search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நரிக்குறவர்"

    • நரிக்குறவ மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திட முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுத்து வருகிறார்.
    • அமைச்சர் பெரியகருப்பன் பேசினார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பழங்குடியினர் ஜாதி சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் ஆஷா அஜித் தலைமை தாங்கினார். கார்த்திக் சிதம்பரம் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் தமிழரசி, மாங்குடி முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் அமைச்சர் பெரியகருப்பன் கலந்து கொண்டு நரிக்குற வர்களுக்கு பழங்குடியினர் ஜாதி சான்றிதழ்களை வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:-

    தமிழ்நாட்டில் நரிக்குறவர் இன மக்களின் வாழ்வா தாரத்தினை மேம்படுத்திடும் பொருட்டு, பல்வேறு திட்டங்களை முதல்-அமைச்சர் செயல்படுத்தி வருகிறார்.

    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நரிக்குறவர்கள் என்று அழைக்கப்பட்டதை நெரிக்குறவர்கள் என்று அழைத்து அவர்களுக்கு அங்கீகாரம் தந்தார்.

    தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நரிக்குறவர் இன மக்களுக்கு வங்கிக் கடனுதவிகள் வழங்கவும், வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கவும் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியுள்ளார்.

    மேலும் அவர்களுக்காக உண்டு உறைவிடப் பள்ளிகள் ஏற்படுத்தப் பட்டுள்ளது. அதன்மூலமும் அவர்களை பாதுகாப்ப தற்கான நடவடிக்கைகளும் அரசால் மேற்கொள்ளப் பட்டு வருகிறது.

    நரிக்குறவர் இன மக்களின் 50 ஆண்டுகாள கோரிக்கையை ஏற்று பழங்குடியினர் சான்று வழங்கப்படுகிறது.

    அதனடிப்படையில், சிவகங்கை வட்டத்திற்குட் பட்ட வாணியங்குடி ஊராட்சி பகுதியிலுள்ள பையூர் பிள்ளைவயல் நரிக்குறவர் காலணியில் வசித்து வரும் 176 குடும்பங்களை சார்ந்த 104 நபர்களுக்கு பழங்குடியினர் சான்று வழங்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அமைச்சர் பேசினார்.

    இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் சரஸ்வதி, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் ஆரோக்கிய சாந்தாமேரி, நகர்மன்ற உறுப்பினர்கள், ஊராட்சி மன்றத் தலைவர்கள் புவனேஸ்வரி (வாணி யங்குடி), மணிமுத்து (காஞ்சிரங்கால்), சிவகங்கை வட்டாட்சியர் பாலகுரு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • எந்தவித பின்புலமும் இல்லாமல் தன்னுடைய கடின உழைப்பால் 161 மதிப்பெண்களை பெற முடிந்தது என்று மாணவி கோகிலா பெருமையுடன் கூறினார்.
    • ஒரு வாய்ப்பு கிடைத்தால் நரிக்குறவ சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு மருத்துவ சேவை ஆற்றுவேன் என்றார்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் அருகேயுள்ள காரை கிராமம் மலையப்ப நகர் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன்-மஞ்சுளா தம்பதியினர். நரிக்குறவர் சமுதாயத்தை சேர்ந்த இந்த தம்பதியின் மகள் கோகிலா.

    ஊசிபாசி மணிகள் விற்று பிழைப்பு நடத்தி வரும் சுப்பிரமணியன் தனது மகளை படிப்பில் உயர்ந்த நிலைக்கு கொண்டு வரவேண்டும் என்ற ஆசையுடன் படிக்க வைத்தார்.

    அதற்கேற்ப தான் சற்றும் சளைத்தவர் அல்ல என்ற நிலையில் கோகிலாவும் படிப்பில் அதிக கவனம் செலுத்தினார். அதன் பிரதிபலனாக தற்போது நீட் தேர்வில் 161 மதிப்பெண்கள் பெற்று நரிக்குறவர் சமுதாயத்தில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற முதல் மாணவி என்ற பெருமையை கொண்டுள்ளார்.

    பெரம்பலூரில் உள்ள ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் பள்ளியில் படித்து பிளஸ்-2 தேர்வில் 459 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்த கோகிலாவுக்கு தான் ஒரு டாக்டர் ஆகவேண்டும் என்ற ஆசை துளிர்த்தது.

