search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இளம்பெண் மாயம்"

    • 18-ந் தேதி மாலையில் சந்தியா தனது குழந்தையுடன் கடைக்கு போவதாக கூறி சென்றுள்ளார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    கன்னியாகுமரி :

    புதுக்கடை அருகே கீழ்குளம் பகுதி வெள்ளங்கட்டி விளை என்ற இடத்தை சேர்ந்தவர் ஜாண்றோஸ் (வயது 76). இவரது மகன் ராஜசேகர் வெளிநாட்டில் வேலை பார்க்கிறார். ராஜசேகருக்கு சந்தியா (26) என்ற மனைவியும், ஷாட்லின் ஷான் (3) என்ற ஆண் குழந்தையும் உள்ளனர். கடந்த 18-ந் தேதி மாலையில் சந்தியா தனது குழந்தையுடன் கடைக்கு போவதாக கூறி சென்றுள்ளார். அதன் பிறகு வீடு திரும்பவில்லை.இதையடுத்து ராஜ சேகரின் தந்தை ஜாண் றோஸ் மருமகளையும், குழந்தையையும் கண்டுபிடித்து தர புதுக்கடை போலீசில் புகார் செய்தார். சந்தியா குடும்ப பிரச்சனை காரணமாக குழந்தையுடன் வீட்டை விட்டு வெளியேறினாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • இளம்பெண் தனது பெற்றோர் வீட்டுக்கு செல்வதாக பக்கத்து வீட்டில் கூறி சாவியை கொடுத்து சென்றார்.
    • இளம்பெண் பெற்றோர் வீட்டிற்கு வரவில்ைல என தெரிய வந்ததும், அதிர்ச்சி அடைந்த அவர் உறவினர் வீடுகள் மற்றும் அக்கம் பக்கத்தில் தேடியும் கிடைக்கவில்லை.

    பெரியகுளம்:

    பெரியகுளம் அழகர்சாமிபுரத்ைத சேர்ந்தவர் வசந்த் மனைவி ஜோதிகா (வயது20). இவர்கள் காதலித்து கடந்த 2020ம் ஆண்டு இரு வீட்டு பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். வசந்த் பெயிண்ட்டிங் வேலைக்கு சென்று வந்தார்.

    இந்த நிலையில் ஜோதிகா தனது பெற்றோர் வீட்டுக்கு செல்வதாக பக்கத்து வீட்டில் கூறி சாவியை கொடுத்து சென்றார். இது குறித்து அறிந்ததும் வசந்த் தனது மாமியார் வீட்டுக்கு போன் செய்தார்.

    அப்போது ஜோதிகா அங்கு வரவில்ைல என தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உறவினர் வீடுகள் மற்றும் அக்கம் பக்கத்தில் தேடியும் கிடைக்காததால் பெரியகுளம் போலீசில் புகார் அளித்தார்.

    அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.

    • கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்தது.
    • கண்காணிப்பு காமிராக்களை ஆய்வு செய்து தீவிரமாக தேடி வருகிறார்கள்.

    கன்னியாகுமரி :

    குலசேகரம் அருகே பேச்சப்பாறை கடம்புமூடு பகுதியை சேர்ந்தவர் பிரவின் (வயது 25). இவர் கூலி வேலை செய்து குடும்பம் நடத்தி வருகிறார். இவருக்கு நிரோஷா என்ற மனைவியும், 2 ஆண் குழந்தைகளும் உள்ளனர். 5 வயதில் ஒரு மகனும், 3 வயதில் ஒரு மகனும் உள்ளனர். மூத்த மகன் 1-ம் வகுப்பு படித்து வருகிறார். பிரவின் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் வேலைக்கு செல்லும்போது நிரோஷவை காதலித்து திருமணம் செய்தார். இவர்கள் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக சென்று கொண்டு இருந்தது. பிரவின் வேலைக்கு சென்று விட்டு வீட்டுக்கு வரும்போது மது அருந்தி விட்டு வருவது வழக்கம். இதனால் இவர்கள் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்தது. இதனால் நிரோஷா தாய் வீட்டுக்கு செல்வது வழக்கம். அதன்பிறகு பிரவின் சென்று பேசி வீட்டுக்கு அழைத்து வருவார்.

