search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாழைத்தார்"

    • வெள்ளாளன்விளையில் இருந்து வட்டன்விளை செல்லும் பகுதியில் உள்ள தோட்டங்களில் தண்ணீர் தேங்கியது.
    • தோட்டங்களில் புகுந்த தண்ணீர் வடியாமல் கழுத்தளவுவிற்கு இன்னும் தேங்கி கிடக்கிறது.

    உடன்குடி:

    தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த மாதம் 17, 18-ந் தேதிகளில் கனமழையால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் மாவட்டத்தில் விளைநிலங்களில் தண்ணீர் புகுந்து கடும் சேதத்தை ஏற்படுத்தியது.

    மேலும் உடன்குடி அருகே உள்ள சடையநேரி குளத்தில் கரையில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக குளத்தில் உள்ள தண்ணீர் எல்லாம் அருகில் உள்ள கிராமத்தையும் தென்னை, பனை, வாழைத்தோட்டங்களிலும் புகுந்தது.

    குறிப்பாக உடன்குடி அருகே உள்ள வெள்ளாளன்விளையில் இருந்து வட்டன்விளை செல்லும் பகுதியில் உள்ள தோட்டங்களில் தண்ணீர் தேங்கியது. இதனால் விவசாயிகள் தங்களது தோட்டத்திற்கு செல்ல முடியாமல் அவதிபட்டனர். சிலர் தற்காலிக படகு மூலம் தோட்டத்திற்கு சென்று பார்த்து வந்தனர். தண்ணீர் உடனடியாக வடிந்துவிடும் என்பதால் வாழைத்தார்களை வெட்டி விற்றால் வருமானம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்தனர்.

    ஆனால் தோட்டங்களில் புகுந்த தண்ணீர் வடியாமல் கழுத்தளவுவிற்கு இன்னும் தேங்கி கிடக்கிறது. எனினும் விவசாயிகள் தண்ணீரில் நீந்திச்சென்று வாழைத்தார்களை வெட்டி எடுத்து வருகிறார்கள்.

    இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், கிட்டத்தட்ட 25 நாட்களாக தண்ணீர் வடியாமல் தோட்டங்களில் தேங்கி கிடக்கிறது. கிராமம் என்பதால் யாரும் எங்களை கவனிக்கவில்லை. எனினும் வாழ்வாதாரத்திற்காக வாழைத்தார்களை தண்ணீரில் நீந்திச் சென்று வெட்டி எடுத்து வருகிறோம்.

    எனவே தோட்டங்களில் தேங்கி உள்ள தண்ணீரை வெளியேற்ற அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    • பெரும்பாலும் வாழைத்தார்கள் 13 டசன் மட்டுமே இருக்கும். இந்த வாழைத்தாரில் 23 டசன் வாழைப்பழங்கள் இருந்தன.
    • வளமான மண்ணுடன் இயற்கை உயரத்தை பயன்படுத்தினால் இதுபோன்ற விளைச்சலை காண முடியும் என விவசாயி தெரிவித்தார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், ஆத்ரேயபுரம் மண்டலம், உச்சிலியை சேர்ந்தவர் ரித்து சாந்திராஜ். விவசாயி.

    இவரது நிலத்தில் பக்கிஸ் வகையை சேர்ந்த வாழை பயிரிட்டு இருந்தார். இவர் பயிரிட்டு இருந்த வாழை மரத்தில் 6.5 அடி உயரம் உள்ள வாழைத்தார் விளைந்தது.

    பெரும்பாலும் வாழைத்தார்கள் 13 டசன் மட்டுமே இருக்கும். இந்த வாழைத்தாரில் 23 டசன் வாழைப்பழங்கள் இருந்தன.

    இதனை நேற்று ராவுல பாலத்தில் உள்ள சந்தைக்கு விற்பனைக்காக கொண்டு வந்தார். வாழைத்தாரை தொழிலதிபர் சீனிவாசரெட்டி என்பவர் அதிக விலை கொடுத்து வாங்கிச் சென்றார்.

    வளமான மண்ணுடன் இயற்கை உயரத்தை பயன்படுத்தினால் இதுபோன்ற விளைச்சலை காண முடியும் என விவசாயி தெரிவித்தார்.

