search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஊராட்சி"

    • நீலகண்டன் : திருவையாறு பஸ் நிலைய ஆக்கிரமிப்பு எப்போது அகற்றப்படும்.
    • தஞ்சை புதிய பஸ் நிலையத்தில் தற்காலிக கழிவறைகள் அதிகளவில் ஏற்படுத்த வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாநகராட்சி அலுவலகத்தில் இன்று மாமன்ற கூட்டம் நடைபெற்றது.

    மேயர் சண் ராமநாதன் தலைமை தாங்கினார். துணை மேயர் அஞ்சுகம்பூபதி, ஆணையர் சரவணகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் , தஞ்சை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புனரமைக்கப்பட்ட அய்யன்குளத்துக்கு மத்திய அரசால் 3-வது இடத்திற்கான விருது தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    இந்த விருதை அடுத்த மாதம் 27 மற்றும் 28 தேதியில் நடைபெறும் விழாவில் குடியரசுத் தலைவர் விருது வழங்க உள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இதற்காக மத்திய அரசு, தமிழ்நாடு முதலமைச்சர், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் , நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் மற்றும் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இதனை தொடர்ந்து நடந்த கூட்டத்தில் நடந்த கவுன்சிலர்கள் பேசிய விவரமும் , அதற்கு பதில் அளித்து மேயர் , ஆணையர் பேசிய விவரமும் வருமாறு:-

    மண்டல குழு தலைவர் மேத்தா: அய்யன் குளம், அழகியகுலத்திற்கு தண்ணீர் கொண்டு வந்து சேர்த்ததற்கு நன்றி.

    ரம்யா சரவணன்: அய்யன் குளத்திற்கு தேசிய விருது கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

    காந்திமதி : கடந்த 2016-ம் ஆண்டு ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது அவரது ஆட்சியில் நகராட்சியாக இருந்த தஞ்சாவூர் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.

    தஞ்சை தற்காலிக மீன் மார்க்கெட் இடமாற்றம் எப்போது ? தஞ்சாவூர் மாநகராட்சியுடன் 13 ஊராட்சிகள் எப்போது இணைக்கப்படும்.

    ஜெய் சதீஷ்: தஞ்சை செண்பகவல்லி நகரில் பாதாள சாக்கடை இணைப்பு பணி ஒரு மாதமாக நடந்து வருகிறது.

    அந்தப் பணியை துரித படுத்த வேண்டும். வானக்கார தெருவில் பைப் லைன் அமைக்கும் பணியையும் துரிதப்படுத்த வேண்டும். சிவகங்கை பூங்கா குளத்தில் தண்ணீர் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கேசவன் : எனது வார்டில் வாய்க்கால் தூர்வார வேண்டும். சாலைப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.

    தூய்மை பணியாளர்கள் குப்பை அள்ள வராத சமயத்தில் அதற்கு மாற்று ஏற்பாடு செய்து குப்பைகளை உடனுக்குடன் அள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    எதிர்க்கட்சித் தலைவர் மணிகண்டன்: நிலவின் தென் துருவத்தில் சந்திராயன் 3 விண்கலத்தை ஏவி நமது விஞ்ஞானிகள் மாபெரும் உலக சாதனை படைத்துள்ளனர். இந்த சாதனையில் தமிழ்நாட்டை சேர்ந்த வீர முத்துவேல் முக்கிய பங்காற்றினார். எனவே தஞ்சை மாநகராட்சி பள்ளிகளில் ஏதாவது ஒரு பள்ளி ஆய்வகத்துக்கு வீர முத்துவேல் பெயர் சூட்ட வேண்டும். அருளானந்தநகர் 4, 5-வது தெருவில் பேவர் பிளாக் அமைக்கும் பணியை தொடங்கி உடனே முடிக்க வேண்டும். தினமும் புதிய பஸ் நிலையத்தில் இருந்து ஏராளமானோர் வெளியூர்களுக்கு செல்வதால் அவர்களின் வசதிக்காக இலவச கழிவறையை அமைக்க வேண்டும். பெத்தண்ணன் கலையரங்கம் பணிகள் உரிய அனுமதி பெற்று நடைபெற்றதா ? என்பதை தெளிவு படுத்த வேண்டும்.

    நீலகண்டன் : திருவையாறு பஸ் நிலைய ஆக்கிரமிப்பு அகற்றப்படுவது எப்போது ?

