search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எம்பிபிஎஸ்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நீட் தேர்வில் டாப் மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவிகள் அகில இந்திய அளவில் இடங்களை தேர்வு செய்து சேருவார்கள்.
    • நாட்டின் எந்த பகுதியில் இருந்தும் இக்கலந்தாய்வில் பங்கேற்கலாம் என்று மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரிகள் மற்றும் அரசு ஒதுக்கீட்டில் உள்ள சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் உள்ள மொத்த எம்.பி.பி.எஸ். இடங்கள் 6326.

    இதே போல அரசு பல் மருத்துவ கல்லூரிகள் மற்றும் அரசு ஒதுக்கீட்டில் உள்ள சுயநிதி பல் மருத்துவ கல்லூரிகளில் உள்ள மொத்த பி.டி.எஸ். இடங்கள் 1768 ஆகும்.

    அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடத்தப்படுகிறது. இதற்கான ரேங்க் பட்டியல் வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து உத்தேசமாக 25-ந்தேதி கலந்தாய்வு தொடங்கும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்தார். அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு கலந்தாய்வு தொடங்குவதை பொறுத்து தமிழகத்தில் மருத்துவ கலந்தாய்வு தொடங்கும். அதனால் அந்த தேதி உறுதி செய்யப்படாமல் இருந்தது.

    இந்த நிலையில் அகில இந்திய ஒதுக்கீட்டு மருத்துவ இடங்களுக்கு நேற்று முன்தினம் கலந்தாய்வு தொடங்கியது. இன்று இடங்கள் தேர்வு செய்யப்படுகிறது. தமிழகத்தில் இருந்து அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு 822 இடங்கள் போகிறது.

    அரசு மருத்துவ கல்லூரிகளில் இருந்து 762 எம்.பி.பி.எஸ். இடங்களும், இ.எஸ்.ஐ. மருத்துவ கல்லூரியில் இருந்து 23 இடங்களும், அரசு பல் மருத்துவ கல்லூரிகளில் இருந்து 37 இடங்களும் கொடுக்கப்படுகிறது.

    நீட் தேர்வில் டாப் மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவிகள் அகில இந்திய அளவில் இடங்களை தேர்வு செய்து சேருவார்கள்.

    அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு தொடங்கியதை தொடர்ந்து தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். கலந்தாய்வு தேதி உறுதி செய்யப்பட்டுள்ளது. வருகிற 25-ந்தேதி முதல் பொது கலந்தாய்வு ஆன்லைன் வழியாக தொடங்குகிறது. நாட்டின் எந்த பகுதியில் இருந்தும் இக்கலந்தாய்வில் பங்கேற்கலாம் என்று மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் அதிகாரப்பூர்வமாக அறிவித் துள்ளது.

    அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத சிறப்பு ஒதுக்கீடு, மாற்றுத் திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவ வீரர்களின் குழந்தைகள் ஆகியோருக்கான சிறப்பு கலந்தாய்வு சென்னையில் நேரடியாக நடத்தப்படும்.

    அவை எந்தெந்த தேதியில் நடைபெறும் என்ற விவரங்கள் மருத்துவ கல்லூரி இணைய தளத்தில் இன்று வெளியிடப்படுகிறது.

    • 300 முதல் 720 வரையிலான மதிப்பெண் பெற்றவர்கள் ஏறத்தாழ 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் உள்ளனர்.
    • கட்-ஆப் மார்க் அதிகரிப்பதால் எம்.பி.பி.எஸ். படிப்புகளில் சேர கடுமையான போட்டி நிலவும் என்று கல்வியாளர்கள் தெரிவித்தனர்.

    சென்னை:

    எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கான தர வரிசை பட்டியல் வெளியாகி உள்ள நிலையில் அரசு மற்றும் தனியார் சுய நிதி கல்லூரிகளில் யார் யாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்பதை மாணவ-மாணவிகள் கணக்கிட்டு வருகின்றனர்.

    இது தவிர நிர்வாக ஒதுக்கீட்டிலாவது இடம் கிடைக்குமா என்ற எதிர் பார்ப்பிலும் காத்து இருக்கின்றனர்.

    மேலும் அரசு பள்ளியில் படித்த ஏழை, எளிய மாணவிகளுக்கு அரசு மருத்துவ கல்லூரியில் வாய்ப்பு கிடைக்குமா என்ற ஆவலில் உள்ளனர். மருத்துவ கலந்தாய்வு 25-ந் தேதி தொடங்கும் என எதிர் பார்க்கப்படுகிறது. மருத்துவ கனவில் இருக்கும் மாணவ-மாணவிகள் யார் யாருக்கு இந்த ஆண்டு வாய்ப்பு கிடைக்கும் என்பதை கலந்தாய்வு தொடங்கிய பிறகு தான் தெரிய வரும்.

    எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கு இந்த ஆண்டில் கட் ஆப் மதிப்பெண்கள் இட ஒதுக்கீடு அடிப்படையில் 25 முதல் 40 மதிப்பெண்கள் வரை உயரும் என எதிர் பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டை ஒப்பீடும் போது நீட் தேர்வில் இந்த வருடம் மாணவர்கள் மதிப்பெண்களை குவித்தனர். 300க்கும் அதிகமான மதிப்பெண்கள் பெற்றவர்களின் எண்ணிக்கை 37,672 ஆக அதிகரித்து உள்ளது. 300 முதல் 720 வரையிலான மதிப்பெண் பெற்றவர்கள் ஏறத்தாழ 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் உள்ளனர்.

    இந்த ஆண்டு பொதுப் பிரிவுக்கு தோராயமாக 600-602 என கட்-ஆப் மார்க் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

    கடந்த ஆண்டு அது 580 என்ற அளவில் இருந்தது. இதே போல இந்த முறை பிற்படுத்தப்பட்டோர் பிரிவுக்கு 554-557 என்றும், பிற்படுத்தப்பட்ட (முஸ்லீம்) பிரிவுக்கு 530-534 எனவும், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 528-531 எனவும் எஸ்.சி. மாணவர்களுக்கு 420-429 எனவும் மார்க் உயர வாய்ப்பு உள்ளது. எஸ்.டி. பிரிவுக்கு 320-338 ஆகவும் அதிகரிக்கலாம்.

    நீட் தேர்வை பொறுத்த வரை நடப்பு ஆண்டில் தேசிய அளவில் முதல் 10 இடங்களில் 4 தமிழக மாணவர்கள் இடம் பெற்று உள்ளனர். அதே போல முதல் 50 இடங்களில் 6 மாணவர்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு விண்ணப்பித்து இருந்தால் அவர்கள் விரும்பிய இடங்கள் தமிழகம் உள்பட நாட்டின் எந்த கல்லூரியிலும் இடம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

    அதற்கு அந்த மாணவர்கள் முன்வரும் பட்சத்தில் அந்த 6 இடங்களும் அதற்கடுத்த நிலையில் உள்ள தமிழக மாணவர்களுக்கு மாநில ஒதுக்கீட்டின் கீழ் கிடைக்கும்.

    கட்-ஆப் மார்க் அதிகரிப்பதால் எம்.பி.பி.எஸ். படிப்புகளில் சேர கடுமையான போட்டி நிலவும் என்று கல்வியாளர்கள் தெரிவித்தனர்.

    • சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களை பரிசீலிக்கும் பணிகளை மருத்துக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் தொடங்கியுள்ளது.
    • மொத்தம் 40 ஆயிரத்து 199 பேர் விண்ணப்பித்து உள்ளனர்.

    சென்னை:

    எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கு நடப்பாண் டில் 40 ஆயிரத்து 199 பேர் விண்ணப்பித்து உள்ளனர். இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 4 ஆயிரம் கூடுதலாகும். சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களை பரிசீலிக்கும் பணிகளை மருத்துக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் தொடங்கியுள்ளது. அடுத்த 3 நாட்களில் அந்தப் பணிகள் நிறைவடைந்து வருகிற 16-ந் தேதி (ஞாயிற்றுக் கிழமை) தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் அரசு, நிர்வாக ஒதுக்கீட்டுக்கான எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். இடங்களுக்கு www.tnhealth.tn.gov.in மற்றும் www.tnmedicalselection.org ஆகிய இணையதளங்களில் விண்ணப் பிக்கும் நடை முறை கடந்த மாதம் 28-ந் தேதி தொடங்கி நேற்றுடன் (புதன்கிழமை) நிறைவடைந்தது.

    இந்நிலையில், விண்ணப்பங்களின் நிலவரம் குறித்து மருத்துவக் கல்வி தேர்வுக்குழுச் செயலர் ஆர்.முத்துச்செல்வன் கூறியதாவது:-

    நடப்பாண்டில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 26 ஆயிரத்து 805 பேரும், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 13 ஆயிரத்து 394 பேரும் என மொத்தம் 40 ஆயிரத்து 199 பேர் விண்ணப்பித்து உள்ளனர். கடந்த ஆண்டில் இந்த எண்ணிக்கை 36 ஆயிரமாக இருந்தது.

    அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு தேதி அறிவிக்கப்பட்டதும், தமிழகத்தில் கலந்தாய்வு குறித்து அறிவிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கடந்த ஆண்டைவிட இந்த வருடம் கூடுதலாக மருத்துவ இடங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
    • மருத்துவ துணை படிப்புகளுக்கு இதுவரையில் 69 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் அரசு மற்றும் தனியார் சுயநிதி கல்லூரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். மருத்துவ இடங்களுக்கு நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இந்த ஆண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு 29-ந்தேதி தொடங்கியது.

    கடந்த ஆண்டைவிட இந்த வருடம் கூடுதலாக மருத்துவ இடங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. மேலும் அரசு பள்ளியில் படித்த மாணவர்கள் 500 பேருக்கு மேல் மருத்துவ இடங்கள் ஒதுக்கப்பட உள்ளது.

    மாணவ-மாணவிகள் அந்தந்த இடஒதுக்கீடு அடிப்படையில் விண்ணப்பித்து வருகின்றனர். இன்று காலை வரையில் 30 ஆயிரம் பேர் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். இடங்களுக்கு விண்ணப்பித்து உள்ளனர். விண்ணப்பிக்க 10-ந்தேதி கடைசி நாள் ஆகும்.

    கால அவகாசம் அதற்கு மேல் நீட்டிக்க வாய்ப்பு இல்லை. வருகிற 15-ந்தேதி அகில இந்திய ஒதுக்கீட்டிற்கான மருத்துவ கலந்தாய்வு தொடங்கப்பட உள்ளது. அதனால் மாணவர்கள் தாமதமின்றி உடனே விண்ணப்பிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    குறிப்பிட்ட காலத்திற்குள் விண்ணப்பங்கள் பெறப்பட்டு பரிசீலனை செய்து சீட் மேட்ரிக்ஸ் தயாரிக்கப்பட்டு ரேங்க் பட்டியல் வெளியிடப்பட வேண்டும். அதற்கான பணிகள் நிறைவடைய ஒரு வாரம் ஆகலாம். அதனால் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மருத்துவ கலந்தாய்வு மாத இறுதியில் தொடங்க வாய்ப்பு இருப்பதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    இதற்கிடையில் மாற்றுத்திறனாளி மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்க தகுதி சான்றிதழ் பெறுவதில் தாமதம் ஏற்படுவதால் கலந்தாய்வுக்கு முன்னதாக சான்றிதழ் ஒப்படைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தேசிய மருத்துவ ஆணைய போர்ட்டலில் பதிவு செய்ய முடியாத நிலை தற்போது உள்ளதால் கலந்தாய்விற்கு முன்னதாக ஒப்படைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. தகுதிச்சான்றிதழ் ஒப்படைப்பதில் தளர்வு செய்யப்பட்டுள்ளது.

    இதேபோல மருத்துவ துணை படிப்புகளுக்கு இதுவரையில் 69 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். 59 ஆயிரம் பேர் பணம் கட்டி சமர்ப்பித்தனர்.

    • கடந்த ஆண்டுகளை விட கட்டணம் உயர்த்தப்பட்டு இருக்கிறது.
    • தனியார் சுயநிதி கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு ரூ.4 லட்சத்து 35 ஆயிரம் முதல் ரூ.4 லட்சத்து 50 ஆயிரம் வரை நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.

    சென்னை:

    தமிழ்நாட்டில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான கலந்தாய்வுக்கு விண்ணப்பப் பதிவு கடந்த 27-ந்தேதி தொடங்கியது. வருகிற 28-ந்தேதி வரை விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது. இந்த கலந்தாய்வில் கலந்து கொள்வதற்காக நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவிகள் ஆவலோடு விண்ணப்பித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் மருத்துவ மாணவர் சேர்க்கை கலந்தாய்வை நடத்தும் மருத்துவக் கல்வி இயக்ககம், 2023-24-ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைமுறைகளை வெளியிட்டு இருக்கிறது. அதில் இந்த ஆண்டு எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற மருத்துவப் படிப்புகளில் அரசு ஒதுக்கீட்டு, நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களில் சேருபவர்களுக்கான கல்வி கட்டணத்தை நிர்ணயித்து அறிவித்துள்ளது.

    கடந்த ஆண்டுகளை விட கட்டணம் உயர்த்தப்பட்டு இருக்கிறது. அதன்படி, அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேருபவர்கள் ஆண்டு ஒன்றுக்கு ரூ.18 ஆயிரத்து 73-ம், பி.டி.எஸ். படிப்பில் சேருபவர்களுக்கு ரூ.16 ஆயிரத்து 73-ம், இ.எஸ்.ஐ. மருத்துவக் கல்லூரியில் சேருவோருக்கு ரூ.1 லட்சமும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

    கடந்த ஆண்டு வரை அரசு கல்லூரி எம்.பி.பி.எஸ். படிப்பில் சேருவதற்கு ரூ.13 ஆயிரத்து 610-ம், பி.டி.எஸ். படிப்பில் சேர ரூ.11 ஆயிரத்து 610-ம் கட்டணமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

    இதேபோல், தனியார் சுயநிதி கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு ரூ.4 லட்சத்து 35 ஆயிரம் முதல் ரூ.4 லட்சத்து 50 ஆயிரம் வரை நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. இதில் வேலூர் கிறிஸ்தவ கல்லூரியில் ரூ.53 ஆயிரம் கட்டணமாக உள்ளது. இவர்களுக்கான கட்டணமும் குறைந்தது ரூ.50 ஆயிரம் முதல் ரூ.90 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டு உள்ளது.

