search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உயர்வு"

    • கோவை மார்க்கெட்டுகளுக்கான தக்காளி வரத்து தற்போது மிகவும் குறைந்து உள்ளது.
    • தக்காளி ரூ.120க்கும், பீன்ஸ் ரூ.130க்கும் விற்பனை

    கோவை,

    கோவை மாநகரில் உக்கடம், காந்திபுரம், ஆர்.எஸ்.புரம் உள்பட 5 பகுதிகளில் காய்கறி சந்தைகள் உள்ளன.

    இங்கு உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்களில் இருந்தும் காய்கறிகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. இங்கு அவை ஏல முறையில் விற்பனை செய்யப்படுகின்றன.

    கோவை மார்க்கெட்டுகளுக்கான தக்காளி வரத்து தற்போது மிகவும் குறைந்து உள்ளது. இதனால் அவற்றின் விலை வேகமாக அதிகரித்து வருகிறது.

    இருந்தபோதிலும் பண்ணைப்பசுமை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.60க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    எனவே கோவை மார்க்கெட்டுகளில் தக்காளி விலை விரைவில் சரியும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால் இங்கு உள்ள காய்கறி சந்தைகளில் தற்போதும் ஒரு கிலோ தக்காளி ரூ.100 முதல் ரூ.120 வரை விற்கப்பட்டு வருகிறது.

    கோவையில் தக்காளி விலை ஒருபுறம் உயர்ந்து கொண்டே இருக்க, மற்றொரு புறம் மற்ற காய்கறிகளின் விலையும் கிடுகிடுவென உயர்ந்து காணப்படுகிறது.

    கோவை டி.கே. மார்க்கெட்டில் காய்கறிகளின் விலை கிலோ விவரம் (ரூபாயில்):

    வெண்டைக்காய்-60, பீர்க்கங்காய்-40, உருளைக்கிழங்கு-30, பாகற்காய்-40, புடலங்காய்-40, வாழைக்காய்-40, சுரைக்காய்-40, பூசணிக்காய்-30, முருங்கைக்காய்-60, அவரைக்காய்-100, பீன்ஸ்-130, கத்தரிக்காய்-60, கேரட்-80, எலுமிச்சை-80, சவ்சவ்-30, சின்னவெங்காயம்-120, பெரிய வெங்காயம் (3 கிலோ)-100, பீட்ரூட்-60.

    இதுகுறித்து கோவை டி.கே.காய்கறி மார்க்கெட் வியாபாரி ஜெயக்குமார் என்பவர் கூறுகையில், கோவையில் பருவமழை பெய்து வருகிறது. எனவே மார்க்கெட்டுக்கு போதிய காய்கறிகள் வரத்து இல்லை. இதனால் அவற்றின் விலை அதிகரித்து உள்ளது. கோவை மார்க்கெட்டுக்கு சரக்கு லாரிகளின் வரத்து அதிகரிக்கும்போது, காய்கறிகளின் விலை படிப்படியாக குறைந்துவிடும் என்றார்.

    • ஏராளமான விவசாயிகள் தற்போது சைனீஷ் வகை காய்கறிகளை அதிகளவு உற்பத்தி செய்து வருகின்றனர்.
    • புருக்கோலி தற்போது ரூ.100 முதல் 130 வரை கொள்முதல் விலை அதிகரித்துள்ளது.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டத்தில் தேயிலைக்கு அடுத்தபடியாக உருளைக்கிழங்கு, கேரட், பீட்ரூட், முட்டைகோஸ், முள்ளங்கி, டர்னீப், பீன்ஸ் உள்ளிட்ட மலை காய்கறிகள் பயிரிடப்படுகின்றன.

    இதுதவிர ஏராளமான விவசாயிகள் தற்போது சைனீஷ் வகை காய்கறிகளை அதிகளவு உற்பத்தி செய்து வருகின்றனர். இங்கு பயிரிடப்படும் சைனீஷ் வகை காய்கறிகள், வெளி மாநிலம், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.சைனீஷ் வகை காய்கறிகளுக்கு எப்போதும் சீரான விலை கிடைத்து வருகிறது.

