search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    25 நாட்களாகியும் வடியாத வெள்ளம்: தண்ணீரில் நீந்திச்சென்று வாழைத்தார்களை வெட்டும் விவசாயிகள்
    X

    வாழைத்தோட்டத்தில் கழுத்தளவு தண்ணீரில் வாழைத்தார்களை வெட்டி எடுத்து வரும் விவசாயிகள்.

    25 நாட்களாகியும் வடியாத வெள்ளம்: தண்ணீரில் நீந்திச்சென்று வாழைத்தார்களை வெட்டும் விவசாயிகள்

    • வெள்ளாளன்விளையில் இருந்து வட்டன்விளை செல்லும் பகுதியில் உள்ள தோட்டங்களில் தண்ணீர் தேங்கியது.
    • தோட்டங்களில் புகுந்த தண்ணீர் வடியாமல் கழுத்தளவுவிற்கு இன்னும் தேங்கி கிடக்கிறது.

    உடன்குடி:

    தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த மாதம் 17, 18-ந் தேதிகளில் கனமழையால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் மாவட்டத்தில் விளைநிலங்களில் தண்ணீர் புகுந்து கடும் சேதத்தை ஏற்படுத்தியது.

    மேலும் உடன்குடி அருகே உள்ள சடையநேரி குளத்தில் கரையில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக குளத்தில் உள்ள தண்ணீர் எல்லாம் அருகில் உள்ள கிராமத்தையும் தென்னை, பனை, வாழைத்தோட்டங்களிலும் புகுந்தது.

    குறிப்பாக உடன்குடி அருகே உள்ள வெள்ளாளன்விளையில் இருந்து வட்டன்விளை செல்லும் பகுதியில் உள்ள தோட்டங்களில் தண்ணீர் தேங்கியது. இதனால் விவசாயிகள் தங்களது தோட்டத்திற்கு செல்ல முடியாமல் அவதிபட்டனர். சிலர் தற்காலிக படகு மூலம் தோட்டத்திற்கு சென்று பார்த்து வந்தனர். தண்ணீர் உடனடியாக வடிந்துவிடும் என்பதால் வாழைத்தார்களை வெட்டி விற்றால் வருமானம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்தனர்.

    ஆனால் தோட்டங்களில் புகுந்த தண்ணீர் வடியாமல் கழுத்தளவுவிற்கு இன்னும் தேங்கி கிடக்கிறது. எனினும் விவசாயிகள் தண்ணீரில் நீந்திச்சென்று வாழைத்தார்களை வெட்டி எடுத்து வருகிறார்கள்.

    இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், கிட்டத்தட்ட 25 நாட்களாக தண்ணீர் வடியாமல் தோட்டங்களில் தேங்கி கிடக்கிறது. கிராமம் என்பதால் யாரும் எங்களை கவனிக்கவில்லை. எனினும் வாழ்வாதாரத்திற்காக வாழைத்தார்களை தண்ணீரில் நீந்திச் சென்று வெட்டி எடுத்து வருகிறோம்.

    எனவே தோட்டங்களில் தேங்கி உள்ள தண்ணீரை வெளியேற்ற அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    Next Story
    ×