    கடந்த ஒரு ஆண்டுக்கு முன் இதேபோல் கணவன்-மனைவி இருவருக்கும் குடும்ப தகராறு ஏற்பட்டது. உடனே நிரோஷா திருநந்திகரையில் உள்ள தன் தாய் வீட்டுக்கு 2 பிள்ளைகளையும் அழைத்து கொண்டு சென்றவர் அதன்பின் வீடு திரும்பவில்லை. பிரவின் சென்று அழைத்த பிறகும் நிரோஷா வரவில்லை. ஒரு ஆண்டாக அங்கே இருந்துக்கொண்டு அருகில் உள்ள கோழிப்பண்ணைக்கு வேலைக்கு சென்று வந்தார். பிரவின் தன் தாயுடன் பேச்சிப்பாறையில் வசித்து வந்தார்.

    தினமும் தாய் வீட்டில் இருந்து கோழிப்பண்னைக்கு காலையில் வேலைக்கு செல்பவர் மாலையில் வீடு திரும்புவது வழக்கம்.

    வழக்கம் போல் நேற்று முன்தினம் வேலைக்கு சென்றவர் மாலையில் வீடு திரும்பவில்லை. இதனால் இவரது தாய் செல்வி கோழிப்பண்னையில் சென்று விசாரித்தார். அவர் வேலை முடிந்து வீட்டுக்கு செல்வதாக கூறி விட்டு சென்றாக கூறினார்கள். செல்வி உடனே நிரோஷாவின் கணவர் பிரவினுக்கு தகவல் கொடுத்தார். இவர்களின் உறவினர்கள் வீடு மற்றும் பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். எங்கேயும் அவரை காணவில்லை. நிரோஷாவின் செல்போனுக்கு தொடர்பு கொண்டால் போன் சுவிட்ச்ஆப் ஆக உள்ளது. செல்வி நேற்று மாலை காணாமல் போன தன் மகள் நிரோஷாவை கண்டுபிடித்து தருமாறு குலசேகரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார். இவருக்கு வேறு யாருடன் தொடர்பு உள்ளதா? என்றும் கோழிப்பண்னை பகுதியில் உள்ள கண்காணிப்பு காமிராக்களை ஆய்வு செய்து தீவிரமாக தேடி வருகிறார்கள்.

    • அபர்ணா அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் பேசி வந்தார்.
    • மாயமான இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.

    குனியமுத்தூர்,

    கோவை போத்தனூரை சேர்ந்த சியாம்குமார். இவரது மனைவி அபர்ணா (24). இவர்களுக்கு ஆயுஷ் (2) என்ற மகன் உள்ளார். அபர்ணா அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் பேசி வந்தார். இதனை அவரது கணவர் கண்டித்தார். இதன் காரணமாக கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் அவர் தனது கணவரிடம் பேசாமல் இருந்தார்.

    சம்பவத்தன்று சியாம்குமார் வழக்கம் போல வேலைக்கு புறப்பட்டு சென்றார். அப்போது வீட்டில் தனியாக இருந்த அபர்ணா தனது 2 வயது மகனுடன் ஓட்டம் பிடித்தார். வேலை முடிந்து வீட்டிற்கு வந்த அவர், வீட்டில் மனைவி மற்றும் மகன் இல்லாதது கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் 2 பேரையும் அக்கம் பக்கத்தில் தேடினார். ஆனால் எந்த பலனும் இல்லை. இதுகுறித்து சியாம்கு மார் போத்தனூர் போலீசில் புகார் செய்தார்.போலீசார் வழக்குப்பதிவு செய்து மகனுடன் மாயமான இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.

    சவுரிபாளையம் உப்பிலி பாளையம் ரோட்டை சேர்ந்தவர் மார்ட்டின். இவரது மகள் மெர்லின் ஜெசிகா (19). இவர் தனியார் கல்லூரியில் பி.பி.ஏ., படித்து வந்தார். சம்பவத்தன்று வீட்டில் இருந்த மெர்லின் ஜெசிகா தனது பெற்றோரிடம் வெளியே செல்வதாக கூறி விட்டு சென்றார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் அவர் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இது குறித்து பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான கல்லூரி மாணவியை தேடி வருகிறார்கள்.

    • தனது மகனுக்கு உடல் நிலை சரியில்லை எனக்கூறி கம்பம் அரசு ஆஸ்பத்திரிக்கு செல்வதாக சென்றார்.
    • அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை.

    உத்தமபாளையம்:

    தேனி மாவட்டம் க.புதுப்பட்டி இந்திரா காலனியைச் சேர்ந்த சேகர் மனைவி தமிழரசி (வயது 23). இவர்களுக்கு ரக்ஷனா என்ற மகளும், ரட்சகன் என்ற மகனும் உள்ளனர். சம்பவத்தன்று 4-வது வார்டு மாதா கோவில் தெருவில் உள்ள தனது தந்தை வீட்டில் தமிழரசி இருந்தார்.