    துணை மேயர் அஞ்சுகம் பூபதி:

    தஞ்சை புதிய பஸ் நிலையத்தில் தற்காலிக கழிவறைகள் அதிகளவில் ஏற்படுத்த வேண்டும். மாநகராட்சியில் உள்ள அனைத்து வார்டு மக்களுக்கும் சுகாதார அட்டை வழங்க வேண்டும். ஆணையர் சரவணகுமார் :

    தஞ்சை மாநகராட்சியில் சாலை விரிவாக்க பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. இதற்கு முன்னர் இருந்ததை விட தற்போது சாலைகள் அனைத்தும் புதுப்பொலிவு பெற்றுள்ளன. இதனை வெளியூர் மக்கள் அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

    மேயர் சண். ராமநாதன்:

    தஞ்சை மாநகராட்சியுடன் 13 ஊராட்சிகள் அடுத்த ஆண்டு அக்டோபர் மாதத்தி ற்குள் இணைக்கப்படும். பெத்தண்ணன் கலையரங்கம் பணிகள் உரிய வழிகாட்டு முறைகளை பின்பற்றி உடன் அனுமதி பெற்று தான் நடந்தது .

    தஞ்சாவூர் காந்திஜி சாலையில் ராசா மிராசுதார் மருத்துவமனை வரை உள்ள இடங்கள் மாநகராட்சிக்கு சொந்தமான இடம் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அந்த இடத்தின் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு மீட்கப்படும். தற்காலிக மீன் சந்தை அருகே உள்ள இடத்திற்கு மாற்றும் பணி விரைவில் தொடங்கும். தஞ்சை மாநகராட்சி கல்லு குளம் சுகாதார நிலையம் தர வரிசையில் மாநில அளவில் 2-வது இரண்டாம் இடமும் , கரந்தை சுகாதார நிலையம் 5-வது இடமும் பிடித்துள்ளதற்கு பாராட்டு க்கள். செயற்பொறியாளர் நாளையுடன் பணி ஓய்வு பெற உள்ளார். அவருக்கு நாளை பணி ஓய்வு பாராட்டு விழா நடைபெற உள்ளது. அவர் மாநகராட்சியில் பல்வேறு வளர்ச்சிப் பணியில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். அவருக்கு வாழ்த்துக்கள். கவுன்சிலர்கள் கோரிக்கைகள் பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நீர்தேக்க தொட்டி அமைப்பதற்கான பூமி பூஜை நடந்தது.
    • ரூ.5 லட்சத்தில் மைதானம் சீரமைக்கும் பணி நடந்தது.

    ஊட்டி,

    ஊட்டி மசினகுடி அருகே வாழைத்தோட்டம் பகுதியில் ரூ.10 லட்சம் மதிப்பில் உயர்மட்ட நீர்தேக்க தொட்டி அமைப்பதற்கான பூமி பூஜை நடந்தது. இதில் மாவட்ட ஊராட்சி தலைவர் பொன்தோஸ் பங்கேற்று நீர்தேக்க தொட்டி கட்டும் பணிகளை தொடங்கி வைத்தார்.

    மேலும் அதேபகுதியில் ரூ.5 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட பயணியர் நிழற்குடையையும் திறந்து வைத்தார்.

    இதேபோல் மசினகுடி அருகே இந்திரா காலனி பகுதியில் சமுதாய கூடத்தை சுற்றி ரூ.10 லட்சம் மதிப்பிலான சுவர் கட்டும் பணி, மாயார் பகுதியில் ரூ.5 லட்சத்தில் மைதானம் சீரமைக்கும் பணியையும் தொடங்கி வைத்தார். இதில் கூடலூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் கீர்த்தனா, மசினகுடி ஊராட்சி தலைவர் மாதேவி உள்பட பலர் பங்கேற்றனர்.

    • சிவகங்கை மாவட்டத்தில் ஊராட்சி நூலகங்களுக்கு புதிய புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சியை கலெக்டர் தொடங்கி வைத்தார்.
    • பதிவேடுகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 445 கிராம ஊராட்சிகளிலும் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்ட நூலகங்களில் புதிய மற்றும் நடப்பு புத்தகங்கள் மாவட்ட நிதியிலிருந்து கொள்முதல் செய்து வழங்கப்பட்டது.

    இந்த புத்தகங்கள் சம்பந்தப்பட்ட ஊராட்சியிலுள்ள நூலகங்களுக்கு ஒப்படைக்கும் நிகழ்ச்சி ஓ.புதூர் கிராமத்தில் நடந்தது. இது சிவகங்கை கலெக்டர் ஆஷா அஜீத் கலந்து கொண்டு புத்தகங்கள் வழங்குவதை தொடங்கி வைத்தார்.

    அதனை தொடர்ந்து அண்ணா மறுமலர்ச்சித் திட்ட நூலகங்களில் பராம ரிக்கப்படும் பதிவேடுகள், புத்தகங்கள் இருப்பு பதிவேடு ஆகியவை கலெக்டர் ஆய்வு செய்தார்.