    • பரமத்திவேலூர் காவிரி கரையோர பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் வாழை பயிர் செய்யப்பட்டுள்ளது.
    • தற்போது விஷேச நிகழ்ச்சிகள் எதுவும் இல்லாததால் வாழைத்தார்கள் விலை சரிவடைந்து உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    பரமத்திவேலூர்:

    பரமத்திவேலூர் காவிரி கரையோர பகுதிகளான வெங்கரை, குச்சிபாளையம், பொத்தனூர், வேலூர், அனிச்சம்பாளையம், நன்செய்இடையாறு, பாலப்பட்டி மற்றும் மோகனூர் உள்ளிட்ட பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் வாழை பயிர் செய்யப்பட்டுள்ளது. இங்கு விளையும் வாழைத்தார்கள் கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் பூவன் வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.500-க்கும், ரஸ்தாலி வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.400-க்கும், பச்சைநாடன் வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.300-க்கும், கற்பூரவள்ளி வாழைத்தார் ரூ.300-க்கும் விற்பனையானது. மொந்தன் வாழைக்காய் ஒன்று ரூ.6 -க்கும் ஏலம் போனது. நேற்று நடைபெற்ற ஏலத்தில் பூவன் வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.300-க்கும், ரஸ்தாலி வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.350-க்கும், பச்சைநாடன் வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.200-க்கும், கற்பூரவள்ளி வாழைத்தார் ரூ.250-க்கும் விற்பனையானது. மொந்தன் வாழைக்காய் ஒன்று ரூ.6-க்கு விற்பனையானது. தற்போது விஷேச நிகழ்ச்சிகள் எதுவும் இல்லாததால் வாழைத்தார்கள் விலை சரிவடைந்து உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • சிறு விவசாயிகள் பரமத்தி வேலூர் வாழைத்தார் விற்பனை சந்தைக்கு வாழைத்தார்களை நேரடியாக கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர்.
    • கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் பூவன் வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.400-க்கு ஏலம் போனது.

    பரமத்திவேலூர்:

    பரமத்திவேலூர் காவிரி கரையோர பகுதிகளான வெங்கரை, குச்சிபாளையம், பொத்தனூர், வேலூர், அனிச்சம்பாளையம், நன்செய்இடையாறு, பாலப்பட்டி மற்றும் மோகனூர் உள்ளிட்ட பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் வாழை பயிர் செய்யப்பட்டுள்ளது.

    இங்கு விளையும் வாழைத்தார்கள் கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும், சேலம், கோவை, ஈரோடு, கரூர், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும் அனுப்பப்பட்டு வருகிறது. சிறு விவசாயிகள் பரமத்தி வேலூர் வாழைத்தார் விற்பனை சந்தைக்கு வாழைத்தார்களை நேரடியாக கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர்.

    கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் பூவன் வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.400-க்கும், ரஸ்தாலி வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.400-க்கும், பச்சைநாடன் வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.300-க்கும், கற்பூரவள்ளி வாழைத்தார் ரூ.350-க்கும் விற்பனையானது. மொந்தன் வாழைக்காய் ஒன்று ரூ.5-க்கும் ஏலம் போனது.

    ஆடி 18 பண்டிகையை முன்னிட்டு நேற்று நடைபெற்ற ஏலத்தில் பூவன் வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.250-க்கும், ரஸ்தாலி வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.400-க்கும், பச்சைநாடன் வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.350-க்கும், கற்பூரவள்ளி வாழைத்தார் ரூ.400-க்கும் விற்பனையானது. மொந்தன் வாழைக்காய் ஒன்று ரூ.7-க்கு விற்பனையானது. ஆடி 18 பண்டிகையை முன்னிட்டு பூவன் வாழைத்தார்கள் வரத்து அதிகரித்ததால் விலை சரிவுவடைந்துள்ளது.

    • கடந்த வாரம் வாழை இலை கட்டு ரூ.300 வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது.
    • விலை அதிகரிப்பால் வாழை விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தில் அமைந்துள்ள பெருந்தலைவர் காமராஜர் தினசரி மார்க்கெட்டில் காய்கறிகள் மற்றும் வாழைத்தார், வாழை இலைகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இங்கு கடந்த வாரம் வரை 200 இலைகள் அடங்கிய வாழை இலை கட்டு ரூ.300 வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது.இந்நிலையில் தற்போது அவற்றின் விலை 2 மடங்காக உயர்ந்து ரூ. 600-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் கோழிக்கூடு, நாடு, மட்டி உள்ளிட்ட ரகங்களை சேர்ந்த வாழைத்தார்கள் விலையும் 2 மடங்காக அதிகரித்துள்ளது.

