search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குலசேகரம் அருகே 2 குழந்தைகளை தவிக்க விட்டு இளம்பெண் மாயம்
    X

    குலசேகரம் அருகே 2 குழந்தைகளை தவிக்க விட்டு இளம்பெண் மாயம்

    • கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்தது.
    • கண்காணிப்பு காமிராக்களை ஆய்வு செய்து தீவிரமாக தேடி வருகிறார்கள்.

    கன்னியாகுமரி :

    குலசேகரம் அருகே பேச்சப்பாறை கடம்புமூடு பகுதியை சேர்ந்தவர் பிரவின் (வயது 25). இவர் கூலி வேலை செய்து குடும்பம் நடத்தி வருகிறார். இவருக்கு நிரோஷா என்ற மனைவியும், 2 ஆண் குழந்தைகளும் உள்ளனர். 5 வயதில் ஒரு மகனும், 3 வயதில் ஒரு மகனும் உள்ளனர். மூத்த மகன் 1-ம் வகுப்பு படித்து வருகிறார். பிரவின் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் வேலைக்கு செல்லும்போது நிரோஷவை காதலித்து திருமணம் செய்தார். இவர்கள் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக சென்று கொண்டு இருந்தது. பிரவின் வேலைக்கு சென்று விட்டு வீட்டுக்கு வரும்போது மது அருந்தி விட்டு வருவது வழக்கம். இதனால் இவர்கள் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்தது. இதனால் நிரோஷா தாய் வீட்டுக்கு செல்வது வழக்கம். அதன்பிறகு பிரவின் சென்று பேசி வீட்டுக்கு அழைத்து வருவார்.

    கடந்த ஒரு ஆண்டுக்கு முன் இதேபோல் கணவன்-மனைவி இருவருக்கும் குடும்ப தகராறு ஏற்பட்டது. உடனே நிரோஷா திருநந்திகரையில் உள்ள தன் தாய் வீட்டுக்கு 2 பிள்ளைகளையும் அழைத்து கொண்டு சென்றவர் அதன்பின் வீடு திரும்பவில்லை. பிரவின் சென்று அழைத்த பிறகும் நிரோஷா வரவில்லை. ஒரு ஆண்டாக அங்கே இருந்துக்கொண்டு அருகில் உள்ள கோழிப்பண்ணைக்கு வேலைக்கு சென்று வந்தார். பிரவின் தன் தாயுடன் பேச்சிப்பாறையில் வசித்து வந்தார்.

    தினமும் தாய் வீட்டில் இருந்து கோழிப்பண்னைக்கு காலையில் வேலைக்கு செல்பவர் மாலையில் வீடு திரும்புவது வழக்கம்.

    வழக்கம் போல் நேற்று முன்தினம் வேலைக்கு சென்றவர் மாலையில் வீடு திரும்பவில்லை. இதனால் இவரது தாய் செல்வி கோழிப்பண்னையில் சென்று விசாரித்தார். அவர் வேலை முடிந்து வீட்டுக்கு செல்வதாக கூறி விட்டு சென்றாக கூறினார்கள். செல்வி உடனே நிரோஷாவின் கணவர் பிரவினுக்கு தகவல் கொடுத்தார். இவர்களின் உறவினர்கள் வீடு மற்றும் பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். எங்கேயும் அவரை காணவில்லை. நிரோஷாவின் செல்போனுக்கு தொடர்பு கொண்டால் போன் சுவிட்ச்ஆப் ஆக உள்ளது. செல்வி நேற்று மாலை காணாமல் போன தன் மகள் நிரோஷாவை கண்டுபிடித்து தருமாறு குலசேகரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார். இவருக்கு வேறு யாருடன் தொடர்பு உள்ளதா? என்றும் கோழிப்பண்னை பகுதியில் உள்ள கண்காணிப்பு காமிராக்களை ஆய்வு செய்து தீவிரமாக தேடி வருகிறார்கள்.

    Next Story
    ×