search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "young woman missing"

    • சம்பவத்தன்று வருசநாட்டில் உள்ள கம்ப்யூட்டர் சென்டருக்கு சென்றுவருவதாக வீட்டில் கூறிவிட்டு தனது மகளை அழைத்துச்சென்றார்.
    • ஆனால் இரவு வெகுநேரமாகியும் அவர்கள் வீடு திரும்பவில்லை.

    வருசநாடு:

    ஆண்டிபட்டி அருகே வருசநாடு உரக்குண்டான் பகுதியை சேர்ந்தவர் கவியரசன். இவரது மனைவி முத்துமாரி(25). இவர்களுக்கு மித்ரா என்ற 4 வயது குழந்தை உள்ளது. கணவன்- மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக பிரச்சினை ஏற்பட்டது. இதனால் முத்துமாரி கோபித்துக்கொண்டு தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.

    சம்பவத்தன்று வருசநாட்டில் உள்ள கம்ப்யூட்டர் சென்டருக்கு சென்றுவருவதாக வீட்டில் கூறிவிட்டு தனது மகளை அழைத்துச்சென்றார். ஆனால் இரவு வெகுநேரமாகியும் அவர்கள் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த முத்துமாரியின் தந்தை அக்கம்பக்கம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடிப்பார்த்தும் கிடைக்காததால் வருசநாடு போலீசில் புகார் அளித்தார்.

    அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து கைக்குழந்தையுடன் மாயமான முத்துமாரியை தேடி வருகின்றனர்.

    சின்னமனூர் அருகே ஓடைப்பட்டியை சேர்ந்தவர் பவித்ரா(22). சம்பவத்தன்று சின்னமனூருக்கு வேலை தேடி செல்வதாக கூறிச்சென்றார். அதன்பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது தந்தை நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடிப்பார்த்தும் கிடைக்காததால் ஓடைப்பட்டி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து பவித்ராவை தேடி வருகின்றனர்.

    • அன்பரசன் (வயது 26). இவரும், ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே உள்ள குப்பம் அடுத்த நைனூர் பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் மகள் பூர்ணிமா (20) என்பவரும் திருப்பூரில் உள்ள ஒரு ஸ்பின்னிங் மில்லில் வேலை பார்த்து வந்தனர்.
    • புதிய பஸ் நிலையத்தில் நிற்க வைத்து விட்டு சென்றார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது கார்த்திக் மற்றும் பூர்ணிமாவை காணவில்லை.

    சேலம்:

    திருப்பூர் மாவட்டம் குண்ட நாற்றம்பள்ளி பகுதியை சேர்ந்தவர் அன்பரசன் (வயது 26). இவரும், ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே உள்ள குப்பம் அடுத்த நைனூர் பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் மகள் பூர்ணிமா (20) என்பவரும் திருப்பூரில் உள்ள ஒரு ஸ்பின்னிங் மில்லில் வேலை பார்த்து வந்தனர்.

    இந்த நிலையில் கடந்த 11-ம் தேதி சொந்த ஊர் செல்வதற்காக திருப்பூரிலிருந்து பஸ்சில் பூர்ணிமா ஏறினார். அப்போது அவரை அன்பரசன் அவரது நண்பர் மற்றும் கார்த்திக் ஆகியோர் சேலம் புதிய பஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.

    பின்னர் அன்பரசன் செல்போன் கடைக்கு செல்வதாக கூறிவிட்டு கார்த்தி மற்றும் பூர்ணிமா ஆகியோரை புதிய பஸ் நிலையத்தில் நிற்க வைத்து விட்டு சென்றார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது கார்த்திக் மற்றும் பூர்ணிமாவை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அன்பரசன் இதுகுறித்து பள்ளப்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் ராணி வழக்கு பதிவு செய்து மாயமான ஆந்திர மாநில இளம்பெண்ணையும் வாலிபரையும் தேடி வருகிறார்.

    • உறவினர்கள் வீடுகளில் தேடியும் இளம்பெண் கிடைக்காததால் பொன்னேரி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணை தேடி வருகிறார்கள்.

    பொன்னேரி:

    பொன்னேரி அடுத்த தடப்பெரும்பாக்கம் அன்னை அபிராமி நகரை சேர்ந்தவர் ஹரிணி (18). இவர் திருநெல்வேலி ஜியான் செமினேரி பல்கலைக்கழகத்தில் தொலைதூரக் கல்வி மூலம் பி.டெக் வேதியியல் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

    நேற்று முன்தினம் அவரது பெற்றோர் பொன்னேரி பஜாருக்கு சென்று வருவதாக கூறி சென்றனர். இந்த நிலையில் அவர்கள் வீடு திரும்பி வந்து பார்த்தபோது ஹரிணியை காணவில்லை. உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்காததால் பொன்னேரி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

    போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணை தேடி வருகிறார்கள்.