    அப்போது பள்ளி தலைமையாசிரியர்கள், மாணவர்களின் கற்றல் அறிவினை மேம்ப டுத்திட வாரம் ஒரு முறை நூலகங்களுக்கு அழைத்து வருவதுடன் தினசரி காலையில் ஒவ்வொரு வாரமும் மாணவர்கள் படித்த புத்தகங்கள் அடிப்ப டையில் சிறு போட்டிகள் நடத்தி ஊக்குவிக்க வேண்டும் என்று கலெக்டர் தெரிவித்தார்.

    இதில் திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் சிவராமன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் செய்வது குறித்து விவாதித்து தீர்மானம்
    • அங்கன்வாடி கட்டிடம் ஆகியன ரூ.10 லட்சத்து 50 ஆயிரம் செலவில் புணரமைத்தல்.

    கன்னியாகுமரி :

    திருவட்டார் ஊராட்சி ஒன்றியகுழு கூட்டம் தலைவர் ஜெகநாதன் தலைமையில் நேற்று நடைபெற்றது. வட்டார வளர்ச்சி அலுவலர்கள் யசோதா, சசி ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை தலைவர் பீனா குமாரி, கவுன்சிலர்கள் அனிதாகுமாரி, ஜெயசோ பியா, ஜெயஸ்ரீ, ராம்சிங், ஷீபா, சகாய ஆன்றணி, ராஜூ ஆகியோர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் திருவட்டார் ஊராட்சி ஒன்றிய பகுதிக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் செய்வது குறித்து விவாதித்து தீர்மானம் நிறைவேற்றப்ப ட்டது.

    2023-2024-ம் ஆண்டு க்கான 15-வது மத்திய நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் அண்டூர் வலியாற்று முகம் சாலை, விராலிக்காட்டு விளை-கண்ணனூர் சாலை, முளகுமூடு-வெட்டுக்காட்டு விளை ஆகிய இடங்களில் ரூ.15 லட்சத்துக்கு 75 ஆயிரம் செலவில் மழை நீரோடை அமைப்பது. மேக்குளத்தில் ஆழ்குழாய் கிணறு மற்றும் பைப் லைன் அமைத்தல் பூவன்கோட்டில் உள்ள பஞ்சாயத்து கிணற்றை தூர்வாரி குடிநீர் வசதி செய்தல், சுருளகோடு மருத்துவமனை முன்பு உள்ள குடிநீர் தொட்டியில் இருந்து புதிய பைப்லைன் நீட்டி மேம்பாடு செய்தல் ஆகிய பணிகளை ரூ.15 லட்சத்து 75 ஆயிரம் செலவில் மேற கொள்ளவும், மடத்துக்குளம் அருகே தடுப்புச்சுவர் அமைத்தல், சுவாமியார் மடம் சந்திப்பில் இருந்து வேர்க்கிளம்பி செல்லும் சாலையின் இருபுறமும் அலங்கார தரைகற்கள் அமைத்தல், நல்லபிள்ளை பெற்றான்குளம் மேற்குப்ப குதியில் பத்திரகாளி அம்மன் கோவிலின் பின்புறம் தடுப்புச்சுவர் அமைத்தல் ஆகிய பணிகளை ரூ.10 லட்சத்து 50 ஆயிரம் செலவில் மேற்கொள்ளுதல்

    திருவட்டார், திருவரம்பு, செருப்பாலூர், செங்கோடி, தச்சூர், செங்கோடி, முண்ட விளை ஆகிய இடங்களில் உள்ள தொடக்கப்பள்ளி கட்டிடங்கள் மற்றும் குட்டைகாடு அங்கன்வாடி கட்டிடம் ஆகியன ரூ.10 லட்சத்து 50 ஆயிரம் செலவில் புணரமைத்தல்.

    திருவட்டார் ஊராட்சி ஒன்றிய பொது நிதி திட்டத்தின் கீழ் பேச்சிப்பாறை, தோட்டவாரம் பள்ளி கட்டிடம் புணரமைத்தல் அருவிக்கரை, ஏற்றக்கோடு பகுதியில் கான்கிரீட் தளம் அமைத்தல் உட்பட பல்வேறு வேலைகள் ரூ.41 லட்சம் ரூபாய் செலவில் மேற்கொள் ளுதல் என்பன உள்பட பல் வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது.

    • ஒப்பிலான் ஊராட்சி முழுவதும் காவிரி கூட்டுக்குடிநீர் வசதி வேண்டும் என ஊராட்சி மன்ற தலைவர் அப்துல் ஹக்கீம் வலியுறுத்தியுள்ளார்.
    • பள்ளிவாசல் முன்பு பேவர் பிளாக் சாலை அமைக்கப்பட்டுள்ளது.

