search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பூக்கள் விலை கிடு கிடு உயர்வு
    X

    பூக்கள் விலை கிடு கிடு உயர்வு

    • எருமப்பட்டி சுற்று வட்டார பகுதிகளில் அதிக அள வில் பூக்கள் பயிர் செய்யப்பட்டு வருகிறது.
    • பூக்களின் தேவை அதிகரித்து இருப்பதால் அவற்றின் விலை கிடுகிடு என உயர்ந்து இருப்பதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம், எருமப்பட்டி சுற்று வட்டார பகுதிகளில் அதிக அள வில் பூக்கள் பயிர் செய்யப்பட்டு வருகிறது. இந்த பூக்கள் நாமக்கல் பஸ்நிலையத்தில் உள்ள தினசரி பூ மார்க்கெட்டுக்கு விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. அந்த வகையில் சுமார் 2 டன் வரை பூக்கள் விற்பனைக்கு வரும். இவற்றை வியாபாரிகள் வாங்கி சென்று நகர் முழுவதும் விற்பனை செய்கின்றனர்.

    இங்கு கடந்த வாரம் கிலோ ரூ. 240-க்கு விற்பனை செய்யப்பட்ட மல்லிகை பூ நேற்று கிலோ ரூ. 480-க்கும், கடந்த வாரம் கிலோ ரூ. 140-க்கு விற்பனை செய்யப்பட்ட முல்லை பூக்கள், நேற்று கிலோ ரூ. 280-க்கும் விற்பனை செய்யப்பட்டன.

    இதேபோல் கடந்த வாரம் கிலோ ரூ. 20-க்கு விற்பனை செய்யப்பட்ட சம்பங்கி பூக்கள் நேற்று கிலோ ரூ. 120-க்கும், கடந்த வாரம் கிலோ ரூ. 100-க்கு விற்பனை செய்யப்பட்ட அரளி பூ நேற்று கிலோ ரூ. 200-க்கும் விற்பனையானது. சித்ரா பவுர்ணமியையொட்டி கோவில்க ளில் இன்று (வெள்ளிக்கிழமை) சிறப்பு பூஜை நடைபெறும். எனவே பூக்களின் தேவை அதிகரித்து இருப்பதால் அவற்றின் விலை கிடுகிடு என உயர்ந்து இருப்பதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×