    இதனால் அவற்றை பயிரிடுவதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். நீலகிரியில் உற்பத்தியாகும் புருக்கோலிக்கு கடந்த சில வாரஙகளுக்கு முன்புவரை, ஒரு கிலோ ரூ.80 முதல் 100 வரை கொள்முதல்விலை கிடைத்து வந்தது. தற்போது ரூ.100 முதல் 130 வரை கொள்முதல் விலை அதிகரித்து உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

    • குறைந்த அளவில் பயிரிடப்பட்டுள்ள இடங்களில் தற்போது பகலில் வெயில், மாலை, இரவில் மழையால் தக்காளி பழங்கள் அழுகி வருகிறது.
    • அதே நேரம் ஆந்திராவில் இருந்து தமிழக மார்க்கெட்டுகளுக்கு வந்து கொண்டிருந்த தக்காளி வரத்தும் சரிந்துள்ளது.

    சேலம்:

    சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, தேனி, விருதுநகர், நெல்லை, திண்டுக்கல், கரூர், ஈரோடு மாவட்டங்களில் தக்காளி விளைச்சல் எதிர்பார்த்த அளவு இல்லை.

    குறைந்த அளவில் பயிரிடப்பட்டுள்ள இடங்களில் தற்போது பகலில் வெயில், மாலை, இரவில் மழையால் தக்காளி பழங்கள் அழுகி வருகிறது.

    அதே நேரம் ஆந்திராவில் இருந்து தமிழக மார்க்கெட்டுகளுக்கு வந்து கொண்டிருந்த தக்காளி வரத்தும் சரிந்துள்ளது. இதனால் மாவட்டத்திற்கு தக்காளி வரத்து பாதியாக சரிந்துள்ளது. இதனால் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    சேலம் உழவர் சந்தைகளில் 50 முதல் 55 ரூபாய்க்கு தக்காளி விற்பனை செய்யப்படுகிறது. வெளிமார்க்கெட்டில் நாட்டு தக்காளி முதல் ரகம் 60 ரூபாய்க்கு விற்றது. தற்போது ஒரே நாளில் ரூ.30 உயர்ந்து 90 ரூபாயாக அதிகரித்துள்ளது.

    55 ரூபாய்க்கு விற்ற 2-ம் ரகம், 70 ரூபாயாக உயர்ந்துள்ளது. குறிப்பாக நேற்று 25 கிலோ எடை கொண்ட ஒரு கிரேடு தக்காளி 1500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று ஒரே நாளில் 25 கிலோ எடை கொண்ட ஒரு கிரேடு தக்காளி 700 ரூபாய் வரை அதிகரித்து, 2,200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் கிலோவிற்க்கு 30 ரூபாய் வரை விலை உயர்ந்து ஒரு கிலோ 90 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வரும் நாட்களில் மேலும் தக்காளியின் விலை உயரும் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த விலை உயர்வால் நடுத்தர மக்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர்.

    சேலம் உழவர் சந்தையில் மற்ற காய்கறிகள் விலை விவரம்(ஒரு கிலோவுக்கு) வருமாறு:-

    உருளைக்கிழங்கு முதல் தரம் ரூ.60, 2-ம் தரம் ரூ.30, சின்னவெங்காயம் முதல் தரம் ரூ.60, 2-ம் தரம் ரூ.55, பெரியவெங்காயம் முதல் தரம் ரூ.25, 2-ம் தரம் ரூ.22, பச்சை மிளகாய் முதல் தரம் ரூ.78, 2-ம் தரம் ரூ.76, கத்தரிக்காய் முதல் தரம் ரூ.44, 2-ம் தரம் ரூ.40, வெண்டைக்காய் முதல் தரம் ரூ.36, 2-ம் தரம் ரூ.34, முருங்கைக்காய் முதல் தரம் ரூ.40, 2-ம் தரம் ரூ.20, பீர்க்கங்காய் முதல் தரம் ரூ.50, 2-ம் தரம் ரூ.46, சுரைக்காய் முதல் தரம் ரூ.25, 2-ம் தரம் ரூ.22, முள்ளங்கி முதல் தரம் ரூ.35, 2-ம் தரம் ரூ.32, சேனை கிழங்கு முதல் தரம் ரூ.50, 2-ம் தரம் ரூ.30, கருணைக்கிழங்கு முதல் தரம் ரூ.50, 2-ம் தரம் ரூ.45.

    • முட்டை உற்பத்தி குறைந்த நிலையில் தேவை அதிகரித்துள்ளதால் தொடர்ந்து விலை உயர்ந்து வருவதாக பண்ணையாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • 141 ரூபாயாக இருந்த கறிக்கோழி விலை 143 ரூபாயாக உயர்ந்தது.

