search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உத்தமபாளையத்தில் கைக்குழந்தையுடன் இளம்பெண் மாயம்
    X

    கோப்பு படம்.

    உத்தமபாளையத்தில் கைக்குழந்தையுடன் இளம்பெண் மாயம்

    • தனது மகனுக்கு உடல் நிலை சரியில்லை எனக்கூறி கம்பம் அரசு ஆஸ்பத்திரிக்கு செல்வதாக சென்றார்.
    • அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை.

    உத்தமபாளையம்:

    தேனி மாவட்டம் க.புதுப்பட்டி இந்திரா காலனியைச் சேர்ந்த சேகர் மனைவி தமிழரசி (வயது 23). இவர்களுக்கு ரக்ஷனா என்ற மகளும், ரட்சகன் என்ற மகனும் உள்ளனர். சம்பவத்தன்று 4-வது வார்டு மாதா கோவில் தெருவில் உள்ள தனது தந்தை வீட்டில் தமிழரசி இருந்தார்.

    அப்போது தனது மகனுக்கு உடல் நிலை சரியில்லை எனக்கூறி கம்பம் அரசு ஆஸ்பத்திரிக்கு செல்வதாக ரட்சகனுடன் சென்றார். ஆனால் அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து தமிழரசியின் தாய் வேளாங்கண்னி உத்தமபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×