    பழங்குடியின் மாணவிகள் தேர்ச்சிக்கு 109 மதிப்பெண்கள் போதுமானது என்ற நிலையில் மாணவி கோகிலா 161 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். சராசரி மாணவர்களுடன் ஒப்பிடுகையில் குறைந்த மதிப்பெண்களாக இருந்தபோதிலும் எந்தவித பின்புலமும் இல்லாமல் தன்னுடைய கடின உழைப்பால் 161 மதிப்பெண்களை பெற முடிந்தது என்று மாணவி கோகிலா பெருமையுடன் கூறினார்.

    இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், பல்வேறு சிரமங்களுக்கிடையே ஊசிபாசி விற்று என்னை படிக்க வைத்த பெற்றோருக்கு பெருமை சேர்க்கவும், கல்வி கற்க வறுமையோ, தான் சார்ந்த சமுதாயமோ ஒரு தடையல்ல என்பதை மெய்ப்பிக்கும் வகையில் இந்த நீட் தேர்வை நான் தன்னம்பிக்கையுடன் எதிர் கொண்டேன். அதற்கு தகுந்த பலன் கிடைத்துள்ளது. எனக்கு அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து படிக்க வாய்ப்பு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருக்கிறேன்.

    தற்போது தான் பெற்ற கல்வியை எனது சமுதாயத்தை சேர்ந்தவர்களும் பெறவேண்டும் என்ற எண்ணத்தில் நரிக்குறவ சமூக மாணவர்களுக்கு கல்வி கற்றுக்கொடுத்து வருகிறேன். மற்ற நேரங்களில் பெற்றோருக்கு உதவியாக ஊசிபாசி தயாரித்து கொடுக்கிறேன். ஊசிபாதி பிடித்த கையில் ஸ்டெத் தஸ்கோப்பை பிடிக்கும் காலம் வரும் என்று எதிர் பார்க்கிறேன்.

    அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தால் நரிக்குறவ சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு மருத்துவ சேவை ஆற்றுவேன் என்றார்.

    • போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்
    • கன்னியாகுமரியில் தற்போது சபரிமலை அய்யப்ப பக்தர்கள் சீசன் களை கட்டி உள்ளது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரியில் தற்போது சபரிமலை அய்யப்ப பக்தர்கள் சீசன் களை கட்டி உள்ளது. இதற்கிடையில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக நேற்று முதலே கன்னியாகுமரியில் வெளி மாநிலம் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து குவிந்த வண்ணமாக இருக்கிறார்கள்.

    இந்த சீசனை யொட்டி கன்னியா குமரியில் வெளி மாநில வியாபாரிகளும் ஏராளமான சீசன் கடை களை வைத்து உள்ள னர். இதற்கிடையில் நரிக்குற வர்களும் கன்னியாகுமரியில் சாலையோரம் தங்கி இருந்து ஊசி மற்றும் பாசி மாலைகள் விற்பனை செய்து வருகிறார்கள்.

    இவர்கள் வியாபாரத்தை முடித்து விட்டு இரவு நேரங்களில் கன்னியாகுமரி கடற்கரை சாலையில் சாலை ஓரமாக படுத்து தூங்குவது வழக்கம். அவ்வாறு நேற்று இரவு நரிக்குறவர்கள் வியாபாரத்தை முடித்து விட்டு கடற்கரை சாலையில் அமைந்துள்ள காமராஜர் மணி மண்டபம் அருகே சாலையோரமாக படுத்து தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்கு இடையே சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் தூங்குவது போல் நடித்து அவர்கள் வைத்திருந்த பாசி மாலைகள் மற்றும் பொருட்களை திருடியதாக கூறப்படுகிறது.

    இதைப் பார்த்து திடுக்கிட்டு எழுந்த நரிக்குற வர்கள் கூச்ச லிட்டனர். பின்னர் அவரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டவர் என்ப தால் அவரை எச்சரித்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • வில்லியனூர் அடுத்த ஒதியம்பட்டு பகுதியில் நரிக்குறவர்கள் குடியிருப்புகள் உள்ளது.
    • வன விலங்குகளை வேட்டையாடியவர்கள் நீதிமன்றம் உத்தரவின் மூலம் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றார்.

    சேதராப்பட்டு:

    வில்லியனூர் அடுத்த ஒதியம்பட்டு பகுதியில் நரிக்குறவர்கள் குடியிருப்புகள் உள்ளது.

    இங்கு இன்று அதிகாலை வனத்துறை துணை வனக்காப்பாளர் வஞ்சுள வள்ளி தலைமையில் வனத்துறையினரும் போலீஸ் சூப்பிரண்டு வம்சீரதரெட்டி தலைமையில் போலீசாரும் ஒதியம்பட்டில் உள்ள நரிக்குறவர்கள் வசிக்கும் 7 வீடுகளில் அதிரடி சோதனை நடத்தினர்.