    நாமக்கல்:

    நாமக்கல் மண்டலத்தில் 8 கோடிக்கு அதிகமான முட்டை கோழிகள் வளர்க்கப்படுகின்றன. இதன் மூலம் 6 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

    இந்த முட்டைகள் உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதற்கான விலை நாமக்கல்லில் தினமும் நிர்ணயம் செய்யப்படுகிறது.

    இந்நிலையில் நேற்று முட்டை உற்பத்தியாளர்கள் மற்றும் வியாபாரிகள் ஆலோசனை கூட்டம் நாமக்கல்லில் நடந்தது. இதில் முட்டையின் தேவை, உற்பத்தி குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. பின்னர் முட்டை விலையை மேலும் 5 காசுகள் உயர்த்த முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி 525 காசுகளாக இருந்த முட்டை விலை 530 காசுகளாக உயர்ந்தது. முட்டை உற்பத்தி குறைந்த நிலையில் தேவை அதிகரித்துள்ளதால் தொடர்ந்து விலை உயர்ந்து வருவதாக பண்ணையாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதேபோல பல்லடத்தில் கறிக்கோழி உற்பத்தியா ளர்கள் வியாபாரிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் கறிக்கோழி விலையை மேலும் 2 ரூபாய் உயர்த்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி 141 ரூபாயாக இருந்த கறிக்கோழி விலை 143 ரூபாயாக உயர்ந்தது.

    முட்டை கோழி விலை எந்த மாற்றமும் இல்லாமல் 95 ரூபாயாக நீடிக்கிறது.

    • மெட்ரோ ரெயிலில் பயணித்தால் கட்டணத்தில் சலுகை உண்டு. மின்சார ரெயிலில் பயணிப்பவர்களுக்கு சலுகை கிடைக்காது.
    • பார்க்கிங் கட்டணம் வசூலிப்பதில் மெட்ரோ ரெயில் நிலையம் பாரபட்சம் காட்டுவது பயணிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.

    சென்னை:

    சென்னையில் மின்சார ரெயில் மற்றும் மெட்ரோ ரெயில் போக்குவரத்து பயdisணிகளுக்கு போக்குவரத்து நெருக்கடியை குறைத்துள்ளது.

    2-ம் கட்ட மெட்ரோ ரெயில் பணிகளும் முடிந்துவிட்டால் சென்னையில் எந்த பகுதிக்கும் எளிதாக சென்று வர முடியும்.

    அதற்கு ஏற்ற வகையில்தான் மின்சார ரெயில் நிலையங்களுடன் மெட்ரோ ரெயிலும் இணைக்கப்படுகிறது. பரங்கிமலை, கிண்டி, திரிசூலம் மின்சார ரெயில் நிலையங்களில் இருந்து மெட்ரோ ரெயில் நிலையங்களுக்குள் நடந்து செல்லும்படி வசதிகள் செய்யப்பட்டு உள்ளன.

    இதனால் தற்போது இரு சக்கர வாகனங்களில் தொலை தூரங்கள் வரை செல்வதை தவிர்த்து விட்டு பலர் மெட்ரோ நிலைய பார்க்கிங்கில் டூ வீலரை நிறுத்தி செல்கிறார்கள். பார்க்கிங் கட்டணமாக 6 மணி நேரம் வரை ரூ.10-ம் 12 மணி நேரம் வரை ரூ.15-ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

    இந்த நிலையில் வருகிற 14-ந்தேதி முதல் பார்க்கிங் கட்டணத்தை ஒரு மடங்கு அதிகமாக உயர்த்தி மெட்ரோ ரெயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இனி 6 மணி நேரம் வரை ரூ.20, 12 மணி நேரம் வரை ரூ.30, 12 மணி நேரத்துக்கு மேல் ரூ.40 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

    மாதாந்திர கட்டணமும் 6 மணி நேரத்துக்கு ரூ. 500-ல் இருந்து ரூ.750 ஆகவும், 12 மணி நேரத்துக்கு ரூ.1000-ல் இருந்து ரூ.1,500 ஆகவும் உயர்த்தப்பட்டு உள்ளது.

    பார்க்கிங் கட்டணம் வசூலிப்பதில் மெட்ரோ ரெயில் நிலையம் பாரபட்சம் காட்டுவது பயணிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.