    அப்போது தனது மகனுக்கு உடல் நிலை சரியில்லை எனக்கூறி கம்பம் அரசு ஆஸ்பத்திரிக்கு செல்வதாக ரட்சகனுடன் சென்றார். ஆனால் அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து தமிழரசியின் தாய் வேளாங்கண்னி உத்தமபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மாலையில் வீட்டிற்கு வந்த போது மனைவி மகளை காணவில்லை.
    • தாய்-மகள் மாயமான சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கன்னியாகுமரி :

    களியக்காவிளை அருகே உள்ள மீனச்சல் பகுதியில் செயல்பட்டு வரும் கடையில் அல்வா தயாரிக்கும் மாஸ்டராக வேலை பார்ப்பவர் ஆறுமுக கண்ணன். இவரது சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் ஆகும்.

    இவர் தற்போது மீனச்சல் பகுதியில் வாடகை வீட்டில் மனைவி சண்முக ஆனந்தி (வயது 22), மகள் முத்து இனியா (1) ஆகியோருடன் வசித்து வருகிறார். ஆறுமுக கண்ணன் காலையில் வேலைக்கு சென்ற பிறகு சண்முக ஆனந்தி யாரிடமோ போனில் பேசுவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக கணவன்-மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. சம்பவத்தன்று ஆறுமுக கண்ணன் காலையில் வேலைக்கு சென்று விட்டு மாலையில் வீட்டிற்கு வந்த போது மனைவி மகளை காணவில்லை.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் அக்கம் பக்கத்தில் தேடியுள்ளார். மேலும் தன்னுடைய உறவுக்காரர்கள் வீட்டிற்கு சென்றும் தேடி உள்ளார். ஆனால் சண்முக ஆனந்தி மற்றும் மகள் பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை.

    இதுகுறித்து களியக்கா விளை போலீஸ் நிலையத்தில் ஆறுமுக கண்ணன் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து சண்முக ஆனந்தி, அவரது மகள் முத்து இனியா ஆகியோரை தேடி வருகின்றனர். தாய்-மகள் மாயமான சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கிட்டுமணி தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வாகைகுளத்தில் உள்ள மாமனார் வீட்டிற்கு வந்தார்.
    • சுடலைவடிவு என்ற சுதாவையும், அவரது மகன் ஆறுமுகவேலையும் காணவில்லை.

    களக்காடு:

    நாங்குநேரி அருகே உள்ள வாகைகுளத்தை சேர்ந்தவர் பாபநாசம் மகள் சுடலைவடிவு என்ற சுதா (வயது34). இவருக்கும், கன்னியாகுமரி மாவட்டம் செண்பகராம நல்லூரை சேர்ந்த கிட்டுமணி (39) என்பவருக்கும் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஆறுமுகவேல் (11) என்ற மகனும், மனிஷா (8) என்ற மகளும் உள்ளனர். கிட்டுமணி பூ வியாபாரம் செய்து வருகிறார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று கிட்டுமணி தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வாகைகுளத்தில் உள்ள மாமனார் வீட்டிற்கு வந்தார். இரவில் அனைவரும் வீட்டில் தூங்கினர். பின்னர் பார்த்த போது, சுடலைவடிவு என்ற சுதாவையும், அவரது மகன் ஆறுமுகவேலையும் காணவில்லை.

    இதனால் அதிர்ச்சி அடைந்த கிட்டுமணி பல்வேறு இடங்களில் தேடியும் அவர்களை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதுபற்றி அவர் நாங்குநேரி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் டி.எஸ்.பி.ராஜு, இன்ஸ்பெக்டர் செல்வி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மகனுடன் மாயமான பெண்ணை தேடி வருகின்றனர்.

    • 5 வயதில் ஒரு பெண் குழந்தையும். 1½ வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர்.
    • தென்தாமரைகுளம் போலீஸ் நிலையத்தில் சரவணன் புகார் அளித்தார்

    கன்னியாகுமரி :

    தென்தாமரைகுளம் அருகே பொற்றையடியை அடுத்த கரம்பவிளையை செர்ந்தவர் சரவணன் (வயது 25). இவரது மனைவி ஆதிலட்சுமி (21) இவர்களுக்கு 5 வயதில் ஒரு பெண் குழந்தையும். 1½ வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர்.