    அப்போது, நரிக்குறவர்கள் வேட்டையாடி விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த நீர் காகம் உள்ளிட்ட 63 வகை பறவை இனங்கள், விற்பனை போக மீதம் வைத்திருந்த 3 கிலோ மான்கறி, உடும்பு, முயல், ஆமை, கிளி வகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

    மேலும் வேட்டையாட பயன்படுத்தப்பட்ட 4 பெரிய ரக துப்பாக்கிகள், பாஸ்பரஸ் குண்டுகள், விலங்குகள் பிடிக்க பயன்படுத்தப்படும் கன்னிகள், அரிவாள் கத்தி, வாள் உள்ளிட்ட கூர்மையான ஆயுதங்கள் ஆகியவற்றைகளை பறிமுதல் செய்தனர்.

    சோதனையின் போது நரிக்குறவர்களுக்கும் வனத்துறை நிற்கும் ஏற்பட்ட தள்ளுமுள்ளு காரணமாக கரிக்கலாம்பாக்கத்தைச் சேர்ந்த வனத்துறை ஊழியர் ஆறுமுகத்தின் கை முறிவு ஏற்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    பறிமுதல் செய்யப்பட்ட பறவைகள் ஆயுதங்கள் புதுவை வனத்துறை அலுவலகத்திற்கு கொண்டுவரப்பட்டது. இதுகுறித்து வனத்துறை துணை வனக்காப்பாளர் வஞ்சுள வள்ளி கூறுகையில், ஒதியம்பட்டு நரிக்குறவர் பகுதியில் அரிய வகை பறவைகள் வேட்டையாடப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் அங்கு போலீசாருடன் சேர்ந்து சோதனை மேற்கொண்டோம்

    அப்போது 7 வீடுகளில் நடத்திய சோதனையில் அரியவகை பறவைகள், விலங்குகள், துப்பாக்கிகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தோம். குறிப்பாக மான்கறி அங்கு இருந்தது.

    மான் கறியை விற்றவருக்கும் அதை வாங்கியவருக்கும் 7 ஆண்டு வரை தண்டனை உண்டு. மேலும் கியூ.ஆர் கோடுகளைக் கொண்டு செல்போனில் வாடிக்கையாளர்களை உருவாக்கி ஆன்லைன் மூலம் பணம் பரிமாற்றம் செய்து கொண்டு விலங்குகள் விற்பனை செய்யப்பட்டு வந்தது தெரிய வந்துள்ளது.

    இந்த வன விலங்குகளை வேட்டையாடியவர்கள் நீதிமன்றம் உத்தரவின் மூலம் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றார்.

    • நரிக்குறவர், குருவிக்காரர் ஆகிய சமூகத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
    • கடந்த வியாழக்கிழமை மக்களவையில் பழங்குடியினர் அரசியல் சாசன திருத்த மசோதா நிறைவேறியது

    புதுடெல்லி:

    தமிழகத்தில் குருவிக்காரர், நரிக்குறவர் உள்ளிட்ட சில சமூகத்தினர் தங்களை பழங்குடியினர் பிரிவில் சேர்த்து சாதிச் சான்றிதழ் வழங்க வேண்டும் என்று போராடி வருகின்றனர். இதுதொடர்பாக அரசுக்கும், முதல்வருக்கும் அவர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். அதில், நரிக்குறவர், குருவிக்காரர் சமூகத்தினரை தமிழகத்தின் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தி, அதற்கான பல்வேறு காரணங்களையும் தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் செப்.14-ம் தேதி நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், நரிக்குறவர், குருவிக்காரர் என அழைக்கப்படுவோரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.

    பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வரும் நிலையில், நரிக்குறவர், குருவிக்காரர் சமுதாயத்தினருக்கு பழங்குடியினர் அந்தஸ்து வழங்கும், பழங்குடியினர் அரசியல் சாசன திருத்த மசோதா கடந்த வியாழக்கிழமை மக்களவையில் நிறைவேற்றப்பட்டு மாநிலங்களவைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    மாநிலங்களவையில் இன்று இந்த மசோதா மீது விவாதம் நடத்தப்பட்டது. விவாதத்திற்குப் பிறகு மசோதா நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து குடியரசுத் தலைவருக்கு மசோதா அனுப்பி வைக்கப்படும். குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்ததும், அரசாணை வெளியிடப்பட்டு இந்தச் சட்டம் அமலுக்கு வரும்.

