

திருச்சி:
முசிறி புது கள்ளர் தெருவை சேர்ந்தவர் மாணி–க்கம். இவரது மகள் ஷோபனா (வயது 24). இவர் ஸ்ரீரங்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து முடித்துள்ளார்,
சம்பவதன்று மாற்றுச் சான்றிதழ் வாங்கி வருவதாக வீட்டில் கூறி சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் சோபனா கிடைக்கவில்லை.
இது குறித்து மாணிக்கம் முசிறி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில், முசிறி சப் இன்ஸ்பெக்டர் திருப்பதி வழக்கு பதிவு செய்து மாயமான சோபனாவை தேடி வருகின்றனர்.