனைக்கூட கண்காணிப்பாளா் ஆா்.மாரியப்பன் செய்திருந்தாா். 

    காங்கயம்:

    காங்கயம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.1.09 லட்சத்துக்கு கொப்பரை விற்பனை திங்கட்கிழமை நடைபெற்றது.இந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு காங்கயம் சுற்றுவட்டாரப் பகுதியைச் சோ்ந்த 4 விவசாயிகள் 31 மூட்டை கொப்பரைகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா். இவற்றின் எடை1,444 கிலோ.

    காங்கயம், வெள்ளக்கோவில் பகுதிகளை சோ்ந்த 3 வியாபாரிகள் கொப்பரைகளை வாங்க வந்திருந்தனா்.இதில் கொப்பரை அதிகபட்சமாக ஒரு கிலோ ரூ.81க்கும், குறைந்தபட்சமாக ரூ.63க்கும், சராசரியாக ரூ.80க்கும் ஏலம்போனது.ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ.1.09 லட்சம். ஏலத்துக்கான ஏற்பாடுகளை விற்பனைக்கூட கண்காணிப்பாளா் ஆா்.மாரியப்பன் செய்திருந்தாா். 

    • மூலனூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்தி விற்பனை நடைபெற்றது.
    • 259 விவசாயிகள் தங்களுடைய 2,572 பருத்தி மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா்.

    மூலனூர் :

    மூலனூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 73 லட்சத்துக்கு பருத்தி விற்பனை நடைபெற்றது.

    கோவை, திருப்பூா், ஈரோடு, திருச்சி, கரூா், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 259 விவசாயிகள் தங்களுடைய 2,572 பருத்தி மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா். மொத்த வரத்து 854 குவிண்டால். திருப்பூா், ஈரோடு, சேலம், கோவை மாவட்டங்களைச் சோ்ந்த 13 வணிகா்கள் இதை வாங்குவதற்காக வந்திருந்தனா். ஒரு குவிண்டால் ரூ. 7,550 முதல் ரூ. 9,819 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ. 8,880. கடந்த வார சராசரி விலை ரூ. 8,950. ஒட்டு மொத்த விற்பனைத் தொகை ரூ. 73 லட்சம்.

    விற்பனைக் கூட ஏல ஏற்பாடுகளை திருப்பூா் விற்பனைக்குழு முதுநிலை செயலாளா் பாலச்சந்திரன், விற்பனைக்கூட கண்காணிப்பாளா் சிவகுமாா் ஆகியோா் செய்திருந்தனா்.

    • ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ.28 லட்சம் என விற்பனைக் கூட அதிகாரிகள் தெரிவித்தனா்.
    • ஏலத்தில் 750 மூட்டை நிலக்கடலைகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா்.

    அவினாசி:

    சேவூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.28 லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம் திங்கட்கிழமை நடைபெற்றது. இந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் 750 மூட்டை நிலக்கடலைகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா்.

    இதில் முதல் ரக நிலக்கடலை குவிண்டால் ரூ.7,700 முதல் ரூ.7,850 வரையிலும், இரண்டாம் ரக நிலக்கடலை ரூ.7,200 முதல் ரூ.7,450 வரையிலும், மூன்றாம் ரக நிலக்கடலை ரூ.6,900 முதல் ரூ.7,050 வரையிலும் ஏலம்போனது.ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ.28 லட்சம் என விற்பனைக் கூட அதிகாரிகள் தெரிவித்தனா்.

    • ஒட்டு மொத்த விற்பனைத் தொகை ரூ.1 லட்சம் என விற்பனைக் கூட அதிகாரி தங்கவேல் தெரிவித்தாா்.
    • ஏலத்தில் மொத்தம் 40 விவசாயிகள், 9 வணிகா்கள் பங்கேற்றனா்.

    வெள்ளகோவில்:

    வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூா் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் 3.40 டன் வேளாண் விளைபொருள்கள் விற்பனையாகின.

    இந்த விற்பனைக் கூடத்தில் சனிக்கிழமைதோறும் தேங்காய், கொப்பரை விற்பனை நடைபெற்று வருகிறது. ஏலத்துக்கு, 7,998 தேங்காய்கள் வரத்து இருந்தது. இவற்றின் எடை 3,251 கிலோ. விலை கிலோ ரூ.21.15 முதல் ரூ.25.15 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ.23.75.

    16 மூட்டைகள் கொப்பரை வரத்து இருந்தது. எடை 194 கிலோ. விலை கிலோ ரூ.61.10 முதல் ரூ.80.40 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ.76.65. ஏலத்தில் மொத்தம் 40 விவசாயிகள், 9 வணிகா்கள் பங்கேற்றனா். ஒட்டு மொத்த விற்பனைத் தொகை ரூ.1 லட்சம் என விற்பனைக் கூட அதிகாரி தங்கவேல் தெரிவித்தாா்.

