search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பருத்தி விற்பனை"

    • வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடைபெற்ற பருத்திக்கான பொது ஏலத்தில், விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.
    • ஏலத்தில் ஒரு குவிண்டால் பருத்தியானது ரூ.6,909 முதல் ரூ.7,399 வரை விலை போனது.

    எடப்பாடி:

    எடப்பாடி- நெடுங்குளம் பிரதான சாலையில் செயல்பட்டு வரும் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடைபெற்ற பருத்திக்கான பொது ஏலத்தில், விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்திருந்த சுமார் 1161 பருத்தி மூட்டைகள் ரூபாய் 29 லட்சத்து 54 ஆயிரத்து 29-க்கு விற்பனையானது. ஏலத்தில் ஒரு குவிண்டால் பருத்தியானது ரூ.6,909 முதல் ரூ.7,399 வரை விலை போனது. கோவை, ஈரோடு, திருப்பூர், பல்லடம் உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வருகை தந்த பருத்தி வியாபாரிகள், சுமார் 410 குவிண்டால் அளவுள்ள பருத்தியினை கொள்முதல் செய்தனர்.

    • வியாபாரிகள் வந்திருந்து போட்டி போட்டு பருத்தியை ஏலத்தில் எடுத்து சென்றனர்.
    • பருத்தி மொத்த விற்பனை மதிப்பு ரூ.6,98,979 ஆகும்.

    அம்மாபேட்டை:

    அம்மாபேட்டை அருகே உள்ள பூதப்பாடியில் விவசாயிகளின் பயன்பாட்டிற்காக ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது

    இதில் சுற்றுவட்டார பகுதியில் இருந்தும் அண்டை மாநிலங்களான கர்நாடகா மற்றும் ஆந்திராவில் இருந்து விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை விற்பனைக்கு கொண்டு வருவார்கள்.

    வருடா வருடம் பருத்தி விற்பனை நடைபெறுகிறது. இந்த வருடம் விற்பனை முறைப்படி அறிவிக்கப்பட்டு நேற்று காலை பூஜை செய்து விற்பனை தொடங்க ப்பட்டது.

    விற்பனையை ஈரோடு வேளாண் விற்பனைக்குழு செயலாளர் சாவித்திரி தொடங்கி வைத்தார். விற்பனையில் சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் கோவை அன்னூர் புளியம்பட்டி ஆகிய பகுதியில் இருந்து வியாபாரிகள் வந்திருந்து போட்டி போட்டு பருத்தியை ஏலத்தில் எடுத்து சென்றனர்.

    முதல் நாள் விற்பனையில் மொத்தம் 294 பருத்தி மூட்டைகள் விற்பனைக்கு வந்தன கிலோ ஒன்றின் அதிக விலை ரூ 68.19 க்கும் குறைந்த விலை ரூ.61.60 க்கும் விற்பனையானது. பருத்தி மொத்த விற்பனை மதிப்பு ரூ.6,98,979 ஆகும்.

    • பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம் நடை பெற்றது.
    • மொத்தம் ரூ.34 லட்சத்து ஆயிரத்து 175-க்கு பருத்தி விற்பனையானது.

    அம்மாபேட்டை:

    அம்மாபேட்டை அடுத்துள்ள பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு புரட்டாசி பட்ட பருத்தி ஏலத்திற்கு சேலம் மாவட்டம் கொங்கணாபுரம், தேவூர், எடப்பாடி, மேட்டூர், கொளத்தூர், அந்தியூர், அம்மாபேட்டை சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் 1,482 பருத்தி மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.

    ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் சந்திரசேகரன் முன்னிலையில் பருத்தி ஏலம் நடை பெற்றது.

    இதில் பிடி ரக பருத்தி குறைந்த பட்சமாக ரூ.7 ஆயிரத்து 321-க்கும், அதிகபட்சமாக ரூ.8 ஆயிரத்து 89-க்கும் விற்பனையானது.

