search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பண்ருட்டியில் கல்லூரி மாணவி மாயம்: போலீசார் தீவிர விசாரணை
    X

    பண்ருட்டியில் கல்லூரி மாணவி மாயம்: போலீசார் தீவிர விசாரணை

    • கீர்த்தனா கடலூர் பெண்கள் கல்லூரியில் பி.எஸ்.சி. 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.
    • பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    கடலூர்:

    பண்ருட்டி அடுத்த காடாம்புலியூர் கீழீருப்பு கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் மகள் கீர்த்தனா (வயது 19), இவர் கடலூர் கே.என்.சி. பெண்கள் கல்லூரியில் பி.எஸ்.சி. 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் நேற்று கல்லூரிக்கு சென்று விட்டு பண்ருட்டி பஸ் நிலையத்தில் இறங்கி வீட்டுக்கு செல்வதாக நண்பர்களிடம் கூறி சென்றார். ஆனால் இரவு வரை வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் கிடைக்காததால் காணாமல் போன கீர்த்தனாவின் தாயார் தேவி, பண்ருட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×