    அதாவது மெட்ரோ ரெயிலில் பயணித்தால் கட்டணத்தில் சலுகை உண்டு. அதாவது பழைய கட்டணமே வசூலிக்கப்படும். மின்சார ரெயிலில் பயணிப்பவர்களுக்கு இந்த சலுகை கிடைக்காது. அவர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும்.

    இரண்டு நிறுவனங்களும் அரசு நிறுவனங்கள்தான். இதில் ஏன் பயணிகளிடம் பாகுபாடு காட்ட வேண்டும் என்று மின்சார ரெயில் பயணிகள் ஆதங்கப்படுகிறார்கள்.

    • மீன் விலை உயர்ந்துள்ளது.
    • ஒரு கிலோவிற்கு ரூ.50 முதல் ரூ.200 வரை மீன்விலை அதிகரித்துள்ளது.

    ராமநாதபுரம்

    தமிழ்நாடு மீன்பிடி ஒழுங்குமுறை சட்ட விதிமுறையின்படி மீன்களின் இனப்பெருக்கத் திற்காக 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப் படும். அந்த வகையில் தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 15-ந்தேதி முதல் ஜூன் 14-ந்தேதி வரையிலான 61 நாட்கள் மீன்பிடி தடைக் காலம் அமல்படுத்தப்பட்டு உள்ளது.

    இதனால் ஏப்ரல் 15-ந்தேதி முதல் விசைப்ப டகு மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்லக் கூடாது என அறிவுறுத்தப்பட் டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் விசைப் படகுகள் அனைத்தும் கரை ஏற்றம் செய்யப்பட்டு பழுது நீக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் தற்போது சிறிய படகுகள் மூலம் மீனவர்கள் மீன்பிடித்து வருகின்றனர்.

    ராமநாதபுரம் மாவட்டம் சின்ன ஏர்வாடி, கீழக்கரை, பெரியபட்டினம், முத்துப்பேட்டை மற்றும் திருப்பாலைக்குடி, மோர்ப்பண்ணை, முள்ளி முனை, காரங்காடு, வட்டா ணம், பாசிப்பட்டினம், எஸ்.பி.பட்டினம் உள்பட

    20-–க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் மீன்பிடி தொழில் பெரிய அளவில் இல்லை.

    இதனால் மீன் மார்க் கெட்டுக்கு கடந்த சில வாரங்களாக மீன்வரத்து வெகுவாக குறைந்து காணப்பட்டது. இதனால் மீன்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. கடற்கரை பகுதியில் வெளியூர் வியாபாரிகள் ஏராளமானோர் வந்து செல்வதால் மீன்களை போட்டி போட்டு கொண்டு அதிக விலை கொடுத்தும் வாங்கி செல்கின்றனர்.

    மேலும் நகரை மீன், விளைமீன், முரல் போன்ற ஒரு சில மீன் வகைகளை தவிர பல்வேறு வகையான மீன் வகைகள் விற்பனைக்கு வருவதில்லை. இதனால் மீன் பிரியர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

    நகரை, செங்கனி, பாறை மீன்கள் ஒரு கிலோ

    ரூ.600-க்கும், முரல், கலிங்க முரல், நண்டு போன்றவை ரூ.500 முதல் ரூ.700 வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது. ராமநாதபுரம், கீழக்கரை, தேவிபட்டிணம் போன்ற மீன் மார்க்கெட்டில் வழக்கத்தை விட ஒரு கிலோவிற்கு ரூ.50 முதல் ரூ.200 வரை மீன்விலை அதிகரித்துள்ளது. விலை அதிகரித்தாலும், அசைவ பிரியர்கள் மீன்களை ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர்.

    • பூங்களை உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியா பாரிகளுக்கும், பரமத்தி வேலூரில் செயல்பட்டு வரும் 2 தினசரி பூக்கள் ஏலம் மார்க்கெட்டிற்கும் கொண்டு சென்று விற்பனை செய்து வரு கின்றனர்.
    • பூக்களை ஏலம் எடுப்பதற்கு கரூர் மாவட்டம் மற்றும் நாமக்கல் மாவட்ட பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா தண்ணீர் பந்தல், கபி லர்மலை, நகப்பா ளையம், செல்லப்பம்பா ளையம், அண்ணா நகர், ஆனங்கூர், பாகம்பாளை யம், கழுவன் காடு உள்ளிட்ட பல்வேறு பகுதி களில் குண்டு மல்லிகை, முல்லை பூ, காக்கட்டான், சம்பங்கி, சாமந்திப்பூ, செவ்வந்தி, ரோஜா, அரளி உள்ளிட்ட பல்வேறு பூக்களை விவசா யிகள் பயிர் செய்துள்ளனர்.