    சாயல்குடி

    கடலாடி ஒன்றியம் ஒப்பிலான் ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் அப்துல் ஹக்கீம். இவர் தனது மக்கள் பணி குறித்து கூறியதாவது:-

    மாவட்ட ஊராட்சி குழு துணைத்தலைவரும், இந்தப்பகுதி மாவட்ட கவுன்சிலருமான வேலுச்சாமியின் நிதியில் இருந்து ஒப்பிலான் ஒத்தவீடு வரை சிமெண்டு சாலை அமைக்கப்பட்டுள்ளது. அழக்குடி கிராமத்திற்கு தார்ச்சாலை, ஒப்பிலான் கிராமத்தில் இருந்து அழக்குடி மற்றும் ஒப்பிலான் ஒத்த வீடு வரை பைப் லைன் விஸ்தரிப்பு செய்யப்பட்டுள்ளது.

    ஒப்பிலான் கிராமத்தில் வாலிநோக்கம் சாலை முதல் ஒப்பிலான் தபால் நிலையம் வரை பேவர் பிளாக் சாலை அமைக்கப்பட்டுள்ளது. வாலிநோக்கம் சாலையில் இருந்து ஒப்பிலான் ரசூல் தெரு வரை சிமெண்டு சாலை போடப்பட்டுள்ளது. ஒப்பிலான் கிராமம் முழுவ தும் பைப் லைன் அமைத்து தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. ஒப்பிலான் பள்ளிவாசல் முன்பு பேவர் பிளாக் சாலை அமைக்கப் பட்டுள்ளது.

    ஒப்பிலான் கிராமத்தை பசுமை கிராமமாக மாற்றுவ தற்கு 700 மரக்கன்றுகள் நட்டு மினி பாரஸ்ட் அமைக்கப்பட்டுள்ளது. ஊராட்சி மன்ற தலைவராக உள்ள நான் எனது சொந்த நிதியில் ஒப்பிலான் கிராமத்தில் பழுதடைந்து இருந்த மின் கம்பங்களை மாற்றி 24 புதிய மின் கம்பங்கள் அமைத்து பொது மக்களுக்கு மின்சார பற்றாக்குறை இல்லாத நிலையை உருவாக்கி தந்துள்ளேன்.

    மேலும் ஒப்பிலான் ஊராட்சிக்கு கலெக்டர் மற்றும் மாவட்ட நிர்வாகம் நிதி ஒதுக்கி தரும் பட்சத்தில் கீழ்க்கண்ட பணிகளை மேற்கொள்வேன்.

    ஒப்பிலான் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இது வரை காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் கொண்டு வரப்படவில்லை. ஆகையால் கடுகு சந்தை கிராமத்தில் இருந்து ஒப்பிலான்- வாலிநோக்கம் சாலை வழியாக புதியதாக பைப் லைன் அமைத்து காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் ஒப்பி லான் ஊராட்சி முழுவதும் குடிநீர் கிடைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ஒப்பிலான் ஊராட்சி முழுவதும் உள்ள தெருக்களில் பேவர் பிளாக் சாலை, ஒப்பிலான் கிரா மத்தில் புதியதாக ஊராட்சி மன்ற கட்டிடம் கட்ட வேண்டும். அரசு இடத்தில் புதிய அங்கன்வாடி கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். ஒப்பிலான் மற்றும் ஒத்த வீடு கிராமங்களில் இடியும் நிலையல் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை அகற்றி விட்டு ஒப்பிலான் கிராமத்திற்கு 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மற்றும் ஒத்த வீடு கிராமத்தில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைத்து தர நடவடிக்கை எடுக்கப்படும்.

    ஒப்பிலான் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி யில் பழைய கட்டிடத்தை அகற்றிவிட்டு புதிய பள்ளி கட்டிடம் கட்டித்தர வேண்டும். வாலிநோக்கம்-ஒப்பிலான் சாலையில் இருந்து ஒப்பிலான் கடற்கரை செல்லும் சாலையை தார்சாலையாக அமைக்க வேண்டும்.

    ஒப்பிலான் கிராமத்தில் இருந்து ஒத்தப்பனை மாடசாமி கோவில் செல்லும் சாலையை தார் சாலையாக அமைக்க வேண்டும். பிள்ளையார்கோவில் பகுதியில் இருந்து ஒப்பிலான் கண்மாய் வரை தார்சாலை அமைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • செம்பனூர் ஊராட்சியில் புதிய கலையரங்கத்தை செந்தில்நாதன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.
    • புதிய கலையரங்கம் கட்டப்பட்டது.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் கல்லல் ஊராட்சிக்குட்பட்ட செம்பனூர் ஊராட்சியில் உள்ள நாச்சியப்பன் செட்டியார் என்பவர் தனக்கு சொந்தமான இடத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இலவசமாக வழங்கினார். இதையடுத்த அந்த இடத்தில் 2020-21-ம் ஆண்டு ஒன்றிய பொது நிதி திட்டத்தின்படி ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் ரூ 7.5 லட்சம் மதிப்பீட்டில் புதிய கலையரங்கம் கட்டப்பட்டது.