    • ரூ.3.19 கோடி மதிப்பில் நரிக்குறவர் குடும்பத்தினருக்கு வீடுகள் கட்டும் பணிக்கு அமைச்சர் அடிக்கல் நாட்டினார்.
    • கம்பிகுடி ஊராட்சி மன்ற தலைவா் லட்சுமி பாலு மற்றும் பலா் கலந்து கொண்டனா்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி வட்டம், கம்பிக்குடி ஊராட்சி, மந்திரிஓடை கிராமத்தில், நாிக்குறவா் காலனியில் வசிக்கும் 54 குடும்பத்தினா்களுக்கு ரூ.3.19 கோடி மதிப்பில், வீடுகள் கட்டப்படுகின்றன. இதற்கான அடிக்கல் நாட்டுவிழா நடந்தது.

    கலெக்டர் மேகநாதரெட்டி தலைமை தாங்கினார். அமைச்சா் தங்கம் தென்னரசு அவர்கள் பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டினார். பின்னர்அவர் பேசியதாவது:-

    இந்த பகுதியில் கடந்த வருடம் பெய்த மழையால் வௌ்ள நீர் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்தது. மாவட்ட நிர்வாகத்தின் மூலம் உடனடியாக மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, அருகில் உள்ள மந்திரிஓடை அரசு தொடக்கப்பள்ளியில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டு, அவா்களுக்கு தேவையான 54 நாிக்குறவா் இன குடும்பத்திற்கு அரிசி, பருப்பு, காய்கறி உள்ளிட்ட மளிகைப்பொருட்கள் மற்றும் தலையணை, பாய்கள் அடங்கிய நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன.

    இப்பகுதி நாிக்குறவா் இன மக்களின் கோரிக்கையை ஏற்று, முதலமைச்சா் உத்தரவின்போில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை மூலம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ், ரூ.35 லட்சம் மதிப்பில் மந்திரி ஓடை-சத்திர புளியங்குளம் சிறு பாலம் அமைப்பதற்கும், தூய்மை பாரத இயக்கம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ், ரூ.5.75 லட்சம் மதிப்பில் சமுதாய சுகாதார வளாகம் கட்டுவதற்கும், ஊராட்சி பொது நிதியில் இருந்து ரூ.1.82 லட்சம் மதிப்பில் தெருவிளக்குகள் அமைப்பதற்கும், 15-வது நிதிக்குழு மானியத்தின் மூலம் ரூ.3.84 லட்சம் மதிப்பில் குடிநீர் வசதிகள் செய்வதற்கும், ரூ.3.10 லட்சம் மதிப்பில் போர்வெ்ல் அமைத்து குளியல் தொட்டி அமைப்ப தற்காகவும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ், ரூ.47 லட்சம் மதிப்பில் நாிக்குறவா் காலனி பாதுகாப்பிற்காக அருகில் உள்ள காரியாபட்டி ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு 636 மீ பள்ளி சுற்றுச் சுவா் கட்டுவதற்கும் என மொத்தம் ரூ.96.51 லட்சம் மதிப்பீட்டில் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.

    அதுமட்டுமல்லாமல், 25 சதவிகித கனிமவள நிதி திட்டத்தின்கீழ், நாிக்குறவா் காலனியில் வசிக்கும் 54 குடும்பத்தினருக்கு வீடு ஒன்றிற்கு தலா ரூ.5.90 லட்சம் வீதம் மொத்தம் 54 வீடுகளுக்கு ரூ.3 கோடியே18 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பீட்டில் வீடுகள் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

    இதுபோன்று, அனைத்து தரப்பு மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக அரசினுடைய நலத்தி ட்டங்கள் படிப்படியாக செயல்படுத்தப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் திலகவதி, அருப்புக்கோட்டை வருவாய் கோட்டாட்சியா் கல்யாணகுமார், மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் தங்க தமிழ்வாணன், கமலி பாரதி, காரியாபட்டி ஊராட்சி ஒன்றியகுழுத்தலைவர் முத்துமாரி, பேரூராட்சி தலைவா் செந்தில், யூனியன் துணைதலைவர் ராஜேந்திரன், பிரமுகர் கண்ணன், செல்லம், கம்பிகுடி ஊராட்சி மன்ற தலைவா் லட்சுமி பாலு மற்றும் பலா் கலந்து கொண்டனா்.