    இங்கு விளைவிக்கப்ப டும் பூங்களை உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியா பாரிகளுக்கும், பரமத்தி வேலூரில் செயல்பட்டு வரும் 2 தினசரி பூக்கள் ஏலம் மார்க்கெட்டிற்கும் கொண்டு சென்று விற்பனை செய்து வரு கின்றனர்.

    பூக்களை ஏலம் எடுப்பதற்கு கரூர் மாவட்டம் மற்றும் நாமக்கல் மாவட்ட பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர்.

    கடந்த சில வாரங்களாக பூக்கள் விலை ஏற்ற, இறக்க மாக இருந்து வருகிறது. தற்போது கோடை காலம் தொடங்கி, வெயில் அதி கரித்துள்ளதால் பூக்களின் விளைச்சல் அதிகரித்துள்ளது.

    இந்நிலையில் கடந்த வாரம் குண்டு மல்லிகை ஒரு கிலோ ரூ.300-க்கும், முல்லைப் பூ ரூ.250-க்கும், ரோஜா ரூ.150-க்கும், அரளி ரூ.100-க்கும் சம்பங்கி ரூ.50-க்கும் விற்பனையானது.

    நேற்று குண்டு மல்லிகை ஒரு கிலோ ரூ.400-க்கும், முல்லைப் பூ ரூ.400-க்கும், ரோஜா ரூ.220-க்கும், அரளி ரூ.150-க்கும், சம்பங்கி ரூ.100-க்கும் விற்பனையானது.

    இன்று அமாவாசை என்பதால் பூக்களின் விலை உயர்ந்துள்ளதாக வியா பாரிகள் தெரிவித்தனர். பூக்கள் விலை உயர்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • புதன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஏலம் நடைபெற்று வருகிறது.
    • நேந்திரன் வாழைத்தார் கிலோ ஒன்றுக்கு அதிக பட்சமாக ரூ.40 வரை விற்பனையானது.

    மேட்டுப்பாளையம்

    மேட்டுப்பாளையத்தில் இருந்து அன்னூர் செல்லும் சாலையில் தென்திருப்பதி நால்ரோடு பகுதியில் வாழைக்காய் ஏலம் மையம் செயல்பட்டு வருகிறது.இங்கு மேட்டுப்பாளையம், அன்னூர்,புளியம்பட்டி, சிறுமுகை,காரமடை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் விவசாயிகள் தாங்கள் விளைவித்த வாழைத்தார்களை கொண்டு வந்து விற்பனை செய்வது வழக்கமாக இருந்து வருகிறது. அதனை இந்த ஏல மையத்தில் ஏலம் விட்டு வியாபாரிகள் போட்டி போட்டு எடுத்துச்செல்வதும் வழக்கம்.

    இந்த மையத்தில் புதன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஏலம் நடைபெற்று வருகிறது. அதன் அடிப்படையில் நேற்று நடைபெற்ற ஏலத்தில் நேந்திரன், கதளி,பூவன், தேன் வாழை, ரஸ்தாளி, ரோபஸ்டா,செவ்வாழை உள்ளிட்ட பல்வேறு வகை வாழைத்தார்கள் விவசாயிகளால் இந்த மையத்திற்கு கொண்டு வரப்பட்டன. நேற்றைய ஏலத்தில் நேந்திரன் வாழைத்தார் கிலோ ஒன்றுக்கு அதிக பட்சமாக ரூ.40 வரையும், கதளி வாழைத்தார் கிலோ ஒன்றிற்கு அதிகபட்சமாக ரூ.25 வரையும் விற்பனையானது.

    மேலும்,பூவன் வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.500 வரையும்,தேன் வாழை தார் ஒன்றிற்கு அதிகபட்சமாக ரூ.475 வரையும், ரஸ்தாளி தார் ஒன்றிற்கு அதிகபட்சமாக ரூ.450 வரைக்கும், ரோபஸ்டா அதிகபட்சமாக தார் ஒன்றிற்கு அதிகபட்சமாக ரூ.450 வரையும், செவ்வாழை அதிகபட்சமாக ரூ.800 வரையும் ஏலம் போனது. குறிப்பாக நேந்திரன் விலை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கிலோ ஒன்றிற்கு ரூ.20 வரை விற்பனையான நிலையில் தற்போது விலை இரு மடங்காக உயர்ந்துள்ளது.

