search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இளம்பெண் மாயம்
    X

    இளம்பெண் மாயம்

    • தவமணிக்கும் அவரது மாமியாருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது.
    • கடந்த 13-ந் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற தவமணி, மீண்டும் வீடு திரும்பிவரவில்லை.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம் பெரும்பாலை அருகே மேல்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். லாரி டிரைவர். இவரது மனைவி தவமணி (வயது32). இந்த நிலையில் தவமணிக்கும் அவரது மாமியாருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது.

    கடந்த 10-ந் தேதி மீண்டும் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதனால் தவமணி மனவருத்ததில் இருந்ததாக தெரிகிறது. கடந்த 13-ந் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற தவமணி, மீண்டும் வீடு திரும்பிவரவில்லை. வேலைக்கு சென்ற கோவிந்த ராஜ் வீட்டிற்கு திரும்பிவந்து பார்த்தபோது மனைவியை இல்லாததால் அதிர்ச்சி யடைந்து, அவரை பலஇடங்களில் தேடி பார்த்தார். எங்கு தேடியும் அவர் கிடைக்காத தால் தவமணி மாயமானது தெரியவந்தது.

    இதுகுறித்து கோவிந்தராஜ் பெரும்பாலை போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான தவமணியை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×