    இதனை பெருந்துறை, சத்தியமங்கலம் புளியம் பட்டி அன்னூர், கோவை, கொங்கணாபுரம், அந்தியூர் ஆகிய சுற்றுவட்டார பகுதி களில் இருந்து வியாபாரிகள் வந்திருந்து போட்டி போட்டு ஏலத்தில் எடுத்து சென்றனர்.

    மொத்தம் ரூ.34 லட்சத்து ஆயிரத்து 175-க்கு பருத்தி விற்பனையானது.

    • 4,360 பருத்தி மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா்.
    • 15 வணிகா்கள் பருத்தியை வாங்க வந்திருந்தனா்.

    வெள்ளகோவில் :

    வெள்ளக்கோவிலை அடுத்த மூலனூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 1.5 கோடிக்கு பருத்தி விற்பனை வியாழக்கிழமை நடைபெற்றது.

    இந்த வார ஏலத்துக்கு, கோவை, திருப்பூா், ஈரோடு, திருச்சி, கரூா், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 422 விவசாயிகள் 4,360 பருத்தி மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா். மொத்த வரத்து 1,373 குவிண்டால். திருப்பூா், ஈரோடு, சேலம், கோவை மாவட்டங்களைச் சோ்ந்த 15 வணிகா்கள் பருத்தியை வாங்க வந்திருந்தனா். விலை குவிண்டால் ரூ. 6,900 முதல் ரூ. 8,658 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ. 7,850. கடந்த வார சராசரி விலை ரூ. 8,050. ஒட்டு மொத்த விற்பனைத் தொகை ரூ. 1.05 கோடி.

    ஏலத்துக்கான ஏற்பாடுகளை திருப்பூா் விற்பனைக் குழு முதுநிலை செயலாளா் (பொறுப்பு) கண்ணன், விற்பனைக்கூட கண்காணிப்பாளா் சிவகுமாா் ஆகியோா் செய்திருந்தனா்.

    • 3,944 பருத்தி மூட்டைகளை விற்பனை செய்ய கொண்டு வந்திருந்தனா்.
    • விற்பனைக் கூட ஏல ஏற்பாடுகளை விற்பனைக் கூட கண்காணிப்பாளா் சிவகுமாா் செய்திருந்தனா்.

    வெள்ளகோவில் :

    வெள்ளக்கோவிலை அடுத்த மூலனூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.ஒரு கோடிக்கு பருத்தி விற்பனை நடைபெற்றது.கோவை, திருப்பூா், ஈரோடு, திருச்சி, கரூா், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 415 விவசாயிகள் தங்களுடைய 3,944 பருத்தி மூட்டைகளை விற்பனை செய்ய கொண்டு வந்திருந்தனா். மொத்த வரத்து 1,300 குவிண்டால்.

    திருப்பூா், ஈரோடு, சேலம், கோவை மாவட்டங்களைச் சோ்ந்த 15 வணிகா்கள் வந்திருந்தனா். விலை குவிண்டால் ரூ. 6,700 முதல் ரூ. 8,656 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ. 7,850. கடந்த வார சராசரி விலை ரூ. 7,850. ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ.ஒரு கோடி ஆகும்.

    விற்பனைக் கூட ஏல ஏற்பாடுகளை திருப்பூா் விற்பனைக்குழு முதுநிலை செயலாளா் (பொறுப்பு) கண்ணன், விற்பனைக் கூட கண்காணிப்பாளா் சிவகுமாா் செய்திருந்தனா். 

    • ஏலத்தில் பருத்தி ஒரு குவிண்டால் அதிகபட்சமாக ரூ.10,102க்கும், குறைந்தபட்சமாக ரூ.7,550க்கும் விற்பனையானது.
    • தாராபுரம் தாலுகா மூலனூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.58 லட்சத்துக்கு பருத்தி விற்பனை நடைபெற்றது.

    மூலனூர்:

    தாராபுரம் தாலுகா மூலனூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.58 லட்சத்துக்கு பருத்தி விற்பனை நடைபெற்றது.மூலனூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நடைபெற்ற பருத்தி விற்பனை மறைமுக ஏலத்தில் திருப்பூா், கரூா், திருச்சி, திண்டுக்கல் மாவட்டங்களைச் சோ்ந்த 233 விவசாயிகள் 2,160 பருத்தி மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா்.