    இதுகுறித்து ஏல மையத்தின் நிர்வாகிகள் சின்னராஜ் மற்றும் வெள்ளியங்கிரி கூறுகையில் மேட்டுப்பாளையம், அன்னூர், புளியம்பட்டி, சிறுமுகை, காரமடை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விளைவிக்கப்பட்ட நேந்திரன் வாழைத்தார்கள் கடந்த பல நாட்களுக்கு முன்னர் சூறாவளி காற்றின் காரணமாக வரத்து அதிகமாக இருந்தன. இதனால் கடும் விலை வீழ்ச்சி அடைந்து அதிகபட்சமாக ரூ.20 வரை மட்டுமே ஏலம் போனது.

    தற்போது நேந்திரன் வாழைத்தார்களின் வரத்து குறைவாக இருப்பதாலும்,கேரள வியாபாரிகளின் வரத்து அதிகரித்துள்ளதாலும் அதிகபட்சமாக நேந்திரன் வாழைத்தார் கிலோ ஒன்றிற்கு ரூ.40 வரை ஏலம் போனது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர் என்றனர்.

    • எருமப்பட்டி சுற்று வட்டார பகுதிகளில் அதிக அள வில் பூக்கள் பயிர் செய்யப்பட்டு வருகிறது.
    • பூக்களின் தேவை அதிகரித்து இருப்பதால் அவற்றின் விலை கிடுகிடு என உயர்ந்து இருப்பதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம், எருமப்பட்டி சுற்று வட்டார பகுதிகளில் அதிக அள வில் பூக்கள் பயிர் செய்யப்பட்டு வருகிறது. இந்த பூக்கள் நாமக்கல் பஸ்நிலையத்தில் உள்ள தினசரி பூ மார்க்கெட்டுக்கு விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. அந்த வகையில் சுமார் 2 டன் வரை பூக்கள் விற்பனைக்கு வரும். இவற்றை வியாபாரிகள் வாங்கி சென்று நகர் முழுவதும் விற்பனை செய்கின்றனர்.

    இங்கு கடந்த வாரம் கிலோ ரூ. 240-க்கு விற்பனை செய்யப்பட்ட மல்லிகை பூ நேற்று கிலோ ரூ. 480-க்கும், கடந்த வாரம் கிலோ ரூ. 140-க்கு விற்பனை செய்யப்பட்ட முல்லை பூக்கள், நேற்று கிலோ ரூ. 280-க்கும் விற்பனை செய்யப்பட்டன.

    இதேபோல் கடந்த வாரம் கிலோ ரூ. 20-க்கு விற்பனை செய்யப்பட்ட சம்பங்கி பூக்கள் நேற்று கிலோ ரூ. 120-க்கும், கடந்த வாரம் கிலோ ரூ. 100-க்கு விற்பனை செய்யப்பட்ட அரளி பூ நேற்று கிலோ ரூ. 200-க்கும் விற்பனையானது. சித்ரா பவுர்ணமியையொட்டி கோவில்க ளில் இன்று (வெள்ளிக்கிழமை) சிறப்பு பூஜை நடைபெறும். எனவே பூக்களின் தேவை அதிகரித்து இருப்பதால் அவற்றின் விலை கிடுகிடு என உயர்ந்து இருப்பதாக விவசாயிகள் தெரிவித்தனர். 

    • ஒரு ஏக்கர் நிலத்தில் அன்னாசி பயிரிட ஒன்றரை லட்சம் ரூபாய் வரை செலவாகும்.
    • நல்ல விலை கொடுத்து வியாபாரிகள் வந்து அன்னாசியை வாங்கிச் செல்கிறார்கள்.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி மேற்கு மாவட்டத்தில் ரப்பர் தோட்டங்களில் முன்பு ஊடுபயிராக வாழைகள் அதிக அளவில் பயிரிடப்பட்டு வந்தன.