    மேலும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களில் சேரும் மாணவர்களுக்கு கடந்த ஆண்டு வரை தனியார் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். இடத்துக்கு ரூ.12 லட்சத்து 50 ஆயிரம் ஓராண்டுக்கு கட்டணமாக பெறப்பட்டு வந்தது. இந்த ஆண்டு ரூ.13 லட்சத்து 50 ஆயிரமாக உயர்த்தப்பட்டு உள்ளது. என்.ஆர்.ஐ. ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களுக்கும் கடந்த ஆண்டைவிட ரூ.1 லட்சம் அதிகமாக உயர்த்தி, ரூ.24 லட்சத்து 50 ஆயிரமாக கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.

    மருத்துவ படிப்புக்கான கட்டணம் உயர்த்தப்பட்டது தொடர்பாக அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்டபோது, 'மாணவர்களின் கல்வி நலன் பாதிக்காத வகையில் புதிய கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்தனர்.

    மேலும் கடந்த 10 ஆண்டுகளுக்கு பிறகு மருத்துவப் படிப்புக்கான கல்வி கட்டணம் மாற்றி அமைக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    • மாணவர்கள் விரும்பிய இடங்களில் சேருவதை தடுக்கும் என்றும் மாணவர்களின் பெற்றோர்கள் கருத்து கூறுகின்றனர்.
    • சீட் வேண்டாம் என நிராகரிக்கும் மாணவர் வைப்பு தொகையை இழக்க நேரிட்டாலும், அடுத்த சுற்றுகளில் அனுமதிக்கப்படுவார்.

    சென்னை:

    தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கு காத்திருக்கும் மாணவ-மாணவிகள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க நேற்று முதல் இணையதள பக்கம் திறக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் மாணவ-மாணவிகள் விண்ணப்பித்து வருகின்றனர். அதன்பின்னர் கவுன்சிலிங் தேதி அறிவிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் சீட்டுகள் சுழற்சி அடிப்படையில் நிறைவேற்றப்படும்.

    இந்த ஆண்டு எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ். படிப்புக்கு விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு விருப்பமான அனைத்து கல்லூரிகளையும் முன்னுரிமை கொடுத்து தேர்வு செய்ய வேண்டும். அவ்வாறு செய்யவில்லை எனில், ஒரு கல்லூரியை விட்டு வெளியேறினால், அதற்கு அடுத்த கட்ட கவுன்சிலிங்கில் அவர்கள் வேறு கல்லூரிகளில் சேர முடியாமல் போய்விடும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    அதாவது ஒரு சுயநிதி கல்லூரியை மாணவர் தேர்வு செய்யவில்லை என்றால், அடுத்தடுத்து வரும் சுற்றுகளில் அவர் வேறு எந்த சுயநிதி கல்லூரிக்கும் விண்ணப்பிக்க முடியாது. இதே நிலை அரசு கல்லூரிகள் மற்றும் நிகர் நிலை பல்கலை கழகங்களுக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஆனால் இந்த முறை மாணவர் சேர்க்கை தாமதத்திற்கு வழிவகுக்கும் என்றும், மாணவர்கள் விரும்பிய இடங்களில் சேருவதை தடுக்கும் என்றும் மாணவர்களின் பெற்றோர்கள் கருத்து கூறுகின்றனர்.

