search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இலவச மருத்துவம்"

    • முகாமிற்கு சாவடிப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் கே.முரளி தலைமை தாங்கினார்
    • ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் குணபிரசாத் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    முத்தூர்:

    திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே பரஞ்சேர்வழியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில், கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ், இலவச சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

    முகாமிற்கு சாவடிப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் கே.முரளி தலைமை தாங்கினார். இதில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மருத்துவ முகாமை தொடங்கி வைத்து உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-

    1996-ம் ஆண்டு 4-வது முறையாக தமிழக முதல்வராக கலைஞர் பொறுப்பேற்ற போது வருமுன் காப்போம் திட்டத்தை கொண்டு வந்தார். இத்திட்டத்தின் நோக்கம் மருத்துவமனையில் மட்டுமே மருத்துவர்கள் பணிபுரிவதோடு அல்லாமல், கிராமப்புறங்களுக்கும் நேரில் சென்று வயதானவர்கள், ஆதரவற்றோர்கள் மற்றும் மருத்துவமனைக்கு செல்ல முடியாதவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் இத்திட்டம் தொடங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

    நோயை ஆரம்ப கட்டத்தில் சரி செய்வதால் தான் இது வருமுன் காப்போம் திட்டம் என்று அழைக்கப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் மருத்துவ முகாம்கள் வட்டார அளவில் நடைபெறும். ஒவ்வொரு முகாமிலும் மருத்துவர், மகப்பேறு மருத்துவர், குழந்தைகள் மருத்துவர் உள்ளிட்ட மருத்துவர் குழுக்கள் மூலம் ஏழை, எளிய மக்களுக்கு சிகிச்சை அளிக்க, இது சிறந்த திட்டமாக உள்ளது. இன்று பரஞ்சேர்வழி ஊராட்சியில் நடைபெற்ற ஒரு இந்த மருத்துவ முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற்று நோயற்ற வாழ்வு வாழ வேண்டும். என்றார்.

    முகாமில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான பொதுவான நோய்கள், இருதய நோய், சர்க்கரை நோய், பல் மருத்துவம், காது மூக்கு தொண்டை தொடர்பான நோய், கண் பரிசோதனை, ஸ்கேன் பரிசோதனை, குழந்தைகளுக்கான மருத்துவம், தோல் நோய் மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு முகாம் மூலம் 480 பேருக்கு சிகிச்சை மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

    இதில் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர். மேலும் வட்டார சுகாதார ஆய்வாளர்கள், வட்டார சுகாதார மேற்பார்வையாளர்கள், சமுதாய சுகாதார செவிலியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், மக்களைத் தேடி மருத்துவம் திட்டப் பணியாளர்கள் உள்ளிட்ட சுகாதாரத்துறை சார்ந்த 80-க்கும் மேற்பட்ட ஊழியர்கள், பணியாளர்கள் பங்கேற்று பணிபுரிந்தனர்.

    நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் த.ப.ஜெய்பீம், சுகாதார பணிகள் துணை இயக்குநர் ஜெகதீஷ்குமார், காங்கயம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் டி.மகேஷ்குமார், நத்தக்காடையூர் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் குணபிரசாத் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • புற்றுநோய், ரத்த அழுத்தம், ஸ்கேன் பரிசோதனை, இசிஜி பரிசோதனை போன்ற 20-க்கும் மேற்பட்ட மருத்துவ சேவைகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட உள்ளது.
    • பொதுமக்கள் அனைவரும் இந்த‌ மருத்துவ முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    திருப்பூர்:

    வெள்ளகோவில் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பாக கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் இலவச மருத்துவ முகாம் வெள்ளகோவில் காடையூரான்வலசு பகுதியில் வருகிற 21-ந் தேதி நடைபெறுகிறது. வெள்ளகோவில் காடையூரான்வலசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெற உள்ள இந்த மருத்துவ முகாமில் இதய நோய், சர்க்கரை நோய், சித்த மருத்துவம், புற்றுநோய், ரத்த அழுத்தம், ஸ்கேன் பரிசோதனை, இசிஜி பரிசோதனை போன்ற 20-க்கும் மேற்பட்ட மருத்துவ சேவைகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட உள்ளது.

    மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் முன்னிலையில் முகாம் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை வட்டார மருத்துவ அலுவலர் டி.ராஜலட்சுமி செய்து வருகிறார். பொதுமக்கள் அனைவரும் இந்த மருத்துவ முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    • கம்ப்யூட்டர் வாயிலாக குலுக்கல் நடத்தப்பட்டு மாணவர்கள் தரவரிசை பட்டியல் இறுதி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
    • மருத்துவ மாணவர்களின் இந்த புதிய வழிகாட்டு முறைக்கு மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் கல்வி ஆர்வலர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது.

    புதுடெல்லி:

    எம்.பி.பி.எஸ். மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வு நடத்தப்படுகிறது. அதில் வெற்றி பெறும் மாணவ-மாணவிகள் கலந்தாய்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு வருகிறார்கள்.

    இந்த நிலையில் அடுத்த கல்வி ஆண்டுக்கான (2023-2024)மாணவர் சேர்க்கையில் கடைபிடிக்கப்பட வேண்டிய புதிய வழிகாட்டு விதிமுறைகளை தேசிய மருத்துவ கழகம் கடந்த 12- ந்தேதி வெளியிட்டது. தற்போது மாணவர்கள் சேர்க்கையில் முதலில் தகுதிப்பட்டியல் வெளியிடப்படும் . அதன்படி முதலிடங்களில் உள்ள மாணவர்களுக்கு மருத்துவ கல்லூரிகளில் இடம் ஒதுக்கப்படும், தற்போதைய நடைமுறையில் நீட் தேர்வில் ஒன்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் சமமான மதிப்பெண்கள் பெற்று இருந்தால் உயிரியல் பாட மதிப்பெண் அடிப்படையில் தர வரிசை முடிவு செய்யப்படும்.

    இதிலும் சம நிலையில் இருந்தால் அடுத்ததாக வேதியியலும் அடுத்து இயற்பியல் பாடத்தில் உள்ள மதிப்பெண் அடிப்படையில் தர வரிசை பட்டியல் இறுதி செய்யப்படும்.

    ஒரு வேளை இதன் பிறகும் ஒன்றுக்கு மேற்பட்ட மாணவர்கள் சமநிலையில் இருந்தாலும் வயது மூப்பு அடிப்படையில் மாணவர் தர வரிசை பட்டியல் இடம் பெறும்.

    இந்த நடைமுறையை மாற்றி புதிய நடைமுறை வெளியிடப்பட்டது. அதன்படி முதலில் இயற்பியல் அடுத்து வேதியியல் மற்றும் உயிரியல் பாடங்களின் அடிப்படையில் பரிசீலனை செய்யப்படும் என்றும் அதன்பிறகும் சம நிலையில் இருந்தால் கம்ப்யூட்டர் வாயிலாக குலுக்கல் நடத்தப்பட்டு மாணவர்கள் தரவரிசை பட்டியல் இறுதி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    மருத்துவ படிப்பில் சேர ஒருவருக்கு 4 முறை மட்டும் வாய்ப்பு வழங்கப்படும் என்றும், 9 ஆண்டுக்குள் படிப்பை முடிக்க வேண்டும் என்றும் தோல்வி அடையும் மாணவர்கள் 3 முதல் 6 வாரங்களில் மறு தேர்வு எழுத வேண்டும் என்றும் புதிய நடைமுறையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மருத்துவ படிப்பில் சேரும் மாணவர்கள் முதல் நாளில் இருந்து ஒரு குடும்பத்தை தத்தெடுத்து அவர்களுக்கு தேவையான மருத்துவ வசதிகளை இலவசமாக செய்து தரவேண்டும், 4½ ஆண்டு இளங்கலை மருத்துவ படிப்பு 3 கட்டமாக நடத்தப்படும். முதல் 2 கட்டங்கள் தலா 12 மாதங்கள் என பிரித்தும் 3- வது கட்டம் 30 மாதங்கள் எனவும் வரையறுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

    மருத்துவ மாணவர்களின் இந்த புதிய வழிகாட்டு முறைக்கு மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் கல்வி ஆர்வலர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது. இதில் குழப்பம் நிலவுவதாக தெரிவித்தனர். இது தொடர்பாக அகில இந்திய மருத்துவ சங்க கூட்டமைப்பின் தேசிய தலைவர் ரோஷன் கிருஷ்ணன் கூறியதாவது:-

    தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்ட மருத்துவ மாணவர்கள் சேர்க்கையில் புதிய வழிகாட்டு நடை முறைகள் குழப்பத்தை உருவாக்குகிறது. சரியான கல்லூரிகளுக்கு அங்கீகாரம் வழங்குவது, மருத்துவ பாட திட்டத்திற்கான வலுவான மற்றும் சரியான வழி காட்டுதல்களை கொண்டு வருவது, புதிய சுற்றறிக்கைகளை வெளியிடுவதும் அதை எந்தவித விளக்கமும் கூறாமல் திரும்ப பெறுவதும் அடிக்கடி நடக்கிறது. எனவே தேசிய மருத்துவ ஆணையம் உறுதியாக தெரியாத தகவல்கள் வெளியிடுவதை தவிர்க்க வேண்டும்,

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த சூழ்நிலையில் புதிய வழிகாட்டு விதிமுறைகளை தேசிய மருத்துவ ஆணையம் வாபஸ் பெற்று உள்ளது. விரைவில் புதிய விதி முறைகள் வெளியாகலாம் என தெரிகிறது.

    • நான்கரை ஆண்டுகள் மருத்துவ படிப்பு 3 கட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.
    • 3-வது கட்டம் 30 மாதங்கள் என்று வரையறுக்கப்பட்டு உள்ளது.

    சென்னை:

    நீட் தேர்வு முடிவுகள் வெளியானதையடுத்து நாடு முழுவதும் எம்.பி.பி.எஸ். மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கை விரைவில் நடைபெற உள்ளது.

    இந்நிலையில் எம்.பி.பி.எஸ் படிப்புக்கான பாடத் திட்டத்தை மாற்றி அமைக்க தேசிய மருத்துவ ஆணையம் திட்டமிட்டுள்ளது. நான்கரை ஆண்டுகள் காலஅளவு கொண்ட இளங்கலை மருத்துவ படிப்புக்கான பாடத்திட்டத்தில் 2023-2024-ம் கல்வி ஆண்டு முதல் புதிய நடைமுறைகளை தேசிய மருத்துவ ஆணையம் கொண்டு வந்துள்ளது.

    அதன்படி மருத்துவ படிப்பில் சேரும் மாணவர்கள் முதல் நாளில் இருந்தே ஒரு குடும்பத்தை தத்தெடுத்து அவர்களுக்கு தேவையான மருத்துவ வசதிகளை இலவசமாக செய்து தர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் நான்கரை ஆண்டுகள் மருத்துவ படிப்பு 3 கட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அதன்படி முதல் 2 கட்டங்கள் தலா 12 மாதங்கள் என்று பிரிக்கப்பட்டு உள்ளது. 3-வது கட்டம் 30 மாதங்கள் என்று வரையறுக்கப்பட்டு உள்ளது.

    மருத்துவ படிப்பு தேர்வு களில் தோல்வியடையும் மாணவர்கள் 3 முதல் 6 வாரங்களுக்குள் மறு தேர்வு எழுதும் வகையில் மாற்றங் கள் கொண்டுவரப்பட்டு உள்ளன. இதன் மூலம் நடைமுறையில் இருந்த துணைப்பிரிவு என்ற திட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

    • சுகாதாரத் துறை முன்மொழிவுக்கு முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஒப்புதல் அளித்துள்ளார்.
    • செய்தி ஒன்றை டுவிட்டரில் டேக் செய்த டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    டெல்லியில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் சுகாதார மையங்களில் வரும் ஜனவரி 1ம் தேதி முதல் சுமார் 450 வகையான மருத்துவ பரிசோதனைகளை இலவசமாக வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

    ஏற்கனவே, டெல்லி அரசால் இலவசமாக 212 மருத்துவப் பரிசோதனைகள் வழங்கப்பட்டு வருகிறது. அரசு மருத்துவமனைகள் மற்றும் சுகாதார மையங்களில் கூடுதலாக 238 பரிசோதனைகளை இலவசமாக வழங்குவதற்காக சுகாதாரத் துறை முன்மொழிவுக்கு முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஒப்புதல் அளித்துள்ளார்" என கூறியதாக தகவல் வெளியானது.

    இந்நிலையில், இதுதொடர்பாக வெளியான செய்தி ஒன்றை டுவிட்டரில் டேக் செய்த டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

    அந்த பதிவில், " எவருடைய பொருளாதார நிலையையும் பொருட்படுத்தாமல், அனைவருக்கும் நல்ல தரமான சுகாதாரம் மற்றும் கல்வியை வழங்குவது எங்கள் நோக்கம். சுகாதாரம் விலை உயர்ந்ததாகிவிட்டது. பலரால் தனியார் மருத்துவமனைகளில் செலவழிக்க முடியாது. அத்தகைய அனைவருக்கும் இந்த திட்டம் உதவும் " என குறிப்பிட்டிருந்தார்.

    ×