search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இளம்பெண் மாயம்"

    • வேலைக்கு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    ஆம்பூர்:

    திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது இளம்பெண். இவர் வாணியம்பாடி பகுதியில் ஒரு துணி கடையில் வேலை செய்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று காலை வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.

    அக்கம், பக்கம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடியும் எங்கும் அவர் கிடைக்கவில்லை.

    இது குறித்து இளம்பெண்ணின் தாய் உமராபாத் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சிவகாசி அருகே இளம்பெண் மாயமானார்.
    • கள்ளக்காதல் விவகாரமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    பெரம்பூர் மாவட்டம் ஆலந்தூரை சேர்ந்தவர் முகேஷ்குமார் (வயது34). அரசு பஸ் டிரைவர். இவரது மனைவி லட்சுமி (33) திருச்சி துறையூரைச் சேர்ந்தவர். இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

    ஒழுங்கு நடவடிக்கை காரணமாக முகேஷ்குமார் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டு இருந்து வருகிறார். லட்சுமி அங்கு உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் வேலை பார்த்துள்ளார். அப்போது அவருக்கு ராஜா என்பவ ருடன் பழக்கம் ஏற்பட்டுள் ளது.

    நாளடைவில் அவர்கள் அடிக்கடி மணி கணக்கில் செல்போனில் பேசி வந்துள்ளனர். இதனை முகேஷ் குமார் கண்டித்து வந்தார். ஆனால் மனைவியின் போக்கில் மாற்றம் ஏற்படவில்லை. இது குறித்து அவர் தனது உறவினர்களிடம் கூறியுள்ளார். அவர்களின் ஆலோசனைப்படி கடந்த 6 மாதத்திற்கு முன்பு சிவகாசி விஸ்வநத்தம் பகுதிக்கு மனைவியை முகேஷ்குமார் அழைத்து வந்தார். அதன் பின்னர் இங்கு வீடு வாடகைக்கு எடுத்து வசித்து வரு கின்றனர். இந்த நிலையில் சம்பவத்தன்று காலையில் முகேஷ்குமார் வெளியே சென்றுவிட்டு மதிய உணவுக்காக வீட்டுக்கு வந்தார். அப்போது மனைவி வீட்டில் இல்லை. அக்கம் பக்கத்தில் விசாரித்தும், பல இடங்களில் தேடிப் பார்த்தும் எங்கு சென்றார் என்று கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து மனைவியை கண்டுபிடித்து தரும்படி சிவகாசி டவுன் போலீஸ் நிலையத்தில் முகேஷ்கு மார் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து ஏற்கனவே பழகிவந்த ராஜாவை தேடி லட்சுமி சென்றாரா? அல்லது வேறு ஏதேனும் விவகாரமா? என விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிர்ஷ்ட மூர்த்தி (27), இவர் கடந்த 28-ந் தேதி கேரளாவில் வேலைக்கு செல்வதற்காக தனது மனைவி புஷ்பாவுடன் சேலம் ரெயில் நிலையம் வந்தார்.
    • நீண்ட நேரமாகியும் அவர் திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அதிர்ஷ்ட மூர்த்தி பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

    சேலம்:

    கடலூர் மாவட்டம் திட்டக்குடியை சேர்ந்தவர் அதிர்ஷ்ட மூர்த்தி (27), இவர் கடந்த 28-ந் தேதி கேரளாவில் வேலைக்கு செல்வதற்காக தனது மனைவி புஷ்பாவுடன் சேலம் ரெயில் நிலையம் வந்தார். பின்னர் நடை மேடை 1-ல் சேலம் ரெயில் நிலையத்திற்கு வந்தார். அப்போது புஷ்பா கழிவறைக்கு சென்று வருவதாக கூறி விட்டு சென்றார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அதிர்ஷ்ட மூர்த்தி பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

    இது குறித்து அதிர்ஷ்ட மூர்த்தி சேலம் ரெயில்வே போலீசில் புகார் கொடுத்தார். அதில் தனது மனைவியுடன் சேலம் ரெயில் நிலையத்தில் இருந்து கேரளாவுக்கு செல்ல வந்தேன். அப்போது கழிவறைக்கு செல்வதாக கூறி விட்டு சென்ற எனது மனைவி மீண்டும் திரும்பி வரவில்லை.