    இதுகுறித்து மாணவர் ஆலோசகர் மாணிக்கவேல் ஆறுமுகம் கூறுகையில், மாணவர்கள் விருப்பபடி கல்லூரிகளை தேர்வு செய்யவில்லை என்றால் அவர்கள் முதல் சுற்றில் வெளியேறுவார்கள். ஆனால் தற்போது அனைத்து கல்லூரிகளையும் தேர்வு செய்ய சொல்லி இருக்கிறார்கள். இதனை தவிர்த்து மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான கல்லூரிகளை மட்டும் தேர்வு செய்ய சொன்னால் நன்றாக இருந்திருக்கும். உதாரணமாக 2-ம் கட்ட கவுன்சிலிங்கில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கல்லூரிகளில் சேரும் விண்ணப்பதாரர்கள், அவர்கள் வேறு தரமான கல்லூரிக்கு செல்ல விரும்பினாலும், அடுத்த சுற்று கவுன்சிலிங்கில் அனுமதிக்கப்பட மாட்டார்கள். ஆனால் சீட் வேண்டாம் என நிராகரிக்கும் மாணவர் வைப்பு தொகையை இழக்க நேரிட்டாலும், அடுத்த சுற்றுகளில் அனுமதிக்கப்படுவார். கடந்த முறையும் இதேதான் நடந்தது. ஆனால் முடிவில், நிர்வாக பிரிவில் எம்பிபிஎஸ் கல்லூரியை 2-ம் கட்ட கவுன்சிலிங்கில் தேர்வு செய்த மாணவனின் மதிப்பெண்ணானது, அரசு ஒதுக்கீட்டில் சேர்ந்த மாணவனின் மதிப் பெண்ணை விட அதிகமானதாக தோன்றும். இது நியாயம் இல்லாதது என்றார்.

    • கடந்த ஆண்டை விட இந்த வருடம் கூடுதலாக மருத்துவ இடங்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    • மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்க வேண்டும் என்று மாணவர் சேர்க்கை பிரிவு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் உள்ள 38 அரசு மருத்துவ கல்லூரிகள் மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ். மற்றும் பல் மருத்துவ படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை தொடங்கி உள்ளது. நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றதுடன் நல்ல மதிப்பெண் பெற்ற மாணவ- மாணவிகள் நேற்று முதல் ஆன்லைன் வழியாக விண்ணப்பித்து வருகின்றனர். அரசுப்பள்ளியில் படித்து தேர்ச்சி அடைந்த மாணவர்களுக்கு 7.5 சதவீத சிறப்பு இடஒதுக்கீடு வழங்கப்படுவதால் ஆர்வத்துடன் விண்ணப்பிக்கின்றனர்.

    நேற்று ஒரேநாளில் 4200 பேர் மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பித்துள்ளனர். 1500 பேர் பதிவுக்கட்டணம் செலுத்தி உள்ளனர். அரசு கல்லூரி ஒதுக்கீட்டு இடங்கள் மட்டும் 5050 உள்ளன. இதுதவிர 3 தனியார் கல்லூரிகளுக்கு அனுமதி கிடைக்கும் பட்சத்தில் 450 இடங்கள் கூடுதலாக கிடைக்கும். கே.கே.நகர் இ.எஸ்.ஐ. மருத்துவ மனையில் 75-ல் இருந்து 125 இடங்கள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதனால் கடந்த ஆண்டை விட இந்த வருடம் கூடுதலாக மருத்துவ இடங்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு ஜூலை 10-ந்தேதி கடைசி நாளாகும். ஆனாலும் அதுவரையில் காத்திருக்காமல் உடனடியாக மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்க வேண்டும் என்று மாணவர் சேர்க்கை பிரிவு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

    இதுகுறித்து அதிகாரிகள் மேலும் கூறியதாவது:-

    மருத்துவ படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் இணையதளத்தில் விவர குறிப்பேட்டை முறையாக படிக்க வேண்டும். பதட்டம் இல்லாமல் நிதானமாக படித்து பூர்த்தி செய்ய வேண்டும். விண்ணப்பிக்கும் போது பெரியவர்களை உடன் வைத்திருக்க வேண்டும். கம்ப்யூட்டர் மையங்களுக்கு சென்று அவசரத்தில் தவறாக பூர்த்தி செய்ய வேண்டாம்.

    மாணவ-மாணவிகளுக்கு உதவி செய்வதற்காக அனைத்து அரசு மருத்துவ கல்லூரிகளிலும் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. அலுவலக நேரத்தில் சென்று அவர்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். மாணவர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிப்பதோடு பூர்த்தி செய்யவும் அங்குள்ளவர்கள் உதவி செய்வார்கள்.

    விளக்க குறிப்பேட்டில் தெளிவான முறையில் விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதனை பின்பறி பிழை இல்லாமல் பூர்த்தி செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • கம்ப்யூட்டர் வாயிலாக குலுக்கல் நடத்தப்பட்டு மாணவர்கள் தரவரிசை பட்டியல் இறுதி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
    • மருத்துவ மாணவர்களின் இந்த புதிய வழிகாட்டு முறைக்கு மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் கல்வி ஆர்வலர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது.

    புதுடெல்லி:

    எம்.பி.பி.எஸ். மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வு நடத்தப்படுகிறது. அதில் வெற்றி பெறும் மாணவ-மாணவிகள் கலந்தாய்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு வருகிறார்கள்.