    • நரிக்குறவர்களுக்கு விரைவில் இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்படுகிறது.
    • 3 வேளை உணவும் வழங்கப்பட்டு வருகிறது.

    பரமக்குடி

    பரமக்குடி வைகை நகர், முருகன் கோவில் படித்துறை ஆகிய பகுதிகளில் சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக 23 குடும்பத்தைச் சேர்ந்த நரிக்குறவர்வர்கள் வசித்து வருகின்றனர். பரமக்குடி தாசில்தார் தமிம்ராஜா நரிக்குறவர்கள் வசிக்கும் இடத்திற்கு சென்று ஆய்வு செய்தார்.

    நரிக்குறவர் இன மக்கள் தங்களுக்கு குடும்ப அட்டை, ஆதார் அட்டை, இலவச வீட்டு மனை பட்டா, மாற்றுத்திறனாளிகள், மாதாந்திர முதியோர் உதவித்தொகை, இளைஞர்கள், பெண்களுக்கு தொழில் செய்ய கடனுதவி, புதிதாக குடியிருப்புகள் கட்டித்தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    தகுதியான நபர்களை கண்டறிந்து குடும்ப அட்டை, ஆதார் அட்டை, இலவச வீட்டு மனை பட்டா, மாற்றுத்திறனாளிகள், முதியவர்களுக்கு மாதாந்திர உதவித்தொகை, இளைஞர்கள், பெண்களுக்கு தொழில் செய்ய கடனுதவி, புதிதாக குடியிருப்புகள் கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும் என தாசில்தார் உறுதி அளித்தார். பரமக்குடி அருகே உள்ள பாம்பு விழுந்தான் கிராமத்தில் வருவாய் துறைக்கு சொந்தமான இடத்தில் குடிசைகள் அமைத்து நரிக்குறவர்கள் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு 3 வேளை உணவும் வழங்கப்பட்டு வருகிறது.

    சில தினங்களில் இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட உள்ளது என தாசில்தார் தமிம்ராஜா தெரிவித்துள்ளார்.

    • பழங்குடியினருக்கு வழங்கப்படும் சலுகைகள் அனைத்தும் நரிக்குறவர், குருவிக்காரர் பிரிவினருக்கும் கிடைக்கும்
    • பிரதமர் மற்றும் மத்திய அமைச்சருக்கு தமிழக பாஜக சார்பில் மாநில தலைவர் அண்ணாமலை நன்றி தெரிவித்துள்ளார்.

    புதுடெல்லி:

    தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் விடுபட்டிருந்த சமுதாயங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. நரிக்குறவர், குருவிக்காரர் என அழைப்படுவோரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கும் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய மந்திரி அர்ஜூன் முண்டா கூறியுள்ளார். சத்தீஸ்கர், இமாச்சலப்பிரதேச மாநிலங்களிலும் பழங்குடியினர் பட்டியலில் இணைப்புகளுக்கும் அனுமதி தரப்பட்டுள்ளது. பழங்குடியினருக்கு வழங்கப்படும் சலுகைகள் அனைத்தும் நரிக்குறவர் - குருவிக்காரர் பிரிவினருக்கும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நரிக்குறவர், குருவிக்காரர் என்று அழைக்கப்படும் சமுதாயத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க ஒப்புதல் அளித்த பிரதமர் மற்றும் மோடி மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் அர்ஜூன் முண்டா ஆகியோருக்கு தமிழக பாஜக சார்பில் மாநில தலைவர் அண்ணாமலை நன்றி தெரிவித்துள்ளார்.

    1965ஆம் ஆண்டு லோக்கூர் கமிட்டி நரிக்குறவர், குருவிக்காரர் என்று அழைக்கப்படும் சமுதாயத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று பரிந்துரைத்தது. தமிழக பாஜகவின் தொடர் முயற்சியாலும், நரிக்குறவர் மக்களின் நீண்ட கால கோரிக்கையையும் மனதில் கொண்டு பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க பிரதமர் ஒப்புதல் அளித்துள்ளார் என்றும், இந்த மகத்தான முடிவு நரிக்குறவர், குருவிக்காரர் சமுதாய மக்களுக்கு சம உரிமையையும் அவர்களின் பொருளாதார வளர்ச்சியையும் வலுப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது என்றும் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.

    • பூஞ்சேரியில் இதுவரை ரூ.1.5 கோடி மதிப்பிலான நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளதாக ஆட்சியர் தகவல்
    • நரிக்குறவ பெண் அஸ்வினி சேகர் உள்ளிட்ட 12 பேருக்கு கடன் வழங்க ஆணை தயார் நிலையில் உள்ளது.

