என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Rs.7 lakhs"
- வியாபாரிகள் வந்திருந்து போட்டி போட்டு பருத்தியை ஏலத்தில் எடுத்து சென்றனர்.
- பருத்தி மொத்த விற்பனை மதிப்பு ரூ.6,98,979 ஆகும்.
அம்மாபேட்டை:
அம்மாபேட்டை அருகே உள்ள பூதப்பாடியில் விவசாயிகளின் பயன்பாட்டிற்காக ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது
இதில் சுற்றுவட்டார பகுதியில் இருந்தும் அண்டை மாநிலங்களான கர்நாடகா மற்றும் ஆந்திராவில் இருந்து விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை விற்பனைக்கு கொண்டு வருவார்கள்.
வருடா வருடம் பருத்தி விற்பனை நடைபெறுகிறது. இந்த வருடம் விற்பனை முறைப்படி அறிவிக்கப்பட்டு நேற்று காலை பூஜை செய்து விற்பனை தொடங்க ப்பட்டது.
விற்பனையை ஈரோடு வேளாண் விற்பனைக்குழு செயலாளர் சாவித்திரி தொடங்கி வைத்தார். விற்பனையில் சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் கோவை அன்னூர் புளியம்பட்டி ஆகிய பகுதியில் இருந்து வியாபாரிகள் வந்திருந்து போட்டி போட்டு பருத்தியை ஏலத்தில் எடுத்து சென்றனர்.
முதல் நாள் விற்பனையில் மொத்தம் 294 பருத்தி மூட்டைகள் விற்பனைக்கு வந்தன கிலோ ஒன்றின் அதிக விலை ரூ 68.19 க்கும் குறைந்த விலை ரூ.61.60 க்கும் விற்பனையானது. பருத்தி மொத்த விற்பனை மதிப்பு ரூ.6,98,979 ஆகும்.
- ராயபுரம் பகுதியை சேர்ந்த சுப்பையா பாண்டியன் என்பவரின் வாரிசுகளுக்கு பாத்தியப்பட்ட ரூ.7 லட்சம் மதிப்பிலான நிலத்தை அபகரிக்க முயற்சி போலீசில் புகார் கொடுக்கப்பட்டது.
- நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் சந்திச்செல்வி விசாரணை மேற்கொண்டு சந்திரன் பதிவு செய்த ஆவணம் ரத்து செய்யப்பட்டது.
தென்காசி:
தென்காசி மாவட்டம், ராயபுரம் பகுதியை சேர்ந்த சுப்பையா பாண்டியன் என்பவரின் வாரிசுகளான சரோஜினி, கஸ்தூரி, மணிராஜ், தங்கராசு, கடலாட்சி மற்றும் சந்திரன் ஆகிய 6 பேருக்கு பாத்தியப்பட்ட ரூ.7 லட்சம் மதிப்பிலான 7 ஏக்கர் 31 செண்ட் நிலத்தை, அவர்களின் கடைசி தம்பி சந்திரன் என்பவர் மொத்த நிலத்தையும் அபகரிக்கும் நோக்கத்துடன் சந்திரனின் மனைவி செல்லம்மாளுக்கு ஏற்பாடு ஆவணம் செய்துள்ளார்.
இதுகுறித்து சரோஜினி கடந்த 6-ந் தேதி கொடுத்த புகாரின் பேரில் நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் சந்திச்செல்வி விசாரணை மேற்கொண்டு சந்திரன் பதிவு செய்த ஆவணம் ரத்து செய்யப்பட்டது.
மீட்கப்பட்ட நிலத்திற்கான ஆவணங்களை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் முன்னிலையில் தங்கராசுவிடம் ஒப்படைக்கப்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்