    வாழைத்தார் மற்றும் வாழை இலைகளின் விலை அதிகரிப்பால் வாழை பயிரிட்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தென்காசி மாவட்டம் முழுவதும் தற்போது காற்று சீசன் தொடங்கி உள்ளதால் வாழைத்தார் மற்றும் வாழை இலை களின் விலையானது அதிகரித்து ள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • பரமத்திவேலூர் காவிரி கரையோர பகுதிகளில் பல்வேறு வகையான வாழைகளை பயிர் செய்துள்ளனர்.
    • வாழைத்தார்களை வாங்கி செல்வதற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் வந்திருந்து வாழைத்தர்களை வாங்கி செல்கின்றனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் காவிரி கரையோர பகுதிகளான வெங்கரை, ஓலப்பாளையம், குச்சிபாளையம், பாலப்பட்டி, மோகனூர், குப்புச்சிபாளையம், பொத்தனூர், பரமத்தி வேலூர், அனிச்சம் பாளையம், நன்செய் இடையாறு, பாண்டமங்கலம் வெங்கரை, பிலிக்கல் பாளையம், ஆனங்கூர், ஜேடர்பாளையம், கொத்த மங்கலம், சிறுநல்லிக் கோவில், தி.கவுண்டம் பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதி களில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பூவன், பச்சநாடன், ரஸ்தாலி, கற்பூரவள்ளி, மொந்தன் உள்ளிட்ட பல்வேறு வகையான வாழைகளை பயிர் செய்துள்ளனர்.

    வாழைத்தார்

    வாழைத்தார் விளைந்த வுடன் கூலி ஆட்கள் மூலம் வெட்டி உள்ளூர் பகுதி களுக்கு வரும் வியாபாரி களுக்கும், பரமத்தி வேலூ ரில் செயல்பட்டு வரும் தினசரி வாழைத்தார் ஏல மார்க்கெட்டிற்க்கும் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர். வாழைத்தார்களை வாங்கி செல்வதற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் வந்திருந்து வாழைத்தர்களை வாங்கி செல்கின்றனர்.

    வாங்கிய வாழைத்தார் களை கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும், சேலம், கோவை, ஈரோடு, கரூர், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங் களுக்கும் தினந்தோறும் லாரிகள் மூலம் அனுப்பப் பட்டு வருகிறது.

    இந்நிலையில் கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் பூவன் வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.450-க்கும், ரஸ்தாலி வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.350-க்கும், பச்சைநாடன் வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.250-க்கும், கற்பூரவள்ளி வாழைத்தார் ரூ.250-க்கும் விற்பனையானது. மொந்தன் வாழைத்தார் ஒன்று ரூ.500-க்கும் ஏலம் போனது.

    வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் பூவன் வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.400-க்கும், ரஸ்தாலி வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.400-க்கும், பச்சைநாடன் வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.300-க்கும், கற்பூரவள்ளி வாழைத்தார் ரூ.350-க்கும் விற்பனையானது. மொந்தன் வாழைத்தார் ஒன்று ரூ.700-க்கு விற்பனையானது.

    • விவசாயிகள் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பூவன், பச்சநாடன், கற்பூர வள்ளி, ரஸ்தாலி, மொந்தன் உள்ளிட்ட பல்வேறு வாழை களை பயிர் செய்துள்ளனர்.
    • வரத்து குறைவால் வாழைத்தார்கள் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர், நன்செய் இடையாறு, ஓலப்பாளையம், பாலப்பட்டி, மோகனூர், பொத்தனூர், பாண்ட மங்கலம், வெங்கரை, அண்ணா நகர், பிலிக்கல் பாளையம், ஆனங்கூர், ஜேடர்பாளையம், கொத்த மங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பூவன், பச்சநாடன், கற்பூர வள்ளி, ரஸ்தாலி, மொந்தன் உள்ளிட்ட பல்வேறு வாழை களை பயிர் செய்துள்ளனர்.

