search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட இலவச மருத்துவ சிறப்பு முகாம் - 21-ந் தேதி நடக்கிறது
    X

    கோப்புபடம். 

    கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட இலவச மருத்துவ சிறப்பு முகாம் - 21-ந் தேதி நடக்கிறது

    • புற்றுநோய், ரத்த அழுத்தம், ஸ்கேன் பரிசோதனை, இசிஜி பரிசோதனை போன்ற 20-க்கும் மேற்பட்ட மருத்துவ சேவைகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட உள்ளது.
    • பொதுமக்கள் அனைவரும் இந்த‌ மருத்துவ முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    திருப்பூர்:

    வெள்ளகோவில் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பாக கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் இலவச மருத்துவ முகாம் வெள்ளகோவில் காடையூரான்வலசு பகுதியில் வருகிற 21-ந் தேதி நடைபெறுகிறது. வெள்ளகோவில் காடையூரான்வலசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெற உள்ள இந்த மருத்துவ முகாமில் இதய நோய், சர்க்கரை நோய், சித்த மருத்துவம், புற்றுநோய், ரத்த அழுத்தம், ஸ்கேன் பரிசோதனை, இசிஜி பரிசோதனை போன்ற 20-க்கும் மேற்பட்ட மருத்துவ சேவைகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட உள்ளது.

    மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் முன்னிலையில் முகாம் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை வட்டார மருத்துவ அலுவலர் டி.ராஜலட்சுமி செய்து வருகிறார். பொதுமக்கள் அனைவரும் இந்த மருத்துவ முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    Next Story
    ×