என் மலர்
உள்ளூர் செய்திகள்

கடலூரில் வேலைக்கு சென்ற இளம்பெண் மாயம்
- இளம்பெண் கடலூர் முதுநகரில் உள்ள தனியார் மோட்டார் சைக்கிள் ஷோரூமில் வேலை பார்த்து வந்தார்.
- அதிர்ச்சியடைந்த பெண்ணின் பெற்றோர் அவரை எல்லா இடத்திலும் தேடினர். ஆனால் எங்கும் தேடியும் கிடைக்கவில்லை.
கடலூர்:
கடலூர் புதுப்பாளையம் பகுதியை சேர்ந்த 23 வயது இளம்பெண் கடலூர் முதுநகரில் உள்ள தனியார் மோட்டார் சைக்கிள் ஷோரூமில் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று வழக்கம் போல் அந்த பெண் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெண்ணின் பெற்றோர் அவரை எல்லா இடத்திலும் தேடினர். ஆனால் எங்கும் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து கடலூர் புதுநகர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து காணாமல் போன இளம் பெண்ணை தேடி வருகின்றனர்.
Next Story






