search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Intensive Investigation"

    • 2013ம் ஆண்டே சதா சுங்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டவர் என தகவல்.
    • போதைப் பொருளை ஜாபர் சாதிக் கடத்தியது விசாரணையில் அம்பலம்.

    ஜாபர் சாதிக்கை, மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் காவலில் வைத்து விசாரணை நடத்தியபோது சதா என்கிற சதானந்தம் என்பவர் போதைப்பொருள் கடத்தலில் தனக்கு உடந்தையாக இருப்பதாக தெரிவித்தார். இதையடுத்து சதாவை தேடும் பணியில் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டனர்.

    இதற்காக அவர்கள் சென்னை வந்தனர். சென்னையில் உள்ள அவரது வீட்டுக்கு சென்று தேடியபோது அவர் வீட்டில் இல்லை. பின்னர் அவரது நண்பர்களிடம் விசாரித்தபோது சதா சென்னையில் பதுங்கி இருந்த இடம் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு தெரியவந்தது.

    இதையடுத்து மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சென்னையில் பதுங்கி இருந்த சதாவை சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் அவரை அதிகாரிகள் டெல்லிக்கு அழைத்து சென்று கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். 

    இதில், 2018ம் ஆண்டு ரூ.25 கோடி மதிப்பிலான போதைப் பொருளை ஜாபர் சாதிக் கடத்தியது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

    மேலும், 2013ம் ஆண்டே சதா சுங்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டவர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    ரூ.25 கோடி மதிப்பிலான சூடோபெட்ரின் போதைப் பொருள் 2018ல் மலேசியாவிற்கு கடத்தப்பட்டது குறித்து சதாவிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    2019ம் ஆண்டு ரூ.1.3 கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள் கடத்தப்பட்டு இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    • வெளிநாட்டில் இருந்து திரும்பி வந்த பிறகு, ஆரம்பித்த தொழிலில் பிரகாஷ்க்கு நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
    • தீபிகா, கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டாரா? குடும்பத் தகராறு காரணமா?

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியார்குப்பம் மீனவ கிராமத்தை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 40). இவர் வெளிநாட்டிற்கு சென்று திரும்பி வந்து உள்ளூரிலேயே தொழில் செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி பிளஸ்-2, 10-ம் வகுப்பு பயிலும் 2 பெண் குழந்தைகள் உள்ளனர். வெளிநாட்டில் இருந்து திரும்பி வந்த பிறகு, ஆரம்பித்த தொழிலில் பிரகாஷ்க்கு நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் கடன் அதிகரித்து பிரகாஷ்க்கும் அவரது மனைவி தீபிகாவிற்கும் (35) இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது. இந்நிலையில் இன்று வீட்டிலிருந்த மின்விசிறியில் தூக்கு போட்டு இறந்த நிலையில் தீபிகா தொங்கினார். இதனைக் கண்ட அவரது பெண் குழந்தைகள் கதறி அழுதபடி தந்தை பிரகாஷிடம் கூறினர்.

    இது தொடர்பான புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மரக்காணம் போலீசார், தீபிகாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கனகசெட்டிக்குளத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர்.தற்கொலை செய்து கொண்ட தீபிகா, கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டாரா? குடும்பத் தகராறு காரணமா? அல்லது வேறு ஏதும் காரணமா என்பது குறித்து மரக்காணம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 2 பெண் குழந்தைகளின் தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • லட்சுமி (வயது 42). இவர், 3-வதாக பிரபல ரவுடி மேட்டூர் ரகு என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
    • கடந்த மாதம் 19-ந்தேதி சமத்துவபுரத்தில் உள்ள வீட்டில் லட்சுமி கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

    சேலம்:

    சேலம் சீரகாபாடி சமத்துவபுரம் பகுதியை சேர்ந்தவர் காளியம்மாள் என்கிற லட்சுமி (வயது 42). இவர், 3-வதாக பிரபல ரவுடி மேட்டூர் ரகு என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

    கடந்த மாதம் 19-ந்தேதி சமத்துவபுரத்தில் உள்ள வீட்டில் லட்சுமி கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது தொடர்பாக அவரது 3-வது கணவரான மேட்டூர் ரகுவை போலீசார் தேடி வந்த நிலையில் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையம் கோர்ட்டில் சரண் அடைந்தார். மேலும் அவரது கூட்டாளிகளான ேஷக் மைதீன்(29), ஜோசப் என்கிற பாலாஜி(19), ஆனந்த் (28) ஆகியோர் பவானி கோர்ட்டில் சரண் அடைந்தனர்.

