வாலிபருடன் சேலத்திற்கு வந்த ஆந்திர மாநில இளம்பெண் மாயம்

அன்பரசன் (வயது 26). இவரும், ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே உள்ள குப்பம் அடுத்த நைனூர் பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் மகள் பூர்ணிமா (20) என்பவரும் திருப்பூரில் உள்ள ஒரு ஸ்பின்னிங் மில்லில் வேலை பார்த்து வந்தனர். புதிய பஸ் நிலையத்தில் நிற்க வைத்து விட்டு சென்றார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது கார்த்திக் மற்றும் பூர்ணிமாவை காணவில்லை.
வாலிபருடன் சேலத்திற்கு வந்த ஆந்திர மாநில இளம்பெண் மாயம்
Published on

சேலம்:

திருப்பூர் மாவட்டம் குண்ட நாற்றம்பள்ளி பகுதியை சேர்ந்தவர் அன்பரசன் (வயது 26). இவரும், ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே உள்ள குப்பம் அடுத்த நைனூர் பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் மகள் பூர்ணிமா (20) என்பவரும் திருப்பூரில் உள்ள ஒரு ஸ்பின்னிங் மில்லில் வேலை பார்த்து வந்தனர்.

இந்த நிலையில் கடந்த 11-ம் தேதி சொந்த ஊர் செல்வதற்காக திருப்பூரிலிருந்து பஸ்சில் பூர்ணிமா ஏறினார். அப்போது அவரை அன்பரசன் அவரது நண்பர் மற்றும் கார்த்திக் ஆகியோர் சேலம் புதிய பஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.

பின்னர் அன்பரசன் செல்போன் கடைக்கு செல்வதாக கூறிவிட்டு கார்த்தி மற்றும் பூர்ணிமா ஆகியோரை புதிய பஸ் நிலையத்தில் நிற்க வைத்து விட்டு சென்றார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது கார்த்திக் மற்றும் பூர்ணிமாவை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அன்பரசன் இதுகுறித்து பள்ளப்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் ராணி வழக்கு பதிவு செய்து மாயமான ஆந்திர மாநில இளம்பெண்ணையும் வாலிபரையும் தேடி வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com