search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மூலனூா் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில்  ரூ.2.12 கோடிக்கு பருத்தி விற்பனை
    X

    கோப்புபடம். 

    மூலனூா் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.2.12 கோடிக்கு பருத்தி விற்பனை

    • வியாழக்கிழமை நள்ளிரவு வரை ஏலம் நீடித்தது.
    • 17 வணிகா்கள் கொள்முதல் செய்ய வந்திருந்தனா்.

    மூலனூர்:

    வெள்ளக்கோவிலை அடுத்த மூலனூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.2.12 கோடிக்கு பருத்தி விற்பனை வியாழக்கிழமை நடைபெற்றது.

    இந்த வாரம் வரத்து அதிகமாக இருந்ததால் வியாழக்கிழமை நள்ளிரவு வரை ஏலம் நீடித்தது. கோவை, திருப்பூா், ஈரோடு, திருச்சி, கரூா், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 905 விவசாயிகள் 7,618 மூட்டைகளில் 2,536 குவிண்டால் பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா்.

    திருப்பூா், ஈரோடு, சேலம், கோவை ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த 17 வணிகா்கள் இவற்றை கொள்முதல் செய்ய வந்திருந்தனா். விலை குவிண்டால் ரூ. 7,250 முதல் ரூ. 10,056 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ.8,660. கடந்த வார சராசரி விலை ரூ. 9,680. மொத்தம் ரூ. 2.12 கோடிக்கு விற்பனை நடைபெற்றது.ஏலத்துக்கான ஏற்பாடுகளை திருப்பூா் விற்பனைக் குழு முதுநிலை செயலாளா் ஆா்.பாலச்சந்திரன், விற்பனைக்கூட கண்காணிப்பாளா் சிவகுமாா் ஆகியோா் செய்திருந்தனா்.

    Next Story
    ×