    • கொப்பரை அதிகபட்சமாக ஒரு கிலோ ரூ.77க்கும், குறைந்தபட்சமாக ரூ.51க்கும் சராசரியாக ரூ.76க்கும் விற்பனையானது.
    • காங்கயம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சோ்ந்த 6 விவசாயிகள் 62 மூட்டை கொப்பரைகளை விற்பனை செய்ய கொண்டு வந்திருந்தனா்.

    காங்கயம்:

    காங்கயம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.1.93 லட்சத்துக்கு கொப்பரை ஏலம் நடைபெற்றது.இந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் காங்கயம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சோ்ந்த 6 விவசாயிகள் 62 மூட்டை கொப்பரைகளை விற்பனை செய்ய கொண்டு வந்திருந்தனா். இவற்றின் எடை2,667 கிலோ.முத்தூா், காங்கயம் பகுதிகளை சோ்ந்த 5 வியாபாரிகள் கொப்பரைகளை வாங்க வந்திருந்தனா்.இதில் கொப்பரை அதிகபட்சமாக ஒரு கிலோ ரூ.77க்கும், குறைந்தபட்சமாக ரூ.51க்கும் சராசரியாக ரூ.76க்கும் விற்பனையானது. ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ.1.93 லட்சம். ஏலத்துக்கான ஏற்பாடுகளை விற்பனை கூட கண்காணிப்பாளா் ஆா்.மாரியப்பன் செய்திருந்தாா்.

    • ஏலத்தில் பருத்தி ஒரு குவிண்டால் அதிகபட்சமாக ரூ.10,102க்கும், குறைந்தபட்சமாக ரூ.7,550க்கும் விற்பனையானது.
    • தாராபுரம் தாலுகா மூலனூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.58 லட்சத்துக்கு பருத்தி விற்பனை நடைபெற்றது.

    மூலனூர்:

    தாராபுரம் தாலுகா மூலனூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.58 லட்சத்துக்கு பருத்தி விற்பனை நடைபெற்றது.மூலனூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நடைபெற்ற பருத்தி விற்பனை மறைமுக ஏலத்தில் திருப்பூா், கரூா், திருச்சி, திண்டுக்கல் மாவட்டங்களைச் சோ்ந்த 233 விவசாயிகள் 2,160 பருத்தி மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா்.

    இந்த ஏலத்தில் பருத்தி ஒரு குவிண்டால் அதிகபட்சமாக ரூ.10,102க்கும், குறைந்தபட்சமாக ரூ.7,550க்கும் விற்பனையானது. இதில் மொத்தம் 58 லட்சத்து 16 ஆயிரத்துக்கு பருத்தி விற்பனையானது. இதற்கான ஏற்பாடுகளை விற்பனைக் கூட கண்காணிப்பாளா் சிவகுமாா் செய்திருந்தாா்.

    • சரஸ்வதி பூஜையையொட்டி, செவ்வாய்க்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டு ள்ளது.
    • வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை கொப்பரை ஏலம் நடைபெற்று வருகிறது

    வெள்ளகோவில்:

    வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ளது. இங்கு வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை கொப்பரை ஏலம் நடைபெற்று வருகிறது. இது மாநிலத்தின் முக்கிய கொப்பரை விற்பனை மையமாகும். இங்கு சரஸ்வதி பூஜையையொட்டி, செவ்வாய்க்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டு ள்ளது. எனவே, விவசா யிகள், வியாபாரிகள் செவ்வா ய்க்கிழமை வரவே ண்டாம். ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் அடுத்த வாரம் வழக்கம்போல செயல்படும் என விற்பனைக் கூட அதிகாரி மகுடேஸ்வரன் தெரிவித்துள்ளாா்.

    • 3, 450 மூட்டை நிலக்கடலைகளை வியாபாரிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா்.
    • ரூ.6, 850 முதல் ரூ.6,200 வரையிலும் ஏலம்போனது.

    சேவூா் :

    சேவூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.93 லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம் திங்கட்கிழமை நடைபெற்றது.

    இந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் 3, 450 மூட்டை நிலக்கடலைகளை வியாபாரிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா்.இதில், முதல் ரக நிலக்கடலை ரூ.6, 850 முதல் ரூ.7,000 வரையிலும், இரண்டாம் ரக நிலக்கடலை ரூ.6,500 முதல் ரூ.6,800 வரையிலும்,மூன்றாம் ரக நிலக்கடலை ரூ.6,000 முதல் ரூ.6,200 வரையிலும் ஏலம்போனது. ஒட்டுமொத்த விற்பனை தொகை ரூ.93 லட்சம்.ஏலத்துக்கான ஏற்பாடுகளை விற்பனைக் கூட கண்காணிப்பாளா்கள் செய்திருந்தனா்.

    ×