    இதனை சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் செந்தில்நாதன் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர் பிரவீனா, கல்லல் ஒன்றிய குழு தலைவர் சொர்ணம் அசோகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து செம்பனூர் அரசு பள்ளியில்12, 10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு செந்தில்நாதன் எம்.எல்.ஏ. பரிசுத்தொகை வழங்கி பாராட்டினார்.

    • ஊராட்சிகளில் மண்புழு உரம் மற்றும் இயற்கை உரம் தயாரிப்பு கூடம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
    • இயற்கை உரம் உற்பத்திக்கு குடில் அமைத்து தயாரிப்பதற்கு தேவையான தொட்டிகள் அமைக்கப்பட்டன.

    குடிமங்கலம் :

    மத்திய அரசின் தூய்மை இந்தியா மற்றும் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ், ஊராட்சிகளில் மண்புழு உரம் மற்றும் இயற்கை உரம் தயாரிப்பு கூடம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.முதற்கட்டமாக குடிமங்கலம் ஒன்றியத்தில் சில ஊராட்சிகள் மட்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு இயற்கை உரம் உற்பத்திக்கு குடில் அமைத்து தயாரிப்பதற்கு தேவையான தொட்டிகள் அமைக்கப்பட்டன.கிராமங்க ளில், தூய்மை பணியாள ர்களால் சேகரிக்கப்படும் குப்பையை தரம் பிரித்து மக்கும் கழிவுகளை பயன்படுத்தி இயற்கை உரம் தயாரிக்க திட்டமிடப்பட்டது.உற்பத்தியாகும் உரத்தை விற்பனை செய்து வருவாயை ஊராட்சி நிதியில் சேர்க்கவும் அரசு உத்தரவிட்டது.இத்தகைய மண்புழு உரம் தயாரிப்புக்கு ஊராட்சிகளில் 90 ஆயிரம் ரூபாய் செலவில் 8 தொட்டிகளுடன் இயற்கை உரக்குடில் அமைக்கப்பட்டது.உரம் தயாரிப்பு மற்றும் உரக்குடில் பராமரிப்புக்கு தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் ஆட்களும் நியமிக்கப்பட்டனர்.

    சில மாதங்கள் மட்டுமே இத்திட்டம் அனைத்து ஊரா ட்சிகளிலும் செயல்பாட்டில் இருந்தது. அதன்பின் குப்பையை தரம் பிரிப்பதில் தொய்வு ஏற்பட்டது.தற்போது அனைத்து ஊராட்சிகளிலும் இயற்கை உரக்குடில் காட்சிப்பொருளாகவும் சில இடங்களில் பராமரிப்பி ல்லாமல் மேற்கூரை, சுவர்கள் இடிந்தும் வருகின்றன.ஊராட்சி ஒன்றிய நிர்வாக ங்களின் அலட்சியத்தால் இத்திட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுவது தொடர்கதையாக உள்ளது. திட்டத்தை செயல்படுத்தாமல் கழிவுகளை ஆங்காங்கே குவித்து வைத்து தீ வைத்து எரிக்கப்படுகிறது.திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து திருப்பூர் கலெக்டர் கிராமங்களில் ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மத்திய அரசின் நிதியை நேரடியாக கிராம ஊராட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்யவேண்டும்.
    • கைது செய்த 8 பேரை போலீசார் விடுவித்தனர்.

    சீர்காழி:

    மத்திய அரசின் நிதியை நேரடியாக கிராம ஊராட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்யவேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து புளியந்துறை ஊராட்சி மன்ற தலைவர் நேதாஜி தலைமையில் ஊராட்சி மன்ற தலைவர்கள் சிலர் கடந்த வாரம் புத்தூரில் சாலைமறியல் போரா ட்டத்தில் ஈடுப்பட்டபோது 9 ஊராட்சி மன்ற தலைவர்களை போலீசார் கைது செய்து,

    அன்று மாலை 8பேரை விடுவித்தனர்.

    இதனிடையே ஊராட்சி தலைவர் நேதாஜி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    இந்நிலையில் புளிய ந்துறை ஊராட்சி மன்ற தலைவர் நேதாஜி மீது போட ப்பட்டுள்ள வழக்குகளை வாபஸ் பெற்று அவரை விடுவிக்கக்கோரியும், போலீசாரை கண்டித்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் சீர்காழியில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    மாநில செயற்குழு சாமுவே ல்ராஜ் கண்டன உரையாற்றினார்.

    ஒன்றிய செயலாளர்கள் ரவிச்சந்திரன், கேசவன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • பிரத்யேக இணையதளம் http://onlineppa.tn.gov.in/ உருவாக்கப்பட்டுள்ளது.
    • யு.பி.ஐ. கட்டணம், பாயிண்ட் ஆப் சேல் கருவி மூலமாகவும் தொகையை செலுத்த வசதி செய்யப்பட்டுள்ளது.

