search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதுரவாயலில் வியாபாரி வீட்டில் கொள்ளை- போலீசார் விசாரணை
    X

    மதுரவாயலில் வியாபாரி வீட்டில் கொள்ளை- போலீசார் விசாரணை

    மதுரவாயலில் வியாபரி வீட்டின் பூட்டை உடைத்து13 பவுன் நகை மற்றும் பொருட்களை கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    போரூர்:

    மதுரவாயல், கிருஷ்ணா நகர் 14-வது தெருவைச் சேர்ந்தவர் சங்கர். கோயம்பேடு மார்க்கெட்டில் சாக்லேட் மொத்த விற்பனை கடை நடத்தி வருகிறார்.

    இவர் கடந்த 15-ந்தேதி சிவகாசி, திருத்தங்கலில் உள்ள உறவினர் வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் சென்றார்.

    இன்று காலை அவர்கள் வீடு திரும்பியபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த 13 பவுன் நகை மற்றும் 2 எல்.இ.டி. டி.வி., 2 கேமரா மற்றும் கேமரா ஸ்டாண்டு ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.

    கடலூர் நியூ டவுண் கே.கே.நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜான் கிருபாகரன். ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் கல்லூரி பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் மனைவியுடன் கடலூரில் நடைபெறும் உறவினர் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ரெயில் மூலம் சென்னை வந்தார்.

    பின்னர் அவர்கள் கோயம்பேடு பஸ்நிலையத்தில் இருந்து கடலூர் செல்வதற்காக பஸ்சில் ஏறி அமர்ந்து இருந்தனர். பஸ் புறப்பட்ட சிறிது நேரத்தில் பார்த்த போது அருகில் வைத்திருந்த பை மாயமாகி இருந்தது. அதில் 35 பவுன் நகை, லேப்டாப் மற்றும் ரூ. 20 ஆயிரம் ரொக்கம் இருந்தது. மர்ம நபர்கள் கைப்பையை திருடி சென்று இருப்பது தெரியவந்தது.
    Next Story
    ×