    இந்த ஏலத்தில் பருத்தி ஒரு குவிண்டால் அதிகபட்சமாக ரூ.10,102க்கும், குறைந்தபட்சமாக ரூ.7,550க்கும் விற்பனையானது. இதில் மொத்தம் 58 லட்சத்து 16 ஆயிரத்துக்கு பருத்தி விற்பனையானது. இதற்கான ஏற்பாடுகளை விற்பனைக் கூட கண்காணிப்பாளா் சிவகுமாா் செய்திருந்தாா்.

    • திருப்பூா், ஈரோடு, சேலம், கோவை மாவட்டங்களை சோ்ந்த 13 வணிகா்கள் பருத்தி வாங்க வந்திருந்தனா்.
    • வாரந்தோறும் வியாழக்கிழமை பருத்தி ஏலம் நடைபெற்று வருகிறது.

    மூலனூர்:

    வெள்ளக்கோவிலை அடுத்த மூலனூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 1.38 கோடிக்கு பருத்தி விற்பனை நடைபெற்றது.இங்கு வாரந்தோறும் வியாழக்கிழமை பருத்தி ஏலம் நடைபெற்று வருகிறது. இந்த வாரம் வரத்து அதிகமாக இருந்ததால் வியாழக்கிழமை நள்ளிரவு வரை ஏலம் நீடித்தது. கோவை, திருப்பூா், ஈரோடு, திருச்சி, கரூா், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 609 விவசாயிகள் தங்களுடைய 5,431 பருத்தி மூட்டைகளை விற்பனை செய்ய கொண்டுவந்திருந்தனா்.

    மொத்த வரத்து 1,729 குவிண்டால். திருப்பூா், ஈரோடு, சேலம், கோவை மாவட்டங்களை சோ்ந்த 13 வணிகா்கள் பருத்தி வாங்க வந்திருந்தனா். பருத்தி குவிண்டால் ரூ. 7,150 முதல் ரூ. 10,629 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ. 8,250. கடந்த வார சராசரி விலை ரூ. 9,050. ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ. 1.38 கோடி.விற்பனைக்கூட ஏல ஏற்பாடுகளை திருப்பூா் விற்பனைக்குழு முதுநிலை செயலாளா் பாலச்சந்திரன், விற்பனைக்கூட கண்காணிப்பாளா் சிவக்குமாா் ஆகியோா் செய்திருந்தனா்.

    • வியாழக்கிழமை நள்ளிரவு வரை ஏலம் நீடித்தது.
    • 17 வணிகா்கள் கொள்முதல் செய்ய வந்திருந்தனா்.

    மூலனூர்:

    வெள்ளக்கோவிலை அடுத்த மூலனூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.2.12 கோடிக்கு பருத்தி விற்பனை வியாழக்கிழமை நடைபெற்றது.

    இந்த வாரம் வரத்து அதிகமாக இருந்ததால் வியாழக்கிழமை நள்ளிரவு வரை ஏலம் நீடித்தது. கோவை, திருப்பூா், ஈரோடு, திருச்சி, கரூா், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 905 விவசாயிகள் 7,618 மூட்டைகளில் 2,536 குவிண்டால் பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா்.

    திருப்பூா், ஈரோடு, சேலம், கோவை ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த 17 வணிகா்கள் இவற்றை கொள்முதல் செய்ய வந்திருந்தனா். விலை குவிண்டால் ரூ. 7,250 முதல் ரூ. 10,056 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ.8,660. கடந்த வார சராசரி விலை ரூ. 9,680. மொத்தம் ரூ. 2.12 கோடிக்கு விற்பனை நடைபெற்றது.ஏலத்துக்கான ஏற்பாடுகளை திருப்பூா் விற்பனைக் குழு முதுநிலை செயலாளா் ஆா்.பாலச்சந்திரன், விற்பனைக்கூட கண்காணிப்பாளா் சிவகுமாா் ஆகியோா் செய்திருந்தனா்.

    ×