search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "police investgiation"

    • சத்தம் போட்டால் கொலை செய்து விடுவோம் என்று மர்மநபர்கள் அரிவாள் முனையில் மிரட்டினர்.
    • கொள்ளை குறித்து ஜெயராஜ் கள்ளப்பெரம்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை அருகே உள்ள களிமேடு கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராஜ் (வயது 37 ) விவசாயி. இவரது மனைவி சிவசங்கரி (32). சம்பவத்தன்று இரவில் கணவன்-மனைவி வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர்.

    அப்போது நள்ளிரவில் மர்மநபர்கள் சிலர் வீட்டின் கதவை தட்டினர். எழுந்து சென்று ஜெயராஜ் கதவைத் திறந்தார். சட்டென்று வீட்டுக்குள் புகுந்த மர்மநபர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் அரிவாளை காட்டி ஜெயராஜை மிரட்டினர்.

    சத்தம் கேட்டு எழுந்த சிவசங்கரியையும் மிரட்டினர். பின்னர் தம்பதியை கயிறால் கட்டி போட்டனர். சத்தம் போட்டால் கொலை செய்து விடுவோம் என்று அரிவாள் முனையில் மிரட்டினர்.

    இதையடுத்து சிவசங்கரியின் கழுத்தில் கிடந்த 4 முக்கால் பவுன் தங்க தாலி செயின், 30 கிராம் வெள்ளி நகைகள் மற்றும் வீட்டில் இருந்த செல்போன் ஆகியவற்றை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடினர்.

    இதனைத் தொடர்ந்து கட்டி வைத்திருந்த கயிற்றை அவிழ்த்த ஜெயராஜ் அந்த மர்மநபர்களை துரத்தி சென்றார். ஆனால் அதற்குள் அந்த மர்மநபர்கள் தப்பி தலைமறைவாகி விட்டனர்.

    இதுகுறித்து ஜெயராஜ் கள்ளப்பெரம்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

    இந்த சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • எதிர்பாராதவிதமாக நாட்டுவெடிகுண்டு வெடித்து கலைவாணனின் இரண்டு கைகளிலும் உள்ள விரல்கள் துண்டானது.
    • சம்பவம் நடந்த பண்டாரவாடை கிராமத்தில் உள்ள கலைவாணனின் வீட்டில் மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் சென்று விசாரணை நடத்தினார்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் தாலுக்கா பண்டாரவாடை கலைஞர் நகரை சேர்ந்தவர் கலைவாணன் (வயது 40). இவர்மீது பல கொலை முயற்சி வழக்குகள் மற்றும் அடிதடி உள்ளிட்ட ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளன. ரவுடியான இவர் நேற்று இரவு அவரது வீட்டின் பின்புறம் நாட்டு வெடிகுண்டுகள் தயாரித்ததாக கூறப்படுகிறது.

    அப்போது எதிர்பாராதவிதமாக நாட்டுவெடிகுண்டு வெடித்து கலைவாணனின் இரண்டு கைகளிலும் உள்ள விரல்கள் துண்டானது. மேலும், மார்பு, தொடைகளிலும் பலத்த காயம் ஏற்பட்டது.

    இதையடுத்து, அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த உறவினர்கள் அவரை மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து பெரம்பூர் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும், சம்பவம் நடந்த பண்டாரவாடை கிராமத்தில் உள்ள கலைவாணனின் வீட்டில் மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் சென்று விசாரணை நடத்தினார்.

    திருவாரூரில் இருந்து முகில் என்ற மோப்ப நாயும் நாகப்பட்டினத்தில் இருந்து அகிலா என்ற மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டன. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

    • பிளஸ்-1 தேர்வு எழுதியுள்ள கபிலன் கபடி போட்டியில் கலந்து கொள்ளப்போவதாக கூறியுள்ளார்.
    • பிளஸ்-2 செல்ல விருப்பதால் படிக்குமாறு பெற்றோர் அறிவுறுத்தி உள்ளனர்.

    பாவூர்சத்திரம்:

    தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள கருமடையூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் சசி. இவரது மகன் கபிலன் (வயது17).

