search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாங்குநேரி அருகே மகனுடன் இளம்பெண் மாயம்
    X

    நாங்குநேரி அருகே மகனுடன் இளம்பெண் மாயம்

    • கிட்டுமணி தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வாகைகுளத்தில் உள்ள மாமனார் வீட்டிற்கு வந்தார்.
    • சுடலைவடிவு என்ற சுதாவையும், அவரது மகன் ஆறுமுகவேலையும் காணவில்லை.

    களக்காடு:

    நாங்குநேரி அருகே உள்ள வாகைகுளத்தை சேர்ந்தவர் பாபநாசம் மகள் சுடலைவடிவு என்ற சுதா (வயது34). இவருக்கும், கன்னியாகுமரி மாவட்டம் செண்பகராம நல்லூரை சேர்ந்த கிட்டுமணி (39) என்பவருக்கும் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஆறுமுகவேல் (11) என்ற மகனும், மனிஷா (8) என்ற மகளும் உள்ளனர். கிட்டுமணி பூ வியாபாரம் செய்து வருகிறார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று கிட்டுமணி தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வாகைகுளத்தில் உள்ள மாமனார் வீட்டிற்கு வந்தார். இரவில் அனைவரும் வீட்டில் தூங்கினர். பின்னர் பார்த்த போது, சுடலைவடிவு என்ற சுதாவையும், அவரது மகன் ஆறுமுகவேலையும் காணவில்லை.

    இதனால் அதிர்ச்சி அடைந்த கிட்டுமணி பல்வேறு இடங்களில் தேடியும் அவர்களை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதுபற்றி அவர் நாங்குநேரி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் டி.எஸ்.பி.ராஜு, இன்ஸ்பெக்டர் செல்வி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மகனுடன் மாயமான பெண்ணை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×