    இந்த நிலையில் அடுத்த கல்வி ஆண்டுக்கான (2023-2024)மாணவர் சேர்க்கையில் கடைபிடிக்கப்பட வேண்டிய புதிய வழிகாட்டு விதிமுறைகளை தேசிய மருத்துவ கழகம் கடந்த 12- ந்தேதி வெளியிட்டது. தற்போது மாணவர்கள் சேர்க்கையில் முதலில் தகுதிப்பட்டியல் வெளியிடப்படும் . அதன்படி முதலிடங்களில் உள்ள மாணவர்களுக்கு மருத்துவ கல்லூரிகளில் இடம் ஒதுக்கப்படும், தற்போதைய நடைமுறையில் நீட் தேர்வில் ஒன்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் சமமான மதிப்பெண்கள் பெற்று இருந்தால் உயிரியல் பாட மதிப்பெண் அடிப்படையில் தர வரிசை முடிவு செய்யப்படும்.

    இதிலும் சம நிலையில் இருந்தால் அடுத்ததாக வேதியியலும் அடுத்து இயற்பியல் பாடத்தில் உள்ள மதிப்பெண் அடிப்படையில் தர வரிசை பட்டியல் இறுதி செய்யப்படும்.

    ஒரு வேளை இதன் பிறகும் ஒன்றுக்கு மேற்பட்ட மாணவர்கள் சமநிலையில் இருந்தாலும் வயது மூப்பு அடிப்படையில் மாணவர் தர வரிசை பட்டியல் இடம் பெறும்.

    இந்த நடைமுறையை மாற்றி புதிய நடைமுறை வெளியிடப்பட்டது. அதன்படி முதலில் இயற்பியல் அடுத்து வேதியியல் மற்றும் உயிரியல் பாடங்களின் அடிப்படையில் பரிசீலனை செய்யப்படும் என்றும் அதன்பிறகும் சம நிலையில் இருந்தால் கம்ப்யூட்டர் வாயிலாக குலுக்கல் நடத்தப்பட்டு மாணவர்கள் தரவரிசை பட்டியல் இறுதி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    மருத்துவ படிப்பில் சேர ஒருவருக்கு 4 முறை மட்டும் வாய்ப்பு வழங்கப்படும் என்றும், 9 ஆண்டுக்குள் படிப்பை முடிக்க வேண்டும் என்றும் தோல்வி அடையும் மாணவர்கள் 3 முதல் 6 வாரங்களில் மறு தேர்வு எழுத வேண்டும் என்றும் புதிய நடைமுறையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மருத்துவ படிப்பில் சேரும் மாணவர்கள் முதல் நாளில் இருந்து ஒரு குடும்பத்தை தத்தெடுத்து அவர்களுக்கு தேவையான மருத்துவ வசதிகளை இலவசமாக செய்து தரவேண்டும், 4½ ஆண்டு இளங்கலை மருத்துவ படிப்பு 3 கட்டமாக நடத்தப்படும். முதல் 2 கட்டங்கள் தலா 12 மாதங்கள் என பிரித்தும் 3- வது கட்டம் 30 மாதங்கள் எனவும் வரையறுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

    மருத்துவ மாணவர்களின் இந்த புதிய வழிகாட்டு முறைக்கு மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் கல்வி ஆர்வலர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது. இதில் குழப்பம் நிலவுவதாக தெரிவித்தனர். இது தொடர்பாக அகில இந்திய மருத்துவ சங்க கூட்டமைப்பின் தேசிய தலைவர் ரோஷன் கிருஷ்ணன் கூறியதாவது:-

    தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்ட மருத்துவ மாணவர்கள் சேர்க்கையில் புதிய வழிகாட்டு நடை முறைகள் குழப்பத்தை உருவாக்குகிறது. சரியான கல்லூரிகளுக்கு அங்கீகாரம் வழங்குவது, மருத்துவ பாட திட்டத்திற்கான வலுவான மற்றும் சரியான வழி காட்டுதல்களை கொண்டு வருவது, புதிய சுற்றறிக்கைகளை வெளியிடுவதும் அதை எந்தவித விளக்கமும் கூறாமல் திரும்ப பெறுவதும் அடிக்கடி நடக்கிறது. எனவே தேசிய மருத்துவ ஆணையம் உறுதியாக தெரியாத தகவல்கள் வெளியிடுவதை தவிர்க்க வேண்டும்,

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த சூழ்நிலையில் புதிய வழிகாட்டு விதிமுறைகளை தேசிய மருத்துவ ஆணையம் வாபஸ் பெற்று உள்ளது. விரைவில் புதிய விதி முறைகள் வெளியாகலாம் என தெரிகிறது.