    ஆதிலட்சுமி அடிக்கடி செல்போனில் பேசிக் கொண்டு வந்துள்ளார். இதனால் கணவன் - மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. சம்பவத்தன்று ஆதிலட் சுமி வீட்டில் இருந்து மாயமானார். மாயமான ஆதிலட்சுமியை பல இடங்களில் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடிய வில்லை. இது குறித்து தென்தாமரைகுளம் போலீஸ் நிலையத்தில் சரவணன் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி ஆதிலட்சுமியை தேடி வருகின்றனர்.

    • அம்பிகா, 5வயது மகனுடன் வீட்டில் இருந்து வெளியே சென்றவர் பின்னர் திரும்பி வரவில்லை.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து மகனுடன் மாயமான இளம்பெண்ணை தேடிவருகிறார்கள்.

    மாமல்லபுரம்:

    கல்பாக்கம் அடுத்த வாயலூரை சேர்ந்த சுதாகர். இவரது மனைவி அம்பிகா (வயது30). கடந்த 14-ந் தேதி அம்பிகா, 5வயது மகனுடன் வீட்டில் இருந்து வெளியே சென்றவர் பின்னர் திரும்பி வரவில்லை. உறவினர்கள், வீடுகளில் தேடியும் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை.

    இதுகுறித்து சுதாகர் சதுரங்கபட்டினம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மகனுடன் மாயமான இளம்பெண்ணை தேடிவருகிறார்கள்.

    • வேலைக்காக சவுதி அரேபியாவுக்கு சென்று விட்டார்.
    • அக்கா வீட்டுக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார்.

    கள்ளக்குறிச்சி:

    தியாகதுருகம் அருகே அசகளத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் இளவரசன் (வயது 27). இவர் கடந்த 6 மாதத்திற்கு முன்பு வேலைக்காக சவுதி அரேபியாவுக்கு சென்று விட்டார். இந்நிலையில் இவரது மனைவி மலர்விழி (24), மகள்கள் இதலிகா (3), லியா (1) ஆகியோர் வீட்டில் வசித்து வந்தனர். இந்நிலையில் சம்பவத்தன்று மலர்விழி தனது 2 மகள்களுடன் சிவகாசியில் உள்ள தனது அக்கா வீட்டுக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார்.

    ஆனால் மீண்டும் வீடு திரும்ப வில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவரை அக்கம், பக்கம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இது குறித்து இளவரசனின் அக்கா பிரவீனா வெளிநாட்டில் உள்ள தனது தம்பிக்கு தகவல் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து வரஞ்சரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி போலீ சார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • குழந்தையுடன் இளம்பெண் மாயமானார்.
    • குழந்தையுடன் மாயமான பெண்ணை தேடி வருகிறார்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் அருகே உள்ள சொக்கநாதன் புத்தூர் மாட சாமி கோவில் தெருவை சேர்ந்தவர் பொன் லட்சுமி (வயது 25). இவருக்கும், கணவர் முருகானந்தத்திற்கும் அடிக்கடி குடும்ப பிரச்சனை இருந்து வந்தது. இதனால் அவ்வப்போது இவர்களுக்குள் சண்டையும் ஏற்பட்டு வந்தது. இதனால் மனம் உடைந்த பொன் லட்சுமி கோபித்துக் கொண்டு தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். பின்னர் அவர் தனது 4-வயது மகள் கவிபாரதியுடன் மாயமானார். இதுகுறித்து சேத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி குழந்தையுடன் மாயமான பெண்ணை தேடி வருகிறார்.

    • தவமணிக்கும் அவரது மாமியாருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது.
    • கடந்த 13-ந் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற தவமணி, மீண்டும் வீடு திரும்பிவரவில்லை.

    தருமபுரி, 

    தருமபுரி மாவட்டம் பெரும்பாலை அருகே மேல்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். லாரி டிரைவர். இவரது மனைவி தவமணி (வயது32). இந்த நிலையில் தவமணிக்கும் அவரது மாமியாருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது.

    கடந்த 10-ந் தேதி மீண்டும் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதனால் தவமணி மனவருத்ததில் இருந்ததாக தெரிகிறது. கடந்த 13-ந் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற தவமணி, மீண்டும் வீடு திரும்பிவரவில்லை. வேலைக்கு சென்ற கோவிந்த ராஜ் வீட்டிற்கு திரும்பிவந்து பார்த்தபோது மனைவியை இல்லாததால் அதிர்ச்சி யடைந்து, அவரை பலஇடங்களில் தேடி பார்த்தார். எங்கு தேடியும் அவர் கிடைக்காத தால் தவமணி மாயமானது தெரியவந்தது.

    இதுகுறித்து கோவிந்தராஜ் பெரும்பாலை போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான தவமணியை தேடி வருகின்றனர்.

    ×