search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஜெயங்கொண்டத்தில் இளம் பெண் மாயம்
    X

    ஜெயங்கொண்டத்தில் இளம் பெண் மாயம்

    • கஜலட்சுமி பஸ் நிறுத்தம் சாலையில் உள்ள தனியார் செல்போன் கடை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.
    • பின்னர் அவர் வீடு திரும்பவில்லை

    அரியலூர் :

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் கணபதி நகரை சேர்ந்தவர் செல்வநாதன். இவரது மகள் கஜலட்சுமி(வயது 19). இவர் பஸ் நிறுத்தம் சாலையில் உள்ள தனியார் செல்போன் கடை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.

    இவர் வழக்கம்போல் நேற்று காலை செல்போன் கடைக்கு வேலைக்கு சென்று வருவதாக வீட்டில் கூறிச் சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் பெற்றோர் அவரை உறவினர்கள் வீடுகள், தோழிகள் வீடுகள் என பல்வேறு இடங்களிலும் தேடியும் அவர் கிடைக்கவில்லை.

    இது குறித்து ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் கஜலட்சுமியின் தாய் புனிதா புகார் அளித்தார். அதன்பேரில் கஜலட்சுமியை போலீசார் தேடி வருகின்றனர்.

    Next Story
    ×