    • சுனிதா கடந்த 14-ந்தேதி இரவு வீட்டை விட்டு வெளியே சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை.
    • சுனிதாவை பல இடங்களில் தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை.

    சென்னை:

    சென்னை வளசரவாக்கம் அம்பேத்கர் சாலையைச் சேர்ந்தவர் பென்சிலையா. இவரது மகள் சுனிதா (வயது18). பிளஸ்-2 முடித்து விட்டு வளசரவாக்கத்தில் உள்ள ஒரு கடையில் வேலை செய்து வந்தார். வருகிற மே மாதம் அவருக்கு திருமணம் செய்ய பெற்றோர் முடிவு செய்துள்ளனர்.

    இந்த நிலையில் சுனிதா கடந்த 14-ந்தேதி இரவு வீட்டை விட்டு வெளியே சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. அவரை பல இடங்களில் தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை.

    இதுகுறித்து அவரது தந்தை பென்சிலையா வளரசவாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து சுனிதாவை தேடி வருகிறார்கள்.

    • கஜலட்சுமி பஸ் நிறுத்தம் சாலையில் உள்ள தனியார் செல்போன் கடை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.
    • பின்னர் அவர் வீடு திரும்பவில்லை

    அரியலூர் :

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் கணபதி நகரை சேர்ந்தவர் செல்வநாதன். இவரது மகள் கஜலட்சுமி(வயது 19). இவர் பஸ் நிறுத்தம் சாலையில் உள்ள தனியார் செல்போன் கடை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.

    இவர் வழக்கம்போல் நேற்று காலை செல்போன் கடைக்கு வேலைக்கு சென்று வருவதாக வீட்டில் கூறிச் சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் பெற்றோர் அவரை உறவினர்கள் வீடுகள், தோழிகள் வீடுகள் என பல்வேறு இடங்களிலும் தேடியும் அவர் கிடைக்கவில்லை.

    இது குறித்து ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் கஜலட்சுமியின் தாய் புனிதா புகார் அளித்தார். அதன்பேரில் கஜலட்சுமியை போலீசார் தேடி வருகின்றனர்.

    • இளம்பெண் செல்போனில் அடிக்கடி ஆன்லைன் மூலம் பிரீ பையர் விளையாட்டை விளையாடி வந்தார்.
    • கோமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மாயமான இளம்பெண்னை தேடி வருகின்றனர்.

    கோவை:

    கரூரை சேர்ந்தவர் 27 வயது வாலிபர் பொள்ளாச்சி கோமங்கலம் போலீசில் ஒரு புகார் அளித்தார். இதில் அவர் கூறியிருப்பதாவது:-

    எனக்கும், 23 வயது உறவுகார பெண்ணுக்கும் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. எங்களுக்கு குழந்தைகள் இல்லை. பின்னர் நாங்கள் கரூரில் இருந்து பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை கோமங்கலத்திற்கு வந்தோம்.

    இங்கு நான் ஒரு தனியார் நிறுவனத்தில் சூப்பர்வைசராக வேலை செய்து வருகிறான். இந்த நிலையில் எனது மனைவி எனது செல்போனில் அடிக்கடி ஆன்லைன் மூலம் பிரீ பையர் விளையாட்டை விளையாடி வந்தார். அதனை நான் கண்டித்தேன்.

    ஆனாலும் அவர் தொடர்ந்து விளையாடி வந்தார். சம்பவத்தன்று நான் வழக்கம் போல வேலைக்கு சென்று விட்டேன். பின்னர் மாலை நான் வீடு திரும்பியபோது எனது மனைவி வீட்டில் இல்லை.

    அதிர்ச்சி அடைந்த நான் அக்கம் பக்கத்தில் தேடி பார்த்தேன். அப்போது வீட்டின் அருகில் இருந்த மளிகை கடைகாரரிடம் கேட்டபோது அவர் எனது மனைவி பொள்ளாச்சி பஸ் ஏறி சென்றதை பார்த்ததாக கூறினார். அதன் பின்னர் அங்கும் சென்று தேடி பார்த்தேன். ஆனால் அவர் கிடைக்கவில்லை.