    இதையடுத்து ஆட்டையாம்பட்டி போலீசார் கடந்த 29-ந்தேதி ரகுவை காவலில் எடுத்து விசாரித்தனர். அப்போது, கோபிசெட்டிப்பாளை யத்தில் உள்ள ெசாத்தை அடகு வைத்து சீரகாபாடியில் ரூ.7 லட்சத்தில் லட்சுமிக்கு வீடு ஒன்றை வாங்கி கொடுத்தேன்.

    நான், சிறையில் இருக்கும்போது அவர், இன்னொரு வாலிபருடன் தொடர்பு வைத்துக்கொண்டார். இதனை என்னிடமே கூறினார். சம்பவத்தன்று நள்ளிரவு வெளியே போய் விட்டு லட்சுமி வந்தார். எங்கே போய் விட்டு வருகிறாய் என்று கேட்டபோது, தொடர்பு வைத்துள்ள வாலிபரை பார்த்து விட்டு வருவதாக தைரியமாக கூறினார். இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

    நான் வாங்கிக் கொடுத்த நிலத்தை கொடு என கேட்டபோது, லட்சுமி மறுத்து தப்பி ஓட முயன்றார். அப்போது நண்பர்களுடன் சேர்ந்து அவரை கொன்றேன் என ரகு போலீசாரிடம் வாக்குமூலம் அளித்ததாக தெரிகிறது.

    பின்னர் ரகுவை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    கூட்டாளிகளிடம் தீவிர விசாரணை

    இந்த நிலையில் சரண் அடைந்த இவரது கூட்டாளிகள் ேஷக் மைதீன், ஜோசப் என்கிற பாலாஜி , ஆனந்த் ஆகிய 3 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க ஆட்டையாம்பட்டி போலீசார் சேலம் 4-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணை நேற்று கோர்ட்டில் நடைபெற்றது. நீதிபதி, 2 நாள் போலீஸ் விசாரணைக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டார்.

    இதையடுத்து அவர்களை அழைத்துச் சென்று துணை போலீஸ் சூப்பிரண்டு அம்லா அட்வின், இன்ஸ்ெபக்டர் அம்சவல்லி மற்றும் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அப்போது, வேறு கொள்ளை, கொலை உள்ளிட்ட ஏதாவது குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு இருக்கிறீர்களா? என பல்வேறு கேள்விகள் கேட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில் அவர்கள் திடுக்கிடும் தகவல்களை போலீசாரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    • கிராம நிர்வாக அலுவலர் முன்னிலையில் பொதுமக்கள் உதவியுடன் பள்ளத்தில் இருந்த மண்ணை அப்புறப்படுத்தினர்.
    • இந்த சம்பவத்தால் சால வனூர் மற்றும் சுற்று வட்டார கிராமங்கள் பரபரப்பாக காணப்படுகிறது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள சாலவனூர் கிராமத்தில் 100 நாள் வேலையில் பொதுமக்கள் ஈடுபட்டனர். அங்குள்ள மயான புறம்போக்கு இடத்தில் நேற்று மதியம் பள்ளம் தோண்டினார்கள். பள்ளம் தோண்டும் போது மனித உடலின் கை தெரிந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பொது மக்கள் அங்கிருந்த அதிகாரியிடம் இது குறித்து கூறினர். அவர் சாலவனூர் கிராம நிர்வாக அலுவலருக்கும், வஞ்சனூர் போலீசாருக்கும் தகவல் கொடுத்தார். தகவலின் பேரில் நேற்று மாலை 4 மணிக்கு வந்த போலீசார், கிராம நிர்வாக அலுவலர் முன்னிலையில் பொதுமக்கள் உதவியுடன் பள்ளத்தில் இருந்த மண்ணை அப்புறப்படுத்தினர். இதில் 25 வயது மதிக்கத்தக்க இளம்பெண்ணின் உடலை கண்டனர். சம்பவ இடத்திற்கு வந்த செஞ்சி போலீஸ் துணை சூப்பிரண்டு கவினா இது குறித்து விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதாவிற்கு தகவல் கொடுத்தார்.