    • ஜூலை 2-வது வாரத்தில் கலந்தாய்வு நடைபெற வாய்ப்பு
    • தமிழகத்தில் நீட் தேர்வில் 78 ஆயிரம் பேர் தேர்ச்சி

    தமிழகத்தில் பொறியியல் படிப்பிற்கான தரவரிசை பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. அடுத்த மாதம் 7-ந்தேதி நடைபெற இருந்த பொது கலந்தாய்வு தள்ளிப்போகும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்திருந்தார்.

    இந்த நிலையில எம்.பி.பி.எஸ்.- பி.டி.எஸ். மாணவர் சேர்க்கை ஆன்லைன் பதிவு நாளை தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு முடிவு வெளியாகி தமிழகத்தில் 78 ஆயிரம் பேர் மருத்துவ படிப்பில் சேர தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    ஜூலை 2-வது வாரத்தில் கலந்தாய்வு நடைபெற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் இடங்கள் ஒதுக்கப்படும். 12-ம் வகுப்பில் இயற்பியல், வேதியியல், உயிரியல் (தாவரவியல், விலங்கியல்) பாடங்கள் எடுத்து படித்தவர்கள், நீட் தேர்வு எழுதி எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர முடியும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 500 மருத்துவ இடங்கள் இந்த வருடம் கூடுதலாக கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    • புதுக்கோட்டையில் புதிய அரசு பல் மருத்துவமனை 50 பி.டி.எஸ். இடங்களுடன் இந்த ஆண்டு தொடங்கப்படுகிறது.

    சென்னை:

    தமிழ்நாட்டில் 26 அரசு மருத்துவ கல்லூரிகள் மற்றும் 15 தனியார் மருத்துவ கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இதுதவிர சென்னையில் ஒரே ஒரு அரசு பல் மருத்துவக்கல்லூரியும் இயங்கி வருகிறது.

    இதில் உள்ள எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். மருத்துவ இடங்களுக்கு நீட் கட் ஆப் மார்க் மற்றும் இட ஒதுக்கீடு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

    500 மருத்துவ இடங்கள் இந்த வருடம் கூடுதலாக கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கே.கே.நகர் இ.எஸ்.ஐ. மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 50 எம்.பி.பி.எஸ். இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

    புதுக்கோட்டையில் புதிய அரசு பல் மருத்துவமனை 50 பி.டி.எஸ். இடங்களுடன் இந்த ஆண்டு தொடங்கப்படுகிறது. மேலும் 2 புதிய தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கப்பட உள்ளது. இதன்மூலம் இந்த ஆண்டு மருத்துவ படிப்புக்கான இடங்கள் அதிகரிக்கிறது.

    அரசு ஒதுக்கீட்டு இடங்கள் மட்டும் 5350 வரை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர தனியார் மருத்துவ கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் ஆயிரத்திற்கும் மேலான இடங்கள் உள்ளன. இந்த இடங்களும் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகிறது.

    அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இடஒதுக்கீடு முறை பின்பற்றப்படுவதால் இந்த ஆண்டும் 500-க்கு மேலான அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு மருத்துவ இடங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. மருத்துவ கலந்தாய்விற்கான விண்ணப்ப பதிவு நடைமுறை ஓரிரு நாட்களில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    பின்னர் மதிப்பெண் வாரியாக ரேங்க் பட்டியல் தயாரிக்கப்பட்டு கலந்தாய்வு நடத்தப்படும். ஜூலை மாதத்திற்குள் கலந்தாய்வு நடத்தி முடிக்கப்பட்டு ஆகஸ்ட் முதல் வாரத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • எந்தவித பின்புலமும் இல்லாமல் தன்னுடைய கடின உழைப்பால் 161 மதிப்பெண்களை பெற முடிந்தது என்று மாணவி கோகிலா பெருமையுடன் கூறினார்.
    • ஒரு வாய்ப்பு கிடைத்தால் நரிக்குறவ சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு மருத்துவ சேவை ஆற்றுவேன் என்றார்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் அருகேயுள்ள காரை கிராமம் மலையப்ப நகர் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன்-மஞ்சுளா தம்பதியினர். நரிக்குறவர் சமுதாயத்தை சேர்ந்த இந்த தம்பதியின் மகள் கோகிலா.

    ஊசிபாசி மணிகள் விற்று பிழைப்பு நடத்தி வரும் சுப்பிரமணியன் தனது மகளை படிப்பில் உயர்ந்த நிலைக்கு கொண்டு வரவேண்டும் என்ற ஆசையுடன் படிக்க வைத்தார்.