    திருப்பூர் :

    ஊராட்சிகளில் பொதுமக்கள் எளிதாக தங்களது வரி மற்றும் வரியில்லா இனங்களை செலுத்துவதற்கு வசதியாக http://vptax.tnrd.tn.gov.in/ என்ற இணையதளம் ஏற்படுத்தப்பட்டு நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இதில் வீட்டுவரி, சொத்துவரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி, தொழில் உரிமக்கட்டணம், இதர வரியில்லா வருவாய் இனங்கள் ஆகியவற்றை செலுத்தலாம். இதில் ஆன்லைன் பேமெண்ட், டெபிட், கிரெடிட் கார்டு, ஏ.டி.எம்.கார்டுகள், யு.பி.ஐ. கட்டணம், பாயிண்ட் ஆப் சேல் கருவி மூலமாகவும் தொகையை செலுத்த வசதி செய்யப்பட்டுள்ளது.

    ஊரக பகுதிகளில் பொதுமக்கள் மனைப்பிரிவுகளுக்கான அனுமதி, கட்டிட அனுமதி, தொழிற்சாலைகள் தொடங்க மற்றும் தொழில் நடத்த தேவையான அனு–ம–தி–களை எளி–தில் பெற ஒற்றை சாளர முறையில் இதற்கென பிரத்யேக இணையதளம் http://onlineppa.tn.gov.in/ உருவாக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் தாராபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கோவிந்தாபுரம் ஊராட்சியில் இணையதள வரி வசூல் செயல்பாடுகள் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது. இதில் மாவட்ட வருவாய் அதிகாரி ஜெய்பீம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லட்சுமணன், கோவிந்தாபுரம் ஊராட்சி தலைவர் விக்ரம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • விழுப்புரம் வடக்கு மாவட்டம் மயிலம் சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட வல்லம் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் தி.மு.க. அரசின் 2 ஆண்டு சாதனை விளக்கபொதுக்கூட்டம் தொண்டூர் ஊராட்சியில் நடைபெற்றது.
    • கூட்டத்திற்கு வல்லம் வடக்கு ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை தலைமை தாங்கினார்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் வடக்கு மாவட்டம் மயிலம் சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட வல்லம் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் தி.மு.க. அரசின் 2 ஆண்டு சாதனை விளக்கபொதுக்கூட்டம் தொண்டூர் ஊராட்சியில் நடைபெற்றது  கூட்டத்திற்கு வல்லம் வடக்கு ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் சின்னையா, ஒன்றியகவுன்சிலர்கள் கோமதி பிரபாகரன், இந்து மதி வெற்றிவேல், மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். ஒன்றிய கவுன்சிலர் அமிர்தம் அரி கிருஷ்ணன் அனை வரை யும் வரவேற்றார். ஒன்றிய குழு தலைவர் அமுதா ரவிக்குமார் தொடக்க உரை யாற்றினார். கூட்டத்தில் விழுப்புரம் வடக்கு மாவட்ட செய லாளரும் சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சருமான செஞ்சி மஸ்தான்கலந்து கொண்டு தி.மு.க. அரசின் 2 ஆண்டு சாதனைகளை விளக்கி சிறப்புரை ஆற்றினார். கூட்டத்தில் மாவட்ட கவுன்சிலர் அன்பு செழியன், அவைத்தலைவர் ஏழுமலை, பொருளாளர்பெருமாள், துணை செயலாளர்கள் ராஜலிங்கம், மணிமேகலை ரவிச்சந்திரன், மாவட்ட பிரதிநிதிகள்துரை திரு நாவுக்கரசு, ரவிச்சந்திரன், முன்னாள் பொருளாளர் தமிழரசன், பிரபாகரன், நீர் பெருத்தகரம் கோபால கிருஷ்ணன் மற்றும்ஊராட்சி மன்ற தலைவர்கள் ஒன்றிய, ஊராட்சி நிர்வாகிகள் அனைத்து அணி பொறுப் பாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    ஒன்றிய துணை செய லாளர் ஞானமூர்த்தி நன்றி கூறினார்.