    வாழைத்தார்களை வெட்டி உள்ளூர் பகுதி களுக்கு வரும் வியாபாரி களுக்கும், பரமத்தி வேலூர் கரூர் பழைய பை-பாஸ் சாலையில் செயல்பட்டு வரும் தினசரி ஏல மார்க்கெட்டிற்கும் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர்.

    வாழைத்தார்களை வாங்கிச் செல்வதற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வியா பாரிகள் வந்திருந்து தங்க ளுக்கு கட்டுப்படியாகும் விலைக்கு வாழைத்தார்களை வாங்கி தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்க ளுக்கும், ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும் லாரிகள் மூலம் அனுப்பி வைக்கின்றனர்.

    இந்நிலையில் கடந்த வாரம் பூவன் வாழைத்தார் ஒன்றுக்கு ரூ.400-க்கும், ரஸ்தாளி வாழைத்தார் ரூ.250-க்கும், பச்சநாடன் வாழைத்தார் ரூ.200-க்கும், கற்பூரவள்ளி வாழைத்தார் ரூ.250-க்கும், மொந்தன் வாழைத்தார் ரூ.500-க்கும் விற்பனையானது.

    நேற்று பூவன் வாழைத்தார் ஒன்றுக்கு ரூ.350-க்கும், ரஸ்தாளி வாழைத்தார் ரூ.350-க்கும், பச்சநாடன் வாழைத்தார் ரூ.300-க்கும், கற்பூரவள்ளி வாழைத்தார் ரூ.400-க்கும், மொந்தன் வாழைத்தார் ரூ.700-க்கும் வாங்கிச் சென்றனர். வரத்து குறைவால் வாழைத்தார்கள் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். 

    • இந்நிலையில் கடந்த வாரத்தை விட, இந்த வாரம் வாழைத்தார்களின் விலை அதிகரித்துள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தள்ளனர்.
    • நேற்று நடைபெற்ற ஏலத்திற்கு 1500 வாழைத்தார்களை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலுார் தாலுகா பாண்டமங்கலம், பொத்த னுார், நன்செய்இடையாறு, குப்பிச்சிபாளையம், மோ கனுார், பரமத்திவேலுார், அண்ணாநகர், பிலிக்கல்பா ளையம், ஆனங்கூர், ஜேடர்பாளையம், கொத்த மங்கலம், சிறுநல்லி கோவில், அய்யம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதி களில் விவசாயிகள் பூவன், பச்சநாடன், கற்பூரவல்லி, ரஸ்தாளி, மொந்தன் உள்ளிட்ட பல்வேறு வகையான வாழைகளை பயிரிட்டுள்ளனர்.

    வாழைத்தார்களை உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கும், பரமத்திவேலுாரில் செயல்பட்டு வரும் தினசரி ஏல மார்க்கெட்டிற்கும் கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர்.

    இங்கு ஏலம் எடுக்கப்ப டும் வாழைத்தார்களை, தமிழ்நாட்டில் உள்ள நாமக்கல், சேலம், ஈரோடு, கோவை, நீலகிரி, கரூர், திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும், ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும் லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது.

    இந்நிலையில் கடந்த வாரத்தை விட, இந்த வாரம் வாழைத்தார்களின் விலை அதிகரித்துள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தள்ளனர். நேற்று நடைபெற்ற ஏலத்திற்கு 1500 வாழைத்தார்களை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். இதில் பூவன் வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.500-க்கும், ரஸ்தாலி வாழைத்தார் ரூ.350-க்கும், பச்சைநாடன் வாழைத்தார் ரூ.300-க்கும், கற்பூரவள்ளி வாழைத்தார் ரூ.400-க்கும், மொந்தன் வாழைக்காய் ஒன்று ரூ.5 க்கும் விற்பனையானது.

    வரத்து குறைவு மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வீடுகளில் கனி வைத்து வழிபடுவர், கோவில் விசேஷங்கள் தொடர்ந்து வருவதால் வாழைத்தார் விலை உயர்ந்துள்ளதாக வியா பாரிகள் தெரிவித்தனர்.

