search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Adolescent illusion"

    • கடந்த 24ம் தேதி பிற்பகல் 3 மணி அளவில் திடீரென மாயமானார்.
    • பல இடங்களில் தேடியும் எங்கும் கிடைக்காததால் பண்ருட்டி போலீசில் புகார் செய்தனர்.

    கடலூர்:

    பண்ருட்டி எல்.ஆர்.பாளையத்தை சேர்ந்தவர் கோபால் இவரது மகள் சரண்யா (வயது 20). இவர் கடந்த 24ம் தேதி பிற்பகல் 3 மணி அளவில் திடீரென மாயமானார். இவரை பல இடங்களில் தேடியும் எங்கும் கிடைக்காததால் பண்ருட்டி போலீசில் புகார் செய்தனர். பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார், சப் இன்ஸ்பெக்டர் தங்கவேல் ஆகியோர் வழக்கு பதிவு செய்து தீவிரமாக தேடி வருகின்றனர். இவரை பாளையம் தர்கா கோவில் தெருவை சேர்ந்த சூர்யா (20) கடத்தி சென்றதாக கூறப்படுகிறது.

    • பார்த்திபனுக்கும் இவரது பெற்றோருக்கும் இடையில் தகராறு ஏற்படு வந்தது.
    • வேலைக்காக தனது நண்பரை பார்த்து வருவதாக வீட்டில் கூறிவிட்டு சென்ற பார்த்திபன் இரவு நேரமாகியும் வீடு திரும்பவில்லை.

    கடலூர்:

    சிதம்பரம் அருகே சம்பந்தக்கார தெருவை சேர்ந்தவர் கலியமூர்த்தி மகன் பார்த்திபன் (வயது 27). பட்டதாரி. இவர் படித்து முடித்துவிட்டு வேலை தேடி வந்தார். இதனால் பார்த்திபனுக்கும் இவரது பெற்றோருக்கும் இடையில் தகராறு ஏற்படு வந்தது.

    இந்நிலையில் நேற்று வேலைக்காக தனது நண்பரை பார்த்து வருவதாக வீட்டில் கூறிவிட்டு சென்ற பார்த்திபன் இரவு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பார்த்திபனின் பெற்றோர் பார்த்திபனை உறவினர் மற்றும் நண்பர்கள் வீடு உள்பட பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் பார்த்திபன் கிடைக்கவில்லை.

    இது குறித்து பார்த்திபனின் தாய் அன்பரசி சிதம்பரம் நகர போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் வழக்கு பதிவு செய்து பார்த்திபனை தேடிவருகின்றனர்.

    • திருவெண்ணைநல்லூர் அருகே கணவர் இறந்த 1 மாதத்தில் இளம்பெண் மாயமானார்.
    • சுகன்யாவின் தாய் சரோஜா திருவெண்ணைநல்லூர் போலீசில் புகார் தெரிவித்தார்.

    விழுப்புரம்:

    திருவெண்ணைநல்லூர் அருகே பொய்கைஅரசூர் பகுதியை சேர்ந்தவர் காந்திராஜ். இவரது மனைவி சுகன்யா. காந்திராஜ் கடந்த 30-ந் தேதி குடும்ப பிரச்சனை காரணமாக தீக்குளித்து இறந்தார். இந்நிலையில் சுகன்யா தனியாக 2 குழந்தைகளுடன் இருவேல் பட்டு பகுதியிலுள்ள தனது தாய் வீட்டில் தங்கி இருந்தார். நேற்று மாலை சுகன்யா வீட்டிலிருந்து வெளியில் சென்றார். பின்னர் வீடு திரும்பவில்லை. அதிர்ச்சி அடைந்த சுகன்யாவின் தாய் சரோஜா சுகன்யாவை உறவினர்கள் வீடு மற்றும் பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர்.

    ஆனால் எங்கு தேடியும் சுகன்யா கிடைக்கவில்லை. இது குறித்து சுகன்யாவின் தாய் சரோஜா திருவெண்ணைநல்லூர் போலீசில் புகார் தெரிவி த்தார். புகாரின் பேரில் திருவெண்ணைநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வகுமார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன சுகன்யா என்ன ஆனார் எங்கு சென்றார் யாரேனும் கடத்தப்பட்டாரா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • கடலூர் முதுநகரில் இருந்து ஆந்திர மாநிலத்திற்கு சென்ற வாலிபர் மாயமானார்.
    • கடந்த மாதம் 21-ந் தேதி தனது வீட்டிற்கு வந்துள்ளார்.

    கடலூர்:

    கடலூர் முதுநகர் மாலுமியார் பேட்டையை சேர்ந்தவர் தினகரன் (வயது 24).இவர் ஆந்திரா மாநிலத்தில் கடந்த 4 ஆண்டுகளாக வெல்டராக வேலை செய்து வந்தார். இந்த நிலையில் கடந்த மாதம் 21-ந் தேதி தனது வீட்டிற்கு வந்துள்ளார்.இதனை தொடர்ந்து தினகரன் சம்பவத்தன்று மீண்டும் ஆந்திரா மாநிலத்திற்கு வேலைக்கு செல்வதற்காக சென்றவர் எங்கு சென்றார் தெரியவில்லை. இது குறித்து கடலூர் முதுநகர் காவல் நிலையத்தில் தாய் வசந்தி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×