    • ஊராட்சி தலைவர்களுடனான கலந்தாய்வு கூட்டத்தில் அமைச்சர் மனோ தங்கராஜ் பேச்சு
    • நீரினால் பரவும் நோய்களை தடுக்க குடிநீரில் குளோரின் கலப்பது அத்தியாவசியமாகிறது

    நாகர்கோவில் :

    கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட கிராம ஊராட்சி தலை வர்களுடனான மாவட்ட அளவிலான கலந்தாய்வு கூட்டம் கலெக்டர் ஸ்ரீதர் தலைமையில் மாவட்ட கலெக்டர் அலுவலக வருவாய் கூட்டரங்கில் நடைபெற்றது. கூட்டத்தில் அமைச்சர் மனோ தங்கராஜ் பேசியதாவது:-

    தமிழ்நாடு முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு ஆட்சிப்பெறுப்பேற்ற 2 ஆண்டுகளில் தமிழ் நாட்டுக்குட்பட்ட அனைத்து தரப்பட்ட மக்களும் பயன்பெறும் வகையில் அவர்களுக்கென பல்வேறு நலத்திட்ட உதவிகள் மற்றும் வளர்ச்சித்திட்ட பணிகளை அறிமுகப்படுத்தி சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.

    கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட ஊராட்சி பகுதிகளிலுள்ள அனைத்து வீடுகளிலும் சுத்தமான குடிநீர் விநியோகம், தனிநபர் கழிப்பறை, ஒருமுறை பயன்படுத்திய பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்தல், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் வாயிலாக மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரித்து உரம் தயாரித்து விவசாயிகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வருவது உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து பேசப்பட்டது.

    மேலும் இணையதளம் மூலமாக அனைத்து வீடுகளிலும் வரி வசூல் செய்யும் பொருட்டு இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட அனைத்து விவரங்களும் 100 சதவீதம் இலக்கை எட்டப்பட்டதா என்பதை துறை அலுவலர்கள் உறுதிபடுத்திட வேண்டும். அனைத்து ஊராட்சிகளிலும் குடிநீர் ஆதாரத்திற்கேற்ப, குடிநீர் விநியோகத்தை முறைபடுத்தி வழங்க வேண்டும்.

    ஜல் ஜீவன் இயக்கம் மற்றும் பிற திட்டங்களின் கீழ் நீராதாரங்களை உருவாக்கி வீட்டு குடிநீர் இணைப்புகள் வழங்கிட நடவடிக்கை மேற்கொண்டு அனைத்து ஊராட்சிகளும் இல்லந்தோறும் குடிநீர் என்ற தன்னிறைவு பெற்ற ஊராட்சியாக அறிவித்திட நடவடிக்கை மேற்கொ ள்ளப்பட வேண்டும்.

    தமிழ்நாடு குடிநீர் மற்றும் வடிகால் வாரியத்தின் மூலம் வழங்கப்படும் குடிநீரின் அளவை கண்காணிக்க இவ்வாரியத்தின் மூலம் நீரேற்றம் செய்யப்படும் மேல்நிலை தொட்டிகள் அனைத்திலும் நீரோட்ட கருவி பொருத்தப்பட வேண்டும். பதிவேடுகளில் தினந்தோறும் வழங்கப்படும் நீரின் அளவு பதியப்பட வேண்டும். தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் வழங்கப்படும் குடிநீருக்கான கேட்புகளுக்கு இதனை சரிபார்த்து தொகை செலுத்தப்பட வேண்டும்.

    நீரினால் பரவும் நோய்களை தடுக்க குடிநீரில் குளோரின் கலப்பது அத்தியாவசியமாகிறது. மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளில் குளோரி னேசன் செய்வதை எளிதாக்கும் பொருட்டு அனைத்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளிலும் குளோரின் கலப்பான பொருத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். குடிநீரின் தரத்தினை சரிபார்க்கும் பொருட்டு பயிற்சி அளிக்க ப்பட்ட சுய உதவிக்குழு உறுப்பினர்களிடம் ஒப்படைத்து குடிநீரின் தரம் சரிபார்க்கப்பட்ட விவரங்கள் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டுமென்பதோடு, கன்னியாகுமரி மாவட்டத்தை பசுமை மாவட்டமாக மாற்றும் வகையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் வருகை தந்துள்ள அனைத்து ஊராட்சி மன்றத்தலை வர்களும் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் திட்ட இயக்குநர்கள் பாபு (ஊரக வளர்ச்சி முகமை), இலக்குவன் (மகளிர் திட்டம்), உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) சாந்தி உட்பட துறை அலுவலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சக்கரக்கோட்டை ஊராட்சியில் அடிப்படை வசதிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது என தலைவர் யாழினி புஷ்பவள்ளி தெரிவித்தார்.
    • ஒரு கிலோ ரூ.60-க்கு விற்கப்படுகிறது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் யூனியன் சக்கரக்கோட்டை ஊராட்சி யில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து அதன் தலைவரும். முதுகலை என்ஜினீயரிங் பட்டதாரியுமான யாழினி புஷ்பவள்ளி கூறியதாவது:-

    ராமநாதபுரம மாவட்டத்திலேயே அதிக குடியிருப்புகளை கொண்ட, அதிக மக்கள் வசிக்க கூடிய பகுதியாக சக்கரக்கோட்டை ஊராட்சி உள்ளது. ஒரு நக ராட்சிக்கு இணையான மக் கள் தொகை கொண்ட இந்த ஊராட்சியில் மக்களின் ஆதரவுடன் வெற்றி பெற்ற நான் மக்களுக்கு தேவை யான அடிப்படை வசதி களை நிறைவேற்ற அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறேன்.