    இந்நிலையில் இன்று காலை விழுப்புரத்தில் இருந்து தடயவியல் நிபுணர் சண்முகம் தலைமையிலான மருத்துவக் குழுவினர் சாலவனூர் கிராமத்திற்கு வந்தனர். இளம்பெண்ணின்  உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து செஞ்சி போலீஸ் துணை சூப்பிரண்டு கவினா கூறுகையில், இளம்பெண்ணை யாராவது கொலை செய்து புதைத்திருக்கலாம் என்ற கோணத்தில் நாங்கள் விசாரணையை தொடங்கியுள்ளோம். இதற்காக 25 முதல் 30 வயது வரையில் காணாமல் போன இளம்பெண்கள் குறித்த விபரங்களை மற்ற போலீஸ் நிலையங்களில் இருந்து பெறும் பணி நடந்து வருகிறது. பிரேத பரிசோதனைக்கு பின்னரே இளம் பெண் கற்பழிக்கப்பட்டு கொலை செய்து புதைக்கப்பட்டாரா? பாலியல் துன்புறுத்தல் ஏதேனும் நடந்துள்ளதா? எப்போது இந்த சம்பவம் நடந்தது என்பன போன்ற விபரங்கள் தெரியவரும் என்று கூறினார். இந்த சம்பவத்தால் சால வனூர் மற்றும் சுற்று வட்டார கிராமங்கள் பரபரப்பாக காணப்படுகிறது.

    • மணி (25), கொத்தனார். திருமணம் ஆகாதவர். மணி (25), இவர் திருத்துறையூர் - கயப்பாக்கம் செல்லும் சாலையில் உள்ள புளிய மரம் ஒன்றில் நைலான் கயிற்றால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • இதுகுறித்து வழக்கு பதிவு செய்து இவர் எதற்காக தூக்குபோட்டு இறந்தார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த திருத்துறையூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் துளசிங்கம் மகன் மணி (25), கொத்தனார். திருமணம் ஆகாதவர். இவர் திருத்துறையூர் - கயப்பாக்கம் செல்லும் சாலையில் உள்ள புளிய மரம் ஒன்றில் நைலான் கயிற்றால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது பற்றி அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் புதுப்பேட்டை போலீசாருக்கு தகவல்கொடுத்தனர். புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இதுகுறித்து வழக்கு பதிவு செய்து இவர் எதற்காக தூக்குபோட்டு இறந்தார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கீர்த்தனா கடலூர் பெண்கள் கல்லூரியில் பி.எஸ்.சி. 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.
    • பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    கடலூர்: 

    பண்ருட்டி அடுத்த காடாம்புலியூர் கீழீருப்பு கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் மகள் கீர்த்தனா (வயது 19), இவர் கடலூர் கே.என்.சி. பெண்கள் கல்லூரியில் பி.எஸ்.சி. 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் நேற்று கல்லூரிக்கு சென்று விட்டு பண்ருட்டி பஸ் நிலையத்தில் இறங்கி வீட்டுக்கு செல்வதாக நண்பர்களிடம் கூறி சென்றார். ஆனால் இரவு வரை வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் கிடைக்காததால் காணாமல் போன கீர்த்தனாவின் தாயார் தேவி, பண்ருட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • கடந்த 24ம் தேதி பிற்பகல் 3 மணி அளவில் திடீரென மாயமானார்.
    • பல இடங்களில் தேடியும் எங்கும் கிடைக்காததால் பண்ருட்டி போலீசில் புகார் செய்தனர்.

    கடலூர்:

    பண்ருட்டி எல்.ஆர்.பாளையத்தை சேர்ந்தவர் கோபால் இவரது மகள் சரண்யா (வயது 20). இவர் கடந்த 24ம் தேதி பிற்பகல் 3 மணி அளவில் திடீரென மாயமானார். இவரை பல இடங்களில் தேடியும் எங்கும் கிடைக்காததால் பண்ருட்டி போலீசில் புகார் செய்தனர். பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார், சப் இன்ஸ்பெக்டர் தங்கவேல் ஆகியோர் வழக்கு பதிவு செய்து தீவிரமாக தேடி வருகின்றனர். இவரை பாளையம் தர்கா கோவில் தெருவை சேர்ந்த சூர்யா (20) கடத்தி சென்றதாக கூறப்படுகிறது.

    ×