    • கரூரில் வாழைத்தார் விலை உயர்ந்துள்ளது
    • வரத்து குறைவு காரணமாக விற்பனை

    கரூர்,

    நொய்யல் சுற்றுவட்டார பகுதிகளில் பூவன் உள்ளிட்ட பல்வேறு வகையான வாழைகளை விவசாயிகள் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிர் செய்துள்ளனர். பின்னர் விளைந்தவுடன் பறித்து, உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கும், தினசரி ஏல மார்க்கெட்டிற்கும் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர். கடந்த வாரம் பூவன் வாழைத்தார் ஒன்று ரூ.350-க்கு விற்றது தற்போது ரூ.400-க்கும், ரஸ்தாளி ரூ.250-க்கு விற்றது ரூ. 300-க்கும், பச்சைநாடன் ரூ.200-க்கு விற்றது ரூ.250-க்கும், மொந்தன் வாழைத்தார் ரூ.400-க்கு விற்றது ரூ.500-க்கும் ஏலம் போனது. வரத்து குறைவால் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • வாழைத்தார்களின் விலை உயர்வடைந்துள்ள தால் வாழை பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    • கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் பூவன்வாழைத்தார் ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ.350-க்கும், ரஸ்தாலி வாழைத்தார் ரூ.250-க்கும், பச்சைநாடன் ரூ.200-க்கும், கற்பூரவள்ளி ரூ.350-க்கும் ,மொந்தன் வாழைக்காய் ஒன்று ரூ.6-க்கும் ஏலம் போனது.

    பரமத்திவேலூர்:

    பரமத்திவேலூர் காவிரி கரையோர பகுதிகளான வெங்கரை, குச்சிபாளையம், பொத்தனூர், பரமத்தி வேலூர், அண்ணாநகர்,

    பிலிகல்பாளையம், கு.அய்யம்பாளையம், ஆனங்கூர், வடகரை யாத்தூர் கொத்தமங்கலம், அனிச்சம்பாளையம், நன்செய்இடையாறு, பாலப்பட்டி மற்றும் மோக னூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பூவன், பச்ச நாடன், கற்பூரவல்லி, ரஸ்தாலி, மொந்தன் உள்ளிட்ட பல்வேறு வகை யான வாழைகளை விவசா யிகள் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிர்செய்துள்ள னர்.

    வாழைத்தார் முதிர்ச்சி அடைந்தவுடன் கூலி ஆட்கள் மூலம் வாழைத்தார் களை வெட்டி உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கும், பரமத்தி வேலூரில் செயல்பட்டு வரும் தினசரி ஏல மார்க்கெட்டிற்கும் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்ற னர். மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வியாபாரிகள் வந்திருந்து தங்களுக்கு கட்டுபடியாகும் விலைக்கு வாழைத்தார் களை வாங்கி கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும், சேலம், கோவை, ஈரோடு ,கரூர், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்க ளுக்கும் தினந்தோறும் லாரிகள் மூலம் அனுப்பி வருகின்றனர்.

    கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் பூவன்வாழைத்தார் ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ.350-க்கும், ரஸ்தாலி வாழைத்தார் ரூ.250-க்கும், பச்சைநாடன் ரூ.200-க்கும், கற்பூரவள்ளி ரூ.350-க்கும் ,மொந்தன் வாழைக்காய் ஒன்று ரூ.6-க்கும் ஏலம் போனது. நேற்று நடைபெற்ற ஏலத்தில் பூவன் வாழைத்தார் ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ.400-க்கும், ரஸ்தாலி வாழைத்தார் ரூ.300-க்கும், பச்சைநாடன் அதிகபட்சமாக ரூ.250-க்கும், கற்பூரவள்ளி வாழைத்தார் ரூ.300-க்கும் , மொந்தன் வாழைக்காய் ஒன்று ரூ.4-க்கு ஏலம் போனது. வாழைத்தார்களின் விலை உயர்வடைந்துள்ள தால் வாழை பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • தைப்பூசத்தை முன்னிட்டு வாழைத்தார்களின் விலை உயர்வடைந்துள்ளது.
    • இதனால் வாழை பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் வேலுார் தாலுகா பாண்டமங்கலம், பொத்தனுார், நன்செய்

    இடையாறு, குப்பிச்சிபாளை யம், மோகனுார், பரமத்தி வேலுார், அண்ணாநகர், பிலிக்கல்பாளையம், ஆனங்கூர், ஜேடர்பாளை யம், கொத்தமங்கலம், சிறு

    நல்லி கோவில், அய்யம்பா

    ளையம், ஆனங்கூர், வடகரை யாத்தூர், இருக்கூர், ஜமீன் இளம்பள்ளி, சோழசி ராமணி உள்ளிட்ட பல்வேறு

    பகுதிகளில் பூவன், கற்பூர வள்ளி, பச்சநாடன், ரஸ்தாலி, மொந்தன் உள்ளிட்ட பல்வேறு வகை

    யான வாழை, ஆயிரக்க ணக்கான ஏக்கரில் பயிர் செய்யப்பட்டுள்ளது.

