என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்.
பெரியகுளத்தில் காதல் திருமணம் செய்த இளம்பெண் மாயம்
- இளம்பெண் தனது பெற்றோர் வீட்டுக்கு செல்வதாக பக்கத்து வீட்டில் கூறி சாவியை கொடுத்து சென்றார்.
- இளம்பெண் பெற்றோர் வீட்டிற்கு வரவில்ைல என தெரிய வந்ததும், அதிர்ச்சி அடைந்த அவர் உறவினர் வீடுகள் மற்றும் அக்கம் பக்கத்தில் தேடியும் கிடைக்கவில்லை.
பெரியகுளம்:
பெரியகுளம் அழகர்சாமிபுரத்ைத சேர்ந்தவர் வசந்த் மனைவி ஜோதிகா (வயது20). இவர்கள் காதலித்து கடந்த 2020ம் ஆண்டு இரு வீட்டு பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். வசந்த் பெயிண்ட்டிங் வேலைக்கு சென்று வந்தார்.
இந்த நிலையில் ஜோதிகா தனது பெற்றோர் வீட்டுக்கு செல்வதாக பக்கத்து வீட்டில் கூறி சாவியை கொடுத்து சென்றார். இது குறித்து அறிந்ததும் வசந்த் தனது மாமியார் வீட்டுக்கு போன் செய்தார்.
அப்போது ஜோதிகா அங்கு வரவில்ைல என தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உறவினர் வீடுகள் மற்றும் அக்கம் பக்கத்தில் தேடியும் கிடைக்காததால் பெரியகுளம் போலீசில் புகார் அளித்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.
Next Story