    ஆனால் எனது தாயாரின் நகை 20 பவுன், 15 ஆயிரத்தை எடுத்து சென்று விட்டார். அவரை மீட்டு தர வேண்டும் என்று கூறி இருந்தார். அதன் பேரில் நேற்று வழக்குப்பதிவு செய்த போலீசார் நகை, பணத்துடன் மாயமான பெண்ணை தேடி வருகிறார்கள்.

    • சம்பவத்தன்று மொபட்டில் தனது குழந்தைகளுடன் வெளியே சென்ற இளம்பெண் மாயமானார்.
    • புகாரின்பேரில் போலீசார் மாயமான இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் போடி ராசிங்காபுரத்தை சேர்ந்த கார்த்திக் மனைவி ரோகினி(24).

    இவர்களுக்கு தரணிஸ்(6), கிரிசினியா(4) ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர். சம்பவத்தன்று மொபட்டில் தனது குழந்தைகளுடன் வெளியே சென்ற ரோகினி மாயமானார்.

    பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து ரோகினியின் தாய் பஞ்சவர்ணம் போடி தாலுகா போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.

    • தனது 2 மகன்களுடன் தாயார் வீட்டிற்கு செல்வ தாக கணவரிடம் கூறிவிட்டு சென்றார்.
    • மாயமான சரண்யாவை செல்போன் டவர் உதவியுடன் தேடும் பணி நடைபெற்று வருகிறது

    என்.ஜி.ஓ.காலனி :

    சுசீந்திரம் அருகே பறக்கை சி.டி.எம்.புரம் பகுதியை சேர்ந்தவர் சுயம்பு லிங்கம் (வயது 31), கொத்த னார். இவரது மனைவி சரண்யா (28). இவர்களுக்கு ரோகித் (5), பாலரெஜின் (2) என்ற 2 மகன்கள் உள்ளனர். சம்பவத்தன்று சரண்யா தனது 2 மகன்களுடன் தாயார் வீட்டிற்கு செல்வ தாக கணவரிடம் கூறிவிட்டு சென்றார்.

    பின்னர் சரண்யா வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரை பல்வேறு இடங்களில் தேடினர். எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. இது குறித்து சுயம்புலிங்கம் சுசீந்திரம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர் முத்துசாமி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மாயமான சரண்யாவை செல்போன் டவர் உதவியுடன் தேடும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் அவரது பெற்றோரிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்ட னர். சரண்யா வுக்கு தோழிகள் யாராவது உள்ளார்களா? என்பது குறித்தும் போலீசார் விசா ரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    • சில நாட்கள் கடந்த நிலையில் வெளியே செல்வதாக கூறி சென்ற இளம்பெண் மீண்டும் வீடு திரும்பவில்லை.
    • உறவினர்கள் பல இடங்களில் தேடிப்பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை.

    விருதுநகர்:

    மருதமலை படத்தில் நடிகர் வடிவேலு தோன்றும் காமெடி காட்சியில் ஒரு பெண் அவருக்கு முன்னாடி, இவருக்கு பின்னாடி என்று 5 பேரை மணந்துகொண்டு, 6-வது நபருடன் போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு வரும் காட்சி அனைவராலும் ரசிக்கப்பட்டது. நிஜ வாழ்க்கையில் அப்படியொரு பெண் முயன்று மாயமாகி உள்ளார்.

    சிவகாசி அம்மன் கோவில்பட்டியை சேர்ந்தவர் 19 வயது இளம்பெண். பிளஸ்-2 வரை படித்துவிட்டு பெற்றோருக்கு உதவியாக இருந்த அவர் சாமிபுரம் காலனியை சேர்ந்த அருண் (23) என்பவரை காதலித்தார். பெற்றோருக்கு தெரியாமல் கடந்த மாதம் 21-ந்தேதி இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

    இந்தநிலையில் ஒரே வாரத்தில் அருணுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இளம்பெண் மீண்டும் தாய் வீட்டிற்கு வந்து விட்டார். இதைத்தொடர்ந்து ஒரு வாரம் கடந்த பின்பு சிவகாசி முருகன் காலனியை சேர்ந்த தமிழ் வளவன் (21) என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார்.