    இவர் பிளஸ்-1 தேர்வு எழுதி உள்ளார். இந்நிலையில் கபடி போட்டியில் கலந்து கொள்ளப்போவதாக கூறியுள்ளார். ஆனால் பிளஸ்-2 செல்ல விருப்பதால் படிக்குமாறு பெற்றோர் அறிவுறுத்தி உள்ளனர். இதனால் மனமுடைந்த கபிலன் நேற்று இரவு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    தகவலறிந்ததும் சம்பவ இடத்திற்கு பாவூர்சத்திரம் இன்ஸ்பெக்டர் சுதந்திராதேவி மற்றும் போலீசார் சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சுனிதா கடந்த 14-ந்தேதி இரவு வீட்டை விட்டு வெளியே சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை.
    • சுனிதாவை பல இடங்களில் தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை.

    சென்னை:

    சென்னை வளசரவாக்கம் அம்பேத்கர் சாலையைச் சேர்ந்தவர் பென்சிலையா. இவரது மகள் சுனிதா (வயது18). பிளஸ்-2 முடித்து விட்டு வளசரவாக்கத்தில் உள்ள ஒரு கடையில் வேலை செய்து வந்தார். வருகிற மே மாதம் அவருக்கு திருமணம் செய்ய பெற்றோர் முடிவு செய்துள்ளனர்.

    இந்த நிலையில் சுனிதா கடந்த 14-ந்தேதி இரவு வீட்டை விட்டு வெளியே சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. அவரை பல இடங்களில் தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை.

    இதுகுறித்து அவரது தந்தை பென்சிலையா வளரசவாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து சுனிதாவை தேடி வருகிறார்கள்.

    மதுரவாயலில் வியாபரி வீட்டின் பூட்டை உடைத்து13 பவுன் நகை மற்றும் பொருட்களை கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    போரூர்:

    மதுரவாயல், கிருஷ்ணா நகர் 14-வது தெருவைச் சேர்ந்தவர் சங்கர். கோயம்பேடு மார்க்கெட்டில் சாக்லேட் மொத்த விற்பனை கடை நடத்தி வருகிறார்.

    இவர் கடந்த 15-ந்தேதி சிவகாசி, திருத்தங்கலில் உள்ள உறவினர் வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் சென்றார்.

    இன்று காலை அவர்கள் வீடு திரும்பியபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த 13 பவுன் நகை மற்றும் 2 எல்.இ.டி. டி.வி., 2 கேமரா மற்றும் கேமரா ஸ்டாண்டு ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.

    கடலூர் நியூ டவுண் கே.கே.நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜான் கிருபாகரன். ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் கல்லூரி பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் மனைவியுடன் கடலூரில் நடைபெறும் உறவினர் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ரெயில் மூலம் சென்னை வந்தார்.

    பின்னர் அவர்கள் கோயம்பேடு பஸ்நிலையத்தில் இருந்து கடலூர் செல்வதற்காக பஸ்சில் ஏறி அமர்ந்து இருந்தனர். பஸ் புறப்பட்ட சிறிது நேரத்தில் பார்த்த போது அருகில் வைத்திருந்த பை மாயமாகி இருந்தது. அதில் 35 பவுன் நகை, லேப்டாப் மற்றும் ரூ. 20 ஆயிரம் ரொக்கம் இருந்தது. மர்ம நபர்கள் கைப்பையை திருடி சென்று இருப்பது தெரியவந்தது.
    திருச்சி அருகே திருமணமான 2 மாதத்தில் அ.தி.மு.க. பிரமுகரின் மகள் தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    திருச்சி:

    திருச்சி நவல்பட்டு அருகே உள்ள பூலாங்குடியிருப்பு இந்திராநகரை சேர்ந்தவர் சின்னதுரை. இவரது மனைவி ராணி. அ.தி.மு.க. பிரமுகரான இவர் முன்னாள் பஞ்சாயத்து தலைவராகவும் இருந்துள்ளார். இவர்களது மகள் நந்தினி (வயது 24). இவருக்கும் திருச்சி வாழவந்தான்கோட்டை செட்டியார்பேட்டையை சேர்ந்த பாலசந்தர் என்பவருக்கும் கடந்த 29-8-2018 அன்று திருமணம் நடைபெற்றது. பாலசந்தர் சென்னையில் உள்ள மத்திய அரசு நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

