search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மீன்விலை"

    • மீன் விலை உயர்ந்துள்ளது.
    • ஒரு கிலோவிற்கு ரூ.50 முதல் ரூ.200 வரை மீன்விலை அதிகரித்துள்ளது.

    ராமநாதபுரம்

    தமிழ்நாடு மீன்பிடி ஒழுங்குமுறை சட்ட விதிமுறையின்படி மீன்களின் இனப்பெருக்கத் திற்காக 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப் படும். அந்த வகையில் தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 15-ந்தேதி முதல் ஜூன் 14-ந்தேதி வரையிலான 61 நாட்கள் மீன்பிடி தடைக் காலம் அமல்படுத்தப்பட்டு உள்ளது.

    இதனால் ஏப்ரல் 15-ந்தேதி முதல் விசைப்ப டகு மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்லக் கூடாது என அறிவுறுத்தப்பட் டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் விசைப் படகுகள் அனைத்தும் கரை ஏற்றம் செய்யப்பட்டு பழுது நீக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் தற்போது சிறிய படகுகள் மூலம் மீனவர்கள் மீன்பிடித்து வருகின்றனர்.

    ராமநாதபுரம் மாவட்டம் சின்ன ஏர்வாடி, கீழக்கரை, பெரியபட்டினம், முத்துப்பேட்டை மற்றும் திருப்பாலைக்குடி, மோர்ப்பண்ணை, முள்ளி முனை, காரங்காடு, வட்டா ணம், பாசிப்பட்டினம், எஸ்.பி.பட்டினம் உள்பட

    20-–க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் மீன்பிடி தொழில் பெரிய அளவில் இல்லை.

    இதனால் மீன் மார்க் கெட்டுக்கு கடந்த சில வாரங்களாக மீன்வரத்து வெகுவாக குறைந்து காணப்பட்டது. இதனால் மீன்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. கடற்கரை பகுதியில் வெளியூர் வியாபாரிகள் ஏராளமானோர் வந்து செல்வதால் மீன்களை போட்டி போட்டு கொண்டு அதிக விலை கொடுத்தும் வாங்கி செல்கின்றனர்.

    மேலும் நகரை மீன், விளைமீன், முரல் போன்ற ஒரு சில மீன் வகைகளை தவிர பல்வேறு வகையான மீன் வகைகள் விற்பனைக்கு வருவதில்லை. இதனால் மீன் பிரியர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

    நகரை, செங்கனி, பாறை மீன்கள் ஒரு கிலோ

    ரூ.600-க்கும், முரல், கலிங்க முரல், நண்டு போன்றவை ரூ.500 முதல் ரூ.700 வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது. ராமநாதபுரம், கீழக்கரை, தேவிபட்டிணம் போன்ற மீன் மார்க்கெட்டில் வழக்கத்தை விட ஒரு கிலோவிற்கு ரூ.50 முதல் ரூ.200 வரை மீன்விலை அதிகரித்துள்ளது. விலை அதிகரித்தாலும், அசைவ பிரியர்கள் மீன்களை ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர்.

    ×