    சில நாட்கள் கடந்த நிலையில் வெளியே செல்வதாக கூறி சென்ற இளம்பெண் மீண்டும் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் பல இடங்களில் தேடிப்பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து மகளை கண்டுபிடித்து தருமாறு சிவகாசி கிழக்கு போலீஸ் நிலையத்தில் இளம்பெண்ணின் தாய் புகார் கொடுத்தார்.

    இதற்கிடையே அவரை, முதல் கணவரான அருண் கடத்தி சென்றிருக்கலாம் என இளம்பெண்ணின் சகோதரர் பால்பாண்டியும் (22), 2-வது கணவரான தமிழ்வளவனும் நினைத்தனர்.

    அவர்கள் தங்களது நண்பர்கள் முருகேசன் (21), கார்த்தீஸ்வரன் (26) ஆகியோருடன் அருண் வீட்டிற்கு சென்று விசாரித்தனர். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. ஆத்திரமடைந்த அவர்கள் அருணை சரமாரியாக தாக்கினர். தப்பி ஓட நினைத்த அவரை அரிவாளால் வெட்டியதில் கை மணிக்கட்டு துண்டானது.

    மேலும் தோள்பட்டை, முதுகு உள்ளிட்ட பகுதிகளிலும் பலத்த காயம் அடைந்தார். அருணின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டதை பார்த்த பால்பாண்டி உள்பட 4 பேரும் அருணுக்கு கொலை மிரட்டல் விடுத்து விட்டு அங்கிருந்து தப்பினர். ரத்த வெள்ளத்தில் துடித்த அருணை அங்கு வந்தவர்கள் மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    இதுகுறித்த புகாரின்பேரில் பால்பாண்டி உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து சிவகாசி கிழக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மாயமான அந்த பெண்ணையும் தீவிரமாக தேடி வருகிறார்கள்.

    • சுவேதா கேளம்பாக்கத்தை அடுத்த நாவலூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
    • நேற்று முன்தினம் வேலைக்கு சென்ற சுவேதா வீடு திரும்பவில்லை.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் அடுத்த கூத்தவாக்கத்தை சேர்ந்தவர் சுவேதா(20). பட்டதாரியான இவர், கேளம்பாக்கம் அடுத்த நாவலூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் வேலைக்கு சென்ற சுவேதா வீடு திரும்பவில்லை.

    இதுகுறித்து மாமல்லபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • கடைக்கு சென்ற இளம்பெண் வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை.
    • புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    தேவதானப்பட்டி:

    தேவதானப்பட்டி வடக்குதெருவை சேர்ந்த ரஞ்சித்குமார் மகள் பவித்ரா(25). இவருக்கு திருமணமாகி கணவரை விட்டு பிரிந்து தனது தந்தை வீட்டில் வசித்து வருகிறார்.

    சம்பவத்தன்று தனது செல்போன் ரிப்பேர் ஆகிவிட்டதாகவும், அதனை சரிசெய்து வருவதாக கூறிச்சென்றவர் மாயமானார். இதுகுறித்து அவரது தாய் ஜோதி கொடுத்த புகாரின்பேரில் தேவதானப்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சம்பவத்தன்று வழக்கம்போல் வேலைக்கு சென்ற இளம்பெண் இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்ைல.
    • புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    பெரியகுளம்:

    பெரியகுளம் அருகே சருத்துப்பட்டியை சேர்ந்தவர் சக்திவேல் மகள் வினோதினி(17). இவர் பிளஸ்-2 வரை படித்து விட்டு பெரியகுளத்தில் உள்ள ஜவுளிகடையில் வேலைபார்த்து வருகிறார்.

    சம்பவத்தன்று வழக்கம்போல் வேலைக்கு சென்ற வினோதினி இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்ைல. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது தந்தை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால் தென்கரை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.