    ஊராட்சியில் அனைத்து பகுதிகளுக்கும் தரமான சாலை வசதி ஏற்படுத்தப் படும். பல புதிய விரிவாக்க பகுதிகளுக்கு புதிதாக சாலை உருவாக்க வேண்டி உள்ளது. இதுகுறித்து கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ், கூடுதல் கலெக் டர் பிரவீன்குமார், ஊராட்சி களின் உதவி இயக்குனர் பரமசிவம், யூனியன் ஆணை யாளர்கள் கவனத்திற்கு எடுத்து சென்றுள்ளேன்.

    இவ்வளவு அதிகமான மக்கள் தொகை கொண்ட ஊராட்சிக்கு தேசிய ஊரக வேலை திட்டத்தில் ஒரு சாலை பணி மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது. இது போதுமானது அல்ல. சாலை வசதியில்லாத பகுதிகளுக்கு முதல் கட்டமாக மெட்டல் சாலை அமைக்க அனுமதி வழங்க வேண்டும்.சக்கரக் கோட்டை ஊராட்சிக்கு சாலை பணிகளுக்கு கூடுத லாக நிதி ஒதுக்கீடு வழங்கு மாறு மாவட்ட நிர்வாகத்தை கேட்டுக்கொள்கிறேன்.

    சேதுநகர், நேருநகர்-1, 2-வது தெருக்களில் தார் சாலை, நேருநகர்-சேட் இப் ராகிம் நகர் இணைப்பு சாலை ரூ.16 லட்சத்தில், திருவாடானை எம்.எல்.ஏ. கருமாணிக்கம் தொகுதி நிதியில் ரூ.5 லட்சத்தில் மகாசக்தி நகரில் சாலை, வாணி கிராமத்தில் ரூ.13 லட்சத்தில் மேல்நிலை குடிநீர் தொட்டி அமைக்கப் பட்டுள்ளது.

    சிவஞானபுரத்தில் மகளிர் சுயஉதவி குழுவினர் பயன்படுத்தும் வகையில் ரூ.78 லட்சத்தில் மகால், 5 இடங்களில் பேவர்பிளாக் சாலைகள், கலை அரங்கம், காரிக்கூட்டம் இந்திரா நகரில் மயான சாலை, சின்டெக்ஸ்தொட்டி, சக்கரக்கோட்டையில் ரூ.22 லட்சத்தில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடி நீர் மேல்நிலை தொட்டி அமைக்கப்படும்.

    போக்குவரத்து நகர், மணி நகர், தென்றல் நகர், ஆதம் நகர், முல்லை நகர், தமிழ் நகர் பகுதிகளில் ஏராளமான புதிய மின் கம்பங்கள் அமைத்து தெரு விளக்கு வசதி செய்யப் பட்டுள்ளது. ஊராட்சி முழுவதும் குடிநீர் பைப் லைன்கள் விரிவாக்கம் செய்து குடிநீர் வினியோகிக் கப்படுகிறது. மேலவாணியில் செயல்படாமல் இருந்த நீர் தேக்க தொட்டி பயன்பாட் டிற்கு கொண்டுவரப்பட்டு பைப்லைன் அமைத்து காரிக் கூட்டம், வாணி, சக்கரக்கோட்டை, தவ்ஹீத் நகர் பகுதிகளில் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. மஞ்சன மாரியம்மன் நகரில் ஜவஜீவன் திட்டத்தில் 300 வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்கி குடிநீர் வினியோகம் செய்ய நட வடிக்கை எடுக்கப்பட்டு வரு கிறது.

    சிவஞானபுரத்தில் இருந்து ரெயில்வே தண்ட வாளம் வழியாக சக்கரக் கோட்டை முனி யசாமி கோவில் வழியாக தரவை பகுதி வரை ரூ.60 லட் சத்தில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி விரைவில் தொடங்கப்பட உள்ளது. இந்த பணிமுடிவடையும் இடத்தில் கழிவுநீர் சுத்திக ரிப்பு நிலையம் அமைத்து தண்ணீரை மறுசு ழற்சி செய்யும் திட்டமும் செயல்படுத்தப்பட உள்ளது. பாரதிநகர் தெற்கு பகுதியில் மக்கும் குப்பைகள் அனைத் தும் திடக்கழிவு மேலாண்மை செய்து திரவ இயற்கை உரம் தயாரித்து ஒரு கிலோ ரூ.60-க்கு விற்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×