    சந்தேகம் அடைந்த நான் அவர் விளையாடும் பிரீ பையர் விளையாட்டை பரிசோதனை செய்தேன். அதில் எனது மனைவி ஒரு குறிப்பிட்ட செல்போன் எண்ணுக்கு அதிக மெசேஜ் அனுப்பி அதனை அழித்து வைத்திருந்தார்.

    அவர் யார் என்று தெரியவில்லை. அந்த எண்ணை தொடர்பு கொள்ளவும் முடியவில்லை. எனவே எனது மனைவி அந்த வாலிபருடன் சென்று இருக்கலாம் என சந்தேகமாக உள்ளது. எனவே எனது மனைவியை தேடி கண்டுபிடித்து மீட்டு தரவேண்டும்.

    இவ்வாறு அவர் அந்த புகார் மனுவில் கூறியுள்ளார்.

    இதையடுத்து கோமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மாயமான இளம்பெண்னை தேடி வருகின்றனர்.

    • முசிறி புது கள்ளர் தெருவை சேர்ந்தவர் மாணி–க்கம். இவரது மகள் ஷோபனா (வயது 24).
    • சம்பவதன்று மாற்றுச் சான்றிதழ் வாங்கி வருவதாக வீட்டில் கூறி சென்றார்.

    திருச்சி:

    முசிறி புது கள்ளர் தெருவை சேர்ந்தவர் மாணி–க்கம். இவரது மகள் ஷோபனா (வயது 24). இவர் ஸ்ரீரங்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து முடித்துள்ளார்,

    சம்பவதன்று மாற்றுச் சான்றிதழ் வாங்கி வருவதாக வீட்டில் கூறி சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் சோபனா கிடைக்கவில்லை.

    இது குறித்து மாணிக்கம் முசிறி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில், முசிறி சப் இன்ஸ்பெக்டர் திருப்பதி வழக்கு பதிவு செய்து மாயமான சோபனாவை தேடி வருகின்றனர்.

    ஆண்டிப்பட்டி அருகே தண்ணீர் பிடிக்க சென்ற இளம்பெண் மாயமானது குறித்து அவரது தந்தை போலீசில் புகார் செய்தார். போலீசார் இளம்பெண்ணை தேடி வருகிறார்கள்.

    ஆண்டிப்பட்டி:

    ஆண்டிப்பட்டி அருகே ஜக்கம்பட்டி முத்துமாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ரவி மகள் ஜெயப்பிரியா (வயது 17). இவர் தேனியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். சம்பவத்தன்று வீட்டில் இருந்து ஜெயப்பிரியா தண்ணீர் பிடிப்பதற்காக வெளியே சென்றார். 

    நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த அவரது தந்தை நண்பர் மற்றும் உறவினர் வீடுகளில் தேடிப்பார்த்தார். ஆனால் ஜெயப்பிரியா அங்கு செல்ல வில்லை. இரவு வரை மகள் வீடு திரும்பாததால் கவலையடைந்த அவரது தந்தை ஆண்டிப்பட்டி போலீசில் புகார் அளித்தார்.

    இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான ஜெயப்பிரியாவை தேடி வருகின்றனர்.

    போச்சம்பள்ளி அருகே வேலைக்கு சென்ற இளம்பெண் மாயமானது குறித்து அவரது தந்தை போலீசில் புகார் செய்தார். போலீசார் இளம்பெண்ணை தேடி வருகிறார்கள்.
    போச்சம்பள்ளி:

    கிருஷ்ணகிரி மாவட்டம்,  போச்சம்பள்ளி அடுத்துள்ள அரசம்பட்டியை சேர்ந்தவர் பழனி (வயது47). இவரது மகள் சங்கீதா (22). மயிலம்பட்டியை சேர்ந்த சிலம்பரசனுக்கும், சங்கீதாவுக்கும் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்கள் இருவரும் மயிலம்படியில் குடும்பத்துடன் வசித்து வந்தனர்.

    இந்த நிலையில் கணவன்-மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டது. இதனால்  சங்கீதா கோபித்து கொண்டு தனது தந்தை வீட்டிற்கு சென்று விடுவார். பின்னர் அவர்கள் சமாதானம் செய்து கணவர் வீட்டிற்கு அனுப்பி வைத்து விடுவார்.