    செங்கல்பட்டு:

    முதல்வர் வழங்கிய கடனுதவி தனக்கு இன்னும் கிடைக்கவில்லை என பூஞ்சேரியைச் சேர்ந்த நரிக்குறவ பெண் அஸ்வினி சமீபத்தில் புகார் கூறியிருந்தார். முதல்வர் அறிவித்த ஒரு லட்சம் ரூபாய் லோன் யாருக்கும் கிடைக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். அவர் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வரும் நிலையில், அரசுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில், நரிக்குறவ பெண் புகாரை தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல் விளக்கம் அளித்துள்ளார். பூஞ்சேரியில் நரிக்குறவர் மற்றும் இருளர் குடும்பங்களுக்கு இதுவரை ரூ.1.5 கோடி மதிப்பிலான நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளதாகவும், 54 இலவச வீட்டுமனை பட்டாக்கள், 35 சாதி சான்றிதழ்கள், 6 முதியோர் உதவித்தொகைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

    'அஸ்வினி சேகர் உள்ளிட்ட 12 பேருக்கு கடன் வழங்க ஆணை தயார் நிலையில் உள்ளது. அஸ்வினி சேகருக்கு ரூ.5 லட்சமும், மற்றவர்களுக்கு தலா ரூ.1 லட்சமும் கடன் வழங்க ஆணை உள்ளது. ஆனால் மற்றவர்களோடு சேர்ந்துதான் கடனை பெறுவேன் என அஸ்வினி சேகர் தெரிவித்ததால், தாமதம் ஆகிறது. அஸ்வினி சேகருக்கு கடை ஒதுக்கீடு செய்ய தயார் நிலையில் இருந்தது. ஆனால் அவர் அதை நிராகரித்துவிட்டார். நலத்திட்ட உதவிகளை செயல்படுத்துவதற்கு அப்பகுதி மக்களின் ஒத்துழைப்பு தேவை' என்றும் கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    • முதல்வர் வழங்கிய கடனுதவி தனக்கு இன்னும் கிடைக்கவில்லை என நரிக்குறவ பெண் அஸ்வினி கூறியிருந்தார்.
    • புகாரை தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல் விளக்கம் அளித்துள்ளார்.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு மாவட்டம் பூஞ்சேரியில் வசிக்கும் நரிக்குறவர் மற்றும் இருளர் இனத்தைச் சேர்ந்த 282 பேருக்கு வீட்டுமனை பட்டாக்கள், வங்கிக் கடனுதவிகள் ஆகியவற்றை தீபாவளியன்று முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். மேலும், கோவில் அன்னதானத்தின்போது அவமதிக்கப்பட்ட நரிக்குறவர் இனப் பெண் அஸ்வினிக்கும் கடனுதவி ஆணையை வழங்கினார்.

    ஆனால், முதல்வர் வழங்கிய கடனுதவி தனக்கு இன்னும் கிடைக்கவில்லை என அஸ்வினி சமீபத்தில் புகார் கூறியிருந்தார். முதல்வர் அறிவித்த ஒரு லட்சம் ரூபாய் லோன் யாருக்கும் கிடைக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

    அவர் பேசிய வீடியோ பதிவை பாஜக தலைவர் அண்ணாமலை தனது டுவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்து, அரசுக்கு கேள்வி எழுப்பி உள்ளார்.

    "விளம்பரங்களில் மட்டுமே ஆர்வம் காட்டி வரும் இந்த திமுக அரசு, தேர்தலுக்கு முன் கொடுத்த வாக்குறுதிகளையும் நிறைவேற்ற வில்லை தேர்தலுக்குப் பின் கொடுக்கும் வாக்குறுதிகளையும் மறந்து விடுகிறார்கள். இப்படி நம்ப வைத்து ஏமாற்றுவது தான் உங்கள் சமூக நீதியா?' என அண்ணாமலை கூறி உள்ளார்.

    நரிக்குறவ பெண் புகாரை தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல் விளக்கம் அளித்துள்ளார். பூஞ்சேரியில் நரிக்குறவர் மற்றும் இருளர் குடும்பங்களுக்கு இதுவரை ரூ.1.5 கோடி மதிப்பிலான நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளதாகவும், 54 இலவச வீட்டுமனை பட்டாக்கள், 35 சாதி சான்றிதழ்கள், 6 முதியோர் உதவித்தொகைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

    ×