search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Young woman with child missing"

    • தனது மகனுக்கு உடல் நிலை சரியில்லை எனக்கூறி கம்பம் அரசு ஆஸ்பத்திரிக்கு செல்வதாக சென்றார்.
    • அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை.

    உத்தமபாளையம்:

    தேனி மாவட்டம் க.புதுப்பட்டி இந்திரா காலனியைச் சேர்ந்த சேகர் மனைவி தமிழரசி (வயது 23). இவர்களுக்கு ரக்ஷனா என்ற மகளும், ரட்சகன் என்ற மகனும் உள்ளனர். சம்பவத்தன்று 4-வது வார்டு மாதா கோவில் தெருவில் உள்ள தனது தந்தை வீட்டில் தமிழரசி இருந்தார்.

    அப்போது தனது மகனுக்கு உடல் நிலை சரியில்லை எனக்கூறி கம்பம் அரசு ஆஸ்பத்திரிக்கு செல்வதாக ரட்சகனுடன் சென்றார். ஆனால் அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து தமிழரசியின் தாய் வேளாங்கண்னி உத்தமபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கைக்குழந்தையுடன் இளம்பெண் மற்றும் கல்லூரி மாணவி மாயமாகினார்.
    • மாயமான இளம்பெண்ணைகளை போலீசார் தேடி வருகின்றனர்.

    கூடலூர்:

    கூடலூரை சேர்ந்தவர் மாரிமுத்து(27). இவரது மனைவி பாரதி(25). இவர்களுக்கு ஒரு மகன், ஒருமகள் உள்ளனர். கருத்துவேறுபாடு காரணமாக குடும்பத்தில் அடிக்கடி பிரச்சிைன ஏற்பட்டது. சம்பவத்தன்று கணவன்-மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் தனது ஒரு வயது மகன் பாண்டீஸ்வரனுடன் பாரதி வீட்டைவிட்டு வெளியேறினார்.

    இரவு ெவகுநேரமாகியும் வீடு திரும்பாததால் அதிர்ச்சிஅடைந்த மாரிமுத்து உறவினர் வீடுகளில் தேடியும் கிடைக்காததால் கூடலூர் வடக்கு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து கைக்குழந்தையுடன் மாயமான இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.

    உத்தமபாளையம் அருகே சின்னஓவுலாபுரத்தை சேர்ந்தவர் சுபாசினி(24). இவர் போடி அருகே சில்லமரத்துப்பட்டியில் உள்ள கல்லூரியில் வேலைக்கு செல்வதாக கூறிச்சென்றார். ஆனால் அதன்பின்னர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து ராயப்பன்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.

    ×