    இங்கு விளையும் வாழைத்தார்களை உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியா பாரிகளுக்கும், பரமத்தி வேலூரில் செயல்படும் தினசரி வாழைத்தார் ஏல மார்க்கெட்டிற்கும் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர். இங்கு வாங்கப்படும் வாழைத்தார்கள் கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும், சேலம்,

    கோவை, ஈரோடு, கரூர், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்க ளுக்கும் தினந்தோறும் லாரிகள் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் கடந்த வாரம் பூவன் வாழைத்தார் ஒன்று அதிகபட்சமாக ரூ.250-க்கும், ரஸ்தாலி அதிகபட்சமாக ரூ.250-க்கும், பச்சைநாடன் அதிக பட்சமாக ரூ.200-க்கும், கற்பூரவள்ளி ரூ.250-க்கும், மொந்தன் ரூ.300-க்கும் விற்பனையானது. நேற்று பூவன் வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.500-க்கும், ரஸ்தாலி அதிகபட்சமாக ரூ.400-க்கும், பச்சைநாடன் அதிகபட்சமாக ரூ.350-க்கும், கற்பூரவள்ளி ரூ.400-க்கும் , மொந்தன் ஒன்று ரூ.500-க்கும் விற்பனையானது. தைப்பூசத்தை முன்னிட்டு வாழைத்தார்களின் விலை உயர்வடைந்துள்ளதால் வாழை பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    பரமத்திவேலூர் பகுதிகளில் கோவில், திருமண விசேஷங்களால வாழைத்தார் விலை உயர்வு விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    பரமத்திவேலூர்:

    பரமத்திவேலூர் காவிரி கரை யோர பகுதிகளான வெங்கரை, குச்சிபாளையம், பொத்தனூர், வேலூர், அனிச்சம்பாளையம், நன்செய்இடையாறு, பாலப்பட்டி மற்றும் மோகனூர் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் வாழை பயிர் செய்யப்பட்டுள்ளது. இங்கு விளையும் வாழைத்தார்கள் கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும், சேலம், கோவை, ஈரோடு ,கரூர் மற்றும் திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும் தினந்தோறும் லாரிகள் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது.

    ஞாயிற்றுக்கிழமை தவிர தினந்தோறும் நடைபெறும் வாழைத்தார் ஏல சந்தைக்கு வாழைத்தார்களை விவசாயிகள் கொண்டு வருகின்றனர். கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் பூவன் வாழைத்தார் அதிகபட்சமாக தார் ஒன்று ரூ.500-க்கும், ரஸ்தாலி வாழைத்தார் அதிகபட்சமாக தார் ஒன்று ரூ.300-க்கும், பச்சைநாடன் வாழைத்தார் அதிகபட்சமாக தார் ஒன்று ரூ.250-க்கும்,கற்பூரவள்ளி வாழைத்தார் தார் ஒன்று ரூ.400-க்கும் மொந்தன் வாழைத்தார் ஒன்றுக்கு ரூ.300-க்கும் விற்பனையானது.

    நேற்று நடைபெற்ற ஏலத்தில் பூவன் வாழைத்தார் அதிகபட்சமாக தார் ஒன்று ரூ.600-க்கும், ரஸ்தாலி வாழைத்தார் அதிகபட்சமாக தார் ஒன்று ரூ.350-க்கும், பச்சைநாடன் வாழைத்தார் அதிகபட்சமாக தார் ஒன்று ரூ.300-க்கும்,கற்பூரவள்ளி வாழைத்தார் அதிகபட்சமாக தார் ஒன்று ரூ.500-க்கும் , மொந்தன் காய் ஒன்று ரூ.350- க்கும் விற்பனையானது. வாழைத்தார்கள் வரத்து குறைந்ததாலும்,கோவில் விழாக்கள் மற்றும் கல்யாண நிகழ்ச்சிகள் அதிக அளவில் இருந்ததால் வாழைத்தார்கள் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    ×