    கணவன்-மனைவி இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு நடந்தது. இதனால் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கோபித்து கொண்டு சங்கீதா தனது தந்தை வீட்டிற்கு சென்றார். அங்கு தந்தை வீட்டில் இருந்து சங்கீதா போச்சம்பள்ளி சிப்காட் தனியார் கம்பெனிக்கு வேலை சென்று வந்தார். 

    கடந்த 6-ந்தேதி அன்று சங்கீதா வேலைக்கு சென்றுவிட்டு பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் அவரை தந்தை பழனி உறவினர் வீடு உள்பட பல்வேறு  இடங்களில் தேடி பார்த்தார். ஆனால் எங்கும் தேடியும் அவர் கிடைக்க வில்லை.

    இது குறித்து பழனி பாரூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான சங்கீதாவை தேடி வருகின்றனர்.
    சாத்தான்குளம் மற்றும் கூடங்குளம் பகுதியில் கல்லூரி மாணவி, இளம்பெண் மாயமானார்கள். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் அருகே உள்ள கடகுளம் வடக்கு தெருவை சேர்ந்தவர் ராஜா மிக்கேல். இவரது மகள் ஜெனித் ஜெல்சியா (வயது 19). இவர் ஒரு தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் ஜெனித் ஜெல்சியா கடந்த 3-ந் தேதி கல்லூரிக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றார். பின்னர் மாலையில் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. கல்லூரிக்கும் செல்லவில்லை. உறவினர் வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடியும் மாணவி கிடைக்கவில்லை. 

     இது குறித்து அவரது தந்தை ராஜா மிக்கேல் தட்டார்மடம் போலீசில் புகார் செய்தார். இதன் பேரில் இன்ஸ்பெக்டர் கஜேந்திரன் வழக்குப்பதிவு செய்து மாணவி ஜெனித் ஜெல்சியா எங்கு சென்றார்? அவரை யாரேனும் கடத்தி சென்றனரா என விசாரணை நடத்தி வருகிறார்.

    கூடங்குளம் அருகே உள்ள ஆவுடையார்புரம் கிராமத்தை சேர்ந்தவர் அர்ஜுனன். இவரது மனைவி பாலா (வயது33). இவர்களுக்கு அருண் (6) என்ற மகன் உள்ளான். இந்த நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. 

    இதில் மனம் உடைந்த பாலா தனது மகன் அருணை அழைத்து கொண்டு வீட்டை விட்டு வெளியேறி விட்டார். அவர் உறவினர் வீடுகளுக்கும் செல்லவில்லை. எங்கு சென்றார் என்று கண்டு பிடிக்க முடியாததால், அர்ஜுனன், கூடங்குளம் போலீசில் புகார் செய்தார். போலீசார் அவர்களை தேடி வருகிறார்கள். 
    தேன்கனிக்கோட்டை அருகே இளம்பெண் மாயமானது குறித்து அவரது தாய் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    தேன்கனிக்கோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே அஞ்செட்டியை அடுத்துள்ள மிளித்திக்கி கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திக். இவரது மனைவி கவிதா (வயது20). இவர்களுக்கு திருமணமாகி ஒரு வருடம் ஆன நிலையில் கவிதாவுக்கு குழந்தை இல்லை.

    நேற்று முன்தினம் வீட்டில் இருந்த கவிதா திடீரென மாயமானார். இதனால் உறவினர்கள் கவிதாவை பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால் எங்கும் தேடியும் அவர் கிடைக்கவில்லை.

    இது குறித்து கவிதாவின் தாய் அஞ்செட்டி போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான கவிதாவை தேடி வருகின்றனர்.
    மரக்காணம் அருகே திருமணமான 6 மாதத்தில் இளம்பெண் மாயமானார். இது குறித்து அவரது கணவர் போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.

    மரக்காணம்:

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள கே.என்.பாளையத்தை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 29). இவருக்கும் அருகில் உள்ள தேவிகுளத்தை சேர்ந்த மகாலட்சுமி (19) என்பவருக்கும் கடந்த 25.5.2018 அன்று திருமணம் நடைபெற்றது.

    மகாலட்சுமி புதுவையில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு மகாலட்சுமி தேவி குளத்தில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு சென்றிருந்தார். இரவில் வீட்டில் படுத்து தூங்கினார். காலையில் பார்த்தபோது அவரை காணவில்லை.

    இதுகுறித்து மரக்காணம் போலீசில் சுரேஷ் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான புதுப்பெண் மகாலட்சுமி எங்கு சென்றார் என விசாரணை நடத்தி, தேடி வருகின்றனர். 

    ×