    • சம்பவத்தன்று வருசநாட்டில் உள்ள கம்ப்யூட்டர் சென்டருக்கு சென்றுவருவதாக வீட்டில் கூறிவிட்டு தனது மகளை அழைத்துச்சென்றார்.
    • ஆனால் இரவு வெகுநேரமாகியும் அவர்கள் வீடு திரும்பவில்லை.

    வருசநாடு:

    ஆண்டிபட்டி அருகே வருசநாடு உரக்குண்டான் பகுதியை சேர்ந்தவர் கவியரசன். இவரது மனைவி முத்துமாரி(25). இவர்களுக்கு மித்ரா என்ற 4 வயது குழந்தை உள்ளது. கணவன்- மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக பிரச்சினை ஏற்பட்டது. இதனால் முத்துமாரி கோபித்துக்கொண்டு தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.

    சம்பவத்தன்று வருசநாட்டில் உள்ள கம்ப்யூட்டர் சென்டருக்கு சென்றுவருவதாக வீட்டில் கூறிவிட்டு தனது மகளை அழைத்துச்சென்றார். ஆனால் இரவு வெகுநேரமாகியும் அவர்கள் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த முத்துமாரியின் தந்தை அக்கம்பக்கம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடிப்பார்த்தும் கிடைக்காததால் வருசநாடு போலீசில் புகார் அளித்தார்.

    அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து கைக்குழந்தையுடன் மாயமான முத்துமாரியை தேடி வருகின்றனர்.

    சின்னமனூர் அருகே ஓடைப்பட்டியை சேர்ந்தவர் பவித்ரா(22). சம்பவத்தன்று சின்னமனூருக்கு வேலை தேடி செல்வதாக கூறிச்சென்றார். அதன்பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது தந்தை நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடிப்பார்த்தும் கிடைக்காததால் ஓடைப்பட்டி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து பவித்ராவை தேடி வருகின்றனர்.

    • குழந்தையுடன் வெளியே சென்ற பெண் இரவு வெகுநேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை.
    • புகாரின் பேரில் போலீசார் மாயமானவர்களை தேடி வருகின்றனர்.

    சின்னமனூர்:

    சின்னமனூர் அருகே எஸ்.அழகாபுரியை சேர்ந்த மோகன்பாபு மனைவி மைப்பாரை (வயது26). இவர்களுக்கு வர்ஷா (8) என்ற மகளும் லோகேஸ்வரன் (3) என்ற மகனும் உள்ளனர்.

    சம்பவத்தன்று குழந்தைகளுடன் மைப்பாரை வெளியே சென்றார். அதன்பின்னர் இரவு வெகுநேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது தாய் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்காததால் ஓடைப்பட்டி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம்பெண் மற்றும் குழந்தைகளை தேடி வருகின்றனர்.

    • பள்ளிக்கு சென்று குழந்தையை அழைத்து வருவதாக கூறிவிட்டு வெளியே சென்றவர் வீடு திரும்ப வில்லை
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தையுடன் மாயமானவரை தேடி வருகின்றனர்.

    மணவாளக்குறிச்சி :

    மணவாளக்குறிச்சி அருகே பிள்ளை யார் கோவில் பகுதியை சேர்ந்த வர் நேவிஸ் ஜெயராஜ் (வயது 37). இவரது மனைவி எலிசபெத் ராணி (27). இவர்களுக்கு 5 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. எலிசபெத் ராணி செல்போனில் நீண்டநேரம் பேசுவாராம். இதை நேவிஸ் ஜெயராஜ் கண்டித்தார். சம்பவத்தன்று எலிசபெத் ராணி பள்ளிக்கு சென்று குழந்தையை அழைத்து வருவதாக கூறிவிட்டு வெளியே சென்றவர் பின்னர் வீடு திரும்ப வில்லை. குழந்தையையும் காண வில்லை.

    இதையடுத்து உறவி னர்கள், நண்பர்கள் வீடு களில் தேடியும் அவர்களை குறித்து எந்த தகவலும் கிடைக்க வில்லை. இதுகுறித்து நேவிஸ் ஜெயராஜ் மணவா ளக்குறிச்சி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தையுடன் மாயமான எலிசபெத் ராணியை தேடி வருகின்றனர்.

    ×