    திருமணமானதும், சென்னையில் கணவருடன் வசித்து வந்த நந்தினி கர்ப்பமடைந்தார். இதையடுத்து திருச்சி பூலாங்குடியிருப்பில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு வந்து விட்டார். நேற்று அவரது பெற்றோர் வீட்டில் இல்லாத நேரத்தில் திடீரென உடலில் மண்எண்ணையை ஊற்றி தீ வைத்துக்கொண்டார். உடல் கருகிய அவரை உறவினர்கள் மீட்டு திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் நந்தினி சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    இது குறித்து நந்தினியின் பெற்றோர் நவல்பட்டு போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கணவர் வீட்டாருடன் ஏற்பட்ட பிரச்சனையில் கடந்த சில நாட்களாக நந்தினி மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அவர் தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகி 2 மாதமே ஆவதால் திருவெறும்பூர் உதவி கலெக்டரும் விசாரணை நடத்தி வருகிறார்.

    இதனிடையே நந்தினி தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் இன்று புதிய தமிழகம் கட்சி செயலாளர் ரஞ்சித்குமார், அருள்ஜோதி மற்றும் த.ம.மு.க. ராஜேந்திரன் மற்றும் நந்தினியின் உறவினர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
    பெரம்பலூர் அருகே கள்ளக்காதலியை கத்தியால் குத்தி விட்டு வாலிபர் கழுத்தை அறுத்து தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள துங்கபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சங்கர் (வயது 35), வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்தார்.

    இந்தநிலையில் சங்கருக்கும் அதே கிராமத்தை சேர்ந்த உறவினரான தனபாலின் மனைவி செந்தாமரைக்கும் கள்ளக்காதல் இருந்து வந்தது. சம்பவத்தன்று கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் வசித்து வரும் செந்தாமரையின் மகள் லலிதா (30) பெற்றோர் வீட்டிற்கு வந்திருந்தார்.

    இதனை அறியாத சங்கர் செந்தாமரையை சந்திக்க அவரது வீட்டிற்கு சென்றார். அப்போது வீட்டில் இருந்த லலிதாவிடம் நைசாக பேச்சு கொடுத்த அவர், சில்மி‌ஷத்திலும் ஈடுபட தொடங்கினார். அதிர்ச்சியடைந்த லலிதா சத்தம் போடவே, செந்தாமரை வந்து சங்கரை தடுத்து நிறுத்தினார். இதில் அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த சங்கர், கத்தியால் செந்தாமரை மற்றும் லலிதாவை சரமாரி குத்தினார். கத்திக்குத்தில் காயமடைந்த இருவரும் ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்தனர்.

    இதைத்தொடர்ந்து சங்கர், தனக்குதானே கத்தியால் கழுத்தை அறுத்துக் கொண்டார். அவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு விரைந்து சென்றனர். 3 பேரும் ரத்த வெள்ளத்தில் கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், உடனே மீட்டு சிகிச்சைக்காக அரியலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். சங்கரை மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் போகும் வழியிலேயே அவர் இறந்தார்.

    இந்த சம்பவம் குறித்து குன்னம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #Tamilnews
    சேலத்தில் இன்று காலை லாரி மோதிய விபத்தில் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
    சேலம்:

    சேலம் மாவட்டம் காரிப்பட்டி அருகே உள்ள நாட்டாமங்கலம் பகுதியை சேர்ந்தவர் ராஜகோபால் (வயது 50). ஓய்வு பெற்ற ராணுவ வீரரான இவர் இன்று காலை சேலத்திற்கு வந்து விட்டு மீண்டும் வீட்டிற்கு புறப்பட்டார்.

    சேலம் செரி ரோடு அம்பேத்கர் சிலை அருகே சென்ற போது முன்னால் சென்ற லாரியை முந்தி செல்ல முயன்றார். அப்போது எதிர்பாராதவிதமாக லாரியில் மோதி கீழே விழுந்தார். கண்ணிமைக்கும் நேரத்தில் லாரியின் பின் சக்கரம் அவர் உடலில் ஏறி இறங்கியதால் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.

    தகவல் அறிந்த அஸ்தம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. #Tamilnews
    ×