    ஆனால் இப்போது ரப்பர் தோட்டத்தில் ஊடு பயிரின் இடத்தை அன்னாசி செடிகள் பிடித்து விட்டன. ரப்பர் மரத்தை 25 ஆண்டுகள் வளர்த்து விட்டு அதை வெட்டிவிட்டு புதிய ரப்பர் செடிகள் நடுவார்கள். அது ரப்பர் மரமாகி பால் வெட்டுவதற்கு சுமார 7 வருடங்கள் ஆகும்.

    இந்த இடைப்பட்ட காலங் களில் ரப்பர் தோட்டங்களில் ஊடு பயிராக அன்னாசியைப் பயிரிட குத்தகைக்கு வழங்கு வார்கள். இதில் இரண்டு வகையான லாபம் தோட் டத்துக்கு உரிமையாளருக்கு கிடைக்கிறது. குத்தகைப் பணம் மற்றும் ரப்பர் செடிகள் பராமரிப்பு இலவசமாகக் கிடைக்கும்.

    அன்னாசியை பொறுத்த வரை குறுகிய காலத்திலேயே பலன் தரும். ஒரு ஏக்கர் நிலத்தில் அன்னாசி பயிரிட ஒன்றரை லட்சம் ரூபாய் வரை செலவாகும். செடிக்கு செடி ஒன்றரை அடி, வரிசைக்கு ஒன்றரை அடி என்று இடைவெளி விட்டு நட வேண்டும். இப்படி பத்து அடி வரிசை நடவு செய்த பிறகு ரெண்டு அடி இடை வெளி விட்டு அடுத்த வரிசையை நட வேண்டும். ஒரு வருடத்தில் காய் நன்கு பழமாகும் தருவாய் வந்ததும் காய்களை பறித்து சந்தையில் விற்கலாம்.

    இப்போது கோடை காலம் என்பதால் மார்க் கெட்டில் அன்னாசி யின் தேவை அதிகமாக இருப்ப தால் பெரும்பாலும் வியா பாரிகள் தோட்டத்துக்கு வந்தே அன்னாசிப்பழங் களை வாங்கி செல்கிறார்கள். இரண்டு வருடத்தில் ஒரு ஏக்கர் நிலத்தில் 30 டன் அன்னாசி பழம் கிடைக்கும். கடந்த ஆண்டு துவக்கத்தில் இருபது ரூபாய்க்கும் கீழ் அன்னாசியின் விலை இருந்தது. இப்போது கிலோ வுக்கு 53 ரூபாய் கிடைக்கிறது.

    இது குறித்து அருவிக்க ரையைச்சேர்ந்த அன்னாசி பழ விவசாயி ராதாகிருஷ் ணன் கூறியதாவது;-

    கடந்த பத்து ஆண்டுகளில் கன்னியாகுமரி மாவட்டதில் அன்னாசிப்பழங்களின் உற்பத்தி அதிகரித்துள்ளது. பத்தாயிரம் ஏக்கர் நிலப்ப ரப்புக்கு மேல் கன்னியாகுமரி மாவட்டத்தில் அன்னாசி சாகுபடி நடக்கிறது. இங்கி ருந்து சென்னை, விஜய வாடா, பெங்களூரு, மராட் டியம் உட்பட அனைத்து பகுதிகளிலும் அன்னாசி ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    ஒரு அன்னாசி அரை கிலோவில் இருந்து இரண்டரை கிலோ வரை சராசரி எடை கொண்டதாக இருக்கும். தற்போது அன்னாசி பழம் கிலோவிற்கு 53 ரூபாய் மார்க்கெட் விலை உள்ளது. பச்சை காய் என்றால் 46 ரூபாய் விலை போகிறது.

    எங்களிடம் இருந்து அன்னாசியை வாங்கும் வியாபாரிகள் அன்னாசியை ஏ, பி, சி என அன்னாசியின் அளவை கணக்கிட்டு தரம் பிரிக்கிறார்கள். இதனால் கடைகளில் தற்போது கிலோவிற்கு 60 முதல் 80 ரூபாய்க்கு மேல் விலை கொடுத்து பொதுமக்கள் வாங்க வேண்டியிருக்கும். கொரோனா காலத்தில் ரப்பர் விவசாயிகளும், வியாபாரிகளும் பெரும் நஷ்டத்தை சந்தித்தனர்.

    இப்போதுதான் அதிலிருந்து மீண்டு வருகின்றனர். தற்போது கோடைகாலம் என்பதால் சுற்றுலா தலங்களுக்கு செல்லும் மக்கள் அதிகரித் துள்ளனர். இதனால் அவர்கள் அன்னாசிபழங்களை விரும்பிச் சாப்பிடுகின்றனர். ஆகவே அன்னாசியின் தேவை அதிகரித்துள்ளது.