    அதற்கேற்ப தான் சற்றும் சளைத்தவர் அல்ல என்ற நிலையில் கோகிலாவும் படிப்பில் அதிக கவனம் செலுத்தினார். அதன் பிரதிபலனாக தற்போது நீட் தேர்வில் 161 மதிப்பெண்கள் பெற்று நரிக்குறவர் சமுதாயத்தில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற முதல் மாணவி என்ற பெருமையை கொண்டுள்ளார்.

    பெரம்பலூரில் உள்ள ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் பள்ளியில் படித்து பிளஸ்-2 தேர்வில் 459 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்த கோகிலாவுக்கு தான் ஒரு டாக்டர் ஆகவேண்டும் என்ற ஆசை துளிர்த்தது.

    பழங்குடியின் மாணவிகள் தேர்ச்சிக்கு 109 மதிப்பெண்கள் போதுமானது என்ற நிலையில் மாணவி கோகிலா 161 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். சராசரி மாணவர்களுடன் ஒப்பிடுகையில் குறைந்த மதிப்பெண்களாக இருந்தபோதிலும் எந்தவித பின்புலமும் இல்லாமல் தன்னுடைய கடின உழைப்பால் 161 மதிப்பெண்களை பெற முடிந்தது என்று மாணவி கோகிலா பெருமையுடன் கூறினார்.

    இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், பல்வேறு சிரமங்களுக்கிடையே ஊசிபாசி விற்று என்னை படிக்க வைத்த பெற்றோருக்கு பெருமை சேர்க்கவும், கல்வி கற்க வறுமையோ, தான் சார்ந்த சமுதாயமோ ஒரு தடையல்ல என்பதை மெய்ப்பிக்கும் வகையில் இந்த நீட் தேர்வை நான் தன்னம்பிக்கையுடன் எதிர் கொண்டேன். அதற்கு தகுந்த பலன் கிடைத்துள்ளது. எனக்கு அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து படிக்க வாய்ப்பு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருக்கிறேன்.

    தற்போது தான் பெற்ற கல்வியை எனது சமுதாயத்தை சேர்ந்தவர்களும் பெறவேண்டும் என்ற எண்ணத்தில் நரிக்குறவ சமூக மாணவர்களுக்கு கல்வி கற்றுக்கொடுத்து வருகிறேன். மற்ற நேரங்களில் பெற்றோருக்கு உதவியாக ஊசிபாசி தயாரித்து கொடுக்கிறேன். ஊசிபாதி பிடித்த கையில் ஸ்டெத் தஸ்கோப்பை பிடிக்கும் காலம் வரும் என்று எதிர் பார்க்கிறேன்.

    அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தால் நரிக்குறவ சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு மருத்துவ சேவை ஆற்றுவேன் என்றார்.

    • நான்கரை ஆண்டுகள் மருத்துவ படிப்பு 3 கட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.
    • 3-வது கட்டம் 30 மாதங்கள் என்று வரையறுக்கப்பட்டு உள்ளது.

    சென்னை:

    நீட் தேர்வு முடிவுகள் வெளியானதையடுத்து நாடு முழுவதும் எம்.பி.பி.எஸ். மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கை விரைவில் நடைபெற உள்ளது.

    இந்நிலையில் எம்.பி.பி.எஸ் படிப்புக்கான பாடத் திட்டத்தை மாற்றி அமைக்க தேசிய மருத்துவ ஆணையம் திட்டமிட்டுள்ளது. நான்கரை ஆண்டுகள் காலஅளவு கொண்ட இளங்கலை மருத்துவ படிப்புக்கான பாடத்திட்டத்தில் 2023-2024-ம் கல்வி ஆண்டு முதல் புதிய நடைமுறைகளை தேசிய மருத்துவ ஆணையம் கொண்டு வந்துள்ளது.

    அதன்படி மருத்துவ படிப்பில் சேரும் மாணவர்கள் முதல் நாளில் இருந்தே ஒரு குடும்பத்தை தத்தெடுத்து அவர்களுக்கு தேவையான மருத்துவ வசதிகளை இலவசமாக செய்து தர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் நான்கரை ஆண்டுகள் மருத்துவ படிப்பு 3 கட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அதன்படி முதல் 2 கட்டங்கள் தலா 12 மாதங்கள் என்று பிரிக்கப்பட்டு உள்ளது. 3-வது கட்டம் 30 மாதங்கள் என்று வரையறுக்கப்பட்டு உள்ளது.

    மருத்துவ படிப்பு தேர்வு களில் தோல்வியடையும் மாணவர்கள் 3 முதல் 6 வாரங்களுக்குள் மறு தேர்வு எழுதும் வகையில் மாற்றங் கள் கொண்டுவரப்பட்டு உள்ளன. இதன் மூலம் நடைமுறையில் இருந்த துணைப்பிரிவு என்ற திட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

    ×