    இதனால் நல்ல விலை கொடுத்து வியாபாரிகள் தோட்டங்களுக்கு வந்து அன்னாசியை வாங்கிச் செல்கிறார்கள். நாளுக்கு நாள் குமரிமாவட்டத்தில் அன்னாசி சாகுபடி செய்யும் பரப்பளவு அதிகரித்து வருகிறது.

    • இந்நிலையில் கடந்த வாரத்தை விட, இந்த வாரம் வாழைத்தார்களின் விலை அதிகரித்துள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தள்ளனர்.
    • நேற்று நடைபெற்ற ஏலத்திற்கு 1500 வாழைத்தார்களை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலுார் தாலுகா பாண்டமங்கலம், பொத்த னுார், நன்செய்இடையாறு, குப்பிச்சிபாளையம், மோ கனுார், பரமத்திவேலுார், அண்ணாநகர், பிலிக்கல்பா ளையம், ஆனங்கூர், ஜேடர்பாளையம், கொத்த மங்கலம், சிறுநல்லி கோவில், அய்யம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதி களில் விவசாயிகள் பூவன், பச்சநாடன், கற்பூரவல்லி, ரஸ்தாளி, மொந்தன் உள்ளிட்ட பல்வேறு வகையான வாழைகளை பயிரிட்டுள்ளனர்.

    வாழைத்தார்களை உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கும், பரமத்திவேலுாரில் செயல்பட்டு வரும் தினசரி ஏல மார்க்கெட்டிற்கும் கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர்.

    இங்கு ஏலம் எடுக்கப்ப டும் வாழைத்தார்களை, தமிழ்நாட்டில் உள்ள நாமக்கல், சேலம், ஈரோடு, கோவை, நீலகிரி, கரூர், திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும், ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும் லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது.

    இந்நிலையில் கடந்த வாரத்தை விட, இந்த வாரம் வாழைத்தார்களின் விலை அதிகரித்துள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தள்ளனர். நேற்று நடைபெற்ற ஏலத்திற்கு 1500 வாழைத்தார்களை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். இதில் பூவன் வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.500-க்கும், ரஸ்தாலி வாழைத்தார் ரூ.350-க்கும், பச்சைநாடன் வாழைத்தார் ரூ.300-க்கும், கற்பூரவள்ளி வாழைத்தார் ரூ.400-க்கும், மொந்தன் வாழைக்காய் ஒன்று ரூ.5 க்கும் விற்பனையானது.

    வரத்து குறைவு மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வீடுகளில் கனி வைத்து வழிபடுவர், கோவில் விசேஷங்கள் தொடர்ந்து வருவதால் வாழைத்தார் விலை உயர்ந்துள்ளதாக வியா பாரிகள் தெரிவித்தனர்.

    • எதிர்வரும் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு இன்று ஆடுகள் விற்பனை களைகட்டியது.
    • ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு விலை உயர்ந்துள்ளது. இறைச்சி கடைக்காரர்களும், வியாபாரிகளும் போட்டி போட்டு ஆடுகளை வாங்கி சென்றனர்.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் கொளத்தூரில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை சந்தை நடைபெறும். மிளகாய் மற்றும் ஆடு, மாடு விற்பனைக்கு மிகவும் பிரசித்தி பெற்ற இந்த சந்தையில், எதிர்வரும் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு இன்று ஆடுகள் விற்பனை களைகட்டியது.

    ஆடுகள் வரத்து அதிகமாக இருந்த நிலையில், கடந்த வாரம் 10 கிலோ எடையுள்ள ஆடு ரூ.10 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரத்து 500 வரை விலை போனது. இன்று 10 கிலோ எடையுள்ள ஆடு ரூ.13 ஆயிரம் முதல் ரூ.13 ஆயிரத்து 500 வரை விற்பனையானது.

    ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு விலை உயர்ந்துள்ளது. இறைச்சி கடைக்காரர்களும், வியாபாரிகளும் போட்டி போட்டு ஆடுகளை வாங்கி சென்றனர்.ரம்ஜான் பண்டிகை எதிரொலி கொளத்தூர் சந்தையில் ஆடுகள் விலை உயர்வு 

    ×